Wednesday, November 25, 2009

தமிழகத்தில் பிரபாகரன் பிறந்தநாள் சுவரொட்டியால் பரபரப்பு!



சென்னை:

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்தநாள் வாழ்த்து சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் பிரந்தநாள் வரும் 26ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 27 ஆம் தேதி தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் நினைவுநாள் மாவீரர் தினமாக அனுசரிக்கப்பட்டுவருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் நாளில் பொதுமக்கள் மத்தியில் தோன்றி பிரபாகரன் உரையாற்றுவது வழக்கம். இலங்கையில் விடுதலைப்புலிகளை ஒடுக்கிவிட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ள நிலையில் இந்த ஆண்டு மாவீரர் நாளில் பிரபாகரன் உரையாற்றுவாரா என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபாகரனின் பிறந்த நாளான 26ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் தங்கள் நாடுகளில் பிறந்தநாள் விழா, மாவீரர் நாள் ஆகியவற்றிற்கான ஏற்பாடுகளை செய்துவருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் பிரபாகரனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லும் பல வண்ண சுவரொட்டிகள் ஏராளமாக ஒட்டப்பட்டுள்ளன.

நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டியில்...' எங்கள் தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு பிறந்தநாள்வாழ்த்துக்கள் இலை உதிர்வது இயற்கை சுழற்ச்சி வேர்கள் உதிர்வதில்லை வேர்கள் இருப்பதை நாளை இயற்கை மீண்டும் உறுதி செய்யும்"என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த சுவரொட்டியினால் உளவுத்துறை போலீசாரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் விடுதலைப்புலிகள் மீதான தடை அமலில் உள்ள நிலையில் அதன் தலைவர் பிரபாகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது மாநிலம் முழுவதும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 1

தற்போது இயற்கை விவசாயம் பெரும் அளவில் விவசாயிகளால் பின்பற்றப்பட்டு வருகிறது. இதில் பூச்சிக் கட்டுப்பாடு மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. இதில் ஒரு எளிமையான முறை ஒன்றை தற்போது காண்போம். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசல் என்பது இதன் பெயர்.

பூண்டு 1 கிலோ எடுத்து கெரசினில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும் பின்னர் இதனை எடுத்து நல்ல விழுதாக வருமாறு அரைத்துக் கொள்ள வேண்டும்.

1/2 கிலோ பச்சை மிளகாய் மற்றும் 1/2 கிலோ இஞ்சி எடுத்து தனித்தனியாக விழுது பதத்தில் அரைத்து வைத்துக்கொள்ள வேன்டும்.

பின்னர் இவ்வாறு தனித்தனியாக அரைத்த விழுதுகளை நன்றாக கலந்து ஒரு காடா துணியில் வைத்துக் கொள்ள வேண்டும் (ஜிலேபி பிழிவது போல் வைத்துக் கொள்ள வேண்டும்).

இவ்வாறு தயார் செய்த காடா துணியில் வைக்கப்பட்ட கலவையை 6 லிட்டர் நீரில் முக்கி ரசத்தை வடிக்கவும். இப்போது நமக்கு 6 லிட்டர் கரைசல் தயார்.

இந்த கரைசலை பூச்சி தாக்குதல் குறைவாக இருந்தால் 500 மில்லியும் தாக்குதல் அதிகமாக இருந்தால் 1 லிட்டரும் எடுத்து முறையே 9.5 மற்றும் 9 லிட்டர் தண்ணீரில் கலந்து பூச்சிகள் / செடிகள் மீது தெளித்தால் புழு வகை பூச்சிகள் முற்றிலும் கட்டுப்படுத்தப்படும்.

காதி சோப்பை தண்ணீரில் கரைத்து அடித்தால் அது நாம் அடிக்கும் இயற்கை பூச்சிமருந்து கரைசலை செடியின் மீது ஈர்த்து வைத்து கொள்ள உதவும். இதன் மூலம் இக்கரைசலின் வீரியமும் அதிக நேரம் செடியில் இருக்கும்.

இதை தயார் செய்யும்போது கைக்கு கையுறை தேவை. இல்லையெனில் கை எரிச்சல் அதிகமாக இருக்கும். கவனம் தேவை.

இதனைப்பயன்படுத்தி பார்த்து உங்கள் கருத்துக்களை பதியுங்கள். இது எங்கள் அனுபவம்.

Tuesday, November 17, 2009

வருகிறார் பொட்டு… – விகடன்

போர்க் காலமோ, கார் காலமோ ஈழத் தமிழர்களுக்கு நவம்பர் மாதம் எப்போதும் கொண்டாட்டமான மாதம். காரணம், மாவீரர் தினம். நவம்பர் மாதம் 22-ம் தேதி தொடங்கும் அந்த விழா 27-ம் தேதி மாலையுடன் முடிவடையும். ‘தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே!’ என்ற பாடலின் பின்னணியில் பிரபாகரன் தோன்றிப் பேசுவார்.

புலம் பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் அந்த நேரத்துக்காகத் தவம் இருப்பார்கள். அதற்கு முந்தைய 26-ம் தேதிதான் பிரபாகரனின் பிறந்த நாள். கடந்த ஆண்டு போர்க் கால நெருக்கடி சூழ்ந்த நேரத்திலும், பிரபாகரன் தோன்றினார். ”சமாதானத்துக்கான வாசல்களைத் திறந்து வைத்திருக்கிறோம். ஆனாலும், எம் எதிரி போரை நிறுத்துவதாகத் தெரியவில்லை. இந்தியாவை நட்பு சக்தியாகத்தான் நினைத்தோம். நினைக்கிறோம். இந்தியா எங்களுக்கு தீர்வு ஏற்படுத்தித் தர வேண்டும். இந்நிலையில் புலம்பெயர்ந்து வாழும் இளைஞர்களுக்குத்தான் நான் மிகுந்த நன்றியைச் சொல்ல வேண்டும். அவர்கள் ஆதரவுதான் அனைத் துக்கும் மேலாக முக்கியமானது!” என்றார் பிரபாகரன்.

ஆனால், புலிகள் இயக்கம் மீண்டு எழ முடியாமல் முடக்கப்பட்டது. பிரபாகரன் இறந்ததாக அறிவிக்கப்பட்டார். புலம்பெயர்ந்த தமிழர்கள் இதை நம்பவில்லை என்றாலும், நவம்பர் 27 அன்று பிரபாகரன் திரையில் தோன்றுவாரா என்ற எதிர்பார்ப்பும் குழப்பமும் கலந்துகட்டி அடிக்க ஆரம்பித்திருக்கிறது. ‘பிரபாகரன் வர மாட்டார். ஆனால், பொட்டு அம்மான்தான் இந்த வருட மாவீரர் தின உரையை நிகழ்த்தவிருக்கிறார்!’ என்ற தகவல் பரவி வருகிறது. அந்தத் தகவலுக்கு வலு சேர்க்கும் ஆதாரங்களுள் ஒன்றாக பிரபாகரனும் பொட்டு அம்மானும் இருக்கும் புதிய படம் ஒன்றைப் புலிகள் ஆதரவு இணையதளங்கள் வெளியிட்டு உள்ளன. இதுவரை வெளிவராத அந்தப் படத்துக்கு மேலே, ‘இந்தப் படம் சொல்லும் தகவல் என்ன?’ என்ற புதிரான கேள்வியும் தொக்கி நிற்கிறது.

இதுபற்றி விசாரித்தபோது, ”மே 18-ம் தேதி சிங்கள ராணுவத்துக்கும் புலிகள் அமைப்புக்கும் நடந்த இறுதி யுத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. புலிகள் அமைப்பின் முக்கியத் தளபதிகள் அழிக்கப்பட்டதாகவும் நந்திக் கடல் வழியாக பிரபாகரன் தப்பிக்க முயற்சித்த போது சுட்டுக் கொன்றதாகவும் அறிவித்தார்கள். இவை எல்லாம் நிகழ் வதற்கு ஒரு வாரத்துக்கு முன், புலிகள் அமைப்பின் முக்கியப் பொறுப்பாளர்களை மட்டும் அழைத்தாராம் பிரபாகரன். ‘இன்று முதல் மூன்று பிரிவுகளாக நாம் பிரிந்து செயல்பட வேண்டும். ஒரு அணியினர் இங்கிருந்து சிங்கள ராணுவத்துடன் போராடட்டும். இன்னொரு பிரிவினர் அரசிடம் சரணடைந்து தங்களது அரசியல் கோரிக்கையை உலகத்துக்குச் சொல்லட்டும். மூன்றாவது பிரிவினர் இங்கிருந்து தப்பிச் செல்ல வேண்டும். இதில் யார் யார் எந்தப் பிரிவில் சேர்க்கப்படுவார்கள் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. நான் எனது நிலையைத் தீர்மானித்துக்கொள்கிறேன். இனி, உங்களை வழிநடத்தும் பொறுப்பை பொட்டு அம்மானிடம் ஒப்படைக்கலாம் என்று நினைக்கிறேன். இந்த இயக்கத்தின் துணைத் தலைவராக அவர் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்!’ என்று அறிவித்தாராம் அப்போது. இயக்கத்தின் தளபதிகளும் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட னராம். அப்போது எடுக்கப்பட்ட படத்தில்தான் பிரபாகரனுக்குச் சரிசமமாக பொட்டு உட்காரவைக்கப்பட்டார். இதில் பல ஆச்சர்ய மான விஷயங்கள் உண்டு!” என்ற பீடிகை கொடுத்து நிறுத்தியவர்கள் மேலும் தொடர்ந்தார்கள்…

”பொதுவாக பொட்டு அம்மான், புலிகளின் சீருடையைத்தான் எப்போதும் அணிவார். சாதாரண உடைகள் அணிந்து அவரைப் பார்க்கவே முடியாது. அரிதாக டி-ஷர்ட் அணிவார். இந்தப் படத்தில் பிரபாகரன் அணிந்துள்ள அதே நிறத்தில் சட்டை அணிந்துள்ளார். மேலும், பொட்டு அம்மான் எப்போதும் கறுப்பு நிற வார் வைத்த சாதாரண வாட்ச்தான் அணிவார். சில்வர் செயின் வாட்ச் அணிந்தால் தனிப்பட்ட அடையாளமாகிவிடும் என்பதால், அதை அணியவே மாட்டார். ஆனால், இப்படத்தில் அதிலும் மாற்றம். சிரித்த முகத்துடன் இருக்கும் அவர் சீரியஸான முகத்துடன் காணப்படுகிறார். இப்படி எத்தனையோ மாற்றங்களை அடுக்கலாம். மிக நெருக்கடியான தருணத்தில் எடுக்கப்பட்ட இப்படம், ஆறு மாதங்கள் கழித்து வெளியானதற்கான பின்னணி ‘நவம்பர் 27′-ம் தேதியாக இருக்கலாம்!” என்று முடித்தார்கள்.

இலங்கையில் தேர்தல் நடந்து முடியும் வரை அரசியல் நிலவரங்களைக் கவனித்துவிட்டு அதன் பிறகு வெளிப்படையாகச் சில அறிவிப்புகளைச் செய்ய புலிகள் அமைப்பினர் முடிவெடுத்திருந்தனராம். ஆனால், புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழீழ ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. குமரன் பத்மநாபன் எனப்படும் கே.பி.அணியினர், காஸ்ட்ரோ அணி யினர் என இரண்டு தரப்பாகப் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இதைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் யாராவது ஒருவர் வெளிப்படையாக வந்து அறிவித்தால்தான் குழப்பங்களைத் தவிர்க்க முடியும் என்று முடிவெடுத்துள்ளார்கள். அதன் அடிப்படையில் பொட்டு வெளியில் வர இருப்பதாக நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

அதே சமயம், ‘பொட்டு அம்மான் இறந்தது உண்மை. ஆனால், அவரது உடலைத்தான் எங்களால் அடையாளம் காண முடியவில்லை!’ என்று இலங்கையின் பாதுகாப்பு ஆலோசகர் கோத்தபய ராஜபக்ஷே சொல்லி வருகிறார். தமிழக எம்.பி-க்கள் குழு அங்கு சென்றபோதும், ‘பிரபாகரனது உடலை நாங்கள் அடையாளம் கண்டுவிட்டோம். ஆனால், பொட்டு பற்றித்தான் உறுதியாக எதையும் சொல்ல முடியவில்லை!’ என்று அரசியல் ஆலோசகர் பசில் ராஜபக்ஷே சொல்லியிருக்கிறார். எனவே, பொட்டு அம்மான் குறித்த சந்தேகங்கள் இன்னமும் முழுக்க களையப்படவில்லை என்பது உண்மை.

