Sunday, August 30, 2009

திருடுவதை தொழிலாக கொண்ட கிராமம்: போலீஸ் கலந்துரையாடலில் திடீர் முடிவு


நெல்லை மாவட்டம் திருநெல்வேலியிலிருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலையில் அமைந்துள்ள சிறிய கிராமம் தெற்கு பனவடலி சத்திரம். தற்போது அப்பகுதியில் 1500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில் 1000க்கும் அதிகமானோர் கேரளாவில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஒரே சமூதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் திருமன சம்பந்தம் கூட அதே கிராமத்திற்குள்ளாகவே இருக்கும்.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் குடிசைகளில்; மட்டுமே வாழ்ந்து வந்த கிராம மக்கள் சிலர் வெளி மாநிலங்களுக்கு வேலைக்குச் சென்று சொந்த ஊரில் மாட மாளிகைகள் கட்டியதைக் கண்ட ஊர்மக்கள் அனைவரும் அதே வழியில் வெளி மாநிலமான கேரளாவை நோக்கி பணி நிமித்தம் செல்லத் தொடங்கினர்.

ஆனால் சென்றவர்கள் அங்கு திருட்டுத்தொழிலையே பிரதானமாக செய்து வந்தனர். இது அரசல் புரசலாக தமிழக காவல் துறைக்குத் தெரிந்திருந்தும் பெரிதாக கண்டுகொள்ளவே இல்லை. கேராளாவிலிருந்து நெல்லை மாவட்டத்திற்கு காவல் துறையினர் வந்து அப்பகுதியில் உள்ள பனவடலிசத்திரம் காவல் நிலையத்தினர் உதவியுடன் பலரைக் கைது செய்து ஏராளமான தங்க நகைகள் மற்றும் பணமும் கைப்பற்றி அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து பலர் கேரள சிறைச்சாலைகளில் உள்ளனர். இதில் பெண்களும் அதிகப்படியாக ஈடுபட்டு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் கேரள நீதிமன்றத்திற்கு வழக்குகளுக்காக பலர் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கேரள தொலைக்காட்சியில், நெல்லை மாவட்டத்தில் உள்ள பனவடலிசத்திரம் திருட்டு கிராமம் என செய்தி வெளியிட்டது. இதனையடுத்து தமிழக போலீஸார் திருட்டு கிராமமான பனவடலிசத்திரம் கிராமத்து மக்களை நேரடியாக சந்திக்க முடிவு செய்து போலீஸ் பொதுமக்கள் கலந்தாய்வுக் கூடட்த்திற்கு ஏற்பாடு செய்தனர்.

கூட்டத்தில் நெல்லை சரக டி.ஐ.ஜி கண்ணப்பன், நெல்லை மாவட்ட எஸ்பி அஸ்ராகர்க், சங்கரன்கோவில் டி.எஸ்.பி நடராஜ மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஊர் மக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்கள் கூறும் போது தாங்கள் ஒரு நேரத்தில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது உண்மைதான் என்றும் ஆனால் தற்போது எதிர்கால சந்ததியினரின் முன்னேற்றத்தை மனதில் கொண்டு திருந்தி வாழ சந்தர்ப்பம் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

அதே சமயத்தில் தவறு செய்தவர்களை தாங்களே முன்வந்து அடையாளம் காட்டி போலீஸாரிடம் இன்னும் 15 தினங்களுக்குள் ஊர்மக்கள் ஒன்று கூடி கமிட்டி அமைத்து ஒப்படைப்பதாகவும் முடிவெடுத்துள்ளனர். இதில் போலீஸார் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தவிர மற்றவர்கள் மீது உள்ள பொய் வழக்குகளில் இருந்து அவர்களை விடுவிக்க உத்திரவாதம் தருமாறு கேட்டுக்கொண்டனர். மேலும் இக்கிராமம் திருட்டு கிராமம் என பெயர் பெற்று விட்டதால் தங்களது குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில ஆசிரியர்கள் அவமானப்படுத்துவதாகவும் மாணவர்கள் தெரிவித்ததையடுத்து போலீஸார் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் நேரிடையாக தலைமையாசிரியரை சந்தித்து பேசுவதாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

கூட்டத்தில் கலந்து கொண்ட நெல்லை சரக டி.ஐ.ஜி கண்ணப்பன் கூறும்போது, இக்கிராமம் மீது விழுந்துள்ள கரும் புள்ளியினை மாற்றும் நோக்கத்தில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூட்டத்தின் நோக்கமே திருந்துங்கள் இல்லையேல் திருத்தப்படுவீர்கள் என்பது தான் என அவர் தெரிவித்தார்.தவறு செய்தவர்கள் அதற்கான தண்டனை அடைந்தே ஆகவேண்டும் ஆதலால் திருந்தி வருகின்றோம் மன்னித்து விடுங்கள் என மக்கள் கூறுவதை ஏற்க முடியாது. தவறு செய்பவர்கள் அதிக நாள் மறைந்தும் வாழ முடியாது ஆகவே குற்றவாளிகளை ஊர்மக்களே தெரிவித்தால் மற்றவர்கள் நிம்மதியாக வாழ காவல்துறை ஏற்பாடு செய்யும் என தெரிவித்தார்.

திருட்டை பிரதானமாக கொண்ட ஒரு கிராமத்தை மனிதாபிமான நோக்கோடு காவல்துறை கையிலெடுத்து மக்களை திருத்த பெரு முயற்சி எடுத்தது நெல்லை மாவட்ட மக்களிடையே பெரும் வரவேற்பை பெரும் என்பதில் ஐயமில்லை.

பிரபாகரன் உயிருடன்தான் உள்ளார்! : இலங்கை எம்பி சிவாஜிலிங்கம்

கோவை : தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன்தான் உள்ளார். இதுபற்றிய நம்பகமான தகவல்கள் எனக்குக் கிடைத்துள்ளன, என்ற இலங்கை எம்பி சிவாஜிலிங்கம் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். 3 மாதங்களுக்கு முன், புலிகள் முற்றிலுமாக தோற்கடிக்கப்பட்ட தகவல் வெளியானபோது, "இன்னும் சில நாட்களில் பிரபாகரன் இறந்துவிட்டார் என்று புலிகளே அறிவிப்பார்கள்... சூழ்நிலை கருதி அப்படியொரு அறிக்கை வெளியாகும்!" என்று மதுரையில் இவர்தான் பேட்டி கொடுத்தார். அடுத்த சில தினங்களிலேயே அப்படியொரு அறிக்கையை செல்வராசா பத்மநாதன் வெளியிட்டார். இந்நிலையில் கோவையில் நிருபர்களிடம் பேசிய சிவாஜிலிங்கம்,

எங்களுக்குக் கிடைத்த தகவல்களின்படி தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்தான் உள்ளார். அவர் இறந்துவிட்டதாக செல்வராஜா பத்மநாதன் கூறியிருப்பதில் ஏதேனும் அரசியல் சூசகம் அடங்கியிருக்கலாம். பத்மநாபன் கைது முதற்கொண்டு பல விஷயங்களை நாங்கள் அப்படித்தான் கருதுகிறோம். தேசிய தலைவர் இறந்துவிட்டதாக எந்த தகவலும் எங்களுக்கு உறுதியாக, ஆதாரங்களுடன் கிடைக்கவில்லை. இலங்கை அரசு அதற்கான ஆதாரங்கள் எதையும் தரவுமில்லை.

நான் தமிழ்மக்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவது இதுதான். தேசிய தலைவர் உயிருடன் உள்ளாரா என்பதற்கு காலம் பதில் சொல்லும். தற்போதைய உடனடி தேவை அகதிகளாக உள்ள 3 லட்சம் மக்களை அங்கிருந்து காப்பாற்றி, அவர்களின் இடங்களில் குடியமர்த்துவதுதான். மற்றபடி தமிழர்களுக்கு நிரந்தரத்தீர்வு என்பது சுய அரசியல் நிர்ணய சபையுடன் கூடிய தமிழீழமே. ஆயுதப் போராட்டத்தைத் தொடர்வதா இல்லையா என்பது விடுதலைப் புலிகளின் கையில்தான் உள்ளது என்றார்.
TNC

ரத்தவெறிபிடித்த சிங்களர்களால் சிதைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்கள்:மீண்டும் அதிர்ச்சியூட்டும் படங்கள்

இலங்கையில் உள்ள ராணுவ வதை முகாமில் தமிழ் இளைஞர்களை கடத்திச் சென்று நிர்வானமாக்கி, தலையில் சுடும் காட்சிகளை லண்டனில் உள்ள சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டது.

இந்நிலையில் இலங்கை இராணுவம் ஈழத்தமிழர்களை கொன்று பெண்களையும் இளைஞர்களையும் முழுநிர்வாணமாக்கி புகைப்படங்களை எடுத்திருக்கும் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.


இப்படங்கள் எப்போது எடுக்கப்பட்டது எனத் தெரியவில்லை. விமான ஓடுபாதையில் இப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளது.

இது அனுராதபுரம் வான் தாக்குதலாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இறந்த போராளியின் மீது தனது பூட்ஸ் காலை வைத்து இலங்கை இராணுவம் புகைப்படம் எடுத்துள்ளது.

இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தவேண்டாம். ஒரு குழிக்குள்ளாவது போட்டு புதைத்திருக்கலாம். அப்படி செய்யாமல் காக்கா,குருவி கொத்தித்தின்ன அப்படியே போட்டு வைத்திருக்கிறார்கள்.

ஆனால் இறந்த உடலத்தை நிர்வானமாக்கிப் பார்க்கும் சாக்கடைப் புத்தி உலகிலேயே சிங்கள இனத்திற்கு மட்டும் தான் இருக்கும் என்று ஈழ ஆதரவாளர்கள் கொந்தளிக்கிறார்கள்.



Friday, August 28, 2009

5 குழந்தைகளை கொன்றதாக பெண் சாமியார் கைது

ஆத்தூரில் 5 குழந்தைகளை கொன்றதாக பெண் சாமியார் பெருமாயி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆத்தூரில் குறி சொல்லும் பெண் சாமியார் பெருமாயி என்பவர், குறி சொல்லும் வாக்கு பலிக்க குருணை மருந்து கொடுத்து 5 குழந்தைகளை கொன்றுள்ளார். இந்த செய்தி அறிந்த போலீசார் பெருமாயியை கைது செய்துள்ளனர்.

மேலும் இதற்கு உடந்தையாக இருந்த பெருமாயி கணவர் பழனிமுத்துவையும் போலீசார் கைது செய்துள்ளனர். குறி சொல்லும் வாக்கு பலிக்க குருணை மருந்து கொடுத்து 5 குழந்தைகளை கொன்றுள்ளதாக இவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

இந்த வழக்கை பதிவு செய்த போலீசார் இருவரிடமும் மேலும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாய பணிகளுக்கு ரோபோ: கோவில்பட்டி மாணவரின் கலக்கல் கண்டுபிடிப்பு

கோவில்பட்டியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் விவசாயப் பணிகளுக்கு பயன்படும் வகையில் ரோபோ ஒன்றை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கதிரேசன் கோயிலைச் சேரந்த சித்தன் என்பவரது மகன் ஸ்ரீதர் (18). ஸ்ரீதர் கோவில்பட்டி அருகே சிவகாசி செவல்பட்டியிலுள்ள தனியார் பாலிடெக்னிக்கில் 3ஆம் ஆண்டு டிப்ளமோ இன் எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படித்து வருகிறார்.

நம் நாட்டின் முக்கிய தொழிலான விவசாயத்திற்கு தற்போது நலிந்து வருகிறது. வேலையாட்கள் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இதனைக் கருத்திற்கொண்டு விவசாய பணிகளுக்கு பயன்படும் ரோபோவை வடிவமைத்து இருக்கிறார் இந்த கோவில்பட்டி மாணவர். இவர் வடிவமைத்த ரோபோ குறித்த செயல் விளக்கங்கள் மற்றும் பயன்பாடுகள் குறித்து கோவில்பட்டி நகராட்சி பூங்காவில் விளக்கி கூறினார்.

சுமார் 3.5 அடி உயரமுள்ள இந்த ரேபோவில் மோட்டார் பொருத்தி, கைகளில் செடிகளை வெட்டும் சுழல் கத்தியையும் இணைத்துள்ளதால் இதன் மூலம் தேவையற்ற களை போன்ற செடிகளை வெட்ட பயன்படுத்துமாறு வடிவமைத்து இருக்கிறார். மேலும் ரோபோவின் முகத்தில் கண்காணிப்பு கேமராவும், செயல்பாட்டை கண்டுபிடிக்க டிஸ்பிளே லைட்டுகளும், தேவையான இடங்களுக்கு நகரும் மோட்டார் சக்கரங்களும் இணைக்கப்பட்டு முற்றிலும் ரிமோட்டால் இயக்கப்படும் நிலையில் வடிவமைத்துள்ளார்.

இந்த ரோபோ மூலம் விவசாய நிலங்களில் ஈரப்பதத்தை கண்டறிந்து தானாகவே தண்ணீர் பாய்ச்சவும், போதுமான தண்ணீர் பாய்ந்தவுடன் தானாகவே அடுத்த பாத்திக்கு தண்ணீர் பாயுமாறு வடிவமைத்துள்ளதாகவும், ரோபோ செய்ய வேண்டிய வேலைகளை கம்யூட்டரில் பதிவு செய்து உத்தரவுகளை பிறப்பித்தால் அனைத்து வேலைகளையும் செய்து முடிக்குமாறு உருவாக்கியுள்ளார். மேலும் இதுகுறித்த தொழில் நுட்பங்களை பெங்களூருவில் படித்து தெரிந்து கொண்டு பெரிய அளவில் செய்ய இருப்பதாகவும் மாணவர் ஸ்ரீதர் தெரிவித்தார்.

தமிழாசிரியருக்கு வீடு பரிசு தரும் நாமக்கல் மாணவர்கள்!

நாமக்கல்: நாமக்கல்லைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தமிழாசிரியர் ஒருவருக்கு, அவரிடம் படித்த முன்னாள் மாணவர்கள் ஒரு இரண்டு மாடி வீட்டை பரிசாக அளித்து குருதட்சணை செலுத்தவுள்ளனர்.

மிக மிக அரிய இந்த நிகழ்வு செப்டம்பர் 5ம் தேதி நடக்கவுள்ளது. அந்த பெருமைக்குரிய தமிழாசிரியரிடம் படித்த 500 மாணவர்கள் சேர்ந்து இந்த பரிசினை அளிக்கவுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் குருசம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.வி.வெங்கட்ராமன். அங்குள்ள பள்ளியில் 41 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி 1985ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

ஆசிரியராக இருந்த அவர் மாணவர்களுக்கு போதனை நிகழ்த்தவும், அவர்களின் நலனில் மட்டுமே அக்கறை செலுத்தியதாலும், தனது சொந்த நலன் குறித்து கவலைப்படாமல் இருந்து விட்டார். விளைவு, பொருளாதாரத்தில் அவர் செழிப்பாக இல்லை.

வாடகை கூட கட்ட முடியாத நிலையில், குருசம்பாளையத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்தச் செய்தி [^], அவரிடம் படித்த முன்னாள் மாணவர்களுக்குப் போனது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஒன்று சேர்ந்தார்கள். கிட்டத்தட்ட 500 பேர் ஒன்று கூடி கடந்த 2007ம் ஆண்டு ஆலோசனை நடத்தினர். தங்களை உயர்வித்த ஆசிரியருக்கு எப்படியாவது உதவ வேண்டும் என தீர்மானித்தனர்.

இதுகுறித்து ஆசிரியர் வெங்கட்ராமனின் முன்னாள் மாணவரும், ஓய்வு பெற்ற நகராட்சி ஆணையருமான எம்.ஏ. அர்த்தநாரி கூறுகையில், கிட்டத்தட்ட 500 பேர் 2007ம் ஆண்டு ஒன்று கூடி விவாதித்தோம். அப்போது எங்களது ஆசிரியருக்கு ஒரு வீட்டை கட்டி அதை அவருக்குப் பரிசளிக்க முடிவு செய்தோம்.

இதையடுத்து பணம் திரட்டும் வேலைகள் தொடங்கின. தற்போது எங்களது ஆசிரியருக்காக 2 மாடிகளைக் கொண்ட வீட்டை உருவாக்கி விட்டோம்.

எங்களது ஆசிரியருக்கு பென்ஷனாக தற்போது ரூ. 9000 கிடைக்கிறது. நாங்கள் தரப் போகும் வீடு அவரது கஷ்டத்தை துடைக்கும். அதேசமயம், எங்களுக்கு நல்வழி காட்டிய ஆசிரியருக்கு நாங்கள் தரும் குருதட்சணையாகவும் அமையும்.

ஆசிரியர் தினமான செப்டம்பர் 5ம் தேதி எங்களது ஆசிரியரிடம் வீட்டை ஒப்படைக்கவுள்ளோம். அந்த மகிழ்ச்சியான தினத்திற்காக அனைவருமே காத்திருக்கிறோம் என்றார் நெகிழ்ச்சியுடன்.

ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையிலான உறவு இன்று முன்பு போல அவ்வளவு சிறப்பாக இல்லாத நிலை. ஆனால் தங்களுக்குப் பாடம் நடத்திய ஆசிரியரின் நிலையை உணர்ந்து, தவித்துப் போய் அவருக்கு உதவுவதற்காக ஒரு வீட்டையே பரிசாக கொடுக்கும் இந்த மாணவர்கள் [^] நிச்சயம் பாராட்டுக்குரியவர்கள்.

ரசாயண முறையில் பழுக்க வைக்கும் பழங்களால் ஆபத்து


PDFக்கு மாற்ரவும் அச்சடித்து எடுக்க

சென்னை, செயற்கை முறையில் மாம்பழம், ஆப்பிள், வாழைப்பழங்களைப் ரசாயன முறையில் பழுக்க வைத்து சாப்பிடுவதில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

தானாய் பழுக்க வேண்டியதை தடியால் அடித்துப் பழுக்கவைப்பது என்தெல்லாம் பழமொழி. கால்சயிம் கார்பைட் தான் புதுமொழி. கடைகளில் விற்கப்படும் மாம்பழங்கள் பெரும்பாலும் கார்பைட் கற்களால் பழுக்கவைக்கப்பட்டதாகத்தான் இருக்கும். வியாபாரக் காரணங்களுக்காக அவர அவசரமாகப் பறிக்கப்படும் மாங்காய்களை இயற்கை முறையில் பழுக்க வைக்க சுமார் ஆறு நாட்கள் தேவைப்படும். ஆனால், அதுரை வியாபாரிகளால் லாபம் சம்பாதிக்காமல் இருக்க முடியுமா? அதனால்தான் திருவாளர் கார்பைடின் கைங்கர்யத்தில் பழுக்க வைக்கிறார்கள். செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களைச் சாப்பிடுவதால் வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற கோளாறுகள்தான் ஏற்படும் என்று சொல்லி வந்தார்கள். ஆனால், கார்பைட் கற்களில் உள்ள ஆர்சனிக் ரசாயனம் புற்றுநோயை ஏற்படுத்தும் எனச் சமீபத்தில் கண்டறிந்துள்ளார்கள். ஒரு மாம்பழத்தைப் பார்த்தே அது இயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்டதா இல்லையா என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். இயற்கையான முறைகளில் பழுக்கவைக்கப்பட்டதெனில் பழும் முழுவதும் ஒரே நிறமாக இருக்கும். கார்பைட் பழுத்தின் நிறம் ஆங்காங்கே அதிகமாகவும் சில இடங்களில் கறைவாகவும் இருக்கும். தவிர பழம் சூடானதாகவும் தோலில் மெல்லிய சுருக்கங்களும் இருக்கும். சுவையான மாம்பழம் என்ற வாங்கி சொந்தத் செலவில் சூன்யம் வைத்துக்கொள்ள வேண்டாம். கவனித்து வாங்குங்கள், கழுவி உண்ணுங்கள்.

பழக்கடைகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பளபளா ஆப்பிள்கள் நம் கண்ணைப் பறிக்கும். பறிக்கப்பட்ட ஆப்பிள்கள் கெட்டுப்போகாமல் இருக்க அதன் மீது மெழுகுப் பூச்சு செய்யப்பட்டு பதப்படுத்தப்படுவது வழக்கமானதுதான். அப்படிப் பூசப்படும் மெழுகு தேன் கூடுகளில் இருந்தோ அல்லது தாவர எண்ணெய்களில் இருந்தோ தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது அரசின் கட்டுப்பாடு. ஆனால், அந்தக் கட்டுப்பாடுகள் காற்றில பறக்க விடப்பட்டு பலகாலம் ஆகிவிட்டது. இப்போதைய பளபளாவுக்குக் காரணம் பெட்ரோலியப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் மெழுகு பூசப்படுவதே. இத்தகைய மெழுகுப்பூச்சுக்கள் ஜீரணக் கோளாறுகளில் துவங்கி பல்வேறு கேடுகளை ஏற்படுத்தும். ‘தினம் ஒரு ஆப்பில் சாப்பிட்டால் மருத்துவரே தேவை இல்லை‘ என்பார்கள். மோசமான மெழுகு பூசப்பட்ட ஆப்பிளைச் சாப்பிடுவதாலேயே, மருத்துவரைத் தேட வேண்டி வரலாம். கவனம்.

மாம்பழங்கள் தவிர்த்து வாழைப்பழங்களும் கூட அரசாங்க விதிமுறைகளை மீறி செயற்கை முறையில் பழுக்கவைக்கப்படுகின்றன. இவ்வகை வாழைப்பழங்களின் காம்பு பச்சையாகவும் பழம் மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.

வெடித்தது சீனா மொபைல்: சேலம் வாலிபருக்கு காயம்

mobile-chinaசீனா தயாரிப்பு மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்த போது, திடீரென வெடித்துச் சிதறியதில், வாலிபருக்கு காயம் ஏற்பட்டது. சேலம் பள்ளப்பட்டி சென்னேரி வையக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள்.

அவரது மகன் வினோத்ராஜ்(22), மருத்துவப் பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். சீனா தயாரிப்பு மொபைல் போனை (என்-958 மாடல்) வினோத்ராஜ், ஓராண்டுக்கு முன் வாங்கினார்; விலை 4,000 ரூபாய். நேற்று முன்தினம் இரவு, மொபைலை சார்ஜ் செய்து முடித்தவுடன் அவருக்கு அழைப்பு வந்தது. நண்பரிடம் ஐந்து நிமிடங்கள் பேசிய அவர், மொபைல் போனில் இருந்து வந்த வித்தியாசமான சத்தத்தால் எடுத்து பார்த்தார். திடீரென மொபைல் வெடித்துச் சிதறி, அவரது நெற்றி, கை, நெஞ்சு பகுதிகளில் கார்பன் துகள்கள் பட்டு, தீக்காயம் ஏற்பட்டது. மொபைலில் இருந்த பேட்டரி, அதிக உஷ்ணம் அடைந்ததால், இந்த விபத்து நேரிட்டுள்ளது.

நோயாளிகள் உயிருடன் விளையாடிய அரசு மருத்துவர்கள்

கின்னஸ் சாதனைக்காக சில தனிப்பட்ட நபர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து துணிச்சலான செயல்களில் ஈடுபட முயற்சிப்பதும் அதில் வெற்றி பெறுவதும் உலகம் முழுவதும் நடைபெற்று வரும் நிகழ்வுகளாகும்.

ஆனால் மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் கின்னஸ் சாதனைக்காக நோயாளிகளின் உயிருடன் விளையாடி இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் அரசு ரா
ஜாஜி மருத்துவமனை உள்ளது. இங்கு மூன்றரை மணி நேரத்தில் 14 பேருக்கு மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுவதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த தொடர் அறுவை சிகிச்சைகள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு கின்னஸ் சாதனைக்காக அனுப்பி வைக்குமாறு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அரசு அதிகாரிகளிடம் இருந்து எந்தவிதமான முன் அனுமதியும் இன்றி இந்த சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் விநாயகம் தெரிவித்துள்ளார்.

இதனை ஏற்க முடியாது என்றும் இது கின்னஸ் அல்லது வேறு எந்த சாதனை புத்தகத்திலும் இடம்பெறுவதற்கு அனுப்பி வைக்கப்படமாட்ட
து என்றும் சுகாதாரத் துறை செயலர் வி.கே. சுப்புராஜ் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு தான் தங்களது முக்கிய குறிக்கோள் என்றும் நோயாளிகளின் உயிருடன் விளையாடும் எந்த ஒரு செயலையும் அங்கீகரிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராஜாஜி மருத்துவமனையின் புற்றுநோய் மருத்துவ நிபுணர் டாக்டர் மோகன் பிரசாத், தன்னுடன் சேர்ந்து 3 டாக்டர்கள் மூன்றரை மணி நேரத்தில் 14 அறுவை சிகிச்சைகள் செய்ததாக கூறியுள்ளார். ஆபரேஷன் தியேட்டருக்குள் 4 பேரை படுக்க வைத்து நோயாளியின் உடலில் இருந்து தாம் கட்டியை அகற்றியதாகவும், தனது உதவியாளராக இருந்த மருத்துவர் தையல் போட்டார் என்றும், 3 பேருக்கு முடித்துவிட்டு தாம் 4வது நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்ய போகும்போது முதல் நோயாளி வார்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முதல் நபர் வார்டுக்கு அனுப்பும் போது அடுத்த நபர் ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு வரப்படுவார் என்றும் அவர் தெரிவித்தார்.அரசு மருத்துவமனையிலேயே

அரசு மருத்துவர்களின் இந்தச் செயல் பல்வேறு மருத்துவ அமைப்புகளையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது மருத்துவர்கள் தங்களது உறுதிமொழியை மீறிய செயல் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.பொதுவாக தனியார் மருத்துவமனைகள் சிலவற்றில் வர்த்தக நோக்கத்துடன் அறுவை சிகிச்சைகள் செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அரசு மருத்துவமனையிலேயே இப்படி ஒரே நேரத்தில் ஒரே மருத்துவ குழு பலருக்கு அறுவை சிகிச்சை செய்திருப்பது அங்கீகரிக்கப்பட்டால் தனியார் மருத்துவமனைகளும் இதனைப் பின்பற்ற தொடங்கிவிடும் அபாயம் உள்ளது என்றும், இது நோயாளிகளின் உயிருடன் விளையாடுவது போலாகிவிடும் என்றும் மருத்துவர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல் என்று விவசாயத்தில் சொல்லப்படுவது வழக்கம். ஒரே நேரத்தில் பல நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதைவிட ஒவ்வொரு நோயாளிக்கும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி, அறுவை சிகிச்சையை சிறப்பாக செய்வதுதான் மருத்துவ தொழிலில் முக்கியம்.

இதனை உணராமல் தனிப்பட்ட சாதனைக்காக இந்த முயற்சியில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

Thursday, August 27, 2009

வேலை வாய்ப்பு:சிறப்பு வாய்ப்பு

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கடந்த ஆண்டு புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு, மூன்று மாதங்களுக்குள் புதுப்பிக்க சிறப்பு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 2008 ஜனவரி முதல் டிசம்பர் வரையுள்ள காலத்தில் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு, சிறப்புப் புதுப்பித்தல் சலுகை வழங்கி அரசு உத்ரதவிட்டுள்ளது.

இதன்படி, கடந்த ஆண்டு புதுப்பிக்கத் தவறியவர்கள், வரும் நவம்பர் 23ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு, அலுவலக வேலை நாட்களில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டையை நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமோ விண்ணப்பித்து தங்களது பதிவை புதுப்பித்துக்கொள்ளலாம் என, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் ஜீவானந்தம் தெரிவித்துள்ளார்.

Wednesday, August 26, 2009

22 போலி பல்கலைக்கழகங்கள்

அங்கீகாரம் பெறாத பல்கலைக்கழகங்கள் பட்டியலை யுஜிசி வெளியிட்டுள்ளது. மாணவர்கள் கல்வி நிறுவனங்களில் சேரும் முன்பு தாங்கள் சேரும் நிறுவனத்தின் அங்கீகாரத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் 22 போலி பல்கலைக்கழகங்கள் இருப்பதாகவும் யுஜிசி தெரிவித்துள்ளது. இவற்றில் ஒன்று, திருச்சியில் உள்ளது. டெல்லியில் 5, உ.பி.யில் 3, மற்றும் விஜயவாடா, வாரணாசி, பெல்காம், ஜபல்பூர், கேரளா, நாக்பூர், கொல்கத்தா, லக்னோ, கான்பூர், அலிகார், மதுரா பல்கலைக்கழகங்கள் போலி பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

சக்கரை நோயாளி பழம் சாப்பிடலாமா?


சக்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடலமா? என்பது பொதுவாக யாருக்கும் தெளிவாகத்தெரியாத ஒன்று.

சிலர் பழங்கள் சாப்பிட்டால் சக்கரை கூடும் என்பர். சிலர் சில பழங்கள் உண்ணலாம் என்பார்கள்.

எது உண்மை? எது பொய்?

இது பற்றி கொஞ்சம் அலசுவோம்!!

1.சக்கரை நோய் உள்ளவர்கள் மூன்று வேளையும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது!

சாப்பிடக்கூடிய பழங்கள்: சாப்பிடக்கூடாத பழங்கள்:
1.ஆப்பிள் 1.மாம்பழம்
2.ஆரஞ்சு 2.வாழை
3.சாத்துக்குடி 3.பலாப்பழம்
4.மாதுளை 4.சப்போட்டா
5.கொய்யா 5.திராட்சை
6.பப்பாளி 6.சீதாப்பழம்
7.தர்பூசணி
8.அன்னாசி
9.எலுமிச்சை
10.தக்காளி
11.நெல்லிக்காய்

2.சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள் பழங்களைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் பழங்களில் உள்ள பொட்டாசியம் சத்து சிறுநீரகத்தை பாதிக்கும்.

3.பழங்களில் உள்ள மாவுச்சத்தின் பெயர்- ஃப்ரக்டோஸ்( குளுக்கோஸ் அல்ல). இது ஜீரணமாக இன்சுலின் தேவையில்லை. இதனை அளவோடு உண்டால் சக்கரை கூடாது. அதிகம் உண்டால் இது ஈரலுக்கு சென்று குளுக்கோஸாக மாறிவிடும்.

4.நமது உடலுக்குத் தேவையான மாவுச்சத்து 60% தானியங்களிலிருந்து கிடைக்கிறது. இதில் 10% பழங்களிலிருந்து எடுத்துக்கொண்டால் தானிய மாவுச்சத்து 50% ஆகக் குறையும்.

5.பழங்களில் உள்ள நார்ச்சத்து சக்கரை விரைவாக உயர்வதைத் தடுக்கிறது., மலச்சிக்கலைத் தடுக்கிறது,பசியைக் கட்டுப்படுத்துகிறது,வயிறு நிறைவை ஏற்படுத்துகிறது.

ஷூவில் மறைந்திருந்த தேள் கொட்டி குழந்தை பலி - பெற்றோரே உஷார்






நெய்வேலி, நெய்வேலி அருகே ஷூவில் மறைந்திருந்த தேள் கொட்டியதால், குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே மீனாட்சிபேட்டையை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(30). இவரது மனைவி அஞ்சுகம்(27). இவர்களது குழந்தைகள் ஆகாஷ்(8), அபி என்கிற அபிநயா(4). ஆகாஷ் 2ம் வகுப்பு படிக்கிறார். அபிநயா யூகேஜி படித்து வருகிறார்.இவர்கள் அங்குள்ள மெட்ரிக்குலேசன் பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்ல அபிநயாவுக்கு ஷூவை மாட்டி, பள்ளிக்கு புறப்பட்டனர் அப்போது காலில் வலிக்கிறது என்று அபிநயா அலறினாள்.

பதற்றம் அடைந்த ராமச்சந்திரன், அபிநயாவின் ஷூவை கழற்றினார். அதில் இருந்து தேள் ஒன்று விழுந்தது. வலியால் துடித்த மகளை கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், மற்றொரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனாலும், சிகிச்சை பலனளிக்காமல் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். பெற்றோரின் கவனக் குறைவு ஒரு சிறுமியின் உயிரினை பறித்தது.

இதுகுறித்து பள்ளி தாளாளர் முருகவேல் கூறுகையில், பெற்றோர்கள் பிள்ளைகளின் ஷூ மற்றும் சாக்ஷை பாதுகாப்பாக வைத்து, ஒருமுறைக்கு இருமுறை சோதித்த பின்னரே குழந்தைகளுக்கு போட்டுவிட வேண்டும். இதில் அலட்சியம் காட்டினால் விலை மதிப்பற்ற உயிரை இழக்க நேரிடும், என்றார்.

இண்டர்வியூ அழைப்பை வரவைப்பது நெரம்ப ஈசி...








கொஞ்சம் உபயோகமாக பதிவை போடலாம் என நினைத்து செய்யும் வேலை வேறாக முடிந்தால் மன்னிக்கவும். மேலும் இதில் உள்ள விசயங்கள் ஆரம்ப நிலை வேலை தேடுபவர்களுக்கானது. நீங்கள் பல வேலை மாறியவர் மற்றும் இதில் கரைகண்டவர் என்றால் என்னுடய மற்ற பதிவுகளை படியுங்கள். இது சமீபத்தில் நான் படித்த/ தேடிய விசயங்கள் உங்களுக்காக....


இப்போதெல்லாம் அனுபவம் உள்ளவர், இல்லாதவர் எல்லோருமே வேலை மாறிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் படித்த சர்ட்டிபிக்கேட் இருக்கிறதோ இல்லையோ Resume / CV / Bio Data ஏதேனும் ஒன்று இருக்க வேண்டும். அதை பற்றிதான் இந்த பதிவு. இந்த Resume / CV / Bio Data சரியாக அமைந்துவிட்டால் 80% இண்டர்வியூ அழைப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஏனெனில் பெரும்பாலும் உங்களுடைய Resume / CV / Bio Data வை பார்த்துதான் interview calls வரும். இதைப் பற்றி தனித்தனியே


Resume


ப்ரெஞ்சு வார்த்தையான Resume என்பதற்கு Summary என்று பொருள் தமிழில் முன்னுரை அல்லது விளக்கவுரை என்று நினைக்கிறேன்.


இது பொதுவாக உங்களுடைய வேலை, படிப்பு, திறமை பற்றி சொல்லி இரண்டு அல்லது மூன்று பக்கங்களில் முடிய வேண்டும். உங்கள் படிப்பை பற்றி சொல்லி, திறமை மற்றும் உங்கள் தற்போதைய வேலையில் இருந்து உங்கள் அனுபவத்தை சொன்னால் சிறப்பாக இருக்கும். மிதமான அனுபவம், இடைநிலை மேலாண்மை ( middle management) நிலை வேலைகளுக்கு சரியாக இருக்கும்.




CV - Curriculum Vitae


என்னும் லத்தின் வார்த்தைக்கு வாழ்க்கையின் வரலாறு (course of life) என பொருள் படும்.

பெரும்பாலும் இது 3 அல்லது 4 பக்கங்களுக்கு மேல் கூட போகலாம். உங்கள் திறமை, படிப்பு பற்றி விவரமாக சொல்லலாம்.


முதல் வேலை தேடுபவர்கள், புதிய வேலையை தேர்ந்து எடுப்பவர்கள் உபயோகப்படுத்தலாம்.



Bio Data


Biographical Data என்பதன் சுருக்கம் இது. உங்களுடைய சொந்த விவரங்களில் ஆரம்பித்து வேலை மற்றும் திறமையில் போய் முடியும். சமீப காலங்களில் இதனை நிறைய பேர் உபயோகிப்பதில்லை.





எல்லா Format லும் தேவையில்லாத விசயங்கள்


Sex

Religion ( சில வேளைகளில் தேவைப்படும்)

Cast

height ( சில வேலைகளில் தேவைப்படும்)

weight ( சில வேலைகளில் தேவைப்படும்)


முடிக்கும் போது Personal declaration செய்து Yours Sincerely போதுமானது (இன்னும் சில ரெசுயூமேக்களில் Your obediantly, truly, with Love எல்லாம் இருப்பதை பார்க்கிறேன்)

அப்புறம் Photo வெள்ளை அல்லது வெளிர் நீல பின்புலத்துடன் சதாரணமாக இருக்க வேண்டும். போட்டோவிலேயே பயமுறுத்த கூடாது.

என்னுடை நண்பரின் resume ல் பழைய கம்பெனியில் எப்படி இவரை பார்த்துகொண்டனர், ப்ரோமோஷன் வாங்கினார் என்றெல்லாம் அரைப்பக்கத்திற்கு எழுதியிருந்தார். இது போன்ற விஷயங்கள் sort list செய்வதற்கு சிறிதும் உதவாது.


எப்படியோ sort list ஆகி Interview call வருவதற்க்கு ஏற்பாடு செய்தாயிற்று.


அடுத்தது Interview அது பற்றி............ சீக்கிரமே

ஏதாவது சொல்ல நினைச்சா சொல்லிடுங்க.. இல்லாட்டி காக்கா கடிக்கும்..

கொடூரக் காட்சி: இலங்கை தமிழர்களை சுட்டுக்கொல்லும் -படங்கள்











காதலன் முகத்தில் ஆசிட் வீசிய காதலி கைது

திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பாக்கம் முருகன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்து. இவரது மகள் சாந்தினி (எ) புவனேஸ்வரி (30). சென்னையில் உள்ள தனியார் ஏற்றுமதி கம்பெனியில் வேலை செய்கிறார்.

தினமும் பஸ்சில் வேலைக்கு செல்லும்போது சென்னை ராமாபுரம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்த சரவணன் (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சரவணன், சென்னை ஆயுதப்படையில் போலீஸ்காரராக இருக்கிறார். பஸ்சில் ஏற்பட்ட பழக்கம், காதலாக மாறியது.

இந்நிலையில், திருமணம் செய்துகொள்ளும்படி சாந்தினி வற்புறுத்தி வந்தார். திருமணத்துக்கு மறுத்த சரவணன், சாக்குபோக்கு சொல்லி தட்டிக் கழித்துவந்தார். ஆத்திரமடைந்த சாந்தினி, இதுபற்றி திருவள்ளூர் கலெக்டர் பழனிகுமாரிடம் புகார் செய்தார். புகாரை விசாரிக்க சமூகநலத் துறைக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

அதன்படி, சமூக நல அலுவலர் லதா, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து சாந்தினி, சரவணனிடம் நேற்று விசாரணை நடத்தினார். அப்போது சாந்தினிக்கும் சரவணனுக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது.

கோபத்தில் எழுந்த சாந்தினி, கைப்பையில் மறைத்து வைத்திருந்து ஆசிட்டை எடுத்து சரவணன் முகத்தில் வீசினார். முகம் வெந்து வலியால் துடித்த அவரை உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சரவணன் கொடுத்த புகாரின்பேரில், திருவள்ளூர் நகர போலீஸ் எஸ்ஐ லட்சுமிபதி வழக்குபதிவு செய்து சாந்தினியை கைது செய்தார். பின்னர் அவரை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் மத்திய சிறையில் அடைத்தார்.

கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

40 அடி ஆழ்துளையில் சிக்கித்தவிக்கும் சிறுவன்

திருவண்ணாமலை அருகே அந்தம்பள்ளம் கிராமத்தில் 3வயது சிறுவன் இன்று மதியம் 2 மணிக்கு விளையாடிக்கொண்டிருந்த போது அருகில் இருந்த 40 அடி ஆழ்துளையில் தவறி விழுந்துவிட்டான்.

அந்த ஆழ்துளையின் பாதி தூரத்தில் குறுக்காக சிக்கிய அவன் ஒரு மணி நேரத்திற்கு அழுதுகொண்டே இருந்தான். பின்பு அழுகை சத்தம் கேட்கவில்லை.

சிறுவனை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினர் தீவிர முயற்சியில் இருக்கின்றனர்.

பிராந்தி பாட்டிலில் இருந்தது என்ன?மாணவன் பலி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டிக்கு அருகில் இருக்கும் டி.மேட்டுபட்டியில், கீழே கிடந்த பிராந்தி பாட்டிலில் இருந்த பானத்தை குடித்த பள்ளி மாணவன் ஒருவன் பலியானான். மூன்று மாணவர்கள் மதுரை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கா சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

டி.மேட்டுபட்டியில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வரும் குமார் என்ற மாணவன் பள்ளி செல்லும் வழியில் கொழிஞ்சிபட்டி ஓடை பகுதியில் ஒரு பிராந்தி பாட்டில் கிடப்பதை பார்த்து அதை பள்ளிக்கு எடுத்து சென்றிருக்கிறான்.

அங்கு அதை பார்த்த செல்வகுமார், நாகராஜ், சின்ன நாகராஜ் மற்றும் ராஜா ஆகியோர், குமாரிடம் இருந்த பிராந்தி பாட்டிலை வாங்கிக்கொண்டு பள்ளிக்கு வெளியே இருக்கும் சிறு குன்று பகுதிக்கு சென்று அதை குடித்திருக்கிறார்கள்.

அதை குடித்த சில நேரத்தில் நாகராஜூவுக்கு கடும் வயிற்று வலி வரவே அவன் வீட்டிற்கு சென்றிருக்கிறான். அங்கு அவனுக்கு வாந்தி மயக்கம் வந்ததால் வீட்டில் உள்ளவர்கள் அவனை பாலமேடு மருத்துவமனைக்கு கூட்டி சென்றிருக்கிறார்கள்.

அங்குள்ளவர்கள் மதுரை பொது மருத்துனமனைக்கு கூட்டி செல்லசொல்லவே மதுரைக்கு கூட்டி சென்றிருக்கிறார்கள். வழியிலேயே அவன் இறந்து போனான்.

மீது மூன்று பேர்களும் மதுவை குடித்த இடத்திலேயே மயங்கி கிடந்ததை பார்த்த வீட்டினர் அவர்களை மதுரை மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கிறார்கள். அதில் இருந்தது பிராந்தியா அல்லது விஷம் கலந்த பிராந்தியா என்று தெரியவில்லை. விசாரணை நடக்கிறது.

பிராந்தி பாட்டிலில் இருந்தது என்ன?மாணவன் பலி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டிக்கு அருகில் இருக்கும் டி.மேட்டுபட்டியில், கீழே கிடந்த பிராந்தி பாட்டிலில் இருந்த பானத்தை குடித்த பள்ளி மாணவன் ஒருவன் பலியானான். மூன்று மாணவர்கள் மதுரை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கா சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

டி.மேட்டுபட்டியில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வரும் குமார் என்ற மாணவன் பள்ளி செல்லும் வழியில் கொழிஞ்சிபட்டி ஓடை பகுதியில் ஒரு பிராந்தி பாட்டில் கிடப்பதை பார்த்து அதை பள்ளிக்கு எடுத்து சென்றிருக்கிறான்.

அங்கு அதை பார்த்த செல்வகுமார், நாகராஜ், சின்ன நாகராஜ் மற்றும் ராஜா ஆகியோர், குமாரிடம் இருந்த பிராந்தி பாட்டிலை வாங்கிக்கொண்டு பள்ளிக்கு வெளியே இருக்கும் சிறு குன்று பகுதிக்கு சென்று அதை குடித்திருக்கிறார்கள்.

அதை குடித்த சில நேரத்தில் நாகராஜூவுக்கு கடும் வயிற்று வலி வரவே அவன் வீட்டிற்கு சென்றிருக்கிறான். அங்கு அவனுக்கு வாந்தி மயக்கம் வந்ததால் வீட்டில் உள்ளவர்கள் அவனை பாலமேடு மருத்துவமனைக்கு கூட்டி சென்றிருக்கிறார்கள்.

அங்குள்ளவர்கள் மதுரை பொது மருத்துனமனைக்கு கூட்டி செல்லசொல்லவே மதுரைக்கு கூட்டி சென்றிருக்கிறார்கள். வழியிலேயே அவன் இறந்து போனான்.

மீது மூன்று பேர்களும் மதுவை குடித்த இடத்திலேயே மயங்கி கிடந்ததை பார்த்த வீட்டினர் அவர்களை மதுரை மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கிறார்கள். அதில் இருந்தது பிராந்தியா அல்லது விஷம் கலந்த பிராந்தியா என்று தெரியவில்லை. விசாரணை நடக்கிறது.

Tuesday, August 25, 2009

அடுத்த தலைமுறையின் எமன்.




நமக்கு அடுத்து வரப்போகும் தலைமுறைகளுக்கு நாமேஅழிவை தேடி தரும் செயல் தான் பிளாஸ்டிக் பொருட்களை
உபயோகிப்பது. நம் அன்றாட வாழ்க்கையின் ஒன்றாகி விட்ட
பிளாஸ்டிக் என்னும் பொருளை ஒழிப்பது அவ்வளவு எளிதல்ல.
நான் இதை எழுதுவதற்கு காரணம் இதை படித்த நம் சக
பதிவர்கள் மற்றும் என் நண்பர்கள் பத்து பேரவாது சிந்திப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான்.

பிளாஸ்டிக்கை, அதாவது மனிதன் தயாரித்த செயற் பிளாஸ்டிக்
1855 ஆண்டு இங்கிலாந்து நாட்டை சேர்ந்த அலெக்சாண்டர் பார்க்ஸ் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. பல வித மாற்றங்களுக்கு பிறகு நாம் முக்கியமாக உபயோகிக்கும் கேரி
பேக் வடிவமைக்கப்பட்டது.


நம் அன்றாட வாழ்வில் இன்றியமையாத தேவையாகி விட்டது
கேரி பேக்.கடைக்கு போனால் ஒரு பாக்கெட் பால் வாங்குனா
கூட கேரி பேக் கேக்குறோம்,துணி கடைக்கு போன ஒரு ஒரு
மாடிக்கும் மூணு நாலு கேரி பேக் தருகிறார்கள்.வீட்டுக்கு
வந்தவுடன் நாம் கேரி பேகை குப்பை தொட்டியில் வீசி எறிகிறோம்
அல்லது ரோட்டில் தூக்கி போடுகிறோம்.அந்த பிளாஸ்டிக் பேக் மக்காது என்று நமக்கு தெரியும் இருந்தாலும் அதை வைத்து
என்ன பண்ணுவது என்று தூக்கி எறிகிறோம். அந்த பிளாஸ்டிக்
பேக் அனைத்தும் மக்கமால் மண்ணோடு மண்ணாக அப்படியே
இருக்கும். மழை வந்தால் தண்ணீர் உள்ளே போகாமல் பிளாஸ்டிக்
பேக்கால் தடுக்க பட்டு தடுக்க பட்டு இப்போதே நாம் தண்ணீர் இல்லாமல் தவிக்கிறோம்.


