Wednesday, October 21, 2009

சாட்டிங்:சைபர் கிரைம் குற்றவாளிகள்

கல்லூரியில் படிக்கும் காலம் முதல் அனைத்து இளைஞர்களுமே “இ-மெயில்” முகவரி வைத்துள்ளார்கள். தினசரி பேப்பர் படிப்பது போல இந்த இ-மெயிலில் வரும் தகவல்களை படிக்காமல் சிலருக்கு தூக்கமே வராது.

இளைஞர்கள் இளம்பெண்கள் மட்டும் அல்ல, திருமணம் முடிந்து வீட்டில் அடைபட்டு கிடக்கும் பல இளம் குடும்பத்தலைவிகளும் இப்போது தங்களுக்கு நேரம் போகவில்லை என்றால் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து விளையாட ஆரம்பித்து விடுவார்கள்.

இதில் குடும்ப பெண்களையும், இளைஞர்களையும் சீரழிக்கும் ஆபத்தான விளையாட்டுத்தான் சாட்டிங்.

நேரம் போகாமல் கம்ப்யூட்டரில் யாரோ ஒருவருடன் நீண்ட நேரம் பேசி பழகுவதுதான் சாட்டிங். சிலர் ஒரே நேரத்தில் 5 பேர்களுக்கு கேள்வி - பதில் அனுப்பி கிரங்கடிப்பார்கள்.


இப்படி முகம் தெரியாத நபருடன் பேசிப் பழகும் போது தான் சிலருக்கு கொடூர புத்தி கொண்ட சைபர் கிரைம் குற்றவாளிகளுடன் தொடர்பு கிடைத்து வருகிறது.

இது ஏமாற்றி பணம் பறிப்பதோடு மட்டும் நிற்காமல், குடும்பத்தை சீரழிக்கும் கள்ளத்தனமான செக்ஸ் தொடர்புக்கும் வழி வகுத்துவிடுவதுதான் வேதனையிலும் வேதனை?

சாட்டிங்போது பிடித்த நபருக்கு தங்கள் “இ-மெயில்” முகவரியை கொடுப்பார்கள். பின்னர் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தொடர்பு கொள்ளும்படி ஏற்பாடு செய்து கொள்வார்கள்.

முதலில் நல்லவர்கள் போல் பேசிப்பழகி போகப்போக “செக்ஸ்” விஷயத்துக்குள் புகுந்து விடுவார்கள்.

ஒரு குடும்ப பெண், சாட்டிங்கின் போது ஆண்கள் வேண்டாம் என்று பெண்கள் முகவரியை தேடிப்போய் பேசினால் கூட அதில் சில ஆண்களே பெண்கள் போல் பெயர் வைத்து ஏமாற்றி விடுவார்கள். இந்த கம்ப்யூட்டர் சாட்டிங்கில் சிக்கி பாதை மாறிய நடுத்தர மற்றும் மேல் தட்டு பெண்கள், தங்கள் மானம் போய் விடுமோ என்று பயந்து போலீசில் புகார் செய்வதே இல்லை.


இதனால் சைபர் கிரைம் குற்றவாளிகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளார்கள். இவர்கள் பிடியில் சிக்கி சீரழியும் குடும்ப பெண்களின் எண்ணிக்கையும் இப்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது. சில பெண்கள் இப்பிரச்சினைகளால் தற்கொலை செய்து கொள்கிறார்கள். சிலர் மனநோயாளி போல் மாறிவிடுகிறார்கள்.

இதை தடுக்க முதல் முதலாக களம் இறங்கி உள்ளார் நெல்லை பெண் தீபரதி ஹால்டர் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கிரிமினாலஜி துறையின் பேராசிரியர் ஜெய்சங்கர் என்பவரின் மனைவியான இவர்,

“கம்ப்யூட்டர் சாட்டிங்”, “இ-மெயில்”போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு “ஆன்லைன் மூலம் சென்டர் பார் சைபர் விக்டிம் கவுன்சிலிங் மையம்”ஏற்படுத்தி குடும்ப பெண்களுக்கு எச்சரிக்கை மணி அடித்து வருகிறார்.

தூத்துக்குடி பழைய பஸ்ஸ்டாண்ட் கடலில் மூழ்குமா? வல்லுநர்கள் அதிர்ச்சி தகவல்!

மாலத்தீவில் நூற்றுக்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. இவற்றில் 90க்கும் மேற்பட்ட தீவுகள் கடல் மட்டத்தைவிட அதிகபட்சமாக ஒரு மீட்டர் மட்டுமே உயரமாக இருக்கின்றன. புவி வெப்பமயமாதல் காரணமாக கடல் மட்டத்தின் அளவு உயர்ந்துகொண்டே வருவதால் 2100ம் ஆண்டுக்குள் இந்த நாடு முற்றிலுமாக கடலுக்குள் மூழ்கிவிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. உலக மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக கடந்த சனிக்கிழமை அன்று மாலத்தீவு அமைச்சரவைக் கூட்டம் கடலுக்கடியில் நடந்தது.

தூத்துக்குடி நகரிலும் பல பகுதிகள் கடல் மட்டத்தைவிட தாழ்வாக உள்ளன. இதனால் மாலத்தீவு போன்ற ஒரு நிலை தூத்துக்குடிக்கும் ஏற்பட வாய்ப்பு உள்ளதா? என்பதை அறிய தூத்துக்குடி ..சி. கல்லூரி ஜியாலஜி பேராசிரியர்கள் டாக்டர் திருஞான சம்பந்தம், டாக்டர் உடையனபிள்ளை, டாக்டர் சிவசுப்பிரமணியன் ஆகியோரை சந்தித்தோம்.

அவர்கள் கூறியதாவது, மன்னார் வளைகுடா கடலில் மொத்தம் 21 தீவுகள் உள்ளன. இவற்றில் பவளப்பாறைகள், சல்லிகள் போன்றவைகள் பெருமளவு திருடப்பட்டதால் தற்போது 2 தீவுக்ள முற்றிலுமாக கடலில் மூழ்கிவிட்டன. தூத்துக்குடி அருகே உள்ள விலாங்கு சல்லி என்ற தீவும், கீழக்கரைக்கு அருகே உள்ள பூவரசன்பட்டி என்ற தீவும் தற்போது அடையாளம் தெரியாத வண்ணம் கடலில் மூழ்கியுள்ளது.

தூத்துக்குடி கடலோரப் பகுதிகள் கடல் மட்டத்தைவிட சுமார் 2மீ உயரமானவை. அதே நேரம் தூத்துக்குடி பழைய பஸ் ஸ்டாண்ட், ..சி. கல்லூரி போன்ற பகுதிகள் கடல் மட்டத்தைவிட 2மீ தாழ்வாக இருப்பதாக ஜிபிஎஸ் (GPS) கருவிகள் காட்டுகின்றன.

கடலோர பகுதிகள் ஒரு அரண்போல இருந்து கடல் நீர் தூத்துக்குடி நகருக்குள் புகாதவாறு காத்துக்கொண்டிருக்கின்றன. கடலோரப் பகுதியில் மணல் அள்ளுதல் போன்ற சமூக விரோத நடவடிக்கைகள் இருந்தால் கடல் நீர் நகருக்குள் புகுந்துவிடும்.

புவி வெப்பமயமாதல் காரணமாக கடல்நீர் மட்டம் உயர்ந்துகொண்டே வருவதால் தூத்துக்குடி கடலோரங்களில் அரிப்பு ஏற்படாதவாறு பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலோரங்களில் சதுப்பு நில காடுகள் உருவாக்குதல், மழைநீர் சேகரிப்பு ஏற்படுத்துதல், தூண்டில் பாலங்கள் அமைத்தல் போன்ற நடவடிக்கைகளால் கடல் அரிப்பை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கோழித் தீவனம் மற்றும் உப்புப் பாத்திகள் அமைப்பதற்காக பெருமளவில் கடல் மண் தூத்துக்குடியின் வடக்கு கடலோரங்களில் கொள்ளையடிக்கப்படுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும்.

5 ரூபாய்க்கு மருத்துவச் சிகிச்சை - வித்தியாசமான மருத்துவர்











சேவை நோக்கத்தோடு செயல்படும் மருத்துவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ஓய்வுபெற்ற அரசு மருத்துவ அதிகாரி ஜி.புஷ்பவனம்.

சாதாரணமாக
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்குச் சென்றாலே "கணினி பில் புனிதமாகப்
போற்றப்படும் மருத்துவத்துறை வணிகமயமாகி வரும் இந்தக் காலத்தில்' போட்டு
பணம் கறக்கும் இந்த ஹைடெக் "மெடி' யுகத்தில், வெறும் 5 ரூபாய்க்கு
மருத்துவச் சிகிச்சை அளித்து வருகிறார் இவர். தற்போது 63 வயதாகும்
புஷ்பவனம், மதுரை மாவட்டம், சோழவந்தானில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக
கிளினிக் நடத்தி வருகிறார்.




எப்படி இந்த 5 ரூபாய் சிகிச்சை? என அவரிடம் கேட்டோம்.



மருத்துவம் என்பது நோயாளியின் நோயைத்
தீர்க்கும் பணியாக இருக்க வேண்டுமே ஒழிய, பணத்தைப் பறிக்கும் ஒரு கருவியாக
இருக்கக்கூடாது என்பது என் எண்ணம். எப்பொருளும் விலையின்றி கொடுத்தால்
மதிப்பிருக்காது. அதனால்தான், குறைந்த கட்டணமாவது வாங்கி இச் சேவையை
அளித்து வருகிறேன். 28 ஆண்டுகளாக குறைந்த கட்டணத்தில் இச் சேவையைச் செய்து
வருகிறேன்.


தொடக்கத்தில் ரூ.3 கட்டணம்தான்
வசூலித்தேன். தற்போது ரூ.5 வசூலிக்கிறேன். இக்குறைந்த கட்டணத்தில்
சிசிச்சை அளிப்பதற்கு போதும் என்ற மனநிறைவுதான் காரணம். நான் வசித்த
பகுதிகள் பெரும்பாலும் கிராமப்புற பின்னணி கொண்டதால், மருத்துவத்துக்கு பல
ஆயிரம் பணம் செலவழிக்கும் நிலையில் பெரும்பாலானோரும் இல்லை என்பதை
நன்கறிவேன். இதனால், புற்றுநோயாளிகள், மனவளர்ச்சி குன்றியோர்,
தொழுநோயாளிகள், காசநோயாளிகள் என்றால் கட்டணம் வாங்குவதில்லை.


இதுதவிர, அவசர நேரத்தில் தொலைபேசி
மூலமும் தெரிந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பேன் என்று கூறும் புஷ்பவனம்,
தொழுநோயாளிகள், காசநோயாளிகளுக்கு தரமான இலவச சிகிச்சை பெற அரசு
மருத்துவமனைகளுக்குச் செல்லும்படி பரிந்துரையும் செய்கிறாராம்.


500-க்கும் மேற்பட்ட இலவச மருத்துவ
முகாம்களில் கலந்து கொண்டுள்ளதாக கூறும் இவர், இலவச மருத்துவ சிகிச்சை
அளிக்கும் மருத்துவமனைகளில் சேவை செய்ய விரும்புவதாக தெரிவிக்கிறார் இந்த
வித்தியாசமான மருத்துவர்.

பி.டி.கத்திரிக்காய்: நம்மாழ்வார் கருத்து

கோவை வேளாண்மை பல்கலைக்கழகமும், அமெரிக்க விதை நிறுவனமுமான மான்சான்டாவின் இந்திய பங்கு தாரரான மஹிகோ நிறுவனமும் சேர்ந்து காய்ப்புழு தாக்குதலை எதிர்க்கும் வகையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய்களை உற்பத்தி செய்துள்ளன.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயை சாப்பிட்டால் புற்று நோய், அலர்ஜி உள்பட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் என எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

ஆனால் இந்த கத்தரிக்காய்களை சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் இல்லை என கோவையில் உள்ள தமிழக வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் முருகேசபூபதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இயற்கை விவசாய விஞ்ஞானி நம்மாழ்வார்,

’’விவசாய பொருட்களில் மரபணு மாற்றம் செய்யும்போது ஒருவித வைரஸ் கிருமிகளை புகுத்திதான் இந்த மாற்றங்களை செய்கிறார்கள். எனவே அந்த பொருட்களை சாப்பிடும் போது அந்த வைரஸ்கள் உடல்களையும் தாக்கும்.