புலிகள் அமைப்பின் ஆரம்பக் கட்டத்தில் பிரபாகரன் தலைமையிலான மத்தியக் கமிட்டியில் 32 உறுப்பினர்கள் இருந்தார்கள். அதில் சண்முகலிங்கம் சிவசங்கரன் என்ற இளைஞன்தான் பின்னாட்களில் பொட்டு அம்மானாக உருவெடுத்தார். புலிகள் அமைப்பு மீது சிங்கள ராணுவத்தின் கவனத்தை அதிர்ச்சியுடன் திருப்பிய திருநெல்வேலி தாக்குதலில் இவர் இருந்தார். பிரபாகரனிடம் ஆயுதப் பயிற்சி பெற்று, பின்னர் அவருக்கே மெய்க்காப்பாளராக இருந்தவர். வேதாரண்யம் பகுதியைக் கவனித்து வந்தவர். பின்னர் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மாவட்டத் தளபதியாக ஆனார். வேவு பார்ப்பதில் தேர்ந்தவராக இருந்ததால், புலிகளின் புலனாய்வுப் பிரிவை பொட்டுவிடம் ஒப்படைத்தார் பிரபாகரன். 1988-ம் ஆண்டு இப் பொறுப்புக்கு வந்த பொட்டு 16 பிரிவுகளை உருவாக்கி, புலிகளின் திரைமறைவு வெற்றிகளுக்குப் பெரிதும் உதவி னார். இந்திய அமைதிப் படைக்கும் புலிகளுக்கும் சண்டை தொடங் கியபோது, முதல் தாக்குதலில் பலத்த காயம்பட்டு முடக்கப் பட்டார் பொட்டு. வயிறு, கால், கை ஆகியவற்றில் பலத்த காயம் பட்டது. மரணத்தறுவாயை நெருங்கியவரை மிகுந்த சிரமத்துக்குப் பிறகு மீட்டெடுத்து வந்தார்கள். அந்தச் சமயத்தில், அவரை அருகில்இருந்து கவனித்துக்கொண்டவர் பாலசிங்கத்தின் மனைவிஅடேல்.

ராஜீவ் காந்தி கொலையில் பொட்டு அம்மானைத் தொடர்புபடுத்தி சி.பி.ஐ. குற்றச்சாட்டு பதிவு செய்தபோதுதான், இப்படியரு ஆள் இருப்பதே வெளியில் தெரிந்தது. மூன்று ஆண் பிள்ளைகள் பொட்டு அம்மானுக்கு. அதில் இருவர் அமைப்பில் இணைந்து போராடி இறந்துவிட்டார் களாம். ஒரு மகன் மட்டும் இருக்கிறார். ‘குடும்பத்துக்கு ஒருவரை இயக்கத்துக்குத் தந்தால் போதுமே. இன்னொரு மகனை எங்காவது படிக்கவைக்கலாமே!’ என்று பொட்டு அம்மானிடம் சொன்னதற்கு, ‘அதெல்லாம் மற்றவர்களின் குடும்பத்துக்கு. எனது குடும்பத்தினர் அனைவருமே இயக்கத்துக்குத்தான்!’ என்றாராம் பொட்டு. 10 ஆண்டுகளுக்கு முன் பொட்டு அம்மானைப்பற்றி தனது புத்தகத்தில் இப்படிக் குறிப்பிட்டு இருக்கிறார் அடேல் பாலசிங்கம், ‘சுற்றி வளைப்புகளில் இருந்து எதிரிகளைத் திணறடித்து வெளியேறுவதில் அவருக்குப் பல ஆண்டு அனுபவம் உண்டு!’

அடேல் சொன்னது இப்போதும் நடந்திருக்குமா? நவம்பர் 27-ம் தேதி முடிவு தெரியும்!

நன்றி: விகடன் சஞ்சிகை

1 மணி நேர சம்பளம் ரூ.82,000 வாங்கும் சிறுவன்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரைச் சேர்ந்தவர் செரியனா அலியாஸ். இவரது மகன் ஆதி புத்ர அப்துல் கனி. வயது 10. செரியானா 2 நிறுவனங்களைத் தொடங்கி ஆதி என்ற பெயரில் விட்டமின் மாத்திரைகளை விற்பனை செய்து வருகிறார்.

அப்துல் கனி, 3ம் வகுப்பு வரை படித்தான். ஆனால், தனது பாடத் திட்டத்துக்கு மீறி, இயற்பியல், வேதியியல், கணிதம், புவியியல், உயிரியல் ஆகிய பிரிவுகளில் அடுக்கடுக்கான அறிவை வெளிப்படுத்தினான். இன்டர்நெட்டில் புகுந்து எல்லாவற்றையும் கரைத்துக் குடித்தான்.அறிவுத் தேடலுக்கு இடையே, அன்னையின் பிசினசையும் கவனித்துக் கொள்ளத் தொடங்கினான்.

இப்போது 2 நிறுவனங்களின் செயல்பாட்டையும் ஏறக்குறைய தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளான் அப்துல் கனி. அதனால், அந்த கம்பெனிகளின் தலைமைச் செயல் அதிகாரி என அவனை அழைக்கின்றனர்.

பல பாடப் பிரிவுகளில் அவனுக்கு உள்ள அபார ஞானத்தை அறிந்த மலேசிய கல்லூரிகள், அவனை பகுதி நேர விரிவுரையாளராக அழைக்கின்றன.அம்மாவின் கம்பெனி நிர்வாகத்தைக் கவனிப்பதுடன், கல்லூரிகளில் விரிவுரை ஆற்றுவது, இன்டர்நெட்டில் மூழ்குவது என இருக்கிறான் அப்துல் கனி. ஒரு மணி நேர விரிவுரைக்கு ரூ.82,300 ஊதியம் பெறுகிறான்.