காலம் தவறி பெய்யும் மழை யாருக்கும் உதவாது, முக்கியமா விவசாயம் பண்றவங்க ரொம்ப கஷ்ட படுவாங்க. போன வாரம்
திருவண்ணாமலை சென்ற போது பாக்கம் என்ற ஊரில் பாதி
விவசாய நிலங்கள் பிளாட் போட்டு விற்று விட்டார்கள் எல்லா ஊரிலும் இதே கதி தான். இதற்கு நான் பிளாஸ்டிக் மட்டுமே
காரணம் என்று சொல்லவில்லை பிளாஸ்டிக்கும் ஒரு காரணம்,
அதை உபயோகிக்கும் நாமும் ஒரு முக்கிய காரணம்.

சரி இவ்ளோ பேசுறியே ஜெட்லி, நீ சொல்ற மாதிரி தூணி
கடைக்கு அல்லது மளிகை கடைக்கு போன எல்லாத்தையும்
கையுல எடுத்துட்டு வர முடியுமா? என்று நீங்கள் கேட்பது எனக்கு
புரிகிறது. தூணி கடையில் கூட அந்த கட்டை பேக் கொடுப்பார்கள்
அதை வாங்கி கொள்ளலாம், ஆனால் மளிகை கடையில் ஒவ்வொரு பொருளும் பிளாஸ்டிக் பையால் தான் கட்டப்பட்டு அதை ஒரு
பெரிய பிளாஸ்டிக் பையில் தருவார்கள். மளிகை கடை வைத்திருப்பவன் என்ற முறையில் எனக்கே தெரியும் நாங்கள் செய்வது தவறு என்று, ஆனா என்ன பண்றது பத்து வருஷம்
முன்னாடி அரிசி, பருப்பெல்லாம் பேப்பரில் கட்டி தான் கொடுப்போம்.
எங்கள் வாடிக்கையாளர்கள் தான் "என்னங்க இன்னும்
பேப்பரில் கட்டிட்டு இருக்கீங்க?" என்று எங்களை மாற வைத்தார்கள்.


அப்புறம் இந்த கேரி பேக் தான் பேரும் பிரச்சனை, சின்ன பிஞ்சு குழந்தைகள் கூட ஒரு பால் அல்லது இட்லி மாவு வாங்கினால்
கூட கேரி பேக் வேண்டும் என்பார்கள் அவர்களிடம் கையில்
எடுத்து போக சொன்னால் அதெல்லாம் முடியாது எனக்கு மாவு
வேணாம் என்பார்கள். எனக்கு தெரிந்து ஒரு மூணு நாலு பேர் மட்டுமே பிளாஸ்டிக் பை வேண்டாம் என்பார்கள். கையில் எடுத்து
கொண்டு போய் விடுவார்கள் அல்லது வீட்டில் உள்ள பழைய
பிளாஸ்டிக் பையை எடுத்து வந்து வாங்கி போவார்கள்.
அதிலும் ஒரு பெரியவர் என்னிடம் "யாருக்கும் பிளாஸ்டிக் பேக்
கொடுக்காதிங்க, நீங்க மொதல்ல நிறுத்துங்க" என்பார்.

நான் கேரி பேக் கொடுப்பதை நிறுத்தினால் என் வாடிக்கையாளர்கள் என்னிடம் வாங்குவதை நிறுத்தி விடுவார்கள் என்று தெரிந்த காரணத்தால்,ஏதோ வருபவர்களிடம் முடிஞ்ச வரைக்கும்
பிளாஸ்டிக் பையை யூஸ் பண்ணாதிங்க என்று சொல்வதோடு சரி. சில பேர் எதிர் கேள்வி வேறு கேட்பார்கள் "அப்புறம் எப்படி இதெல்லாம் எடுத்துட்டு போறது" என்று. அவர்கள் கேட்பதிலும் தப்பு இல்லை.இவ்ளோ வருஷம் பழகியாச்சு நிறுத்தறது கொஞ்சம் கஷ்டம் தான், முயற்சி செய்தால் முடியாதது எதுவுமில்லை.


கூடிய விரைவில் நாங்களும் பேப்பர் பேக் உபயோகிக்க எல்லாம் முயற்சிகளும் எடுத்து வருகிறோம். பேப்பர் பேக் விலையும்
அதிகம் மற்றும் அதிக பொருள்கள் எடை தாங்குமா என்று
தெரியவில்லை. என்னால் முடிந்த வரை கடைக்கு வரும் மக்களிடம் பிளாஸ்டிக் பையால் ஏற்படும் தீமையை
எடுத்து கூறுவேன். நாமும் இனி முடிந்த வரை பிளாஸ்டிக்
பொருட்களை உபயோகிப்பதை தவிர்ப்போம். நம் அடுத்த தலைமுறையினருக்கு ஒரு நல்லதை செய்வோம்.

Thursday, August 20, 2009

பிச்சை எடுக்கிறார்: மாஜி எம்எல்ஏ மனைவி


முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் குப்தா என்று கூறப்படுகிறது. இவருடைய மனைவி பிரேமா தேவி. 1980ம் ஆண்டுக்கு பின், அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த சூரஜ்லால் குப்தா கடந்த 2007ம் ஆண்டு இறந்தார்.

பெர்காம்பூர் மாவட்டம் கோண்டா நகரில் உள்ள தனது சொந்த வீட்டில்தான் குப்தா வசித்து வந்தார். அவர் இறந்தபின், அந்த வீட்டில் அவரது மனைவி பிரேமா தேவி, மகன்கள் வசித்து வந்தனர்.

ஆனால், தாய்க்கு சோறு போட முடியாது என்று கூறிய மகன்கள், அவரது அன்றாட சாப்பாட்டுச் செலவுக்கு அவரே வேலை செய்து சம்பாதித்து கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டனர். இதையடுத்து, வீட்டு வேலைகள் செய்து, பிரேமா சாப்பிட்டு வந்தார். ஆனால், உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அதுவும் முடியாமல் போனது.

இந்த நிலையில், வீட்டை விற்க மகன்கள் முடிவு செய்தனர். இதற்கு பிரேமா தேவி எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, தாயை வீட்டை வீட்டு மகன்கள் விரட்டி விட்டனர். இதனால், வேறு வழியில்லாமல் கோண்டாவில் உள்ள பிரசவ மருத்துவமனைக்கு வெளியே பிச்சை எடுத்து பிரேமா தேவி சாப்பிடுகிறார். இதைப் பற்றி அவரது மகன்கள் சிறிதும் கவலைப்படவில்லை.

பிரேமா தேவி பிச்சை எடுப்பதை அறிந்த பத்திரிகையாளர்கள் சிலர், இதுபற்றி மாவட்ட கலெக்டர் சுக்லால் பாரதியிடம் தெரிவித்தனர். இது பற்றி பாரதி கூறுகையில், அவருக்கு அரசு சார்பில் என்ன உதவி செய்ய முடியுமோ அதை செய்வேன். மாநில முதல்வர் மாயாவதிக்கும் கடிதம் எழுதியுள்ளேன் என்றார்.

ஜீவனாம்சம் கேட்டு 80 வயது பாட்டி மனு

சென்னை: ஜீவனாம்சம் கேட்டு சென்னை குடும்பநல கோர்ட்டில், 80 வயது மூதாட்டி மனு தாக்கல் செய்துள்ளார்.சென்னையைச் சேர்ந்த முனியம்மாள் (80) தாக்கல் செய்த மனு:எனது கணவர் கன்னியப்பன்.



எங்களுக்கு 1945ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. இரு மகன்கள், இரு மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. எங்கள் திருமணத்தின்போது இரண்டு ஏக்கர் நிலம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.அதில், ஒரு ஏக்கர் நிலத்தை விற்று வீடு கட்டினோம். அங்கு தான் வசித்து வருகிறோம். எனது கணவர் பெயரில் தான் சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டன. இளைய மகனும், அவரது குடும்பத்தாரும் எனது கணவருடன் சேர்ந்து, என்னை மோசமாக நடத்துகின்றனர். அடித்து துன்புறுத்துகின்றனர்.



என்னை அடித்து, ஆறு சவரன் நகைகளை எடுத்துக் கொண்டனர்.அவர்களின் கொடுமை தாங்காமல், மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தை அணுகினேன். இதனால், எனது கணவர் பயந்து, வீட்டின் கீழ்தளத்திலேயே என்னை தங்க அனுமதித்தார். மேலும், மாதம் 2,000 ரூபாய் செலவுக்காக கொடுத்து வருகிறார்.எங்களது வீட்டில் ஆறு குடியிருப்புகளை வாடகைக்கு விட்டுள்ளனர். ஒரு கடையும் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதன் மூலம், மாதத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. ஆனால், எனக்கு 2,000 ரூபாய் தான் செலவுக்கு கொடுக்கிறார். இந்தப் பணத்தை வைத்து என்னால் கவுரவமான வாழ்க்கை வாழ முடியவில்லை.எனது கணவர் தான் ரேஷன் கார்டை வைத்துள்ளார். இதனால், எனக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக்கொள்ள முடியவில்லை. சமையல் எரிவாயு இணைப்பும் அளிக்கவில்லை. மருத்துவ செலவுக்கே மாதம் 1,500 ரூபாய் தேவைப்படுகிறது.



மீதமுள்ள 500 ரூபாய் எனக்கு போதுமானதாக இல்லை.துணி துவைப்பதற்கும், பாத்திரங்கள் கழுவுவதற்கும், என்னால் ஒரு வேலைக்காரியை கூட உதவிக்கு வைத்துக்கொள்ள முடியவில்லை. வீட்டின் முதல் தளத்தில் எனது கணவர் வசித்தாலும் எனது உடல்நலனில் அக்கறை காட்டவில்லை. அவர் ஒரு சுயநலவாதி. என்னை புறக்கணித்துவிட்டு, அவர் விரும்பியபடி வாழ்கிறார்.எனது பேத்தியை ஒரு போலீஸ்காரருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். போலீசை நான் அணுகினால், என்னை கொன்று விடுவதாக மிரட்டுகின்றனர். முதியோர் இல்லத்தில் சேருமாறு, எனது கணவர் திட்டுகிறார். எனக்கு உடல்நிலை சரியில்லாத போது எனது கணவர் என்னை கவனித்துக் கொள்ளவில்லை. சரியான சாப்பாடு தரவில்லை.எனவே, மாதந்தோறும் ஜீவனாம்ச தொகையாக 10 ஆயிரம் ரூபாய் தருமாறு, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஆண்மையற்றவர் என்று தெரிந்தும் ஏமாற்றி திருமணம்: ரூ.1 கோடி ஜீவனாம்சம் கே‌ட்டு கணவர் மீது மனை‌வி வழக்கு

தான் ஆண்மை அற்றவர் என்று தெரிந்தும் என்னை ஏமாற்றி திருமணம் செய்ததால் ரூ.1 கோடி ஜீவனாம்சம் கேட்டு சென்னையைச் சேர்ந்த இள‌ம்பெண் ஒருவர் தனது கணவர் மீது குடும்ப நல ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த சவுமியா (24) எ‌ன்பவ‌ர் குடும்பநல ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் தாக்கல் செய்து‌ள்ள மனுவில், எனக்கு 7.5.2008 அன்று திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்கு நகை, ரொக்கம் மற்றும் திருமண செலவுகள் ரூ.11 லட்சத்துக்கு மேல் செலவழிக்கப்பட்டு உள்ளது. திருமணம் முடிந்ததும் அதே மண்டபத்தில் எங்களுக்கு முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், எனது கணவர் மிகவும் களைப்பாக இருக்கிறது என்று கூறி படுத்து தூங்கிவிட்டார். ஆரம்பநாளே எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

மறுநாள் கணவர் வீட்டுக்கு போனேன். இரவு 10 மணிக்கு நாங்கள் தூங்க சென்றபோது தனது பெற்றோரை கணவர் அழைத்து தனது அருகில் படுக்குமாறு கூறினார். அவர்களும் வந்து படுத்துக்கொண்டார்கள். இப்படி ஒருவாரம் கழிந்தது. திருமணத்திற்கு பிறகு நாங்கள் இருவரும் வேலைக்கு செல்ல தொடங்கினோம். அவர் தொடர்ந்து இரவு பணியிலே நீடித்தார். எனவே, உடலுறவு என்பதே எங்களுக்கு இடையில் நடக்கவில்லை.

இந்த நிலையில், தேனிலவுக்காக கொடைக்கானலுக்கு ஒருநாள் பயணம் சென்றோம். அப்போது அதிக குளிர் இருக்கிறது என்பதால் சூடாக பால் வாங்கி குடித்தேன். ஆனால், அந்த ஒரு நாள் முழுவதும் வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டு அந்த நாளும் வீணாகிப் போனது. இதற்கிடையில் திருமணத்தின்போது எனது பெற்றோர் கொடுத்த ரொக்கம் மற்றும் நகைகளை குறைவாக இருப்பதாக கூறி என்னை மாமியார் குத்திக்காட்ட தொடங்கினார்.

மேலும், எனது பெற்றோரை சந்தித்து பேசுவதையும் தடுத்தனர். இந்த நிலையில், எங்களுக்கு இடையே எந்த தாம்பத்திய உறவும் ஏற்படவில்லை என்பதை மாமியாரிடம் சொன்னேன். ஆனால், அது ஏற்கனவே அவருக்கு தெரிந்தது போல் பேசினார். இது எனக்கு மேலும் அதிர்ச்சி அளித்தது. ஒருநாள் படுக்கையறையில் உடை மாற்றிக் கொண்டிருந்தபோது தற்செயலாக ஜன்னலை கவனித்தேன். அங்கு எனது மாமனார் மறைந்திருந்து பார்த்ததை கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டதால் ஒருமுறை நடந்த சண்டையில் எனது கழுத்தை கணவர் நெரித்துவிட்டார். இதுபோல் மனதளவிலும், உடல் அளவிலும் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வேதனைப்படுத்தினார்கள். இந்த நிலையில், எனது மாமியார் ஒரு தாயத்தை கொண்டு வந்து கொடுத்தார். அதைக் கட்டினால் 45 நாட்களுக்குள் கர்ப்பம் ஏற்படும் என்று கூறினார். உடலுறவு இல்லாமல் தாயத்தால் எப்படி கர்ப்பம் தரிக்க முடியும் என்று கேட்டேன்? அதற்கு அவர் இந்த குடும்பத்தில் பாரம்பரியமாக இந்த தாம்பத்திய பிரச்சனை இருப்பதாக தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து எனது கணவரை செக்ஸ் டாக்டர்களிடம் அழைத்துச் சென்றேன். அப்போதுதான் அவருக்கு ஆண்மைக் குறைவு பிரச்சனை இருப்பது தெரியவந்தது. எனவே, அதை போக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டேன். ஆனால், அதற்கு அவர் ஒத்துழைக்க மறுத்துவிட்டார். வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியது மட்டுமில்லாமல், ஆண்மை குறைவை மறைத்து ஏமாற்றி எனக்கு திருமணம் செய்து வைத்தது பற்றி மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவ‌ல் நிலையத்தில் புகார் கொடுத்தேன்.

அதையடுத்து எனது கன்னித்தன்மை பரிசோதனை நடந்தது. அதில், எனது கன்னித்தன்மை நிரூபிக்கப்பட்டது. ஆனால், அவருக்கு செய்யப்பட்ட ஆண்மை பரிசோதனை பற்றிய விவரங்கள் என்னிடம் யாரும் காட்டவில்லை. இனிமேல் இவருடன் சேர்ந்து வாழ முடியாது என்று முடிவு செய்தேன். திருமணம் செய்ததற்கான நோக்கம் நிறைவேறவில்லை. எனது திருமணம் தொடர்பான உரிமைகள் எதுவும் கிடைக்கவில்லை.

மேலும், என்னை ஆண்மையற்ற ஒருவருக்கு அவரது பெற்றோர் ஏமாற்றி திருமணம் செய்து வைத்துவிட்டனர். எனவே, அந்த திருமணத்தை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். மேலும், எனது கணவரிடம் இருந்து ரூ.1 கோடி ஜீவனாம்சமாக பெற்றுத் தர வேண்டும் எ‌ன்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tuesday, August 18, 2009

கருவில் 12 குழந்தைகளை சுமக்கும் துனீஸிய பெண்!

