Tuesday, July 28, 2009

விடுதலைப்புலிகள் காடுகளில் வாழ்கிறார்கள்;பிரபாகரன் உத்தரவு கிடைத்ததும் வெளிப்படுவார்கள்!


உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன்,’’பிரபாகரனை பொறுத்தவரை எந்த நேரத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரியும். பிரபாகரன் வெளிவரும் வரை நாம் ஒன்றுப்பட்டு போராட வேண்டும்.

போராட்டத்துக்கு நாம் தோள் கொடுத்தால் பிரபாகரன் வெளிப்படும் நாட்கள் நெருங்கும். விடுதலைப்புலிகளின் மூலப்பலம் சிதைக்கப்படவில்லை. அவர்கள் காடுகளில் இருக்கிறார்கள். தலைவரின் உத்தரவு கிடைத்ததும் அவர்கள் வெளிப்படுவார்கள்.

தமிழர்கள் வசித்த பகுதிகளில் கன்னி வெடிகளை அகற்ற இந்திய ராணுவம் அனுப்பப்படுவதாக தகவல் கிடைத்து உள்ளது.

காடுகளில் வாழ்ந்து வரும் விடுதலைப்புலிகளை அழிக்க தான் அவர்கள் அனுப்பப்படுகிறார்கள் என்று நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்’’என்று தெரிவித்துள்ளார்’’என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment