Friday, July 31, 2009

பொட்டு அம்மான் உயிருடன் உள்ளார்: உறுதிப்படுத்துகிறது இலங்கை ராணுவத்தின் புலனாய்வு பிரிவு

விடுதலைப்புலிகளின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதை இலங்கை ராணுவத்தின் புலனாய்வு பிரிவினர் அரசாங்கத்திடம் உறுதிப்படுத்தி உள்ளனர்.

விடுதலைப்புலி உறுப்பினர்களில் காயமடைந்த ஒருவர் குறித்தும் நாட்டிலிருந்து தப்பி செல்ல தயாரான நிலையில் இருந்த இன்னொருவர் குறித்தும் புலிகளின் தகவல் தொடர்புகள் மூலம் தகவல்களை அறிந்துகொண்டதாக ராணுவப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


அவர்களில் புலிகளின் உளவுப்பிரிவு தலைவரான பொட்டு அம்மானும் ஒருவர் என்பதும், அவரை குருவி என்ற புனை பெயரால் புலிகள் குறிப்பிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதே சமயம் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டிருந்த கொழும்பு பிரபா என்றழைக்கப்படும் விடுதலைப்புலி இயக்கத்தின் உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவல்களுக்கு அமைய இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொழும்பில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் வெள்ளவத்தை பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் 6வது மாடியை ராணுவத்தினர் சோதனை யிட்டுள்ளனர்.

எனினும் ராணுவத்தினர் அங்கு செல்லும் முன்னரே அங்கிருந்தவர்கள் தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகின்றது. ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ள நபர் தெரிவித்த இடத்தில் விடுதலைப் புலிகளின் புலனாய்வு பிரிவினர் இருப்பதாக தகவல்களை வழங்கியுள்ளார்.

இந்த தகவல் வழங்கப்பட்ட சில மணி நேரத்தில் புலிகளின் புலனாய்வு பிரிவினர் என கூறப்படுவோர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதனை பார்க்கும் போது புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு நகரில் வலுவான நிலையில் இருப்பது உறுதியாக இருப்பதாக ராணுவத் தரப்பு தகவல்கள் கூறுகின்றன.

விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவின் தலைவர் உயிருடன் இருப்பது உறுதியாகி உள்ள நிலையில் அவர்கள் நாட்டில் இருந்து தப்பி சென்றது குறித்து தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக ராணுவத் தரப்பு தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Tuesday, July 28, 2009

சுவிஸ் பெண்ணை ஏமாற்றிய 'ராஜ வைத்தியர்' விஜய்குமார்!

சென்னை: திருவாங்கூர் ராஜ வைத்தியசாலை 'டாக்டர்' விஜயகுமாரிடம் ரூ. 30 லட்சத்தை இழந்த சுவிஸ் நாட்டைச் சேர்ந்த தமிழ்ப் பெண் அவர் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்தவர் புஷ்ப ரத்தினம். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,

எனது 14 வயது மகன் ரகுலன் வைரஸ் காய்ச்சலால் மூளை பாதிக்கப்பட்டு பக்கவாதம் ஏற்பட்டது. அவனுக்கு சிகிச்சை பெற 2006ம் ஆண்டு சென்னை வந்தேன்.

அப்போது “திருவாங்கூர் ராஜ வைத்தியசாலை” என்ற பெயரில் விஜயகுமார் இந்த நோய்க்கு சிகிச்சை அளிப்பதாக கேள்விப்பட்டேன். அவரை சந்தித்து என் மகனுக்கு ஏற்பட்ட நோய் பாதிப்பு குறித்து விளக்கி கூறினேன்.

அவர் நோயை குணப்படுத்தி விடுவதாகக் கூறி முதல் கட்டமாக ரூ.15 லட்சம் கேட்டார். நானும் பணத்தை கொடுத்தேன். ஆனால் சிகிச்சையால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

2வது முறை அவரை சந்தித்தபோது கோழிக் கட்டு சிகிச்சை அளிக்க வேண்டும், அதில் குணமாகி விடும். அந்த சிகிச்சைக்கு ரூ.8 லட்சம் வேண்டும் என்றார். அந்தப் பணத்தையும் தந்தேன். அந்த சிகிச்சையிலும் மகனுக்கு எந்த முன்னேற்றமும் இல்லை.

இதையடுத்து 3வது முறையாக டாக்டரை சந்தித்தபோது மான் கறி சிகிச்சை அளிக்க வேண்டும். அதற்கு ரூ.6 லட்சம் செலவாகும். அதை செய்தால் எல்லாம் சரியாகி விடும் என்றார்.

அதையும் நம்பி ரூ.6 லட்சம் கொடுத்தேன். அவர் அளித்த அந்த சிகிச்சையிலும் குணமாகவில்லை. அதன்பிறகு தான் அவரது சிகிச்சையே ஒரு மோசடி என்பது தெரியவந்தது.

என் மகனுக்கு சிகிச்சை அளிப்பதாக ரூ.30 லட்சம் வரை என்னை ஏமாற்றிவிட்டார். இதுபற்றி கடந்த 22ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தேன். இது குறித்து மைலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலி மருத்துவம் செய்த டாக்டர் விஜயகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றி விரைவாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.

யார் இந்த 'டுபாக்கூர்.'..?:

சென்னை மைலாப்பூர் கற்பகாம்பாள் நகரில் உள்ளது திருவிதாங்கூர் ராஜ வைத்திய சாலை. ஆயுர்வேத வைத்திய சாலையான இதை டாக்டர் விஜயகுமார் (60) நடத்தி வருகிறார். கேரளாவைச் சேர்ந்த இவரது குடும்பத்துக்கு ஊருக்கு ஒரு கிளை உண்டு.

1,400 வருடம் பாரம்பரியமாக தனது குடும்பம் வைத்தியம் பார்த்து வருவதாக விளம்பரம் செய்து வரும் இவர் தங்க பஸ்பம், வெள்ளி பஸ்பம், மான் கறி, புலிக் கறி சிகிச்சை என பல வகையான சிகிச்சைகளை செய்வதாகக் கூறுவார். இவரிடம் போனால் பீஸ் லட்சங்களில் தான்.

சில தனியார் தொலைக்காட்சிகளில் இரவில் பணம் கொடுத்து ஸ்லாட் வாங்கி மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சிகளையும் நடத்தி வந்தார். இந்த நிகழ்ச்சிகளில் தன்னைத் தவிர வேறு டாக்டர்கள் அனைவருமே முட்டாள்கள் என்பது போல பேசுவார்.

சமீபத்தில் இவர் மீது புகார்கள் குவிந்ததால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகள் காடுகளில் வாழ்கிறார்கள்;பிரபாகரன் உத்தரவு கிடைத்ததும் வெளிப்படுவார்கள்!


உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன்,’’பிரபாகரனை பொறுத்தவரை எந்த நேரத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரியும். பிரபாகரன் வெளிவரும் வரை நாம் ஒன்றுப்பட்டு போராட வேண்டும்.

போராட்டத்துக்கு நாம் தோள் கொடுத்தால் பிரபாகரன் வெளிப்படும் நாட்கள் நெருங்கும். விடுதலைப்புலிகளின் மூலப்பலம் சிதைக்கப்படவில்லை. அவர்கள் காடுகளில் இருக்கிறார்கள். தலைவரின் உத்தரவு கிடைத்ததும் அவர்கள் வெளிப்படுவார்கள்.

தமிழர்கள் வசித்த பகுதிகளில் கன்னி வெடிகளை அகற்ற இந்திய ராணுவம் அனுப்பப்படுவதாக தகவல் கிடைத்து உள்ளது.

காடுகளில் வாழ்ந்து வரும் விடுதலைப்புலிகளை அழிக்க தான் அவர்கள் அனுப்பப்படுகிறார்கள் என்று நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்’’என்று தெரிவித்துள்ளார்’’என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக செயல்படும் நாடுகளிடம் விடுதலைப்புலிகள் ஆயுதம் வாங்கவில்லை!

பெங்களூர் ஸ்ரீராமபுரத்தில் உள்ள சாய்பாபா திருமண மண்டபத்தில் ஈகமறவன் திலீபன் மன்றம் சார்பில் `ஈழத் தமிழரும்- காலக்கடமையும்' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, ‘’இலங்கையின் போர் முடிவுக்கு வந்த நிலையில் தமிழர்கள் பகுதியில் வீடுகள் கட்டப்பட்டு அங்கு சிங்களர்கள் அவசர அவசரமாக குடியமர்த்தப்படுகிறார்கள். ஊர்களின் பெயரை சிங்கள பெயராக மாற்றி வருகிறார்கள்.

இலங்கையில் போரை நிறுத்தாவிட்டால் 40 தமிழக எம்.பி.க்களும் ராஜினாமா செய்வார்கள் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார். அதில் அவர் உறுதியாக இருந்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டு இருக்காது.

விடுதலைப்புலிகளை தீவிரவாதிகள் என்று இந்திய அரசு கூறுகிறது. விடுதலைப்புலிகள் எப்போதும் சிங்கள மக்களை கொல்லவில்லை. இலங்கை ராணுவத்தை குறி வைத்தே தாக்குதல் நடத்தினார்கள்.

ஒரு தடவை 12 விடுதலைப்புலிகள் மட்டுமே சென்று 28 விமானங்களை குண்டு வைத்து தகர்த்தார்கள். அப்போது ஒரு பயணிகளின் உயிருக்கு கூட பாதிப்பு ஏற்படாதவாறு பார்த்து கொண்டார்கள்.

இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் இருந்து 300 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கொழும்பு நகரில் ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வந்தார்கள். அவர்கள் பயங்கரவாதிகள் என்றால் அவ்வளவு தூரம் சென்று தாக்கியவர்கள் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்தியாவை தாக்கி இருக்கலாமே. அதை ஏன் அவர்கள் செய்யவில்லை.

இந்தியாவுக்கு எதிராக மட்டும் அல்ல, இந்தியாவுக்கு எதிராக செயல்படும் நாடுகளிடம் அவர்கள் ஆயுதம் கூட பெறவில்லை’’என்று பேசினார்.

இலங்கை தூதரை மறித்து பெரியார் தி.க. போராட்டம்

சென்னை: இலங்கை துணைத் தூதர் பி.எம். அம்ஸாவின் காரை தடுத்து நிறுத்தி பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் பாதுகாப்புடன் அம்ஸா பின்னர் அழைத்துச் செல்லப்பட்டார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கைப் படையினரின் போரின்போது, இலங்கை அரசுக்கும், இந்திய அரசுக்கும் இடையே பாலம் போல செயல்பட்டார் அம்ஸா. இதைப் பாராட்டும் வகையில் அவரை லண்டன் துணைத் தூதராக மாற்றியுள்ளது இலங்கை அரசு.

இதையடுத்து அவருக்கு ஆந்திர வர்த்தக சபை சார்பில் நேற்று மாலை பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் அம்ஸா கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியை முடித்து விட்டு வெளியே வந்த காரில் ஏறியபோது அங்கு பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் திரண்டு வந்து காரை வழிமறித்து நிறுத்தினர்.

அம்ஸாவுக்கு எதிராகவும், இலங்கை இனப்படுகொலைக்கு எதிராகவும் அவர்கள் கோஷமிட்டனர். கிட்டத்தட்ட அரை மணி நேரம் இந்த முற்றுகை நீடித்தது. இதனால் அம்ஸாவால் செல்ல முடியவில்லை.

இதையடுத்து போலீஸாரும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், தலையிட்டு பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களை சமரசப்படுத்த முயன்றனர். ஒரு வழியாக போராட்டத்தை கைவிட்ட பெரியார் திராவிடர் கழகத்தினர் பின்னர் அங்கிருந்து அகன்றனர்.

இதையடுத்து அம்ஸா அங்கிருந்து பாதுகாப்புடன் புறப்பட்டுச் சென்றார். இந்த அமளியில் அம்ஸாவின் கார் லேசாக சேதமடைந்தது.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்ய வேண்டாம் என்று அம்ஸா கேட்டுக் கொண்டதால் போலீஸார் இந்தப் பிரச்சினையை அத்துடன் விட்டு விட்டனராம்.

Saturday, July 25, 2009

தமிழர்களை அழிக்க சிறிலங்கா அரசுக்கு இந்தியா உதவினால்... தனி ஈழம் அமைக்க தமிழர்களுக்கு உதவுவோம் : வைகோ



இலங்கையில் தமிழர்களை அழிக்க சிறிலங்கா அரசுக்கு இந்திய அரசு உதவினால், இலங்கையில் உள்ள தமிழர்கள் தனிநாடு அமைக்க நாங்கள் உதவுவோம் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்திருக்கிறார்.
இலங்கைத் தமிழர்களின் நலன் காக்க ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பழ. நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் அகதிகள் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களை பாதுகாக்கும் பொறுப்பை ஐக்கிய நாடுகள் சபையே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை நினைவரங்கம் அருகில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நேற்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளதாவது:
இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் உணவு, தண்ணீர், மருந்துப் பொருட்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் அந்த முகாம்களில் நாள்தோறும் 200 தமிழர்கள் உயிரிழக்கின்றனர். முகாம்களில் உள்ளவர்களுக்கு உணவு அளித்து வந்த தனியார் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை சிறிலங்கா அரசு வழங்காததால் அவர்கள் உணவு வழங்குவதை நிறுத்தி விட்டார்கள்.

இதனால் கடந்த சில வாரங்களாக முகாம்களில் உள்ள தமிழர்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். 3 ஆயிரம் பேருக்கு ஒரு கழிப்பறை மட்டுமே அமைக்கப்பட்டிருப்பதால் பெரும் சுகாதாரக் கேடு ஏற்பட்டிருக்கிறது.

தமிழ் மக்களை முகாம்களில் அடைத்து விட்டு அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் சிங்களவர்களைக் குடியேற்றும் முயற்சியில் சிறிலங்கா அரசு ஈடுபட்டிருக்கிறது.
ஈழத் தமிழர்களுக்கு வசதிகளை செய்து தருவதற்காக இந்திய அரசு அளித்த நிதியுதவியைக் கொண்டுதான் சிங்களவர்களுக்கான குடியிருப்புக்களை சிறிலங்கா அரசு கட்டி வருகிறது.

ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சவிடமே, தமிழர்களுக்கான நிதியுதவியை இந்தியா வழங்கியது மிகப்பெரிய தவறு. இலங்கைத் தமிழ் அகதிகளை பாதுகாக்கும் பொறுப்பை ஐக்கிய நாடுகள் சபையே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார் நெடுமாறன்.

தொடர்ந்து உரையாற்றிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, இலங்கையில் தமிழர்களைப் படுகொலை செய்ய ஆயுதங்களைக் கொடுத்து உதவியது இந்தியாதான். இதையெல்லாம் அறிந்த தமிழ் மக்கள் மத்திய அரசு மீது பெரும் கோபம் அடைந்துள்ளனர்.

கைதிகளுக்கு கூட சில உரிமைகள் இருக்கும். ஆனால் ஈழத் தமிழர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. முகாம்களில் அவர்கள் விலங்குகளைப் போல நடத்தப்படுகிறார்கள். இந்த நிலை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். ஈழத் தமிழர்களை படுகொலை செய்ய சிறிலங்கா அரசுக்கு இந்தியா உதவினால், இலங்கையில் உள்ள தமிழர்கள் தனித் தமிழ் ஈழம் அமைப்பதற்கு நாங்கள் உதவி செய்வோம் என்று எச்சரித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உரையாற்றியபோது தெரிவித்துள்ளதாவது:
போர் முடிவடைந்துவிடவில்லை. தனித் தமிழ் ஈழம் அமைப்பதற்காக தொடர்ந்து போர் நடக்கும். இலங்கைத் தமிழர்களின் போராட்டத்திற்கு தமிழகம் உள்ளிட்ட இந்திய மக்கள் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

வன்னி காட்டிலிருந்து படையினர் மீது விடுதலைப்புலிகள் கெரில்லா தாக்குதல் ‐ இராணுவத்தரப்பு



அரசாங்கம் விடுதலைப்புலிகள் முழுமையாக தோற்கடிக்கப்பட்டதாக கூறிய போதிலும் வன்னி காட்டில் மறைந்துள்ள விடுதலைப்புலிகள் தொடர்ந்தும் படையினர் மீது கெரில்லா பாணியிலான தாக்குதல்களை நடத்திவருவதாக இராணுவத்தரப்பு தகவல்கள் தெரிவித்திருக்கின்றன.

சில தினங்களுக்கு முன்னர் வன்னிக் காட்டுப் பகுதியில் விடுதலைப்புலிகளின் தாக்குதலில் காயமடைந்த படையினர் உலங்குவானூர்தி மூலம் பலாலி இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர்கள் தொடர்ந்தும் அங்கு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் பலாலி இராணுவ மருத்துவமனைத் தகவல்கள் கூறுகின்றன.

வன்னியில் இடம்பெறும் விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் குறித்து தென் பகுதியில் உள்ள ஊடகங்களுக்கு தகவல்கள் கிடைத்த போதிலும், தெற்கில் நிலவும் சுயதணிக்கை காரணமாக அந்த செய்திகள் வெளியிடப்படுவதில்லை என இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே முல்லைத்தீவு ஒட்டுச்சுட்டான் பகுதியில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதல் ஒன்றில் ஒரு இராணுவ கப்டன் உட்பட மூன்று படையினர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இது குறித்து விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து எந்தவிதமான தகவலையும் திரட்டமுடியவில்லை.