நம்ப வருமானம் வருசத்துக்கு ரூ.80,000 கூட கிடைக்களைனு நீங்க சொல்லறது புரியுது. அட விடுங்க பாஸ்.... இருக்கிறதை வைத்து சிறப்பா வாழ்வோம்!

Friday, November 6, 2009

சிங்களர்களின் கொடும் சித்திரவதைக் கூடத்தில் பிரபாகரன் பெற்றோர்!

Prabhakaran with Family
பிரபாகரனின் பெற்றோர் திருவேங்கடம் வேலுப்பிள்ளையும், பார்வதியம்மாளும் சிங்கள அரசின் முரட்டுச் சித்திரவதைகளில் அவதிப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உலகத் தமிழர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து ஆனந்த விகடன் வார இதழ் ஒரு அதிர்ச்சிக் கட்டுரையை வெளியிட்டுள்ளது.

அதில், பிரபாகரனின் பெற்றோரை இலங்கை போலீசார் மற்றும் ராணுவத்தினர் கல்பிட்டியில், 'நாலாவது மாடி' என அழைக்கப்படும் சித்திரவதைக் கூடத்தில் தனித் தனியாக பிரித்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுரையின் ஒரு பகுதி:

"சிங்களப் பகைவனுக்குக்கூட அன்பு பாராட்ட வேண்டும் எனப் போதித்த பிரபாகரனின் பெற்றோர் திருவேங்கடம் வேலுப்பிள்ளையும், பார்வதியம்மாளும் இப்போது சிங்கள அரசின் முரட்டுச் சித்திரவதைகளில் அவதிப்பட்டு வருவதாகக் கடல் கடந்து வரும் தகவல்கள்தான் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் மனங்களில் வேதனை வலியைப் பரவ வைத்திருக்கிறது.

இலங்கை வல்வெட்டித்துறையில் நன்கு அறியப்பட்ட நடுத்தர வர்க்கக் குடும்பம் திருவேங்கடம் வேலுப் பிள்ளையினுடையது. இலங்கை அரசாங்கத்தில் மாவட்டக் காணி அதிகாரியாகப் பணிபுரிந்தவருக்கு பிரபாகரன், ஜெகதீஸ்வரி, விநோதினி என மூன்று குழந்தைகள். மகன் பிரபாகரன் தேர்ந்தெடுத்த பாதையை மாற்ற ஆரம்பத்தில் எவ்வளவோ முயற்சித்தவர்.

பின்னாட்களில் மகனுக்குப் பின்னால் திரண்ட போராட்ட வீரர்களைப் பார்த்து, தவிப்புடன் ஆசி வழங்கி போராட்டத்துக்குத் தத்துக் கொடுத்தார் மகனை. அதன் பிறகு சிங்கள அரசுக்கும் பிரபாகரனின் படைக்கும் பல முறை போராட்டங்கள் நடந்தபோதெல்லாம் முதலில் பாதிக்கப்படுவது வேலுப்பிள்ளைதான். வேதனையும் பயமும் உள்ளுக்குள் நொறுக்கினாலும், மகனின் வீரப் போராட்டத்துக்காக எதையும் வெளிக்காட்டாமல் வெள்ளந்தி மனிதராக வாழ்ந்தவர்.

ஒரு கட்டத்தில் இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடித்துக் கொடுக்க... மூத்த மகள் ஜெகதீஸ்வரி கணவருடன் கனடா சென்றுவிட்டார். இளைய மகள் விநோதினி திருச்சியில் தங்கி விட்டார்.

மரபுவழி இராணுவப் போர் உக்கிரமாகத் தொடங்கிய காலத்தில் பிரபாகரன், தன் பெற்றோரை வற்புறுத்தி 83-ம் ஆண்டில் இந்தியா அனுப்பிவைத்தார். திருச்சி இராமலிங்க நகரில் இருந்த விநோதினியின் வீட்டில் தங்கியிருந்தபடி மருத்துவச் சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தனர் இருவரும். பின்னர், விநோதினியும் கனடா சென்றுவிட, தங்களுக்கு மருத்துவம் பார்த்த முசிறி டாக்டர் இராஜேந்திரனுடன் முசிறியிலேயே தங்கி இருந்தனர்.

அமைதி ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த காலத்தில் 2003-ம் ஆண்டில் தமிழீழம் கிளம்பிப் போனார்கள். அதன் பிறகு கடைசி வரை பிரபாகரனுடயே இருந்தவர்களை இறுதிக்கட்டப் போரின்போது தமிழகத்துக்குச் செல்லும்படி எவ்வளவோ கூறி இருந்திருக்கிறார் பிரபாகரன் [^]. 'வாழ்வோ, சாவோ... இனி உன்னோடுதான்' என்ற உறுதியோடு இருந்தவர்கள், சிங்கள இராணுவத்தின் கைகளில் சிக்கியது காலத்தின் கோலம்தான்.

"போர் பாதிப்பின் அடையாளமாக எஞ்சிஇருந்த மிச்சசொச்சம் தமிழ்ச் சொந்தங்கள் சொந்த தேசத்துக்கு உள்ளேயே நாடு கடத்தப்பட்ட அகதிகளாக இராணுவத்திடம் சரண் அடைந்திருந்தனர். அந்த மக்களோடு மக்களாக மெனிக்பாம் அகதிகள் முகாமில் தஞ்சம் அடைந்திருந்தனர் பிரபாகரனின் பெற்றோர்.

அவர்களைத் தேடி வந்த இராணுவத்தினர் ஏனைய மக்களைச் சித்திரவதைக்கு உள்ளாக்கியபோது, தாங்களாகவே முன்வந்து 2009, மே 20-ம் தேதி தங்களை ஒப்புக் கொடுத்தனர் பிரபாரனின் பெற்றோர்.

