Wednesday, August 26, 2009

ஷூவில் மறைந்திருந்த தேள் கொட்டி குழந்தை பலி - பெற்றோரே உஷார்






நெய்வேலி, நெய்வேலி அருகே ஷூவில் மறைந்திருந்த தேள் கொட்டியதால், குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே மீனாட்சிபேட்டையை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(30). இவரது மனைவி அஞ்சுகம்(27). இவர்களது குழந்தைகள் ஆகாஷ்(8), அபி என்கிற அபிநயா(4). ஆகாஷ் 2ம் வகுப்பு படிக்கிறார். அபிநயா யூகேஜி படித்து வருகிறார்.இவர்கள் அங்குள்ள மெட்ரிக்குலேசன் பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்ல அபிநயாவுக்கு ஷூவை மாட்டி, பள்ளிக்கு புறப்பட்டனர் அப்போது காலில் வலிக்கிறது என்று அபிநயா அலறினாள்.

பதற்றம் அடைந்த ராமச்சந்திரன், அபிநயாவின் ஷூவை கழற்றினார். அதில் இருந்து தேள் ஒன்று விழுந்தது. வலியால் துடித்த மகளை கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், மற்றொரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனாலும், சிகிச்சை பலனளிக்காமல் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். பெற்றோரின் கவனக் குறைவு ஒரு சிறுமியின் உயிரினை பறித்தது.

இதுகுறித்து பள்ளி தாளாளர் முருகவேல் கூறுகையில், பெற்றோர்கள் பிள்ளைகளின் ஷூ மற்றும் சாக்ஷை பாதுகாப்பாக வைத்து, ஒருமுறைக்கு இருமுறை சோதித்த பின்னரே குழந்தைகளுக்கு போட்டுவிட வேண்டும். இதில் அலட்சியம் காட்டினால் விலை மதிப்பற்ற உயிரை இழக்க நேரிடும், என்றார்.

No comments:

Post a Comment