இதனால் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்திரிக்காய்கள் போன்றவற்றை சாப்பிடும் போது நமது உடல் அணுக்களிலும் பாதிப்புகளை ஏற்படுத்தும். பெண்களுக்கு கர்ப்ப பையில் தாக்குதல் ஏற்பட்டு கரு முட்டைகள் பாதிக்கப்படும்.


ஆண்களுக்கும் குழந்தை உற்பத்தி அணுக்கள் பாதிக்கப்படும். இதனால் ஆண்- பெண் இருவருக்குமே மலட்டு தன்மை ஏற்படும்.

புற்று நோய் போன்ற பல்வேறு நோய்களும் ஏற்படும். உடல் உறுப்புகள் பாதிக்கும். ரத்த அணுக்கள் பாதிக்கப்படும்’’என்று தெரிவித்துள்ளார்.

நாடு கடந்த தமிழீழ அரசுக்கு அமெரிக்கா உள்ளிட்ட 5 நாடுகள் அனுமதி?

கொழும்பு: விடுதலைப் புலிகள் [^] ஜெனீவா நகரில் அமைக்கவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசு என்ற கோட்பாட்டுக்கு அமெரிக்கா [^] உள்ளிட்ட ஐந்து நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இதனால் இலங்கை அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.

அமெரிக்கா தவிர, கனடா, பிரிட்டன், நார்வே மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் நாடு கடந்த தமிழீழ அரசு என்ற கோட்பாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளதாகத் கூறப்படுகிறது.

இதனால் இலங்கை அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.
நாடு கடந்த தமிழீழம் அமைக்கும் பணிகளுக்கு அனுமதி வழங்கிய நாடுகளின் செயற்பாடுகள் அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக இலங்கை அரசு கூறியுள்ளது.

தமிழீழ அரசை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக 59 தமிழர்கள் மீது இலங்கை அரசு குற்றம் சாட்டுகிறது. ருத்ரகுமாரன் உள்ளிட்ட இந்த நபர்கள் மீது மேற்கண்ட நாடுகள் நடவடிக்கை [^] எதுவும் எடுக்காமல் இருப்பதால் இலங்கை அரசு மேலும் எரிச்சலடைந்துள்ளதாம்.

தி மு கவின் மோசமான விளம்பரம்

சென்னை: நான்கே நாட்களில் ஈழத் தமிழர்களுக்கு விடுதலை பெற்றுத் தந்த கலைஞர் வாழ்க என்று கூறி சென்னை நகரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

தென் சென்னை மாவட்ட திமுக சார்பில் சென்னை நகரின் பல பகுதிகளிலும் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், இலங்கைத் தமிழர்களுக்கு நான்கே நாட்களில் விடுதலைப் பெற்றுத் தந்த கலைஞருக்குப் பாராட்டு, வாழ்க தலைவர் கலைஞர் என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

சமீபத்தில் இலங்கை சென்றிருந்த திமுக தலைமையிலான எம்.பிக்கள் குழுவினர் இடம் பெயர்ந்தோர் முகாம்களில் உள்ள தமிழர்களை விரைவில் மறுகுடியேற்றம் செய்ய வேண்டும் என ராஜபக்சேவிடம் வலியுறுத்தினர்.

இதையடுத்து அடுத்த 15 நாட்களுக்குள் 58 ஆயிரம் பேர் மறு குடியமர்த்தப்பட்டு விடுவார்கள் என்று தெரிவித்திருந்தார். இதைத்தான் விடுதலை என்று குறிப்பிட்டு திமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளதாக தெரிகிறது.

தி மு க இவ்வளவு மோசமான விளம்பரத்தை தேடுவது மிகவும் காயப்படுத்துகிறது

Thursday, October 8, 2009

காஞ்சி கோவில் கருவறைக்குள் பெண்களுடன் உல்லாசம்- அர்ச்சகருக்கு வலை வீச்சு

காஞ்சீபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள மச்சேச பெருமாள் கோவில் அர்ச்சகர் பெண்களுடன், கோவில் கருவறைக்குள்ளேயே உல்லாசமாக இருந்ததாக பெரும் புகார் [^] கிளம்பியுள்ளது. இதையடுத்து அந்த அர்ச்சகரை போலீஸார் தேடி வருகின்றனர்.

காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே கிழக்கு ராஜ வீதியில் உள்ளது மச்சேச பெருமாள் கோவில். இந்த கோவிலில் அர்ச்சகராக இருப்பவர் தேவநாதன் (35). இவர், செங்கல்பட்டை அடுத்த பழைய சீவரம் என்ற ஊரைச் சேர்ந்தவர். பிராமணர் தெருவில் வசித்து வருகிறார்.

கருவறை முன்பாகவே உல்லாசம்...

பக்தர்கள் வராத நேரத்தில், பல பெண்களிடம் கோவில் கருவறை முன்பாகவே அர்ச்சகர் தேவநாதன் உல்லாசமாக இருந்து வந்ததாக பரபரப்பான தகவல் வெளியானது.

இதையடுத்து சிலர் அர்ச்சகர், பெண்களுடன் உல்லாசமாக இருந்த அலங்கோலத்தை, வீடியோவில் படம் பிடித்து சிவகாஞ்சி போலீஸ் [^] நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அதைப் பார்த்த போலீஸார் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். கோவில் [^] கருவறை முன்பாக பல்வேறு பெண்களுடன் தேவநாதன் அசிங்கமாக நடந்து கொண்ட அந்த காட்சிகளைப் பார்த்து அதிர்ந்தனர். சில பெண்களுடன் கருவறைக்குள்ளும் உல்லாசமாக இருந்துள்ளார் தேவநாதன்.

இதையடுத்து எஸ்.பி. பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் இது கூறப்பட்டது. அவரது உத்தரவின் பேரில், இந்திய தண்டனை சட்டம் [^] 295-ஏ பிரிவின் கீழ் தேவநாதன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தன் மீது வழக்குப் பதிவானதை அறிந்ததும் தேவநாதன் தனது குடும்பத்தினருடன் ஓடி விட்டார். அவரைப் பிடிக்க போலீஸார் தற்போது தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர்.

கோவில் கருவறைக்குள் வைத்து பெண்களுன் உல்லாசமாக இருந்ததாக இதுவரை தமிழகத்தில் எந்த புகாரும் வந்ததில்லை. ஆனால் தற்போது வீடியோ ஆதாரத்துடன், ஒரு அர்ச்சகர் செய்த அசிங்கம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளதால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Wednesday, October 7, 2009

இளவயதில் சாதனை படைத்தவர்கள்

இந்திய சரித்திரத்தில் இடம் பெற்ற போது பகத்சிங் வயது 23

புத்தர் ஞானம் பெற அரண்மனையை விட்டு வெளியேறிய போது வயது 27

ஜான்சி ராணி வெள்ளையனை எதிர்த்து வீரத்துடன் போரிட்டபோது வயது 25

திருப்பூர் குமரன் வெள்ளையருக்கு எதிரான போராட்டத்தில் ரத்தம் சிந்திய போது வயது 26


அலெக்சாண்டர் பாரசீகத்தின் மீது படையெடுத்த போது வயது 22


ஐசக் நியூட்டன் புவியீர்ப்பு விதியை கண்டறிந்த போது வயது 24


கலிலியோ தெர்மொமீட்டரைக் கண்டுபிடித்த போது வயது 20


மார்கோ போலோ உலகப் பயணத்தை தொடங்கிய போது வயது 17


கிரகாம்பெல் தொலைபேசியை கண்டறிந்த போது வயது 29


பாஸ்கல் கணக்கிடும் கருவியைக் கண்டுபிடித்த போது வயது 19


மாண்டலின் சீனிவாசன் புகழ் பெற்ற போது வயது 15