வவுனியா இடைத்தங்கல் முகாமுக்கு இருவரையும் அழைத்துச் சென்ற இராணுவம், அங்கு தனிமையில் வைத்திருந்தது. 76 வயதான வேலுப்பிள்ளையும், 71 வயதான பார்வதியம்மாளும் உடல்நிலை மோசமாகி மிகவும் சிரமப்பட்ட போதுகூட, அவர்களுக்கான மருத்துவ உரிமையைப் பறித்தது இராணுவம்" என்று இப்போது சொல்லும் சில ஈழத் தமிழ் பிரமுகர்கள்,

"60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களுக்கு உதவியாக உறவினர் ஒருவரை வைத்துக் கொள்ளலாம் என்ற பொது விதியைக்கூட பிரபாகரனின் பெற்றோருக்கு அவர்கள் மறுத்துவிட்டனர். ஒரு மாத காலம் வவுனியா முகாமில் இருந்தவர்களை, பின்பு சிங்கள இராணுவம் எங்கோ கொண்டு சென்றது. இதுவரை விவரம் தெரியாமல் இருந்தது.

இப்போது, அந்த அப்பாவி முதியவர்கள் இருவரும் 'போர்த் ப்ளோர்' எனப்படும் 4வது மாடியில் இலங்கை மத்திய குற்றப் புலனாய்வுத் துறை அலுவலகத்தில் இருப்பதாக வரும் செய்திகள் [^] கேட்டு நடுங்கிப் போயிருக்கிறோம்" என்கிறார்கள் உள்ளார்ந்த பதைபதைப்புடன்!

நாலாவது மாடி என்ற வார்த்தையைக் கேட்டு ஏன் பதைபதைக்க வேண்டும்?

சிங்களக் கொடுங்கோலன் ஜெயவர்த்தன ஆட்சிக் காலத்தில் கொழும்பு கொள்ளுப்பிட்டிப் பகுதியில் உள்ள கட்டடத்தின் நான்காவது மாடிக்கு மெள்ள மெள்ள அப்படியொரு 'புகழ்' சேரத் தொடங்கியதாம்!

இலங்கை மத்தியக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அங்கே ஹிட்லரின் சித்திரவதைக் கூடத்தைவிட பயங்கரமான நிகழ்வுகளை அரங்கேற்றிக் காட்டுவது வழக்கமாம். அரசுக்கு எதிரான முக்கிய தமிழ்முகங்கள் சிக்கிவிட்டால்... அவர்களை சிறுகச் சிறுக நொறுங்க வைத்து ரகசியங்களைப் பிடுங்க முடிவெடுத்துவிட்டால்... இந்த நாலாவது மாடிக்கு கொண்டு போய்விடுவார்களாம்.

"இங்கே போய் உயிரோடு திரும்பியவர்கள் மிக அபூர்வம்தான்! அப்படி உயிரோடு திரும்பி வருபவர்களும் வாழ்நாள் முழுக்க நிம்மதியாகத் தூங்க முடியாது. கனவிலும் மிரட்டும் கொடுமைகள் அப்படி!

சுவர் எங்கும் தெறித்து விழுந்த இரத்தக்கறைகளும், ஓயாத மரணவலி ஒலங்களும் அந்த நான்காம் மாடியில் ஒலித்துக் கொண்டே இருக்குமாம். அந்த இடத்தை 'சாத்தானின் மாளிகை' என்றும் 'பிசாசுக் கூடாரம்' என்றும் விவரம் தெரிந்த தமிழர்கள் [^] சொல்வது வழக்கம்" என்று விளக்கம் கிடைக்கிறது.

விசாரணைக்காக வரும் நபர்களை வகைப்படுத்தியே சித்திரவதை தொடங்குவார்களாம். ஆடைகளைக் கழற்றி, பனிக்கட்டிகள் நிரம்பி இருக்கும் ஓர் அறையில் நடுங்கும் குளிரில் உறையவைப்பது... கேட்கிற கேள்விக்கு 'திருப்தி'கரமான பதில் வராவிட்டால், குளிருக்கு நேரெதிரான பாஸ்பரஸ் ட்ரீட்மென்ட் நடக்குமாம். பாஸ்பரஸை உடலில் தடவி, கொதிக்கிற மின் தகட்டைக் கையிலெடுத்து... மேற்கொண்டு கேட்டால், இளகிய மனங்கள் துடிதுடித்துப் போகும்.

தலைகீழாகத் தொங்கவிடுவது... பிறகு, பி.வி.சி. பைப்புகளில் மணலை நிரப்பி அடித்து நொறுக்குவது... தலைகீழாகத் தொங்குபவரின் தலையில் முழுக்க பெட்ரோல் நிரம்பிய ஒரு பொலித்தீன் பையை மாட்டுவது... மூச்சுவிட முடியாமல் அவர்கள் பெட்ரோலை மெள்ள மெள்ளக் குடிப்பதையும்... அதன் நெடி மிகுந்த காற்றைச் சுவாசிப்பதையும் ரசிப்பது!

விதவிதமாக நீள்கின்றன இந்த சித்திரவதைப் படலங்கள்.

வாய் வழியே பெட்ரோல் சென்று அரை மயக்க நிலையில் ஆழ்ந்த பிறகும், கேட்ட கேள்விக்குப் பதில் வராவிட்டால் வாய்க்குள் தீக்குச்சியைக் கொளுத்திப் போடுவார்களாம் குரூர அதிகாரிகள்! இதில், உடலின் உள்ளுறுப்புகள் தீயினால் வெந்து பொசுங்கிவிடும்.

உயிர் ஊசலாடிக்கொண்டு இருக்கும்போது, நான்கைந்து பேர் மட்டுமே கால்நீட்டி அமரக்கூடிய ஓர் அறைக்குள் 20-க்கும் மேற்பட்ட நபர்களை நின்ற நிலையில் அடைத்து விடுவார்களாம். துளிகூட வெளிச்சம் புகாத அந்த இருட்டறைக்குள் முனகலும், மூச்சுவிடும் சத்தமும் மட்டும்தான் துணையிருக்கும். மற்றபடி எல்லாமே அந்தகாரம்தான்!

மனநிலையை உருக்கி, உண்மைகளை வாங்குவதற்காக இப்படி உணவு, தண்ணீர் தராமல் பலநாட்கள் இருட்டுக்குள் வைத்திருப்பது உண்டு என்றும் இலங்கைத் தமிழ்ப் புள்ளிகள் மத்தியில் பரவிக்கிடக்கிறது சேதி.

"பெண்களின் நிலைமையோ எழுத்தில் வடிக்க முடியாது" என பயம் பரவ நாலாவது மாடி பற்றி விவரிக்கிறார்கள் இலங்கைத் தமிழ் நிருபர்கள் சிலர்.

"இத்தகைய ஓரிடத்தில் கடந்த நான்கு மாதங்களாக விசாரணை என்ற பெயரில் பிரபாகரனின் தாய் - தந்தை வைக்கப்பட்டு இருப்பதாக அறிகிறோம். வேலுப்பிள்ளைக்கு சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற பாதிப்புகள் உள்ளனவாம். தாய் பார்வதியம்மாளுக்கும் சர்க்கரை, உயர் இரத்த அழுத்த பாதிப்பு உண்டாம். அவர்களுக்கு அங்கே என்னவிதமான மருத்துவக் கண்காணிப்பு அளிக்கப்படுகிறது என்று தெரியவில்லை. அவர்களிடமிருந்து சிங்கள அதிகாரிகள் என்ன தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள் என்றும் புரியவில்லை!

இருவரையும் தனித்தனியே பிரித்து தனிமைச் சிறையில் அடைத்து வைத்திருப்பதாக துளியளவு இரக்கமுள்ள சில அதிகாரிகள் மூலம் தகவல் வருகிறது. முதுமையில் தனிமையின் பயம் எத்தகைய மனக் குழப்பங்களை உண்டாக்கும் என்று சொல்லத் தேவையில்லை. உணவுக் கட்டுப்பாட்டுக்கும் வழியில்லை அந்த நோயாளித் தம்பதிக்கு!

இந்திய எம்.பி-க்கள் குழு இலங்கை சென்றபோது 'பிரபாகரனின் பெற்றோரைப் பார்க்க வேண்டும்' என வேண்டுகோள் வைத்திருக்கிறார் திருமாவளவன் [^]. இதற்கு மறுப்புத் தெரிவித்த அதிபர் ராஜபக்ஷவின் சகோதரரான பசில், பிரபாகரனின் பெற்றோர் நலமுடன் இருப்பதாக மட்டுமே தெரிவித்திருக்கிறார்.

'அவர்களை வெளியில் விடுவதற்கு எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால், அவர்கள் இந்தியாவில் தங்குவதாக இருந்தால் மட்டும்தான் வெளியில் விடுவோம். மற்ற வெளிநாடுகளுக்குப் போனால், அவர்கள் எங்களுக்கு எதிராகப் பேட்டிகள் கொடுப்பார்கள். இப்படித்தான் டாக்டர் தமிழ்வாணியை நாங்கள் வெளியில் விடச் சம்மதித்தோம். ஆனால், லண்டன் போனவர் எங்களையே விமர்சித்தார். அந்த மாதிரி பிரபாகரனின் பெற்றோர் செயல்படக் கூடாது அல்லவா?' என்று பசில் ராஜபக்ஷே, திருமாவளவனிடம் சொன்னதாக எங்களுக்கு ஒரு தகவல் இருக்கிறது" என்கிறார் இலங்கை தமிழ் பத்திரிகையாளர் ஒருவர்.

இலங்கைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான சம்பந்தன் மற்றும் எம்.பி. சேனாதிராஜா ஆகியோரின் உதவியுடன் பெற்றோரை மீட்டுத் தமிழகம் கொண்டுவரும் நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கிறாராம் பிரபாகரனின் சகோதரி விநோதினி. இதற்கு இலங்கை அரசாங்கம் எந்தளவு ஒத்துழைக்கும் என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் இலங்கை குறித்த போர்க் குற்ற அறிக்கை தாக்கலாகி இருப்பதைத் தொடர்ந்து, இங்கிருந்து யாரையும் இனி வெளிநாடுகளுக்கு அனுப்ப இலங்கை சம்மதிக்காது என்கிறார்கள் கொழும்பு பத்திரிகையாளர்கள்!

"பிரபாகரனின் பெற்றோருக்கு உண்மையில் என்ன நடந்தது, அவர்களது இப்போதைய நிலைமை என்ன என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும்" என்று தமிழீழ ஆதரவு அமைப்புகள் கோரிக்கை வைக்கத் தயாராகி வருகின்றன.

இலங்கையின் சித்திரவதை அத்தியாயம் இப்போதைக்கு முடிவதாகத் தெரியவில்லை!

நன்றி: விகடன்

Thursday, November 5, 2009

வீட்டு உரிமையாளரின் குழந்தையை பிச்சை எடுக்க வாடகைக்கு விட்ட வேலைக்காரி!

பெங்களூர்: குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காக வேலைக்கு நியமிக்கப்பட்ட பெண், அந்தக் குழந்தையை பிச்சை எடுக்க வாடகைக்கு விட்ட கொடுமை பெங்களூரில் நடந்துள்ளது.

கைக்குழந்தையுடன் இருக்கும், கணவன், மனைவி இருவரும் வேலை பார்க்கும் நிலையில் உள்ள குடும்பத்திற்கு இந்த செய்தி [^] நிச்சயம் ஒரு உஷார் பாடம்...

பெங்களூரைச் சேர்ந்தவர் அனாமிகா. எம்.பி.ஏ. படித்துள்ளார். தனியார் நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில் இருக்கிறார். இவருடைய கணவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

அனாமிகா தம்பதிக்கு 7 மாதமே ஆன கைக்குழந்தை உள்ளது. கணவன், மனைவி [^] இருவரும் வேலைக்குப் போய் விடுவதால் குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காக ஒரு வேலைக்காரப் பெண்ணை அமர்த்தியிருந்தனர்.

காலையில் வீட்டுக்கு வருவார் இந்தப் பெண். பின்னர் அனாமிகாவும், அவரது கணவரும், மாலையில் வீடு திரும்பும் வரை குழந்தையும், வீடும் இந்தப் பெண்ணின் பொறுப்பில்தான் இருக்கும்.

2 நாட்களுக்கு முன்பு வழக்கம் போல அனாமிகாவும், கணவரும் வேலைக்குப் போய் விட்டனர். அன்று வழக்கத்திற்கு விரோதமாக சற்று முன்பே வீடு திரும்பி விட்டார் அனாமிகா. வீட்டுக்கு வந்தபோது, குழந்தை அங்கு இல்லை. வேலைக்காரப் பெண் மட்டும் ஜாலியாக டிவி பார்த்துக் கொண்டிருந்தார்.

