தூத்துக்குடி நகரிலும் பல பகுதிகள் கடல் மட்டத்தைவிட தாழ்வாக உள்ளன. இதனால் மாலத்தீவு போன்ற ஒரு நிலை தூத்துக்குடிக்கும் ஏற்பட வாய்ப்பு உள்ளதா? என்பதை அறிய தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி ஜியாலஜி பேராசிரியர்கள் டாக்டர் திருஞான சம்பந்தம், டாக்டர் உடையனபிள்ளை, டாக்டர் சிவசுப்பிரமணியன் ஆகியோரை சந்தித்தோம்.
அவர்கள் கூறியதாவது, மன்னார் வளைகுடா கடலில் மொத்தம் 21 தீவுகள் உள்ளன. இவற்றில் பவளப்பாறைகள், சல்லிகள் போன்றவைகள் பெருமளவு திருடப்பட்டதால் தற்போது 2 தீவுக்ள முற்றிலுமாக கடலில் மூழ்கிவிட்டன. தூத்துக்குடி அருகே உள்ள விலாங்கு சல்லி என்ற தீவும், கீழக்கரைக்கு அருகே உள்ள பூவரசன்பட்டி என்ற தீவும் தற்போது அடையாளம் தெரியாத வண்ணம் கடலில் மூழ்கியுள்ளது.
தூத்துக்குடி கடலோரப் பகுதிகள் கடல் மட்டத்தைவிட சுமார் 2மீ உயரமானவை. அதே நேரம் தூத்துக்குடி பழைய பஸ் ஸ்டாண்ட், வ.உ.சி. கல்லூரி போன்ற பகுதிகள் கடல் மட்டத்தைவிட 2மீ தாழ்வாக இருப்பதாக ஜிபிஎஸ் (GPS) கருவிகள் காட்டுகின்றன.
புவி வெப்பமயமாதல் காரணமாக கடல்நீர் மட்டம் உயர்ந்துகொண்டே வருவதால் தூத்துக்குடி கடலோரங்களில் அரிப்பு ஏற்படாதவாறு பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலோரங்களில் சதுப்பு நில காடுகள் உருவாக்குதல், மழைநீர் சேகரிப்பு ஏற்படுத்துதல், தூண்டில் பாலங்கள் அமைத்தல் போன்ற நடவடிக்கைகளால் கடல் அரிப்பை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment