அங்கீகாரம் பெறாத பல்கலைக்கழகங்கள் பட்டியலை யுஜிசி வெளியிட்டுள்ளது. மாணவர்கள் கல்வி நிறுவனங்களில் சேரும் முன்பு தாங்கள் சேரும் நிறுவனத்தின் அங்கீகாரத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியுள்ளது.
நாடு முழுவதும் 22 போலி பல்கலைக்கழகங்கள் இருப்பதாகவும் யுஜிசி தெரிவித்துள்ளது. இவற்றில் ஒன்று, திருச்சியில் உள்ளது. டெல்லியில் 5, உ.பி.யில் 3, மற்றும் விஜயவாடா, வாரணாசி, பெல்காம், ஜபல்பூர், கேரளா, நாக்பூர், கொல்கத்தா, லக்னோ, கான்பூர், அலிகார், மதுரா பல்கலைக்கழகங்கள் போலி பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
No comments:
Post a Comment