குழந்தை குறித்து கேட்டபோது வேலைக்காரப் பெண் மழுப்பியுள்ளார். இதையடுத்து அவரிடம் அனாமிகா கடுமையாக கேட்டபோது உண்மையை கொட்டியுள்ளார்.

பிச்சைக்காரர்கள் பிச்சை எடுப்பதற்காக குழந்தையை வாடகைக்குக் கேட்டேன். அதற்கு தினசரி ரூ. 100 தருவதாக கூறினார்கள். இதனால் குழந்தையை வாடகைக்கு விட்டுவிட்டேன் என்று அந்தப் பெண் கூறியதும் அனாமிகா பெரும் அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக கணவருக்குப் போன் செய்து வரவழைத்து நடந்ததைக் கூறி அழுதுள்ளார். அனாமிகாவின் கணவரும் இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அந்த வேலைக்காரப் பெண்ணை அழைத்துக் கொண்டு குழந்தையை வைத்திருந்த பிச்சைக்காரர்களை அணுகி குழந்தையை மீட்டுள்ளனர்.

தினசரி காலை அனாமிகாவும், அவரது கணவரும் வேலைக்குப் போன பின்னர் வாடகைக்கு எடுத்த பிச்சைக்கார கும்பல் வீட்டுக்கு வந்து வேலைக்காரப் பெண்ணிடமிருந்து குழந்தையைப் பெற்றுக் கொள்ளுமாம். பின்னர் அனாமிகா தம்பதியினர் திரும்பி வருவதற்குள் குழந்தையை ஒப்படைத்து விடுவார்களாம். கிட்டத்தட்ட ஒரு மாதமாக இது நடந்துள்ளது.

மீட்கப்பட்ட குழந்தையுடன் மருத்துவமனைக்கு விரைந்தனர் அனாமிகாவும், கணவரும். குழந்தையைப் பரிசோதித்துப் பார்த்த டாக்டர்கள், குழந்தையின் உடலில் காயம் ஏதும் இல்லை, எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறியுள்ளனர். ஆனால் பிச்சை எடுப்பதற்காக குழந்தையை அதிக அளவில் அழ வைத்திருந்தது தெரிய வந்தது.

இந்த கொடுமை குறித்து அனாமிகா போலீஸில் புகார் [^] கொடுக்க விரும்பவில்லை. எனது குழந்தை [^] பத்திரமாக கிடைத்ததே போதும். இதை நான் போலீஸாரிடம் கொண்டு செல்ல விரும்பவில்லை. இந்த நிலைக்கு மீண்டும் எனது குழந்தையை நான் கொண்டு செல்ல மாட்டேன் என்று கூறி கதறி அழுகிறார் அனாமிகா.

பிச்சைக்காரரிடம் ரூ.80 ஆயிரம் பணம் ரூ.13 லட்சம் டெபாசிட் !

July 7, 2009

pichai2.jpg

எர்ணாகுளம் அருகே பள்ளிவாசலில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த முதியவரிடம் இருந்து ரூ.80 ஆயிரம் மற்றும் தபால் அலுவலகத்தில் ரூ.13 லட்சம் டெபாசிட் செய்ததற்கான பாஸ் புத்தகம் கைப்பற்றப்பட்டது.
எர்ணாகுளம் அருகே மாவூர் பகுதியில் உள்ள பள்ளிவாசல் பகுதியில் 70 வயதான முதியவர் ஒருவர் பிச்சை எடுத்து வந்தார். நேற்று இந்த பள்ளி வாசல் அருகே உள்ள குற்றிக்காட்டூர் ஜூம்மா பள்ளி வாசலில் அமர்ந்து பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். காலில் புண்கள் இருந்ததால் பிச்சைக்கார முதியவர் ஊன்றுகோல் பயன்படுத்தி வந்தார்.

இந்நிலையில் நேற்று பள்ளிவாசலுக்கு வந்தவர்களிடம் பிச்சைக்கார முதியவர் தனது பெயர் அப்துல் அலி என்றும் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு என்றும் கூறியுள்ளார். பெரும்பாவூரில் உள்ள பள்ளிவாசலுக்கு செல்ல ஆசையாக உள்ளது. அதற்கு தேவையான பணம் தன்னிடம் இல்லையென்றும் கூறியுள்ளார். இதை கேட்ட சிலர் அந்த பகுதியில் வசூல் செய்து ரூ. 10 ஆயிரத்தை அப்துல் அலியிடம் கொடுத்தனர். பெரும்பாவூர் பள்ளி வாசல் செல்வதற்கு ஒரு ஜீப்பையும் ஏற்பாடு செய்து கொடுத்தனர்.

அந்த ஜீப்பில் பெரும்பாவூர் சென்ற அப்துல் அலி அங்கு டிரைவரை காத்திருக்குமாறு கூறிவிட்டு ஒரு மணிநேரம் கழித்து திரும்பி வந்துள்ளார். பின்னர் அதே ஜீப்பில் குற்றிக்காட்டூர் பள்ளிவாசலுக்கு வந்து வழக்கம் போல் பிச்சை எடுக்க தொடங்கினார். இதனை பார்த்த பள்ளி வாசல் நிர்வாகிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் முகமது அலியின் பையை சோதித்தனர். அப்போது அதில் ரூ. 80 ஆயிரம் பணம் இருந்தது தெரியவந்தது.

மேலும் தபால் அலுவலகத்தில் ரூ.13 லட்சம் டெபாசிட் செய்ததற்கான பாஸ் புத்தகமும் இருந்தது. இதுகுறித்து அவர்கள் முகமது அலியிடம் கேட்டபோது, அவ்வளவு பணத்தையும் பிச்சை எடுத்தே சம்பாதித்ததாக தெரிவித்தார். இதையடுத்து மாவூர் போலீசுக்கு பள்ளி வாசல் நிர்வாகிகள் தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து முகமது அலியை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

Monday, November 2, 2009

நாளை மறுநாள் பொன்சேகாவிடம் விசாரணை நடத்த அமெரிக்கா முடிவு

இலங்கை ராணுவ படைத்தளபதி சரத் பொன்சேகாவிடம், போர் குற்றங்கள் தொடர்பாக அமெரிக்க அதிகாரி கள் விசாரணை நடத்த உள்ளனர்.