துனீஸ்: துனீஸியாவை சேர்ந்த பெண் ஒருவர் கர்ப்பமுற்றிருக்கிறார். அதில் விசேஷம் இல்லை. ஆனால் அவரது வயிற்றில் 12 குழந்தைகள் வளருகின்றன என்பதால் பெரும் அதிசயமாகியுள்ளார்.

12 குழந்தைகளையும் எந்தவித சிக்கலும் இல்லாமல் பிரசவிக்க டாக்டர்கள் கடுமையாக முயற்சித்து வருகின்றனர்.

துனீஸியாவை சேர்ந்தவர் நாடியா சுலேமான். 30 வயதாகும் இவர் ஒரு ஆசிரியை. கடந்த பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்தது. அவருக்கு அடிக்கடி கருச்சிதைவும் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் அவர் சமீபத்தில் கர்ப்பமானார். அவரை சோதித்த டாக்டர்கள், அவரது கருப் பையில் 12 கருக்கள் வளர்ந்து வருவதை கண்டுபிடித்து வியப்படைந்தனர்.

இதுகுறித்து நாடியாவின் கணவர் மர்வான் கூறுகையில், முதலில் நாங்கள் இரட்டை குழந்தை என்று தான் நினைத்தோம். தற்போது எண்ணிக்கை அதிகரிக்க எங்களுக்கு மகிழ்ச்சியும் அதிகரித்துள்ளது என்றார்.

நாடியா கூறுகையில், எத்தனை குழந்தைகள் இருந்தாலும் அதை என்னால் பிரசவம் வரை சுமக்க முடியும். அனைத்து குழந்தைகளையும் பெற்றெடுத்து என்னால் வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.

இதையடுத்து அந்த 12 குழந்தைகளையும் பத்திரமாக பிரசவிக்க முடியுமா என டாக்டர்கள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

இது குறித்து பிரசவ நிபுணர் டாக்டர் மேன்னி ஆல்வரெஸ் கூறுகையில்,

கருவில் பல குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் அனைத்தையும் காப்பாற்ற முடியுமா என்பது சந்தேகமே. பொதுவாக ஒரு கருவில் ஐந்து குழந்தைகளுக்கு மேல் இருப்பது மிகவும் ஆபத்தானது. கருவில் இருக்கும் குழந்தைகளை பெரும்பான்மையானவற்றை அவர் பெற்றெடுத்தாலே அவரது உடல்நிலை கவலைக்கிடமாகி விடும்.

சில காலத்துக்கு மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டிய அவசியம் ஏற்படும். இவரை போன்ற பெண்மணிகளுக்கு குறைபிரசவம் உண்டாகும் வாய்ப்பும் அதிகம் என்றார்.

12 குழந்தைகளை கருவில் சுமப்பதால், துனீஸியாவின் அதிசயமாகியுள்ளார் நாடியா.

கருவில் 12 குழந்தைகளை சுமக்கும் துனீஸிய பெண்!

துனீஸ்: துனீஸியாவை சேர்ந்த பெண் ஒருவர் கர்ப்பமுற்றிருக்கிறார். அதில் விசேஷம் இல்லை. ஆனால் அவரது வயிற்றில் 12 குழந்தைகள் வளருகின்றன என்பதால் பெரும் அதிசயமாகியுள்ளார்.

12 குழந்தைகளையும் எந்தவித சிக்கலும் இல்லாமல் பிரசவிக்க டாக்டர்கள் கடுமையாக முயற்சித்து வருகின்றனர்.

துனீஸியாவை சேர்ந்தவர் நாடியா சுலேமான். 30 வயதாகும் இவர் ஒரு ஆசிரியை. கடந்த பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்தது. அவருக்கு அடிக்கடி கருச்சிதைவும் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் அவர் சமீபத்தில் கர்ப்பமானார். அவரை சோதித்த டாக்டர்கள், அவரது கருப் பையில் 12 கருக்கள் வளர்ந்து வருவதை கண்டுபிடித்து வியப்படைந்தனர்.

இதுகுறித்து நாடியாவின் கணவர் மர்வான் கூறுகையில், முதலில் நாங்கள் இரட்டை குழந்தை என்று தான் நினைத்தோம். தற்போது எண்ணிக்கை அதிகரிக்க எங்களுக்கு மகிழ்ச்சியும் அதிகரித்துள்ளது என்றார்.

நாடியா கூறுகையில், எத்தனை குழந்தைகள் இருந்தாலும் அதை என்னால் பிரசவம் வரை சுமக்க முடியும். அனைத்து குழந்தைகளையும் பெற்றெடுத்து என்னால் வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.

இதையடுத்து அந்த 12 குழந்தைகளையும் பத்திரமாக பிரசவிக்க முடியுமா என டாக்டர்கள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

இது குறித்து பிரசவ நிபுணர் டாக்டர் மேன்னி ஆல்வரெஸ் கூறுகையில்,

கருவில் பல குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் அனைத்தையும் காப்பாற்ற முடியுமா என்பது சந்தேகமே. பொதுவாக ஒரு கருவில் ஐந்து குழந்தைகளுக்கு மேல் இருப்பது மிகவும் ஆபத்தானது. கருவில் இருக்கும் குழந்தைகளை பெரும்பான்மையானவற்றை அவர் பெற்றெடுத்தாலே அவரது உடல்நிலை கவலைக்கிடமாகி விடும்.

சில காலத்துக்கு மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டிய அவசியம் ஏற்படும். இவரை போன்ற பெண்மணிகளுக்கு குறைபிரசவம் உண்டாகும் வாய்ப்பும் அதிகம் என்றார்.

12 குழந்தைகளை கருவில் சுமப்பதால், துனீஸியாவின் அதிசயமாகியுள்ளார் நாடியா.

பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்த 3 வழிமுறைகள்: தமிழக அரசு


பன்றிக்காய்ச்சல் நோயை கட்டுப்படுத்த மூன்று புதிய வகை முறைகள் கையாளப்படும் என்று தமிழக அரசின் ஆரம்ப சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.


சென்னை பத்திரிகைத் தகவல் அலுவலகம் சார்பில் பத்திரிகையாளர்களுக்கான எச்1என்1 இன்புளுயன்சா பற்றிய கருத்தரங்கு இன்று நடைபெற்றது. இதில் தமிழக அரசின் ஆரம்ப சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் எஸ்.இளங்கோவன் கலந்துக்கொண்டு பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்தும் மூன்று வகைகள் குறித்து விளக்கினார். அதன் விபரம்:

வகை 1:

* சாதாரண காய்ச்சலுடன் கூடிய இருமல் மற்றும் தொண்டைவலி காணப்படும் நோயாளிகள். இவர்களுக்கு உடம்பு வலி, தலை வலி, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்.

* இந்த நோயாளிகளுக்கு டாமிஃபுளு மருந்து தேவையில்லை. இரண்டு நாட்களுக்கு தொடர் கண்காணிப்பில் இருப்பது அவசியம்.

* ஆய்வக பரிசோதனை தேவையில்லை

*இந்நோயாளிகள் வீட்டில் ஓய்வெடுத்து கொள்ளும்படியும் மற்ற நபர்களுடன் தொடர்பினை குறைத்து கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

* இருமல், தும்மல் இருந்தால் கைக்குட்டைகளைப் பயன்படுத்திட வேண்டும். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

வகை 2:

* வகை ஒன்றில் காணப்படும் நோய் அறிகுறிகளுடன் கடுமையான காய்ச்சல் மற்றும் கடுமையான தொண்டைவலி இருக்கும் நிலை

* வகை ஒன்றில் காணப்படும் நோய் அறிகுறிகளுடன் காணும் நபர் ஐந்து வயதுக்கு உரிய குழந்தையாகவோ, கர்ப்பிணியாகவோ, 65 வயதிற்கு மேல் உள்ள முதியவராகவோ அல்லது நுரையீரல், இருதயம், கல்லீரல், சிறுநீரகம், நீரழிவு, நரம்பு, ரத்தம் மற்றும் எச்ஐவி/எய்ட்ஸ் நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தாலோ டாமி ஃபுளு மருந்து கொடுக்கப்பட வேண்டும். ஆய்வகப் பரிசோதனை தேவையில்லை.


வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்

வகை 3:

மேற்கூறிய வகை 1 மற்றும் வகை 2க்கான அறிகுறிகளுடன் மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, மயக்கம், குறைந்த ரத்த அழுத்தம், ரத்தத்துடன் கலந்த சளி, நீல நிறமாகும் நகங்கள், குழந்தைகளைப் பொருத்தவரை உணவு அருந்தாத நிலை ஆகிய சூழ்நிலைகளில்

* எச்1 என்1 ஆய்வகப் பரிசோதனைக்கு உட்படுத்திட வேண்டும்

*மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட வேண்டும்

* டாமி ஃபுளு மருந்து கொடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

சாதாரண ஜலதோஷம் உள்ளவர்கள் எச்1 என்1 பரிசோதனை செய்ய தேவை இல்லை என்றும், மருத்துவர் ஆலோசனையின் பேரிலேயே பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்றும், தேவையற்ற நிலையில் டாமி ஃபுளு மாத்திரைகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது என்றார்.

பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்த 3 வழிமுறைகள்: தமிழக அரசு


பன்றிக்காய்ச்சல் நோயை கட்டுப்படுத்த மூன்று புதிய வகை முறைகள் கையாளப்படும் என்று தமிழக அரசின் ஆரம்ப சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.


சென்னை பத்திரிகைத் தகவல் அலுவலகம் சார்பில் பத்திரிகையாளர்களுக்கான எச்1என்1 இன்புளுயன்சா பற்றிய கருத்தரங்கு இன்று நடைபெற்றது. இதில் தமிழக அரசின் ஆரம்ப சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் எஸ்.இளங்கோவன் கலந்துக்கொண்டு பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்தும் மூன்று வகைகள் குறித்து விளக்கினார். அதன் விபரம்:

வகை 1:

* சாதாரண காய்ச்சலுடன் கூடிய இருமல் மற்றும் தொண்டைவலி காணப்படும் நோயாளிகள். இவர்களுக்கு உடம்பு வலி, தலை வலி, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்.

* இந்த நோயாளிகளுக்கு டாமிஃபுளு மருந்து தேவையில்லை. இரண்டு நாட்களுக்கு தொடர் கண்காணிப்பில் இருப்பது அவசியம்.

* ஆய்வக பரிசோதனை தேவையில்லை

*இந்நோயாளிகள் வீட்டில் ஓய்வெடுத்து கொள்ளும்படியும் மற்ற நபர்களுடன் தொடர்பினை குறைத்து கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

* இருமல், தும்மல் இருந்தால் கைக்குட்டைகளைப் பயன்படுத்திட வேண்டும். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

வகை 2:

* வகை ஒன்றில் காணப்படும் நோய் அறிகுறிகளுடன் கடுமையான காய்ச்சல் மற்றும் கடுமையான தொண்டைவலி இருக்கும் நிலை

* வகை ஒன்றில் காணப்படும் நோய் அறிகுறிகளுடன் காணும் நபர் ஐந்து வயதுக்கு உரிய குழந்தையாகவோ, கர்ப்பிணியாகவோ, 65 வயதிற்கு மேல் உள்ள முதியவராகவோ அல்லது நுரையீரல், இருதயம், கல்லீரல், சிறுநீரகம், நீரழிவு, நரம்பு, ரத்தம் மற்றும் எச்ஐவி/எய்ட்ஸ் நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தாலோ டாமி ஃபுளு மருந்து கொடுக்கப்பட வேண்டும். ஆய்வகப் பரிசோதனை தேவையில்லை.


வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்

வகை 3:

மேற்கூறிய வகை 1 மற்றும் வகை 2க்கான அறிகுறிகளுடன் மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, மயக்கம், குறைந்த ரத்த அழுத்தம், ரத்தத்துடன் கலந்த சளி, நீல நிறமாகும் நகங்கள், குழந்தைகளைப் பொருத்தவரை உணவு அருந்தாத நிலை ஆகிய சூழ்நிலைகளில்

* எச்1 என்1 ஆய்வகப் பரிசோதனைக்கு உட்படுத்திட வேண்டும்

*மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட வேண்டும்

* டாமி ஃபுளு மருந்து கொடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

சாதாரண ஜலதோஷம் உள்ளவர்கள் எச்1 என்1 பரிசோதனை செய்ய தேவை இல்லை என்றும், மருத்துவர் ஆலோசனையின் பேரிலேயே பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்றும், தேவையற்ற நிலையில் டாமி ஃபுளு மாத்திரைகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது என்றார்.

இனப்பிரச்னை தீர்வுக்கு வெளிநாடு வாழ் தமிழர்களுடனும் இலங்கை அரசு பேச வேண்டும்: அமெரிக்கா


இனப் பிரச்னைக்குத் தீர்வு காண்பது மற்றும் அரசியல் கருத்து இணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பாக உள்நாட்டில் உள்ள தமிழர்களுடன் மட்டுமல்ல, வெளிநாடு வாழ் தமிழர்களுடனும் இலங்கை அரசு பேச்சுக்களை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.


பிபிசிக்கு அளித்துள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அமெரிக்க வெளிவிவகாரத்துறை துணை அமைச்சர் ராபர்ட் ஓ பிளேக்,

போர் காரணமாக இடம்பெயர்ந்த 3 லட்சம் மக்களையும், இலங்கை அரசு விரைவில் மீளக்குடியமர்த்த வேண்டும் என்றும் பிளேக் அதில் கூறியுள்ளார்.

அரசியல் கருத்து இணக்கத்தை ஏற்படுத்துவதில் இலங்கை அரசு காட்டிவரும் மெத்தனம் குறித்து மேற்குலகம் கொண்டுள்ள விசனத்தையே அமெரிக்கத் துணை அமைச்சர் கூறியுள்ள கருத்து வெளிப்படுத்துவதாக பிபிசி கருத்துக் கூறியுள்ளது.

பெரும்பான்மைச் சிங்களவர்களால் வழிநடத்தப்படும் இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்று வந்த போர் முடிவுக்கு வந்ததை அடுத்து, சிறுபான்மைத் தமிழர்களின் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான வழி பிறந்துவிட்டது என்ற நம்பிக்கை தோன்றியிருந்தது.

இனப்பிரச்னை தீர்வுக்கு வெளிநாடு வாழ் தமிழர்களுடனும் இலங்கை அரசு பேச வேண்டும்: அமெரிக்கா


இனப் பிரச்னைக்குத் தீர்வு காண்பது மற்றும் அரசியல் கருத்து இணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பாக உள்நாட்டில் உள்ள தமிழர்களுடன் மட்டுமல்ல, வெளிநாடு வாழ் தமிழர்களுடனும் இலங்கை அரசு பேச்சுக்களை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.


பிபிசிக்கு அளித்துள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அமெரிக்க வெளிவிவகாரத்துறை துணை அமைச்சர் ராபர்ட் ஓ பிளேக்,

போர் காரணமாக இடம்பெயர்ந்த 3 லட்சம் மக்களையும், இலங்கை அரசு விரைவில் மீளக்குடியமர்த்த வேண்டும் என்றும் பிளேக் அதில் கூறியுள்ளார்.

அரசியல் கருத்து இணக்கத்தை ஏற்படுத்துவதில் இலங்கை அரசு காட்டிவரும் மெத்தனம் குறித்து மேற்குலகம் கொண்டுள்ள விசனத்தையே அமெரிக்கத் துணை அமைச்சர் கூறியுள்ள கருத்து வெளிப்படுத்துவதாக பிபிசி கருத்துக் கூறியுள்ளது.

பெரும்பான்மைச் சிங்களவர்களால் வழிநடத்தப்படும் இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்று வந்த போர் முடிவுக்கு வந்ததை அடுத்து, சிறுபான்மைத் தமிழர்களின் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான வழி பிறந்துவிட்டது என்ற நம்பிக்கை தோன்றியிருந்தது.

Monday, August 17, 2009

வீடியோ கேம்களால் குழந்தைகளிடம் பெருகும் வன்முறை

வீடியோ கேம்கள்தான் இப்போது குழந்தைகளின் உலகம். இவர்களுக்கென்றே விதம் விதமாக கருத்தாக்கங்களை யோசித்து விளையாட்டுகளை தயாரித்து வருகின்றன தகவல் தொழில் நுட்ப வீடியோ கேம் தயாரிப்பு நிறுவனங்கள்.

அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வளர்ந்த நாடுகள் மட்டுமல்லாது வளர்ந்து வரும் நாடுகளிலும் இப்போது பல்வேறு வீடியோ கேம்கள் குழந்தைகளின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளன.

இந்த வீடியோகேம்களில் உள்ள வன்முறைக் காட்சிகளால் குழந்தைகளிடத்தி வன்முறை நடத்தை அதிகரிக்கிறது என்றும், குறிப்பாக பிரிட்டனில் உள்ள குழந்தைகளிடத்தில் வன்முறை உணர்வு அதிகரித்திருப்பதாகவும் ஆஃப்காம் என்ற ஒலிபரப்பு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

வீடியோ கேம்கள் பொதுவாக பழைய பஞ்ச தந்திரக் கதைகள் போல்தான் உள்ளன. ஒரு சாகச நாயகன் பல்வேறு இடையூறுகளைக் கடந்து சென்று தனது இலக்கை எட்டவேண்டும் என்பதாக இருக்கும். இதில் அந்த நாயகன் நடுவில் பலரை வெட்டிச் சாய்த்து முன்னேறிச் செல்லவேண்டும். இந்த வெட்டிச் சாய்த்தல்தான் குழந்தைகளின் பிரதான கவன ஈர்ப்பை பெற்றுள்ளது என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

சமீபத்தில் கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ- 4 (ஜிஏடி- 4) என்ற வீடியோ கேமில் வரும் சாகச நாயகன் கிரிமினல் நிழலுலகத்தினர் பலரை வெட்டிச் சாய்த்து கொள்ளை அடித்துச் செல்வதாக அமைந்துள்ளது.

இது 18 என்ற தரச் சான்றிதழை பெற்றிருந்தாலும், இதில் வன்முறை கொஞ்சம் கூடுதலாகவே இருப்பதாக பிரிட்டன் பெற்றோர்கள் உணர்கின்றனர்.

மேலும் மேலை நாடுகளில் குழந்தைகளின் படுக்கையறையே மல்டி மீடியா மையமாக மாறியுள்ளது என்று இந்த ஆய்வு கூறுகிறது. 12 வயது முதல் 15 வயது வரை உள்ள சிறுவர் சிறுமியர்களின் படுக்கையறையில் குறைந்தது 5- 6 மீடியா கருவிகளாவது உள்ளதாம். இண்டர்நெட், எம்பி3 பிளேயர்கள், டிஜிட்டல் கேமரா மற்றும் மொபைல் ஃபோன் ஆகியவை பெரும்பாலும் உள்ளன என்று கூறுகிறது இந்த ஆய்வு.

இதுபோன்று இருந்தாலும் குழந்தைகள் தங்களை தற்காத்துக் கொள்வார்கள் என்றும் கூட சில பெற்றோர்கள் நினைப்பதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

யார் இந்த அமீர் ஹம்சா

பிரிட்டீஷ் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட நேதாஜியின் ‘இளமையின் கனவு’, ‘நேர்வழி’ ஆகிய இரண்டு புத்தகங்களைப் படித்து தேசிய உணர்வால் தூண்டப்பட்டு தனது 21 வயதில் இந்திய தேசிய ராணுவத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டவர் எம்.கே.எம்.அமீர் ஹம்சா. எண்பது வயது முதியவராக இன்று சென்னையில் வாழ்ந்து வரும் இத்தியாகச் செம்மல் பல லட்சங்களைத் துணிச்சலுடன் இந்திய தேசிய ராணுவத்திற்கு வாரி வழங்கியவராவார்.

பிரிட்டீஷாரால் நாடுகடத்தப்பட்ட வங்கத்தைச் சார்ந்த ராஷ்பிஹாரி போஸ் ஆரம்பித்த ‘இந்திய சுதந்திர லீக்’ அமைப்பில் தன்னை முதல் நபராகப் பதிவு செய்தார். பின்னர் நேதாஜிபுரட்சிப் படைக்குத் தலைமை ஏற்ற போது அதிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியதற்காகப் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியம் விதித்த மரண தண்டனையிலிருந்து தப்பியவர்.

1943 – இல் நேதாஜி ரங்கூனுக்கு முதலில் சென்றபோது நடந்த விழாவில் அவருக்கு அணிவிக்கப்பட்ட மாலைகளைப் போராட்ட நிதிக்காக ஏலம் விட்டனர். அம்மாலைகளில் ஒன்றை மூன்று லட்சம் ரூபாக்கு ஏலத்தில் எடுத்தார்.

இந்திய தேசிய ராணுவத்தில் அமீர் ஹம்சா பணியாற்றியதைப் பாசத்தின் காரணமாக அவரது தந்தை விரும்பவில்லை. இரண்டு நாள் அவரை வீட்டில் பூட்டிவைத்துவிட்டார். இதனை அறிந்த நேதாஜி அமீரையும் அவரது தந்தையையும் அழைத்து வரச்செய்தார். நாடு சுதந்திரம் அடைய வேண்டிய அவசியத்தை உணர்ச்சிப் பொங்க எடுத்துரைத்தார். நேதாஜியின் உரையாடலைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்ட இவரது தந்தையார், தனது சட்டைப் பையிலிருந்த காசோலைப் புத்தகத்தை எடுத்து இரண்டு லட்சத்து முப்பதாயிரத்துக்கான ஒரு காசோலையை எழுதி நேதாஜியிடம் கொடுத்ததோடு தன் மகனையும் முழுமையாக நேதாஜியிடம் ஒப்படைத்தார்.

23-01-1944 – இல் நேதாஜின் 47 – வது பிறந்த நாளின் போது ஒரு லட்சத்துக்கான காசோலையை இவர் நேதாஜிடம் வழங்கியதோடு, தனது வைர மேததிரத்தை நேதாஜிக்கு பிறந்த நாள் பரிசாக அணிவித்தார். அமீர் ஹம்சாவுக்கும் அவரது தந்தையாருக்கும் நேதாஜி புத்தாடைகளை வழங்கி கௌரவித்தார்.*

23-01-1944 இல் நேதாஜியின் 47-வது பிறந்த நாள் விழா ரங்கூன் ஜுப்ளி அரங்கில் நடைபெற்றது. பர்மா வாழ் தமிழர்கள் நேதாஜிக்கு எடைக்கு எடை தங்கம் கொடுத்தனர்.எதிர்பார்த்ததை விட மூன்று மடங்கு அதிகமாகத் தங்கமும் நகைகளும் குவிந்தன. – அமீர் ஹம்சா.

தனது செல்வத்தை எல்லாம் நேதாஜியின் சுதந்திரப் பணிக்கு வழங்கிவிட்டு, நேதாஜி தனக்கு வழங்கிய சட்டைத் துணியை இன்றளவும் பாதுகாத்தவராக, பழைய தியாக நாட்களை நினைவில் பசுமையுடன் ஏந்தியவராக இன்றும் சென்னையில் வாழ்ந்து வரும் இப்பெருமகனை, இந்திய சுதந்திரப் பொன்விழா ஆண்டில் யார் கௌரவித்தார்?

(* அமீர் ஹம்சா, ‘நேதாஜியின் மாலைக்கு ரூ. 5 லட்சம்’ , தினமணி சுதந்திர பொன் விழா மலர்,பக்கம் 69.)

Saturday, August 15, 2009

அதிசயம்:மனித வடிவில் மீன்

தூத்துக்குடி மீனவர் வலையில் மனிதர்களின் கை,கால்களைப்போல தோற்றம் கொண்ட துடுப்புகளுடன் அதிசய மீன் சிக்கியது.

தூத்துக்குடி, மாதவநாயர் காலனி மீனவர் ராஜா. கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற அவர், திரேஸ்புரம் கரைக்கு திரும்பினார். அவரது வலையில் அதிசய மீன் சிக்கியது. மனித உருவில் வாய், இரு முன் துடுப்புகள் கைகளைப்போலவும், இரு பின் துடுப்புகள் கால்களைப்போலவும் இருந்தன.

2 கிலோ எடையுடன் இளஞ்சிவப்பு நிறத்தில் தோலுரிக்கப்பட்டது போல காணப்பட்ட அந்த மீன் ஒரு தொட்டியில் போட்டு வளர்க்கப்படுகிறது.

அது எந்த வகையைச் சேர்ந்த மீன் என கண்டறிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, August 14, 2009

ஒரே பள்ளிக்கூடத்தில் 57 ஜோடி இரட்டைக்குழந்தைகள்

சிவகாசியில் இந்து நாடார் விக்டோரியா பள்ளியில் 57 ஜோடி இரட்டைக்குழந்தைகள் படித்து வருவது

ஆச்சரியப்படவைக்கிறது.

விருதுநகர் மாவட்டத்தின் 115 ஆண்டு தொன்மையான இந்த பள்ளி இந்த ஜோடிகளால் தற்போது மேலும் புகழ்பெற்று வருகிறது.

2003ம் ஆண்டு தமிழகத்தின் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்ட இந்தப்பள்ளிக்கு மகாத்மா காந்தியடிகள், காமராஜர், நேரு, ராஜாஜி போன்ற தலைவர்கள் வந்த பெருமையும் உள்ளது.

இந்த பள்ளியில் தற்போது 57 ஜோடி இரட்டை ஜோடிகள் படித்துவருவதை இப்பள்ளியின் ஆசிரியர்கள் மேலும் பெருமையாக கருதுகின்றனர்.

எல்கேஜி முதல் மேல்நிலை வரை உள்ள இந்த பள்ளியில் உள்ளது. பிரைமரி நர்சிங்கில் 4 ஜோடி மாணவர்களும், நடுநிலைப்பள்ளியில் 25 ஜோடிகளும், மேல்நிலைப்பிரிவுகளில் 23 ஜோடிகளும், மெட்ரிக்பிரிவில் 5 ஜோடிகளும் படித்து வருகின்றனர். ஒரே பள்ளியில் 57 இரட்டை ஜோடிகள் இருப்பது அதிசயம் என்றால், இவர்கள் படிப்பிலும் கலக்கி வருவது ஆச்சரியப்படவைக்கிறது.

இந்த இரட்டை மாணவர்களை கண்டுபிடிப்பதில் ஆசிரியர்களுக்கு சில நேரங்களில் குழப்பம் ஏற்படுவதும் உண்டு. ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்களை அடையாளம் காணுவதற்காக ஆசிரியர்கள் இரண்டு வெவ்வேறு இடத்தில் அமர வைத்துள்ளனர்.

இந்த மாணவர்கள் குறித்து பள்ளியின் தலைமையாசிரியர் ஆல்பர்ட் செல்வராஜ் கூறும்போது, ஏற்கனவே ஏராளமான இரட்டை குழந்தைகள் படித்து கல்லூரிபடிப்பிற்கும், அரசு வேலைகளுக்கும் சென்றுள்ளனர்.

தற்போது 57 ஜோடிகள் படித்து வருகின்றனர். இந்த மாணவர்கள் படிப்பிலும் படுகெட்டிக்காரர்களாகவே உள்ளனர். அரசு இந்த இரட்டைக்குழந்தைகள் உயர்கல்விக்கு செல்லும் போது, அவர்கள் செலுத்தும் தொகையை பாதியாக குறைத்தால் அவர்களது பெற்றோர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்றார்.

Sunday, August 9, 2009

சிகரெட்டை விட வேண்டுமா- 10 வழிகள்!

அன்பு நண்பர்களே!!!

எவ்வளவுதான் மனைவியர் நம் உடல் நலம் பேணினாலும் சில விசயங்களில் நாம் அவர்கள் சொல்வதைக் கேட்பதில்லை. புகை பிடித்தலும் அவற்றில் ஒன்று. நம் உடல் நலத்தில் நாம் அக்கறை கொள்வது நம்மை மட்டுமல்லாது நம் குடும்பத்தையும் காக்கும். இங்கு நான் சொல்லும் வழிகள் எல்லோரும் படித்துப் பயன்பெறத்தான்.

1.உட்கார்ந்து யோசித்துவிட்டீர்கள், சிகரெட்டை விட்டுவிடலாம் என!!. என்ன செய்ய வேண்டும்? நீங்கள் தனி ஆளாக செய்யவேண்டிய விசயமாக இருந்தாலும் எல்லோரிடமும் சொல்லிவிடுங்கள்!!!நண்பகள், குடும்பத்தினரின் உதவி அவசியம்.. அவர்களின் கேலிகூட உங்களைச் சீண்டி உங்களுக்கு மனத்திடத்தைத் தரக்கூடும்.

2.ஏன் விடவேண்டும் புகைப்பதை என்பதற்கு சரியான காரணம் தேவை. அப்போதுதான் உங்கள் மனம் அதை ஒத்துக்கொள்ளும். 1. நுரையீரல் புற்று நோய் வருவதிலிருந்து தப்பிக்க. 2. குடும்பத்தைப் பாதுகாக்க- நீண்ட நாள் வாழ, போன்ற ஏதாவது ஒன்றை பிடித்துக்கொள்ளவும்.

3.சிகரெட்டை நிறுத்த மருந்துகள் வந்துள்ளன. அந்த மருந்துகளை எடுத்துக்கொள்வது மிக நல்லது.இல்லையெனில் உங்கள் உடலானது சிகரெட்டுக்காக ஏங்க ஆரம்பித்துவிடும். அப்புறம் கொள்கையெல்லாம் காற்றில்பறது விடும்.

4.குடும்ப, அலுவலக,உறவுகள் இப்படி ஏதாவது ஒரு சிக்கலிலிருந்து ஆசுவாசப்படுத்திக்கொள்ள சிகரெட் பயன்படுத்துகிறோம். சிகரெட்டை விட்டுவிட்டல் வேறு ஏதாவது ஒன்றை அந்த இடத்தில் வைக்கவேண்டும். சிலர் புளிப்பான மிட்டாய், கடலைமிட்டாய், இசை கேட்டல் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.( பாக்கு,பான்பராக் என்று போய்விடவேண்டாம்!!!)

5.பெரும்பாலும் மது அருந்தும்போது சிகரெட் பற்ற வைப்பது அதிகம். அதேபோல் உணவு உண்டவுடன் சிகரெட் புகைப்பர். இவற்றைக் கட்டுப்படுத்துவதும் மிக அவசியம்.

6.புகைப்பதை நினைவுப்படுத்தும் சாம்பல் தட்டு, லைட்டர் போன்றவற்றை அப்புறப்படுத்துங்கள். உங்கள் அறையிலிருந்து அந்த வாடையை துரத்திவிடுங்கள். இதற்கு அறையில் நறுமணம் கமழும் பத்தி போன்றவற்றை உபயோகிக்கலாம்.

7.சிகரெட் ஞாபகம் வரும்போது என்ன செய்யலாம்? ஏதாவது வேறு வழியில் சிந்தனையைத் திருப்ப வேண்டும். உடற்பயிற்சி செய்யலாம், நாயைக்கூட்டிக்கொண்டு ஒரு வாக்கிங் போகலாம். தோட்டத்தில் புற்களைப் பிடுங்கலாம். இப்படி ஏதாவதொன்றில் திளைத்துவிடுங்கள்.