Friday, July 24, 2009

தமிழகத்துக்கு நீர்: எந்த சிக்கலும் இல்லை-எதியூரப்பா

மைசூர்: கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வழிவதால் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவதில் எந்த சிக்கலும் இல்லை என்று அம் மாநில முதல்வர் எதியூரப்பா கூறினார்.

கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பி வழிந்து வருவதையடுத்து இன்று சிறப்புப் பூஜை நடத்திய எதியூரப்பா நிருபர்களிடம் பேசுகையில்,

கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வழிவதால் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவதில் எந்த சிக்கலும் இல்லை.

இரு மாநிலங்களிலும் உள்ள விவசாயிகளையும் நான் சமமாகவே மதிக்கிறேன். விவசாயிகளுக்கு உதவுவது எனது அரசின் கடமை.

இந்த அணை கட்டப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி மிகச் சிறப்பான கொண்டாட்டம் நடத்தப்படும் என்றார்.

கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீ்ர் மட்டம் கடந்த 20 நாட்களி்ல் 54 அடி உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய‌ தொழிலாள‌ர்க‌ளுக்கு உத‌வும் இல‌வ‌ச‌ தொலைபேசி

அபுதாபி: அபுதாபியில் வெளிநாடு இந்திய‌ர் ந‌ல‌ அமைச்ச‌க‌த்தின் சார்பில் தொழிலாள‌ர்க‌ளுக்கு உத‌விடும் நோக்கில் இல‌வ‌ச தொலைபேசி சேவை ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ள‌து. வெளிநாட்டு இந்தியர் நலத்துறை அமைச்சகம் இந்த சேவையை வழங்குகிறது.

வெளிநாடுக‌ளுக்கு குறிப்பாக‌ வ‌ளைகுடா நாடுக‌ளுக்குச் செல்லும் தொழிலாள‌ர்க‌ள் ஏஜெண்டுக‌ளின் க‌வ‌ர்ச்சியான‌ வாக்குறுதிக‌ளைக் கேட்டு ஏமாந்து விடுகின்ற‌ன‌ர்.இத‌ன் கார‌ண‌மாக‌ ம‌னைவியின் ந‌கைக‌ள், சொத்து உள்ளிட்ட‌வ‌ற்றை விற்று பிழைப்பு தேடி வ‌ரும் இவ‌ர்க‌ளில் ப‌ல‌ர் த‌ங்க‌ள‌து அறியாமையின் கார‌ண‌மாக‌ ஏமாற்ற‌ப்ப‌டுகின்ற‌ன‌ர்.

இத்த‌கைய‌வ‌ர்க‌ளுக்கு விழிப்புண‌ர்வு ஏற்ப‌டுத்திம் வ‌கையில் இல‌வ‌ச‌ தொலைபேசி சேவை ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ள‌து.மேலும் இந்த‌ சேவையின் மூல‌ம் ஏமாற்றும் ஏஜ‌ண்டுக‌ள் குறித்தும் புகார் த‌ர‌லாம்.

த‌ற்பொழுது ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌ம், குவைத்,ச‌வுதி அரேபியா உள்ளிட்ட‌ வ‌ளைகுடா நாடுக‌ளில் ப‌ணிபுரியும் தொழிலாள‌ர்க‌ள் 800 091 202 53 என்ற‌ இல‌வ‌ச‌ தொலைபேசி எண்ணில் வார‌த்தின் ஏழு நாட்க‌ளும், 24 ம‌ணி நேர‌மும் தொட‌ர்பு கொள்ள‌லாம்.

Wednesday, July 22, 2009

பிரபாகரன் ஒரு அதீதப் பிறவியாக இருந்ததால் மட்டுமே இது சாத்தியமானது : அருட்தந்தை ஜெகத் கஸ்பார்



இந்தியாவின் கை இரத்தப் பழியைச் சுமப்பதாகத் குற்றம் சாட்டியுள்ள அருட்தந்தை ஜெகத் கஸ்பார், ஈழத் தமிழ் இனத்திற்கு இந்தியா பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
'நக்கீரன்' குழுமத்தின் 'இனிய உதயம்' காலாண்டு இதழுக்காக அருட்தந்தை ஜெகத் கஸ்பர் வழங்கிய நேர்காணலின் முக்கிய பகுதிகள் வருமாறு:

'நக்கீரன்' இதழில் தற்போது நீங்கள் எழுதிவரும் 'மறக்க முடியுமா?' கட்டுரைத் தொடரானது, ஈழ விடுதலைப் போர் குறித்த பல்வேறு உண்மைகளை வெளிக்கொண்டு வருவதாக இருக்கிறது. பிரபாகரன் ஒரு போர் விரும்பி, ஈழ மக்கள் மீது போரைத் திணித்தவர் என்றெல்லாம் இந்திய ஊடகங்கள் சித்தரித்துக் காட்டிய பிம்பத்துக்கும், 'இதயத்தில் உண்மையுள்ளவன், எல்லை இல்லா நன்றி உள்ளவன்' என்று நீங்கள் தரும் சித்திரத்துக்குமான வேறுபாடு ஆச்சரியமூட்டக்கூடியதாக இருக்கிறது. அப்படிப்பட்ட பிரபாகரனை நீங்கள் முதன்முதலாகச் சந்தித்த தருணம் பற்றிக் கூறுங்கள். உண்மையில் புலிகளின் இத்தனை பெரிய வீழ்ச்சிக்குக் காரணம் என்ன?

என்னைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த தமிழ் வரலாற்றில் மகத்தான ஒரு விடுதலைப் போராட்டம் என்றால் அது தமிழீழ விடுதலைப் போராட்டம் தான்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இந்த அளவுக்குக் கட்டி எழுப்ப முடிந்தது என்றால், அதற்கு பிரபாகரன் என்ற மாபெரும் ஆளுமைதான் காரணம்.
தண்ணீரால் சூழப்பட்ட ஒரு நிலப்பரப்பில், மிக மிகச் சிறிய ஒரு இனத்தில் இருந்து, அண்டை நாடான இந்தியா எப்படியும் இவர்களை அழித்துவிட வேண்டும் என்ற வைராக்கியத்தை எப்போதும் காட்டிக் கொண்டிருக்க-

உலகத்தில் எந்தவொரு நாட்டின் உதவியும் இல்லாமல், மரபுவழி இராணுவம் என்று நாம் சொல்கிற தரைப்படை, பீரங்கிப்படை, கடற்படை செறிந்த ஒரு புலனாய்வுப் பிரிவு, அனைத்துலக அளவிலான ஒரு கொள்வனவுப் பிரிவு, தேர்ந்த உளவுப்பிரிவு, இவற்றை எல்லாம் தாங்கி நடத்துவதற்காக ஒரு நிதிவள ஏற்பாடு, இன்னும் தன் ஆளுகைக்கு உட்பட்ட மக்களுக்கு ஒரு நிர்வாகத்தைக் கொடுக்கிற மேலாண்மைப் பிரிவு என இத்தனையையும் கட்டி எழுப்பிய மனிதன் ஒரு சாதாரண மனிதனாக இருக்க முடியாது. அபூர்வ ஆற்றல்கள் அமையப்பெற்ற ஒரு மனிதனால் மட்டுமே இது சாத்தியமாகும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழர்களுக்கு போர்க்குணம் இருந்தது என்று புறநானூற்றுக் காலத்தை நாம் சொன்னாலும், கடந்த ஐந்நூறு ஆண்டுகளில் நாம் போர்க்குணம் மிக்க மக்களாக இருந்தோம் என்பதற்கு எம்மால் எந்தவித ஆதாரங்களையும் சொல்ல முடியவில்லை. பெரிய அளவில் தொழில் முனைதல் இல்லாத, தாழ்வு மனப்பான்மை கொண்ட, எதையும் விதியே விதியே என்று ஏற்றுக் கொள்கிற ஒரு மக்கள் இனத்தின் மனவெளிகளுக்குள் புகுந்து புரட்சி செய்து, தன்னுடைய இனத்தின் விடுதலைக்காக உயிரையும் தரத் தயாராக இருக்கின்ற தலைமுறையையே உருவாக்கிக் காட்டிய மனிதன் சாதாரண மனிதனாக இருக்க முடியாது.

பிரபாகரன் ஒரு அதீதப் பிறவியாக இருந்ததால் மட்டுமே இது சாத்தியமானது.

தமிழ் இனம் பிரபாகரனால் தாழ்ந்ததா, உயர்ந்ததா என்று கேட்டால், உயர்ந்தது என்று உறுதியாகச் சொல்லுவேன். பிரபாகரனின் ஆளுமைக்கு அப்பால், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பல்வேறு வரலாற்றுச் சூழமைவுகளும் தாக்கத்தை ஏற்படுத்தின.

முதலில் வல்லரசு நாடுகளுக்கு இடையிலான பனிப்போர் காலம் அப்படியே நீடித்திருக்குமானால் எப்போதோ ஈழம் கிடைத்திருக்கும். ரஷ்ய வல்லரசு உடைந்து போனதால் பனிப்போர் முடிவுக்கு வந்து விட்டது. இந்த காலகட்டத்தில் தான் ஈழப் போராட்டம் வளர்ச்சி கண்டிருந்தது. பனிப்போர் முடிந்தபிறகு உலகம் ஒற்றைத்திசையில் பயணப்பட தொடங்கியது. நமக்கான ஆதரவு சக்திகள் இல்லாமல் போனார்கள்.

ஈழத்துக்குச் சென்ற இந்திய அமைதிப் படை, 15 ஆயிரம் அப்பாவித் தமிழர்களின் மரணத்துக்குக் காரணமாக இருந்தது. அதன் பின்னணியில் ராஜீவ் காந்தி படுகொலை எனும் துயர நிகழ்வு. ஆனால் 15 ஆயிரம் மக்களைச் சாகடித்த பழியும் குற்றமும் யாராலும் பேசப்படவில்லை. ராஜீவ் காந்தி படுகொலை மட்டும்தான் பேசப்பட்டது. அதற்காக நான் ராஜீவ் படுகொலையை நியாயப்படுத்தவில்லை. அது நடந்திருக்கக்கூடாது. ராஜீவ் மரணத்திற்காக அழுதவர்களில் நானும் ஒருவன்.

ஆனால் அந்தவொரு நிகழ்வை வைத்துக்கொண்டு பழிவாங்கித் தீர்க்க வேண்டும் என்ற பழி உணர்ச்சியை இந்தியா தொடர்ந்து கடைப்பிடித்து வந்திருக்கிறது, வருகிறது.

இதையும் சந்தித்தபடி புலிகள் ஓர் கட்டுப்பாடு மிக்க இயக்கமாக முன்னேறி வெற்றிகளைக் குவித்து வந்த நேரத்தில்தான், ஒசாமா பின்லேடன் அமெரிக்காவின் இரட்டைக்கோபுரங்கள் மீது தாக்குதல் நடத்த, பயங்கரவாதம் என்பது ஓர் எதிர் அரசியலாக மாறுகிறது. இதன் எதிர்விளைவுகளை எல்லாம் புலிகள் இயக்கமும் சந்திக்க வேண்டிய கட்டாயம்.

உலக அளவில் புலிகளின் கட்டமைப்புக்கள், நிதிவளங்கள் எல்லாம் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகி, பல்வேறு நாடுகளில் தடைசெய்யப்பட்ட இயக்கமாக முடங்கிப்போய் பெரும் இன்னல்களைச் சந்தித்தார்கள்.

களத்தில் அவர்கள் பெரும் வெற்றியைக் குவித்தாலும்கூட, விடுதலையை முன்நகர்த்திச் செல்வதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. ஆனையிறவு வரைக்கும் வென்று ஏறக்குறைய தமிழ் ஈழத்தை சாதித்துவிட்ட நிலையில்தான்-

ஒருவகையில் அவர்கள் ஏமாற்றப்பட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இழுத்து வரப்படுகிறார்கள். அதன் தொடர்ச்சியாக அவர்களது இயக்கத்துக்குள் பிளவை உண்டாக்கி, உளவு அமைப்புக்கள் ஊடுருவி புலிகளைப் பலவீனப்படுத்தினார்கள்.

இன்னும் தெளிவாகச் சொல்வது என்றால் புலிகள் சமாதானம் பேசிய காலகட்டத்தில்தான் அவர்களைப் பயங்கரவாதிகளாக உலக நாடுகள் மத்தியில் சித்தரித்துக் காட்டிய ஈன இராஜதந்திரத்தை சிங்கள அரசு கையாண்டது.

பிராந்திய அளவில், உலக அளவில் பகைவர்களாக இருக்கிற நாடுகள் எல்லாம் இந்த விடயத்தில் சேர்ந்து நின்றார்கள். இந்தியாவும் பாகிஸ்தானும் சேர்ந்து நின்று சிறிலங்காவுக்கு கைகொடுத்தார்கள் என்பதைவிட, அள்ளிக் கொடுத்தார்கள் என்பது சரியாக இருக்கும்.

அதேபோல இந்தியாவும் சீனாவும் சேர்ந்து உதவினார்கள். அமெரிக்காவும் ரஷ்யாவும் சேர்ந்து உதவினார்கள். ஐரோப்பிய நாடுகள் சேர்ந்து உதவின. அவ்வளவு ஏன்- உலகமே ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து உதவி, தமிழ் இனத்தின் விடுதலை உணர்ச்சியைத் தகர்த்து எறிந்திருக்கிறார்கள்.

இத்தனை சக்திகளை மீறியும் புலிகள் தாக்குப்பிடித்து நின்றிருக்கிறார்கள் என்பது ஒரு மகத்தான வரலாறு. அதனை நீங்கள் மறுக்கவே முடியாது.
புலிகள் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டியவர்கள்தான். ஆனால் அவற்றை எல்லாம் மீறி அவர்கள் தார்மீகப் போராட்ட நேர்மை கொண்டவர்களாக நடந்து கொண்டார்கள்.

கடைசிக்கட்டப் போரில் அவர்கள் நினைத்திருந்தால் கொழும்பு நகரில் 50 ஆயிரம் பேரையாவது கொன்று குவித்திருக்க முடியும். அந்த அளவுக்கு இரசாயன ஆயுதங்களை அவர்கள் நிச்சயமாக வைத்திருந்தார்கள். ஆனால் செய்யவில்லை.

கடந்த பத்து ஆண்டுகளில் பார்த்தோமேயானால் சிங்களப் பேரினவாதம் எத்தனை அப்பாவித் தமிழர்களைக் கொலை செய்தார்கள், புலிகள் எத்தனை சிங்களவர்களைக் கொலை செய்தார்கள் என்று கணக்கெடுத்தால், புலிகள் உயிரின் மதிப்பை உணர்ந்தவர்களாகப் போராடியிருக்கிறார்கள். கடந்த பத்து மாதத்தில் மட்டும் சிங்களப் பேரினவாதம் 60 ஆயிரம் பேரைக் கொன்று அழித்திருக்கிறது.

புலிகள் 600 பேரைக்கூட கொலை செய்யவில்லை. குறிப்பாக அப்பாவி மக்களைக் கொலை செய்யவே இல்லை. கட்டுநாயக்க வானூர்தி தளத்தில் அவர்கள் தாக்குதல் நடத்தியபோது பயணிகளில் ஒரு உயிர் கூட போய்விடக்கூடாது என்று கவனத்தோடு தாக்குதல் நடத்தினார்கள். தாக்குதல் நடத்திய நாளன்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் வானூர்தி தரை இறங்கியிருக்கிறது. பயணிகள் அனைவரும் வெளியே வந்தபிறகே தாக்குதலை தொடங்கினார்கள்.

புலிகள் இது குறித்து எல்லாம் கவலை கொள்ளாமல் 1:30 நிமிடத்துக்கே தாக்குதல் தொடங்கி இருப்பார்கள் என்றால், சிறிலங்கா வான்படையை அன்றே நிர்மூலம் ஆக்கியிருப்பார்கள்.

ஆனால் என்ன செய்வது? ஊடக பலம் இல்லை. உலகத்தில் எல்லோரும் அவர்களை அழித்துவிடவேண்டும் என்று துடிக்கிறார்கள்.

சந்திரிகா அம்மையார் 1995 ஆம் ஆண்டு தொடக்கம் 2000 ஆம் ஆண்டு வரை மிகப்பெரிய பொருளாதாரத் தடையை அங்கு விதித்திருந்தார். கடுகைக்கூட தமிழ் ஈழத்துக்குள் நுழைய விடாமல் பார்த்துக்கொண்டார். அப்படி இருந்தும் புலிகள் தம் மக்களைப் பட்டினிச்சாவில் விட்டுவிடவில்லை. விவசாயத்தைத் திட்டமிட்டு அவர்கள் நடத்தினார்கள். ஏழு லட்சம் மக்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு எவ்வளவு அரிசி வேண்டும், எவ்வளவு தேங்காய் வேண்டும் என்பதைக் கணக்கிட்டு விவசாயத்தை ஒழுங்குபடுத்தினார்கள்.
இவை எல்லாம் உலகத்துக்கு எடுத்துச் சொல்லப்படவில்லை. ஊடகங்கள் திட்டமிட்டு மறைத்தன. எல்லா இயக்கங்களையும் போல இவர்களும் பல தவறுகள் செய்திருக்கிறார்கள். ஆனாலும் எல்லா தவறுகளையும் மீறி ஒரு மகத்தான மக்கள் இயக்கமாக இருந்திருக்கிறார்கள்.

2002 ஆம் ஆண்டில் நான் பிரபாகரனைச் சந்தித்தேன். நான் சந்திக்கும் இடத்திற்குள் அவர் உள்ளே நுழைந்தபோது, அவருக்கு யாரும் சல்யூட் அடிக்கவில்லை. தனக்கான இருக்கையைத் தானே எடுத்துப் போட்டுக்கொண்டார். சின்ன போராளிகள் கூட அவருக்கு வணக்கம் சொல்லவில்லை. பணிவுடன் கடந்து சென்றார்கள், அவ்வளவுதான்.

தனக்கு தாகம் எடுத்தபோதுகூட தானே போய் தண்ணீர் எடுத்து அருந்தினார். ஒரு தன்முனைப்பு இல்லாத மனிதர். எல்லாப் பொறுப்புகளையும் பகிர்ந்து கொடுத்துவிட்டு, இலட்சியத்தை நிர்வகித்துச் செல்லக்கூடியவராக இருந்தார். எந்தக் கேள்வியைக் கேட்டாலும் தெளிவாக, பிசிறில்லாமல் அவரால் பதில் சொல்ல முடிந்தது. மிக முக்கியமாக தான் ஒரு மாபெரும் தலைவர் என்ற பெருமையே இல்லாத மனிதர்.

கிட்டத்தட்ட ஒரு லட்சம் தமிழர்களின் மரணம் குறித்து இந்தியா கிஞ்சித்தும் அலட்டிக் கொள்ளாததும் ஈழத்தமிழர்களை அழிக்க ஆயுதம், பயிற்சி கொடுத்த துரோகமும் இந்திய தேசியம் என்ற ஒருமை, ஒரு மாயை என்று இங்குள்ள பெரும்பான்மை தமிழர்களை எண்ண வைத்திருக்கிறது. இந்தப் பழியில் இருந்து இந்தியா விடுபட முடியுமா?

இந்தியாவின் கை இரத்தப் பழியை சுமக்கிறது. இதை ஒரு போதும் அது கழுவிக்கொள்ள முடியாது. என்றேனும் ஒருநாள், தமிழ் இனத்துக்கு அது பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.
கடைசிக்கட்டத்தில், மூன்று லட்சம் மக்கள் ஒரு சிறிய நிலப்பரப்பில் முற்றுகையிடப்பட்டு தொடர்ச்சியான எறிகணை வீச்சு, பொஸ்பரஸ் குண்டுகள், கிளஸ்டர் குண்டுகள் என்று உயிர்கள் பொசுக்கப்பட்டபோது கூட, அப்போதைய வெளியுறவு அமைச்சர் முற்றுகையிடப்பட்ட இடத்தில் 80 ஆயிரம் பேர்தான் இருக்கிறார்கள் என்றார்.

ஆனால் போர் முடிந்தபிறகு மூன்று லட்சம் மக்கள் வந்து சேர்ந்தார்கள் இல்லையா?
அப்படியானால் மூன்று லட்சம் பேரில் இரண்டேகால் லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டால்கூட பறவாயில்லை என்ற நிலையைத்தான் இந்தியா எடுத்திருக்கிறது. இவை எல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத துரோகம்.

அதேபோல கடைசி மூன்று நாட்களில் படுகாயம் அடைந்த 10 ஆயிரம் மக்களை புல்டோசர் ஏற்றிக் கொன்றிருக்கிறார்கள். மே 18 ஆம் நாள் சண்டையில் மட்டும் 20 ஆயிரம் மக்களை உயிரோடு புதைத்திருக்கிறார்கள். இவை எல்லாம் தெரியாதவை அல்ல.

லண்டனில் இருந்து வெளிவருகின்ற 'ரைம்ஸ்', 'கார்டியன்' பத்திரிகைகள், பாரிசில் இருந்து வெளிவருகிற 'லெமோண்ட்' போன்ற உலக அளவில் மதிக்கப்படும் பத்திரிகைகள் இவற்றை எல்லாம் பதிவு செய்திருக்கின்றன.

இருந்தும்கூட மனித உரிமை ஆணையத்தில் சிறிலங்காவை ஆதரித்து இந்தியா வாக்களித்திருக்கிறது. இந்த இனப்பழியில் இருந்து சிறிலங்காவின் பின்நின்ற பாவத்தில் இருந்து இந்தியா தப்பித்துக்கொள்ள முடியாது. வரலாற்றின்- மனச்சாட்சியின் முன்னால் என்றேனும் ஒருநாள் பதில் சொல்லியே தீரவேண்டும்.

பிரபாகரன் மரணம் குறித்து இருவேறு கருத்துகள் இருந்துவரும் நிலையில், நாடு கடந்த தமிழீழம் அமைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஈழத்தின்மீது நம்பிக்கை கொண்டவர்கள் தற்போது என்ன செய்வது என்று குழம்பிக் கிடக்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற பழைய சலித்துப் போன உண்மையைத்தான் நானும் இப்போது சொல்ல விரும்புகிறேன். உலகம் முழுவதும் தமிழர்கள் ஒரு கருத்தில் பிளவுபடாமல் இணைந்து நின்றார்கள் என்றால், உலகம் நமது கோரிக்கையைக் கேட்டுத்தான் ஆகவேண்டும்- இது ஒன்று.

நாம் இனி இரண்டு திசைகளில் பயணப்படவேண்டும் என்று நினைக்கிறேன். இதுவரை ஆயுதப் போராட்டம் நடந்தது. ஆயுதப் போராட்டத்துக்குத் துணையாக அரசியல் பின்னால் நின்றது. இப்போது அரசியல் போராட்டம் முதன்மை பெறும். ஆயுதப் போராட்டம் முடியவில்லை. அது கட்டாயம் தொடர்ந்து நடக்கும். நாம் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். ஒரு கெரில்லாப் போர் மையம் கொள்ளும்.

இந்தப் போரினால் பாதிக்கப்படாத உங்களுக்கும் எனக்குமே இவ்வளவு வேகம் இருக்கும் என்றால், நேரடியான பாதிப்பைச் சந்தித்த அந்த மக்களுக்கு எத்தனை கோபம் இருக்கும். எனவே கெரில்லாப் போர் நிச்சயம் நடக்கும். ஆனால் அதனைவிட மேலாக உலக அளவில் ஒரு அரசியலைக் கட்டி எழுப்ப வேண்டும். தமிழகத்தில் ஈழ ஆதரவு அரசியல் என்பது, அனைத்து இந்திய மக்களுக்கும் உண்மைகளை எடுத்துச் சொல்வது, ஒவ்வொரு அரசியல் கட்சியிடமும் ஈழம் பற்றி கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவது முக்கியம்.

முல்லைத்தீவில் நடந்த அந்த உச்சபட்சக் கொடுமைதான் தமிழீழத்துக்கான தார்மீக நியாயப்பாடாக இருக்கும் என்பதுதான் எனது கருத்து. தொடர்ந்து நாம் பணியாற்றினால் 2020 ஆம் ஆண்டுக்குள் தமிழ் ஈழம் வரும் என்பது எனது நம்பிக்கை.

மெனிக்பாம் ஏதிலிகள் முகாமிலிருந்த தேசியத் தலைவரின் பெற்றோரைக் காணவில்லை?



வவுனியா மெனிக்பாம் ஏதிலிகள் தடுப்பு முகாமில் இருந்த தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களது பெற்றோரைக் காணாமல் போயுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த இரண்டு வாரங்களாக இவர்கள் மெனிக்பாம் ஏதிலிகள் தடுப்பு முகாமில் இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இவர்கள் சிறீலங்காப் படையினரால் இரகசிய இடத்தில் தங்கவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கடந்த 17ம் நாள் வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்த நடவடிகையின் போது அரச கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தமை நினைவூட்டத்தக்கது.

கிரகணத்தின்போது குழந்தைப் பிறப்பைத் தவிர்க்க சிசேரியன் மூலம் பெற்ற பெண்கள்

சென்னை: சூரிய கிரகணத்தின்போது குழந்தை பிறந்து விட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் முன்கூட்டியே சிசேரியன் மூலம் கர்ப்பிணிகள் பலர் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளனர்.

இன்று இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் நிகழ்ந்தது.

இந்த சூரிய கிரகணத்தால் பெரும் பாதிப்புகள் ஏற்படும் என ஏற்கனவே ஜோசியர்கள் பலர் பயமுறுத்தியிருந்தனர். இதனால் அதிகம் பயந்து போனவர்கள் கர்ப்பிணிப் பெண்கள்தான்.

நிறைமாத கர்ப்பிணி பெண்கள் பலர் கிரகணத்தின்போது குழந்தை பிறந்தால் பாதிப்பு வருமோ என்று பீதியடைந்தனர்.

இதையடுத்து இன்று பிறக்கலாம் என்று கூறப்பட்டிருந்த கர்ப்பிணிகள் பலர், நேற்றே சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டனராம்.

இதுகுறித்து ஒரு பெண் கூறுகையில், எனக்கு முதல் பிரசவம். எனவே சூரிய கிரணத்தால் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்று குடும்பத்தினர் கூறினார்கள்.

எனவே சூரிய கிரணத்துக்கு முன்பாக சிசரியன் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டேன் என்றார்.

இதேபோல சென்னை நகரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளிலும் கர்ப்பிணிகள் சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாக தெரிய வந்துள்ளது.

Tuesday, July 21, 2009

பொது வாக்கெடுப்பு - ஈழ விடுதலைக்கான ஒரு அரசியல் பாதை: ஆய்வு



தமிழீழ ஆர்வலர்களே, 3.5 இலட்சம் வன்னிமக்கள் முள்கம்பி சிறையிலும், மொத்த தமிழீழ மக்களும் ஈழம் என்ற பெருஞ்சிறையிலும் உயிர்துடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஈழப்போராட்ட வரலாற்றில் கடந்த மே -2009 எதையாவது முடித்து வைத்திருக்கிறதா? இல்லை. புதிதாக எதையாவது தொடங்கி வைத்திருக்கிறதா? என்று நம்மில் பலர் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாம் அனைவரும் இதற்குமுன் போர் நிறுத்தத்திற்காக துடியாய் துடித்தோம். அப்போது ஈழமக்களின் எதிரிகளும், துரோகிகளும் கூட போர் நிறுத்தம் கோரி மக்களிடம் அம்பலப்படாமல் தப்பித்துக் கொண்டனர். இப்போது இவர்கள் வன்னி மக்களை மீளமைப்பது குறித்து (சிங்கள அரசு மனம் புண்படாமல்) பேசி தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். கூடவே தமிழர்க்கு சம உரிமை பேசி தம்மை சனநாயக வாதிகளாகவும் சமத்துவ வாதிகளாகவும் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னொருபுறம் ஈழத்தை அடைவதற்கான பல்வேறு வழிமுறைகள் குறித்து பல்வேறு அமைப்புகளும், தனிநபர்களும் சிந்திப்பதும், பரிமாறிக் கொள்வதும் கருத்து தெரிவிப்பதுமாய் இருக்கிறார்கள். இதில் பேசப்படும் பல்வேறு “கருத்துக்களில் பொதுவாக்கெடுப்பு ஒன்றை ஈழத்தில் நடத்தக் கோருவது” என்பதும் ஒன்றாகும். இதை எல்லா தமிழீழ ஆதரவு ஆற்றல்களும் அடிப்படையில் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். அவ்வப்போது பேசியும் வருகின்றனர். இந்த பொதுவாக்கெடுப்பு இன்றைய ஈழ சூழலில் ஈழத்தை அடைவதற்கான ஒரு வழிமுறையாகவும் பரந்துபட்ட மக்களை அணி திரட்டும் போராட்ட ஆயுதமாகவும் விளங்க முடியும். எப்படியெனில் ஒரு போராட்டம் வெற்றியடைய தேவையான 3 அம்சங்களையும் இது உள்ளடக்கி உள்ளது.

எதிரியின் நண்பர்களிடமிருந்து எதிரியை பிரித்து தனிமைப்படுத்துகிறது.
துரோகிகளையும், சந்தர்ப்பவாதிகளையும் மக்களிடமிருந்து பிரித்துவைக்கிறது.
இடத்தாலும், செயலாலும், சிதறிக்கிடக்கும் மக்கள் ஆற்றல்களை முழுமையாக ஒன்றுகுவிக்கின்றது.

இது எப்படி என புரிந்துகொள்ளுமுன், பொதுவாக்கெடுப்பு குறித்து சில வார்த்தைகள்.

பொதுவாக்கெடுப்பு -ஓர் உலகப்போக்கு

ஈழம் போன்ற தேசியஇன ஒடுக்குமுறை உள்ள நாடுகளுக்கு உலகம் வைத்திருக்கின்ற சனநாயக வழிமுறைதான் பொதுவாக்கெடுப்பு, இது சரியாகவும், நேர்மையாகவும் எல்லா பகுதிகளுக்கும் அமுல்படுத்தப்படுமேயானால் உலகில் தேசிய இன ஒடுக்குமுறைக்கு இடமில்லை.

1905 லேயே வாக்கெடுப்பு அடிப்படையில் நோர்வேயும், சுவீடனும் அமைதியாக பிரிந்து இருநாடுகளாகி, சனநாயக்திற்கும் நாகரீகத்திற்கும் வழிகாட்டினார்கள். இன்றும் சுவிட்சர்லாந்திலே முக்கிய பிரச்சனைகள் ஒவ்வொன்றுக்கும் பொதுவாக்கெடுப்பு மக்களிடையே நடத்தி முடிவு செய்கிறார்கள். இப்படி இதுவரை அங்கு 1978ம் வரை 296 பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

கனடாவின் கியூபெக் பகுதியிலே இனப்படுகொலைகளோ, கடும் ஒடுக்குமுறைகளோ ஏதுமில்லை. எனினும் சில மொழி, பண்பாட்டு வேறுபாடுகளுக்காக அம்மக்களில் ஒரு பகுதியினர் பிரிவினை கோருகிறார்கள். கனடாவின் அரசியல் சட்டத்தின்படி அவ்வரசே பொதுவாக்கெடுப்பிற்கான தேர்தலை நடத்துகிறது. அப்படியும் 2 முறை பிரிவினைக் கோரிக்கைக்கு பொரும்பான்மை கிடைக்கவில்லை. இவ்விடயத்தில் கனட அரசியல் நாகரிகத்தையும், சிங்கள அரசியல் நாகரிகத்தையும் ஒப்பிட்டு பார்க்க முடியுமா? மேலும் உலகில் பலநாடுகள் பொதுவாக்கெடுப்பு அடிப்படையில் பிரிவினை பெற்றுள்ளன.

நடந்தவை: ஸ்லோவேனியா (1990) க்ரோஷியா(91) மாசிடோனியா(91) உக்ரைன் (91), ஜார்ஜியா(91) டிரான்ஸ்னிஸ்டீரியா (91) போஸ்னியா (92) எரித்ரியா (93) மால்டோவா (94) கிழக்குதிமோர் (99) மாண்டிநிக்ரோ (2006) தெற்கு ஒசேடியன் (2006)

நடக்க இருப்பவை : தெற்கு சூடான் (2011) போகைன்வில்லே (2010) கலிடோனியா (2014) மேற்கு சகாரா(வாய்ப்பில்)

மேற்சொன்ன தேசிய இனங்கள் ஈழத்தை விட அதிக இழப்புகளை சந்தித்தவை அல்ல. தமிழர்களைப் போன்று எண்ணிக்கையில் உலகம் முழுவதும் பரந்து விரிந்தவை அல்ல. எனினும் அவர்களால் சாதிக்க முடிந்ததை நாம் சாதிக்க முடியவில்லை என்பது கசப்பான உண்மை. இதற்கான காரணங்கள் எதுவாக இருப்பினும் இப்போது இதற்கான சூழல் கனிந்து வருகிறது என்பது இனிப்பான உண்மை.

பொது வாக்கெடுப்பு கோரிக்கை - எதிரியின் நண்பர்களிடமிருந்து எதிரியைபிரித்து தனிமைப்படுத்துகிறது.

சிங்கள பெரும்பான்மை மக்கள் இன அழித்தொழிப்பின் பக்கபலமாக நிற்கும் நிலையில் சிங்கள அரசு இவ்விடத்தில் உள்நாட்டில் தனிமைப்படுத்தப்படும் வாய்ப்பே இல்லை. அது உலக அளவில் தனிமைப் படுத்தப்பட்டாலன்றி ஈழம் வெற்றி பெறமுடியாது.

சிங்கள அரசின் 60 ஆண்டு கால இன அழிப்பு நடவடிக்கையின் உச்சகட்டமாய், இறுதிநாளில் குறைந்தது 20,000 பேர் வரை கொல்லப்பட்ட உண்மைகளால் என்ன நடந்திருக்க வேண்டும்?

சிங்கள அரசை ஹிட்லரிய அரசாக வகைப்படுத்தி போர்க்குற்றவாளியாக அறிவித்து உலகிலிருந்து தனிமைப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் முற்றிலும் ஒருவருக்கொருவர் சுயநலன்களையே அரச உறவுகளாகக் கொண்டிருக்கும் பெரும்பாலான உலகநாடுகளால் அவர்களின் சுயநலன்களுக்காக சிங்கள அரசு காப்பாற்றப்பட்டிருக்கிறது. பயங்கரவாத ஒழிப்பு என்பது அவர்களுக்கு சாதகமான உலக வெகுமக்கள் கருத்தியலாக இருந்துள்ளது.