இலங்கையில் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடந்த மே மாதம் நடந்த சண்டையின் போது, போர் குற்றங்கள் நடந்ததாக சர்வதேச அளவில் புகார் கூறப்படுகிறது.

போரின் கடைசிக் கட்டத்தில் ராணுவம் மற்றும் புலிகளின் மனித உரிமை மீறல்கள் குறித்து 68 பக்க அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத் துறை தயாரித்துள்ளது.

மே 2ம் தேதி முதல் 18ம் தேதி வரை இலங்கையில் நடந்த 170 குற்றங்கள் அந்த அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்து.

சரத்பொன்சேகா தற்போது அமெரிக்காவில் தங்கியுள்ளார். அமெரிக்க குடியுரிமை பெற்ற அவரிடம், இலங்கை அதிபரின் சகோதரரும், ராணுவ செயலருமான கோத்தபையா எந்தெந்த முறையில் போர் விதிமுறைகளை மீறியுள்ளார். போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்களை விளக்கும்படி அமெரிக்க உள்துறை அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

நாளை மறுநாள் பொன்சேகாவிடம் இது குறித்து அவர்கள் விசாரணை நடத்த விருக்கிறார்கள்.

செல்போன் அதிர்வுகளால் தேனீக்கள் பாதிப்பு

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நுகர்வோர் மன்றங்களுக்கான புத்தொளி பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இப்பயிற்சி வகுப்பை கலெக்டர் ராஜேந்திரன் தொடங்கிவைத்து பேசினார்.

அப்போது, ‘’நுகர்வோர் உற்பத்தியாளர் என்ற தரப்பினர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து உள்ளனர். அதற்கான இலக்கிய, சரித்திர ஆதாரங்கள் நம்மிடம் உள்ளன. எடை குறைவு, கலப்படம் போன்றவை பல ஆண்டுகளாக உள்ளன. தற்போது அவற்றை அகற்றும் சூழலும் உருவாகி உள்ளது.

இந்தியாவில் 15 கோடி பேர் செல்போன்களை பயன்படுத்துகின்றனர். இந்த செல்போன்கள் அதிர்வுகளால் தேனீக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.

இதனால் அவற்றின் எண்ணிக்கையும் குறைந்து வருகின்றன. தற்போது சுற்றுப்புற சூழலும் பாதிக்கப்படுவதால், நாம் அனைவரும் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கவேண்டும். தற்போது பாலித்தின் பைகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இதை நாம் தவிர்க்கவேண்டும்.


பொதுவாக நாம் பொருட்களை வாங்கும்போது அதில் அதிகபட்ச விலை அச்சிடப்பட்டிருக்கும். ஆனால் அந்த விலையை காட்டிலும் கூடுதலாக விற்பார்கள். ஏன் என்று கேட்டால் வரி உள்பட சேர்க்கப்பட்டுள்ளது என தெரிவிக்கின்றனர்.

மருந்து கடைகளில் மருந்து வாங்கும் போது அதில் காலாவதியாகும் தேதியை பார்த்து வாங்கவேண்டும். அந்த தேதிக்கு மேல் விற்றால் நுகர்வோர் மன்றங்களில் வழக்கு தொடரலாம்.


மேலும் நுகர்வோர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழும் கேள்வி கேட்கலாம். ஆனால் சிலர் இதை தவறாக பயன்படுத்துகிறார்கள். நுகர்வோரை பொறுத்தவரையில் உத்திரவாதம் உள்ள பொருட்களை வாங்கவேண்டும்’’என்று பேசினார்.

Sunday, November 1, 2009

மனநலம் பாதிக்கப்பட்ட தமிழ் இளைஞரை கடலில் வைத்து அடித்துக் கொன்ற சிங்களர்கள்

கொழும்பு: மன நலம் பாதிக்கப்பட்ட தமிழ் இளைஞரை கடலில் வைத்து வெறித்தனமாக சிங்களக் கும்பல் ஒன்று தாக்கிக் கொலை செய்துள்ள சம்பவம் [^] இலங்கையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தமிழர்களுக்கு எதிரான சிங்களர்களின் விஷ மனோபாவம் இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

வியாழக்கிழமை கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் பாலகிருஷ்ணன் சிவக்குமார் என்ற 26 வயது இளைஞரை சிங்களக் கும்பல் துரத்தியது. அவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் போல காணப்பட்டார். சிவக்குமார் ரத்மலானை பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

வாகனங்கள் மீதும், ரயில் மீதும் அவர் கல் எறிந்தார் என்று கூறி சிங்களர்கள் துரத்தித் தாக்கினர். அவர் தமிழர் என்று தெரிய வந்ததும் மூர்க்கத்தனமாக துரத்தினர். இதனால் பயந்து போன பாலகிருஷ்ணன் கடலில் குதித்தார்.

ஆனால் அவரை தொடர்ந்து துரத்திச் சென்ற காவல்துறை அதிகாரி ஒருவர் அந்த அப்பாவி தமிழ் இளைஞரை கொடூரமாகத தாக்கினார். கையில் இருந்த பெல்ட்டால் சரமாரியாக அடித்தார். கையெடுத்துக் கும்பிட்டபடி தன்னை விட்டுவிடுமாறு அந்த இளைஞர் கெஞ்சியும் கூட மனிதாபிமானமே இல்லாமல் அந்த போலீஸ் அதிகாரி அடித்தார்.

இதில் காயமடைந்து கடலில் மூழ்கிய அந்த இளைஞர் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தக் காட்சிகள் அனைத்தும் ஒருவரால் செல்போன் கேமராவில் பதிவு செய்யப்பட்டு இலங்கை [^] தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகியுள்ளது.

போராட்டம்...

இந்தக் கோர சம்பவத்தைக் கண்டித்து நவம்பர் 4ம் தேதி கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பு போராட்டம் [^] நடத்தப் போவதாக ஜனநாயக மக்கள் [^] முன்னணி அறிவித்துள்ளது.