8.நிறைய காய்கறிகள், பழங்களை உண்ணவும். இவை சிகரெட்டை நிறுத்த உதவுகிறதாம்.

9.உங்கள் மருத்துவரை அணுகவும். ஏனென்றால் சிகரெட் விட்டவுடன் ஏற்படும் மனச்சோர்வு மற்றும் பிற பிரச்சினைகளுக்கு மருந்துகளைக்கூட உண்ணவேண்டிவரலாம். ஏனெனில் நிகோடின் நச்சிலிருந்து விடுபட மன உறுதி மட்டுமே பலருக்குப் பயன் தருவதில்லை.

10.சிகரெட்டை நிறுத்த பல பொருட்கள் தற்போது கிடைக்கின்றன.

நிகோடின் பாட்ச் (nicotine patch), ஸ்பிரே,உறுஞ்சு குழல், நாக்கினடியில் வைக்கும் மாத்திரை போன்ற பல உள்ளன. இவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி உபயோகிக்கலாம்.

நினைவில் கொள்ளுங்கள்,ஐந்து மில்லியன் மக்கள் ஒவ்வொரு வருடமும் சிகரெட்டால் இறக்கிறார்கள்!!

இது எப்படி இருக்கு...!

30ph1-copy
இன்னும் சில ஆண்டுகள் இந்த மனித நேயர்கள் மண்ணுலகில் இருந்திருக்கலாம்!

நிகழ்வு: இந்திரா காந்தி - எம்ஜிஆர்.. ஒரு பழைய சந்திப்பு!

இடம்: சென்னை

நாட்டின் நெல் பயிரிடும் பரப்பளவு 21% சரிந்தது!

டெல்லி: நாட்டில் நெல் பயிரிடும் நிலத்தின் பரப்பளவு 21 சதவீதம் சரிந்துள்ளது.

இதையடுத்து உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு கூடுதலாக ஊக்கத்தொகை வழங்குவது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

தென் மேற்கு பருவமழை பொய்த்துவிட்டதால் உணவு தானிய உற்பத்தி சரிவடைவதைத் தடுக்க இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கவுள்ளது.

இதன்படி மத்திய அரசு, நெல் கொள்முதலுக்காக ஒரு குவிண்டாலுக்கு ரூ.100 ஊக்கத் தொகை வழங்கும் என்று தெரிகிறது.

இந்தியாவில் நெல் பயிரிடும் பரப்பளவு 114.63 லட்சம் ஹெக்டேராக சரிவடைந்துள்ளது. இது சென்ற ஆண்டு 145.21 லட்சம் ஹெக்டேராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சிவபெருமானின் சூலம் தெரிந்தது:ஓசூர் பரபரப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காளேஸ்வரம் கிராமத்தில் தனியார் பிளைவுட் நிறுவனத்துக்கு சொந்தமான நிலம் உள்ளது. இங்கு அலுவலகம் கட்டத் தொடங்கிய போது நடுவில் ஒரு பாறை தென்பட்டது.


இதை அகற்ற வெடி வைத்தனர். ஆனால், பாறை உடையவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் பாறையை சுற்றிலும் இருந்த மண்ணை அகற்றினர்.

அப்போது, அங்கு வேலை செய்து கொண்டிருந்த திருப்பத்தூரைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் அருள் வந்து ஆடினார். இங்கு ஈஸ்வரன் தங்கியிருக்கிறேன், என்னை அகற்ற நினைக்காதீர்கள் என்று கூறினார்.

உடனே, அங்கிருந்த தொழிலாளர்கள் பாறையை சுத்தம் செய்தனர். அப்போது, பாறையில் சிவனின் தலைப்பகுதியில் உள்ள பிறை மற்றும் நட்சத்திர வடிவமும், அதன் ஒரு பக்கம் திரிசூலமும், மறுபக்கம் உடுக்கையும் இருந்ததாக தொழிலாளர்கள் கூறினர்.

இதையடுத்து, அந்தப் பாறைக்கு மாலை அணிவித்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். இந்த தகவல் அப்பகுதியில் பரவியது. கிராம மக்கள் திரண்டு வந்து பூஜை செய்தனர்.

இது பற்றி அறிந்த தனியார் நிறுவனம், அந்த இடத்தில் ஈஸ்வரன் கோயில் கட்ட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஓசூர் தாசில்தார் முனிராஜ் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார்.

Friday, August 7, 2009

ஆன்லைனில் கிரெடிட் / டெபிட் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்?

ஒரு வாரத்துக்கு முன்னாடி என்னோட Google Reader-ல வந்த நியூஸ். அப்போவே இதை பற்றிய பதிவு போடனும்னு நினைத்தேன். வேற வேலை வந்ததுல, மறந்துட்டேன்.

இது Visa / MasterCard கிரெடிட் / டெபிட் கார்டு பயன்படுத்தி online-transactions பன்றவங்களுக்கான செய்தி இது. ஆன்லைனில் நடக்கும் கிரெடிட் / டெபிட் கார்டு ஏமாற்று வேலை பற்றி எல்லாம் எல்லோருக்கும் தெரியும்னு நினைக்கிறேன். அதுனால அதைப்பற்றி சொல்லி டைம் வேஸ்ட் பண்ண போறதில்லே.

இப்போ விஷயம் என்னன்னா, ஆகஸ்ட் 1 2009 முதல் ரூபாய் 5000 க்கு மேல ஆன்லைனில் எதாவது வாங்கினா ஒரு பாஸ்வேர்டும் தரனும். வெறும் கிரெடிட் கார்டு நம்பரும், அது பின்னாடி இருக்கும் CCV நம்பரும் மட்டும் இருந்தா யார் வேணும்னாலும் மத்தவங்க கார்ட யூஸ் பண்ணலாம். அதற்காக தான் இந்த ஏற்பாடு. ரிசர்வ் வங்கி இதை செயல்படுத்த இந்திய வங்கிகளுக்கும், ஆன்லைன் சேவைகளுக்கும் அழைப்பு விடுத்திருக்காங்க. செயல் படுத்த கொஞ்சம் நாள் ஆகலாம்.

இந்த சேவைய நீங்க பயன்படுத்த உங்க கிரெடிட் / டெபிட் கார்ட, நீங்க அதோட வங்கியோட இணையதளத்துல ரிஜிஸ்தர் பண்ணியிருக்கணும். இந்த புது பாஸ்வோர்ட்-ல நீங்க, எண்கள் மட்டுமே குடுக்க முடியும்.

நீங்க உங்க கார்ட ரிஜிஸ்தர் பண்ணவும், மேலும் தெரிஞ்சிக்கவும் கீழே உள்ள links மூலமா உங்க வங்கியோட இணையதளத்துக்கு போகலாம் (சில பிரபலமான வங்கிகள் மட்டும்):

HDFC Bank, ICICI Bank, Citibank, HSBC Bank, Standard Chartered, State Bank of India,Axis Bank, ABN Amro, Deutsche Bank, Karur Vysya Bank

ஏற்கனவே இதுல ரிஜிஸ்தர் பண்ணவங்க உங்க அனுபவத்தை பின்னூட்டம் மூலமா சொல்லிட்டு போங்க.

தூத்துக்குடி-காணாமல் போவோர் அதிகரிப்பு

நமக்கு வரும் இமெயில் கடிதங்களில் பெரும்பாலும் பல ஸ்பேம்கள் எனப்படும் வேண்டாதவையாகவும் வைரஸ் பைல்களாகவும் உள்ளன. இவற்றைச் சந்தேகப்பட்டால் படிக்காமல் நீக்குகிறோம். ஆனால் இது கம்ப்யூட்டரில் இறக்கிவைத்துப் பிரித்துப் பார்த்த பின்னர் அல்லது பிரித்துப் பார்க்கு முன்னர் நாம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அவ்வாறு இல்லாமல் சர்வரிலேயே வைத்துப் பிரித்துப் பார்த்து இவற்றை நீக்கினால் நம் கம்ப்யூட்டர் பாதுகாப்பாக இருக்கும். இந்த வசதியை பாப் ட்ரே என்னும் புரோகிராம் நமக்குத் தருகிறது. பாப்ட்ரே இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது.

இதனை கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்தவுடன் ஒரு கவர் போன்ற ஐகான் நம் கம்ப்யூட்டரின் நோட்டிபிகேஷன் ஏரியாவில் அமைகிறது. இந்த புரோகிராம் மூலம் பல இமெயில் அக்கவுண்ட்களை நாம் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை செக் செய்திடும்படி செட் செய்திடலாம். நமக்கு வந்துள்ள மெயில்களை டவுண்லோட் செய்திடாமலே பிரித்துப் படிக்கலாம். இந்த புரோகிராமினை இறக்கிப் பதிந்து பயன்படுத்துவது குறித்து இங்கு காணலாம்.

இன்டர்நெட்டில் இணைந்த பின்னர் www.poptray.org என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். இந்த இணைய தளம் கிடைத்தவுடன் Download என்ற லிங்க்கில் கிளிக் செய்து poptray.exe என்ற இன்ஸ்டலேஷன் பைலை டெஸ்க்டாப்பில் டவுண்லோட் செய்து சேவ் செய்திடவும். டவுண்லோட் செய்தவுடன் அதன் மீது இருமுறை கிளிக் செய்திடவும். இந்த பைல் தரும் விஸார்ட் வழி தேவையான தகவல்களைத் தந்து செல்லவும். இதில் இன்ஸ்டால் என்று கிடைத்தவுடன் அதில் கிளிக் செய்து இன்ஸ்டால் செய்திட வழி தரவும். இன்ஸ்டால் செய்தவுடன் Run Poptray என்பதில் கிளிக் செய்து பின் Finish என்பதிலும் கிளிக் செய்திடவும்.

இப்போது பாப் ட்ரே புரோகிராமின் முதல் பக்கம் கிடைக்கும். இதில் உங்கள் இமெயில் அக்கவுண்ட் குறித்த தகவல்களைத் தந்து அவற்றை செட் செய்திடவும். இதற்கு உங்கள் இமெயில் அக்கவுண்ட்டின் சர்வர் பெயர், உங்கள் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கைவசம் இருக்க வேண்டும். இதற்கு Accounts , Add Account அக்கவுண்ட் உங்களுக்கு உதவும். ஒவ்வொரு இமெயில் அக்கவுண்ட்டினையும் அடையாளம் காண அதற்கு ஒரு வண்ணத் தினைத் தேர்ந்தெடுக்கலாம். இவ்வாறு வண்ணத்தினைத் தேர்ந்தெடுத்து அதனை சேவ் செய்திடவும். இவ்வாறு செய்தவுடன் இதனைச் சோதித்துப் பார்க்கலாம்.

இதற்கு டெஸ்ட் அக்கவுண்ட் என்று இருக்கும் இடத்தில் கிளிக் செய்தால் உடனே குறிப்பிட்ட இமெயில் அக்கவுண்ட் செக் செய்யப்பட்டு நமக்கு வந்துள்ள இமெயில் செய்திகள் காட்டப்படும். இப்படியே நீங்கள் அமைத்துள்ள இமெயில் அக்கவுண்ட்கள் அனைத்தையும் செக் செய்து கொள்ளவும். இதில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் நீங்கள் கொடுத்த தகவல்களைச் சரியாகத் தந்து மீண்டும் செட் செய்திடவும்.

ஒரு இமெயில் அக்கவுண்ட்டில் கிளிக் செய்தவுடன் உங்களுக்கு வந்திருக்கும் இமெயில்கள் வரிசையாக டேப்களாகக் காட்டப்படும். பாப் ட்ரே புரோகிராம் உங்கள் இமெயில் அக்கவுண்ட்களை ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை செக் செய்து உங்களுக்கான இமெயில் சர்வரிலிருந்து தகவல்களைப் பெற்றுக் காட்டும். அல்லது நீங்களே அதன் ஐகானில் கிளிக் செய்து அப்போது இமெயில் செக் செய்திடும்படி செயல்படலாம். பாப் ட்ரே புரோகிராம் கவர் போன்ற ஐகான் மூலம் தெரிகிறதல்லவா! இது உங்கள் இமெயில் அக்கவுண்ட்டிற்கு மெயில்கள் வந்தவுடன் பிளாஷ் செய்து காட்டும். எத்தனை மெயில்கள் வந்துள்ளன என்றும் காட்டும்.

உங்களுக்கு வந்துள்ள இமெயில் செய்தியைக் காண அதற்கெனக் காட்டப்படும் டேப்பில் கிளிக் செய்திடலாம். செய்திகள் மட்டும் அதில் இருக்கும். அதனுடன் வந்துள்ள அட்டாச்மென்ட் பைல்கள் தனியே பட்டியலில் இருக்கும். இந்த மெயில்களின் செய்தியைப் பார்த்தவுடன் இது ஸ்பாம் மெயில் எனத் தெரிந்தால் அவ்வாறே மார்க் செய்திடலாம். அது போலவே மீண்டும் மீண்டும் வரும் மெயில்களை புரோகிராமே குறித்துக் கொள்ள சப்ஜெக்ட் மற்றும் இமெயில் அனுப்பப்படும் முகவரிகளை அடையாளம் காட்டி அமைக்கலாம்.

தேவையற்ற
இமெயில் முகவரிகளை பிளாக் லிஸ்ட் செய்து அவற்றை அழிக்கும்படியும் செட் செய்திடலாம். இதனால் நம்முடைய கம்ப்யூட்டரில் இறக்கிவைத்துப் பின் அதன் மூலம் பாதிக்கப்படுவது தடுக்கப்படுகிறது. வைரஸ் மெயில்கள் எனில் சர்வரில் வைத்தவாறே உங்கள் ஆண்டி வைரஸ் புரோகிராம் மூலம் கண்டறிந்து நீக்கலாம். பாப்ட்ரே புரோகிராம் இலவசமாகவே இணையத்தில் கிடைக்கிறது.

தூத்துக்குடி-காணாமல் போவோர் அதிகரிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் 110 பேர் காணாமல் போய் உள்ளனர். இதில் 77 பேர் மட்டுமே கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். 33 பேர் நிலை குறித்து இதுவரை தகவல் இல்லை.

தூத்துக்குடியில் சமீபகாலமாக ஆட்கள் மாயமாவது அதிகரித்துள்ளது. ஆண்களில் பெரும்பாலும் முதியவர்கள் லேசாக மனநிலை பாதிக்கப்பட்டு அதன் விளைவாகவும், சிலர் கடன் தொல்லை காரணமாகவும் மாயமாகி வருகின்றனர். மாணவர்களோ பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் திட்டியதால் வீட்டிலிருந்து பறந்து விடுகின்றனர்.

பெண்களை பொறுத்தவரை பெரும்பாலும் குடும்பப் பிரச்சனை காரணமாகவே வீடடை விட்டு வெளியே செல்வதாக தெரிய வந்துள்ளது. இளம் பெண்கள் பலர் காதல் பிரச்சனை காரணமாக மாயமாகி வருகின்றனர்.

காணாமல் போனவர்களில் பலர் முதியவர்கள் என்பதால் அவர்கள் காணாமல் போனது குறித்து புகார் செய்யாமல் விட்டு விடும் நிலையும் இம்மாவட்டத்தில் அதிகம் உள்ளது.

இந்த மாவட்டத்தில் கடந்த 7 மாதத்தில் மட்டும் 110 பேர் மாயமாகி உள்ளனர். இதில் ஆண்கள் 29 பேர், பெண்கள் 53 பேர், 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 18 பேர், மற்றும் 10 சிறுமிகள் அடங்குவர். இவர்களில் 42 பெண்களும், 10 ஆண்களும், 14 சிறுவர்களும், 9 சிறுமிகள் உள்பட 77 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர்.