உலகம் முழுவதும் சராசரிமக்கள் வரை ஏற்றுக்கொண்டிருக்கின்ற ஏற்றுக்கொள்ளப்பட முடிந்த வெகுமக்கள் கருத்தியல் ஒன்று நமக்கு சாதகமாக அமையுமேயானால் அதை அடிப்படையாகக் கொண்டுநாமும் வெற்றிபெற முடியும். அந்த வெகுமக்கள் கருத்தியலாக பொதுவாக்கெடுப்பு இருக்கமுடியும். ஏனெனில் உலக நாடுகளில் எல்லா அரசுகளும் தத்தமது மக்களுக்கு தேர்தல் ஒரு சனநாயகப் பாதை என்று போதுமான அளவில் போதித்து வைத்துள்ளன. அவர்கள் உருவாக்கி வைத்திருந்த பயங்கரவாத ஒழிப்பு என்ற கருத்தியலமைப்பை அவர்கள் எப்படி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தினார்களோ அதே போல் அவர்கள் உருவாக்கிவைத்திருக்கும் தேர்தல் என்ற கருத்தியலமைப்பை நாம் நமக்குச் சாதகமாக பயன்படுத்தமுடியும்.

அவர்களுக்கு பயங்கரவாத ஒழிப்பு கருத்து ஆயுதம் என்றால் நமக்கு பொதுவாக்கெடுப்பு ஒரு கருத்து ஆயுதம்.

சிங்கள அரசின் பொதுவாக்கெடுப்பு மீதான மறுப்பை (அதுமறுக்கவே செய்யும்) தமிழகத்திலும், புலம்பெயர் தமிழர் நாடுகளிலும் நன்கு பரப்புரை செய்து, சராசரி உலக மக்கள் கருத்தியலை சிங்கள அரசிற்கு எதிராக கட்டமைக்கமுடியும். சிங்கள அரசின் பயங்கரவாத ஒழிப்பு என்ற இராஜதந்திர சொல் ஏற்கப்பட்டதுபோல அதன் பொதுவாக்கெடுப்பு மறுப்பு என்ற சொல் உலக அளவில் ஏற்கப்பட முடியாமல் அது தனிமைப்படுத்தப்படும். விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட வேண்டும் என ஓர் ஒற்றுமை சிங்கள அரசிற்கும், மற்ற நாடுகளுக்கும் இருந்தது. அதே ஒற்றுமை பொதுவாக்கெடுப்பு குறித்த விசயத்தில் தொடர முடியாது. அதில் சிங்கள அரசு தனிமைப்படும்.

சிங்கள அரசிற்கு ஆதரவாக இனப்படுகொலையையோ வாக்கெடுப்பையோ மறுத்தால் பல நாடுகளின் சனநாயகப் பண்பு கடுமையாக கேள்விக்குள்ளாகப்படும். இந்நிலையில் உலகநாடுகளால் சிங்கள அரசு கைவிடப்பட்டு தனிமைப்படுத்தப்படும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்திய முட்டுக்கட்டையால் சிங்கள அரசை எதிர்க்க முடியாமல் சில நாடுகள் உள்ளன. அவை இந்திய அரசின் தெற்காசிய வல்லாதிக்கத்தை மறுக்காமல் பொதுவாக்கெடுப்பை மட்டும் தாம் ஆதரிப்பதான நிலையை எடுக்கும் பட்சத்தில் இந்தியா மூலமான ஆதரவு நாடுகளை சிங்கள அரசு இழக்கும். இப்படி உலகஅளவில் சிங்கள அரசை தனிமைப்படுத்தும் போராட்ட வடிவமாக பொதுவாக்கெடுப்பு கோரிக்கை இருக்கமுடியும்.

பொதுவாக்கெடுப்பு கோரிக்கை சந்தர்ப்பவாதிகளையும், துரோகிகளையும் மக்களிடமிருந்து பிரித்து வைக்கிறது.

இலங்கையில் தமிழர்க்கு சம உரிமை 13 வது அரசியல் சட்டத்திருத்தம் இந்திய - இலங்கை உடன்பாடு என்பது போன்ற ஈழமறுப்பு கருத்தியலின் பின்னால் பலரும் உள்ளனர். கோடிக்கணக்கான தமிழரல்லாத இந்திய மக்களும், தமிழரல்லாத உலக மக்களும் பல்வேறு நாட்டு அரசுகளும், மனித உரிமை அமைப்புகளும், நேர்மையான அறிவு ஜீவிகளும், ஈழப்போராட்டத்திற்கு துரோகம் செய்தவர்களும், அதை தமது நலன்களுக்கு பயன்படுத்தி வருபவர்களும் என பலரும் உள்ளனர். ஏன், இராசபக்சேவும், சிங்கள இனவெறிக் கட்சிகளுமே கூட இக்கருத்தியலுக்கு அவ்வப்போது வந்து போவதுண்டு. அந்த அளவிற்கு இதற்குபெரும் கருத்தியல் பரப்பு உண்டு.

புலிகளின் பின்னடைவுக்கு பின், “தமிழீழம் கேட்டவர்கள் அனைவரும் ஒழிக்கப்ட்டு விட்டனர். இப்போது மக்கள் மட்டுமே உள்ளனர். அவர்களுக்கு சமஉரிமை அளித்தால் போதும், பிரச்சனை தீர்ந்து விடும்.” என்ற கருத்து வளர்க்கப்படுகிறது.

இவையெல்லாம் சிங்கள அரசும், இந்திய அரசும் உலகிற்கு தெரிவித்துவரும் கருத்துகள். இது குறித்து கருத்துக்கூற தமிழீழ மக்களின் வாய் கட்டபட்டுள்ளது. இக்கட்டை அவிழ்த்து விட்டு இவ்வரசுகள் கூறுவது உண்மையா? என அறியக்கோருவது தான் பொதுவாக்கெடுப்பு கோரிக்கை. முடிவு, ஒன்றுபட்ட இலங்கையானாலும், ஈழமானாலும் அது அம்மக்கள் தீர்ப்பாகவே இருக்க வேண்டும். சிங்களத்தீர்ப்பாகவோ, வெளிஉலகத் திணிப்பாகவோ இருக்கமுடியாது.

இத்தகைய பொதுவாக்கெடுப்பை சமஉரிமை பேசும் பரந்துபட்ட உலகமக்கள், அறிவுஜீவிகள், உரிமை அமைப்புகள் அனைவரும் ஏற்கமுன்வருவர். ஆனால் சமஉரிமை கருத்தியலுக்குள் ஒளிந்துகொண்டிருக்கும் துரோகிகளும், சந்தர்ப்பவாதிகளும் சில எதிரிகளும் பொதுவாக்கெடுப்பை மறுப்பதன் மூலம் அம்பலப்படுவர். ஈழமல்லாத சமஉரிமை பேசும் முகாம், பொதுவாக்கெடுப்பை ஏற்காத சிறிய முகாமாகவும், பொதுவாக்கெடுப்பை ஏற்கும் பெரிய முகாமாகவும் பிளவுபடும். இவ்வாறு பொதுவாக்கெடுப்பு கோரிக்கையால் அடையாளம் காணப்பட்டு எதிர்சக்திகள் அம்பலப்படமுடியும். இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல.

பொதுவாக்கெடுப்பு கோரிக்கை என்பது ஈழ மக்கள் தமது அரசியல் நலன்களை தாமே நேரடியாக தீர்மானித்துக்கொள்ளும் ஒரு சாதாரண தேர்தல் நடவடிக்கை. இது சனநாயகமானது என்பதை யாரும் மறுக்கமுடியாது. உலகிலேயே மிகப் பெரிய சனநாயக நாடு என்று பீற்றிக்கொள்ளும் இந்தியா, போர்நடைபெற்ற காலத்தில் அதை பயங்கராவத ஒழிப்பு என கூறி தமிழக மக்களை குழப்பியது. ஆனால் பொதுவாக்கெடுப்பை கோரிக்கை விசயத்தில் தமிழக மக்களை அதேபோல் ஏமாற்றுவது கடினம்.

இந்தியா பொதுவாக்கெடுப்பு கோரிக்கையை மறுக்குமேயானால் அது தேர்தலை கூட ஏற்காத சனநாயமற்ற அரசு என்று அழுத்தமாக தம்மக்களிடம் பதிவு செய்து கொள்ளும். இந்தியாவில் தேசிய இன ஒடுக்குமுறைக்குட்பட்ட மக்களுக்கும், இந்திய அரசுக்கும் இடையிலான முரண் அதிகப்படும். பொதுவாக்கெடுப்பு கோரிக்கையை ஆதரித்தால் அதுபோலவே இந்தியாவிலும் கோரிக்கைகள் வளர்ந்துவிடும் என்ற அச்சத்திற்கு அது ஆளாக நேரிடும். இந்தியா எந்த முடிவை எடுத்தாலும் அதன் உள்நாட்டு தேசிய இன ஒடுக்குமுறைக்கு இது பலத்த அடியாகவே இருக்கும். இச்சிக்கலிலிருந்து தப்பிக்க பொதுவாக்கெடுப்பு அல்லாத முறையில் ஈழம் அமைவதே தமக்கு குறைந்த இழப்புடையது. என்பதை உணர்ந்து அதற்கான நடவடிக்கையில் இந்தியா இறங்கக்கூடும் என்ற வாய்பையும் மறுக்கமுடியாது. இது அந்த நேரத்தில் இந்திய ஆட்சியில் நடைமுறைசார்ந்த புத்திசாலிகள் இருப்பது சம்பந்தப்பட்ட விசயம்.