இன்னும் 12 பெண்களும், 19 ஆண்களும், இரண்டு சிறுவர்களும், 1 சிறுமியும் கண்டுபிடிக்கப்படவில்லை.

Thursday, August 6, 2009

செல்போன்களால் வளரும் இளம் தலைமுறையினரிடையே குற்றச் செயல்களும் தவறான பழக்க வழக்கங்களும்

விஞ்ஞான வளர்ச்சியின் இக்கால அற்புத கண்டுபிடிப்பில் ஒன்று தான் செல்போன். எல்லா விஞ்ஞான கண்டுபிடிப்புகளிலும் உள்ளது போன்று, இக்கருவியிலும் நன்மையும் தீமையும் உள்ளது. நல்ல முறையில் பயன்படுத்தினால், செல்போனும் நமக்கு நன்மையே! ஆனால், வளர்ச்சியின் வேகத்துக்கு ஏற்ப, சந்தைகளில் அறிமுகமாகும் புதுப் புது ரக செல்போன்களால் வளரும் இளம் தலைமுறையினரிடையே குற்றச் செயல்களும் தவறான பழக்க வழக்கங்களும் அதிகரித்து வருகின்றன.

இலங்கையில் ஓரிடத்தில் இடத்தின் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் உள்ள பெண்களின் மொபைல் போன்களுக்கு பாடசாலை மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியதாக பொலீசார் இரண்டு மாணவர்களை கைது செய்த சம்பவம் நடந்தது.

மாணவர்களை பொலீசார் விசாரித்ததில் பெண்களின் மொபைல் எண்களை தெரிந்து கொண்டு முதலில் miss call கொடுப்பதும் அதற்கு எதிர்முனையில் பதில் வந்தபின் நைசாக பேசி தன்வயப்படுத்தி அதன் பின்னர் மிரட்டத் துவங்குவதும் தெரியவந்தது.

நாடு முழுவதும் தற்போது இந்தச் செல்போன்களால் பெண் குழந்தைகளுக்குப் பல்வேறு ஆபத்துகள் சூழ்ந்துள்ளதை மறுப்பதற்கில்லை. மேற்கூறியது ஒரு உதாரணம் மட்டுமே. இது போன்று எண்ணற்ற குற்றச்செயல்கள் இன்று செல்போன்களின் துணை கொண்டு நடைபெறுகின்றன. பெண்களுக்கு இதுபோன்ற மொபைல் போன் மிரட்டல் பரவலாக இருந்தாலும் பல பெண்கள் வெளியே சொல்வதற்கு பயந்து விட்டில் பூச்சிகள் போல் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பும் கும்பலிடம் சிக்கி சின்னாபின்னமாகின்றனர். இதனைப் பெரும்பாலும் பெற்றோர்களோ, குழந்தைகளின் பாதுகாவலர்களோ அறிவதில்லை என்பது தான் மிகப் பெரும் பரிதாபம்!

நம் குழந்தைகளை இது போன்ற ஆபத்துகளிலிருந்து காத்துக் கொள்வதற்கான வழி என்ன? சமீபத்தில் ஒரு தினசரியில் இதற்கான தீர்வைக் குறித்து மனநல டாக்டர் பெரியார் லெனின் அவர்களிடம் கேட்டபோது அவர் கீழ்கண்டவாறு பதில் கூறியிருந்தார்:

“சமூகத்துக்கு எதிரான மனோபவாம் கொண்ட சிறுவர்கள், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர். சட்டத்தை மதிக்காமல் ஒருவகையான சுபாவத்துடன் செயல்படும் இவர்கள், வருங்காலத்தில் பெரும் குற்ற செயல்களிலும் ஈடுபட வாய்ப்புகள் உள்ளன. இதுபோன்ற நபர்களிடம் சிக்காமல் இருக்க பெண்கள் கண்டிப்பாக தெரியாத மிஸ்டு கால்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது. பொதுவாக பாடசாலை மாணவிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் உயர்தரம் வரையிலான மாணவிகளை, பெற்றோர்கள் நன்கு கவனித்து கொள்ள வேண்டும். மாணவிகள் வீட்டில் அரவணைப்பு மற்றும் ஆறுதலுக்கு யாரும் இல்லை என கூறி எளிதில் இதுபோன்ற சமூக விரோதிகளின் வலையில் சிக்கிவிடுவர்.

பெற்றோர் மாணவிகளுக்கு மொபைல் போன் வழங்க கூடாது. வீட்டில் பெற்றோர் ஒழுக்கத்துடன் இருந்தால் பிள்ளைகளும் அதை பின்பற்றுவர். தவறாக வரும் எஸ்.எம்.எஸ்., களுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது. தொடர்ந்து யாரேனும் மிரட்டினால் தைரியமாக போலீசாரிடமோ, மனநல டாக்டர்களையோ அணுகினால் வெளியே தெரியாமல் மிரட்டுபவர்களை எச்சரிக்க வாய்ப்பு உண்டு. பொதுவாக மிரட்டுபவர்கள் பயந்து கொண்டு பதில் தருபவர்களைத்தான் மீண்டும் மீண்டும் மிரட்டுவர். எனவே, பெண்கள் தங்களை காத்துக்கொள்ள வெளிநபர்களின் தவறான அணுகுமுறையை ஆரம்பத்திலேயே தவிர்க்க வேண்டும்”.

மனநல மருத்துவர் கூறிய ஆலோசனைகளில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான மூன்று விஷயங்கள் உள்ளன.

1. பெற்றோர் மாணவிகளுக்கு மொபைல் போன் வழங்க கூடாது.

2. வீட்டில் பெற்றோர் ஒழுக்கத்துடன் இருந்தால் பிள்ளைகளும் அதை பின்பற்றுவர்.

3. தவறாக வரும் எஸ்.எம்.எஸ்., களுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது.

தேவையின்றி பெண் குழந்தைகளுக்கு மொபைல் போன்களை வாங்கித் தருவதைத் தவிர்ப்பதன் மூலம் செல்போன் மூலமாக வரும் அனைத்து ஆபத்துகளிலிருந்தும் நம் பெண் குழந்தைகளைக் காத்துக் கொள்ள இயலும்.

மாணவிகளுக்கு போதை ஊசி-ஆசிரியர் கைது

திண்டுக்கல்: மாணவிகளுக்கு போதை ஊசி போட்டதாக பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே நவமரத்துப்பட்டியில் உள்ளது முத்துலட்சுமி அம்மாள்-ரெங்கசாமி ரெட்டியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி.

இங்கு அமலோற்பவநாதன் என்பவர் கணித ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். அவர் அக்குபஞ்சர் முறையில் சிகிச்சை அளிப்பதற்கான பயிற்சியையும் மேற்கொண்டு வந்தாராம்.

8ம் வகுப்பு மாணவிகள் சிலருக்கு, அதிக மதிப்பெண்களைப் பெற்றுத்தரும் மேஜிக் ஊசி என்று கூறி இவர் போதை ஊசியைப் போட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஊசியைப் போட்டுக் கொள்ளும் மாணவியருக்கு, தேர்வில் அதிக மதிப்பெண்களையும் வழங்கினாராம்.

இவ்வாறு ஊசி போட்டுக் கொண்ட மாணவி ஒருவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்வே அவர் தனது பெற்றோரிடம் ஊசி போட்டுக் கொண்டதை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மாணவியின் பெற்றோர் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அவரிடம் தலைமை ஆசிரியர் விசாரணை நடத்தினார்.

அப்போது அமலோற்பவநாதன், நான் யாருக்கும் போதை ஊசி ஏதும் போடவில்லை, அக்குபஞ்சர் முறையில் சிகிச்சை தான் தந்தேன் என்றார்.

ஆனாலும் மேற்கொண்டு பிரச்சனை உருவாவதைத் தடுக்க அமலோற்பவநாதனை வேறு பள்ளிக்கு மாற்ற முடிவு செய்து அவரது மனைவி பிரிசில்லாவை பள்ளிக்கு வரவழைத்துள்ளனர் பள்ளி நிர்வாகிகள்.

இதற்கிடையே போதை ஊசி விவரம் கிராமம் முழுவதும் பரவவே மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு வகுப்பறைகளில் உள்ள மேஜை, நாற்காலி மற்றும் மின் விளக்குகளை அடித்து நொறுக்கினர்.

தகவலறிந்த போலீஸார் விரைந்து வந்து அமலோற்பவநாதனையும் அவரது மனைவியையும் ஒரு வகுப்பறைக்குள் பாதுகாப்பாக வைத்துவிட்டு மக்களிடம் சமாதானப் பேச்சு நடத்தினார் மாவட்ட எஸ்பி சின்னச்சாமி.

ஆனாலும் ஆத்திரம் அகலாத பொதுமக்கள் அறைக் கதவை உடைத்துக் கொண்டு ஆசிரியரையும் மனைவியையும் தாக்க முயன்றனர். இதையடுத்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மாணவிகள் வெளியேற்றப்பட்டனர்.

இதையடுத்து அமலோற்பவநாதனை போலீசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்தே மக்கள் அமைதியாயினர்.

மேலும் அமலோற்பவநாதனை பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதான் உழைப்பு - கலாமிடம் கார் டிரைவராக இருந்தவர் பேராசிரியர் ஆனார்!

சென்னை: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் டி.ஆர்.டி.ஓவில் பணியாற்றியபோது அவரிடம் கார் டிரைவராக இருந்த கதிரேசன் என்பவர் கலாமின் அறிவுரையைக் கேட்டு அடுத்தடுத்து படித்து இன்று டாக்டர் பட்டத்துடன் கல்லூரி பேராசிரியராக உயர்நதுள்ளார்.

கடந்த 80களில் பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சிக் கழகத்தில் (டி.ஆர்.டி.ஓ) கலாம் இயக்குநராக இருந்தார். அப்போது அவருக்கு கார் டிரைவராக இருந்தவர் கதிரேசன். இவர் ராணுவத்தில் டிரைவராக இருந்தவர். அங்கிருந்து கலாமின் கார் டிரைவராக மாற்றப்பட்டார்.

கதிரேசனின் தந்தை வெள்ளைச்சாமித் தேவர். கதிரேசன் இளம் வயதாக இருந்தபோதே தந்தை இறந்து விட்டார். இதனால் சிரமப்பட்டு பத்தாவது வகுப்பு வரைக்கும் வந்தார். ஆனால் பத்தாவது வகுப்பைக் கூட முடிக்க முடியாமல் 1979ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார்.

பின்னர் ராணுவ எலக்ட்ரிக்கல் மெக்கானிக் பிரிவில் பயிற்சி பெற்று வட கிழக்கு மாநிலங்களில் பணியாற்றினார். கடைசியாக கார் டிரைவர் பணிக்கு வந்தார்.

கலாமிடம் கதிரேசன் பணியில் சேர்ந்தபோது அவருடைய குடும்ப நிலைகளைக் கேட்டறிந்தார் கலாம். இதையடுத்து அவரை உயர்த்த முடிவு செய்த அவர், ஏன் நீங்கள் தொடர்ந்து படிக்கக் கூடாது என்று கேட்டார். மேலும் படிக்குமாறும் ஆலோசனை கூறினார்.

கலாமே இவ்வாறு சொன்னதால் நெகிழ்ந்து போன கதிரேசன் வைராக்கியத்துடன் தனது கல்வியின் 2வது இன்னிங்ஸைத் தொடங்கினார்.

பத்தாவது வகுப்பில் ஆங்கிலத்தில் தோல்வியுற்றிருந்தார் கதிரேசன். முதலில் அதை முடித்தார். பின்னர் தனித் தேர்வராக பிளஸ்டூ எழுதி பாஸ் ஆனார்.

1998ம் ஆண்டு ராணுவ கார் டிரைவர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தி்ல் தபால் மூலம் பி.ஏ வரலாறும், தொடர்ந்து எம்.ஏ. வரலாறும் முடித்துப் பட்டங்களை தட்டினார்.

அத்தோடு நில்லாமல், பி.எட், எம்.எட் படிப்புகளையும் முடித்தார். அப்போதும் அவரது படிப்பு வேட்கை நிற்கவில்லை.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் எம்.பில் ஆய்வுப் படிப்பை முடித்தார். அப்படியும் நில்லாமல், பி.எச்.டியையும் மேற்கொண்டு அதையும் முடித்து டாக்டராகி விட்டார்.

ஒரு வழியாக தனது படிப்பு வேட்டையை முடித்த கதிரேசன் வேலை வேட்டையைத் தொடங்கினார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியராக தேர்வாகி அங்கு பணியில் சேர்ந்துள்ளார்.

தனது வாழ்க்கை இந்த அளவுக்கு உயர்ந்ததற்கு அப்துல் கலாம் கொடுத்த ஊக்கம்தான் காரணம் என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் கதிரேசன்.

கலாம் குறித்து அவர் கூறுகையில், அப்துல் கலாமுடன் பணியாற்றிய காலத்தை என்னால் மறக்கவே முடியாது. யாரிடமும் அவர் கடுமையாக நடந்து கொள்ள மாட்டார். தன்னுடன் இருக்கும் அனைவரையும் ஊக்கப்படுத்துவார்.

அவருடைய வழியில் இளைஞர்களுக்கு நாட்டுப்பற்றை உருவாக்கும் பணியை தொடர்ந்து செய்வேன் என்கிறார்.

கடின உழைப்பு என்றால் என்ன என்று கேட்போருக்கு கதிரேசன்தான் சரியான உதாரணம்.

சுனாமி- பூகம்பத்தால் பாதிக்காத வீடு: தமிழக மேஸ்திரி சாதனை

காஞ்சீபுரம் அடுத்த சித்தேரிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மநாபன் (50). கட்டிட மேஸ்திரி. இவர் காஞ்சீபுரம் சங்கர மடம், புதுச்சேரி, திருவண்ணாமலை, போளூர், அரக்கோணம், சென்னை கோயம்பேடு ஆகிய பகுதிகளில் கட்டிடப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

பூகம்பத்தால் வீடுகள் இடிந்து மக்கள் பலியாவதை தொடர்ந்து சுனாமி மற்றும் நில நடுக்கத்தால் பாதிக்காத பாதுகாப்பு நிறைந்த வீட்டை கட்ட திட்டமிட்டு அதற்கான பணிகளை தொடங்கினார்.

கடந்த 8 மாதங்களாக அவர் தனது கிராமத்தில் இரவு- பகல் பாராமல் உழைத்து 974 டன் இரும்பு கம்பி மற்றும் சிமெண்டு- ஜல்லி கலவையிலான உருளை வீட்டை கட்டி முடித்து சாதனை புரிந்தார்.

இந்த வீட்டை நமக்கு தேவையான இடத்துக்கு எந்தவித சேதாரமும் இன்றி நகர்த்தி செல்ல முடியும். உருளை வடிவான வீட்டில் சமையல் அறை, கூடம், குளியலறை, படுக்கை அறை மற்றும் பாதாள அறை ஆகியவை அமைந்துள்ளது. வீடு முழுவதும் ஒரு செங்கல் கூட இல்லாமல் முழுவதும் கம்பி- கான்கிரீட்டால் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.

இதில் 2 அடுக்குகள் கூட அமைக்கலாம். சதுர அடி ரூ. 1000 வீதம் ரூ. 4.5 லட்சத்தில் இந்த உருளை வீட்டை அமைத்துள்ளார். சுனாமி மற்றும் புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் கடற்கரை ஓரம் வசிக்கும் மக்களுக்கு பாதிக்காத வகையில் பாதுகாப்பு அமைப்புகளுடன் கூடியது.


அரசு ஆதரவு அளித்தால் கடலோர கிராம மக்களுக்கு மிகவும் பாதுகாப்பான வசதிகள் நிறைந்த வீடுகளை உருவாக்க முடியும் என்று பத்மநாபன் கூறினார்.