பொதுவாக்கெடுப்பு கோரிக்கை - இடத்தாலும், செயலாலும் சிதறிக்கிடக்கும் மக்கள் ஆற்றல்களை முழுமையாக ஒன்று குவிக்கின்றது.

தமிழீழமக்கள் மூன்றுபெரும் எண்ணிக்கையில் சிதறிக்கிடக்கின்றனர். 1.தமிழீழம் 2.புலம் பெயர்ந்த நாடுகள், 3.தமிழகம். போராட்டங்களின் பங்கேற்பில் இம் 3 பகுதியினரின் நிலையும் வெவ்வேறானது.

ஈழத்தில் இப்போதைய இராணுவ ஆட்சி நிலைமைகளால் அரசியல் போராட்டம் நடத்தமுடியாமல் இருக்கிறது. ஆயுதப்போராட்டம் நடத்தும் வாய்ப்பைக் கொண்டிருந்தாலும் அதில் தமிழக, புலம் பெயர் தமிழர்களின் எண்ணிக்கை பலத்தை பயன்படுத்தமுடியாது.

தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர் அரசியல் போராட்டமும் நடத்தமுடியாது, ஆயுதப்போராட்டமும் நடத்தமுடியாது.
புலம் பெயர் தமிழர் எல்லைக்கு உட்பட்ட அரசியல் போராட்டம் நடத்தலாம். ஆயுதப்போராட்டத்தில் படையணியாக பங்கேற்க முடியாது.

ஆனால் மக்கள் சிதறிப்போய் கிடக்கின்ற நிலையை மற்ற போராட்ட வடிவங்களை விட பொதுவாக்கெடுப்பு கோரிக்கை, பெரிதும் சாதகமாக பயன்படுத்தமுடியும்.

சிதறிக்கிடக்கும் மக்களில், உணர்வு மட்டத்தில் ஏற்றத்தாழ்வான அனைவரையும் இதில் ஒன்று குவிக்க முடியும்,

அம்மக்கள் மட்டும் அல்ல புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில் உள்ள மனித உரிமை இயக்கங்கள், அரசியல் இயக்கங்கள், ஊடகங்கள், உலக அறிவுஜீவி துறையினர், தேர்தல் சனநாயக நடைமுறைய ஏற்கும் சராசரி உலக வெகுமக்கள் கருத்தினர் என அனைவரையும் பொதுவாக்கெடுப்புக்கான போராட்டம் ஒன்று குவிக்கமுடியும்.

தமிழகத்தில் மனிதாபிமான அடிப்படையிலும் இன உணர்வு அடிப்படையிலும் ஈழத்தை ஆதரிக்கும் ஒரு வெகுமக்கள் உணர்வலை உண்டு இந்த உணர்வலை 60 ஆண்டுகால பிரச்சனைக்கு தீர்வாக தேர்தல் என்ற எளிய வழிமுறையை நிச்சயம் ஏற்கும். இச்சூழல் தமிழக வெகுமக்கள் இயக்கத்தை கட்டியமைக்க உதவும்.

பிரிவினை என்றாலே பயங்கரவாதம் தான் என்று மக்களிடம் கருத்து பதியவைக்கப்பட்டுள்ளது. இல்லை, பிரிவினை என்பது ஒரு சனநாயக வாதம் என்று பொதுவாக்கெடுப்பு கோரிக்கை தெளியவைத்து அவர்களை சாதகமாக்க முடியும்.

பொதுவாக்கெடுப்பு கோரிக்கை ஈழம், புலம் பெயர் நாடுகள், தமிழகம் இம்மூன்றிலும் இங்குள்ள மக்களின் அக ஆற்றல் நிலைமைகளுக்கு பொருத்தமான போராட்ட வடிவமாக உள்ளது. அதேபோல் சிங்கள அரசு என்றும் இல்லாத அளவில் உலக அளவில் மனித உரிமை அரங்கில் தனிமைப்பட்டு வரும் புறச்சூழ்நிலைமைகளுக்கும் பொருத்தமானதாக உள்ளது.

தமிழகத்திலும் உலக நாடுகளிலும் சாத்தியமான அளவில் தமிழீழத்திலும் பொதுவாக்கெடுப்பு கோரிக்கைக்கான ஒரு மக்கள் இயக்கத்தை கட்டியமைக்காமல் நாம் மேற்சொன்னவற்றிற்க்கு ஆசைப்பட முடியாது. தமிழகத்தில் சில அமைப்புகளும், பல தமிழீழ ஆர்வலர்களும் இவற்றை முன்வைக்கின்றனர். மேலும் பல்வேறு அமைப்புகளும் தமிழீழ ஆர்வலர்களும் இதுபோல் முன்னெடுக்கும் பட்சத்தில் நாம் தமிழகத்தில் ஈழ தமிழர்களுக்கு ஆதரவான ஓர் மக்கள் இயக்கத்தை கட்டியமைக்க முடியும். இதை கட்டமைத்து விட்டால் இன்று பலவந்தமாக ஓங்கியிருக்கும் சிங்கள அரசின் கை இனி எப்போதுமே ஓங்க முடியாது.

பிரபாகரன்

விடுதலைப் புலிகளின் முக்கிய ஆவணத் தொகுதி படையினரால் மீட்பு



தமிழீழ விடுதலைப் புலிகளினால் மிகவும் சூட்சுமமான முறையில் பாதுகாக்கப்பட்டு வந்த மிக முக்கியமான ஆவணங்களை இராணுவத்தினர் மீட்டுள்ளனர். கடந்த சில தினங்களாக வன்னியில் மேற்கொள்ளப்பட்ட பாரிய தேடுதலின் போது மூன்று பிளாஸ்டிக் கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
பல அரியவகை ஆங்கில நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு, அவையும் விடுதலைப் புலிகளுக்குப் பயிற்றுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறைத் திணைக்களத்தின் உயரதிகாரியான அநுரா சேனநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

பல அரியவகை ஆங்கில நூல்கள் மற்றும் இராணுவ ஆராய்ச்சிப் புத்தகங்கள் உள்ளிட்ட சுமார் 270 ஆங்கில நூல்கள், கட்டுரைகள் மற்றும் புலனாய்வுத் தகவல்கள் என்பன சீராகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்களும் இவற்றில் காணப்படுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

இதனைத் தவிர, இலங்கை இராணுவத்தின் முப்படைப் பிரிவுகளும் அமைத்துள்ள தளங்கள், அவர்களுடைய படை பலம், அதிகாரிகள் வரிசை, அவர்களிடம் இருந்த ஆயுதங்கள், வாகனங்கள், இதர படை பலங்கள், அவர்கள் தாக்குதல் நடத்த பயன்படுத்தக்கூடிய நில, நீர், வான் பாதைகள், அவர்களுடைய தகவல் தொடர்பு கட்டமைப்பு, அவர்களுடைய இராணுவத் தலைமையகங்கள், பாசறைகளின் எண்ணிக்கை, பாசறைகளின் அமைப்பு, பாசறைகளை அணுகுவதற்கான சாலைகள், பாசறைகளில் தாக்குவதற்கு ஏதுவான வலுக்குறைந்த தற்காப்பு அரண்கள், இராணுவ உத்திகளுக்குப் பயன்படக்கூடிய வரைபடங்கள், ஆயுதங்களைக் கையாள்வதற்கான வழிமுறைகள், தாக்குதலுக்குத் தேவைப்படும் ஆயுதங்கள், சாதனங்கள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்று எல்லாவற்றையும் எளிமையான தமிழிலில் அச்சிடப்பட்ட ஆவணங்களும் இவற்றில் இருப்பதாக அறியப்படுகின்றது.

இவை மட்டுமன்றி வெடிகுண்டுகள், கண்ணி வெடிகள் தயாரிக்கும் முறை, மின்கலன்களைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது, மின்கலன்களையே தயாரிக்கும் முறை, வெளிநாடுகளில் கிடைக்கும் ஆயுத உதிரி பாகங்களைத் தருவித்து இணைக்கும் முறை, போர் உத்திகள், கண்ணி வெடிகளைப் புதைக்கும் முறை, நாட்டு வெடிகுண்டுகளையும் குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கும் வெடிகுண்டுகளையும், வெடி குண்டு என்ற சந்தேகம் வராதபடிக்கு சிற்றுண்டிப் பெட்டியில் டிரான்சிஸ்டர் போன்றவற்றின் வடிவிலான குண்டுகளையும் தயாரிக்கும் முறைகளும் இந்த ஆவணங்களில் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த கொள்கலன்களிலிருந்து கடந்த 30 வருடப் போராட்டத்தின் பல முக்கியமான ஆவணங்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

இலங்கை இராணுவத்துக்கு எதிராக 30 ஆண்டுகளுக்கும் மேலாக தாக்குதல் தொடுத்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தன்னுடைய இயக்கத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு மிகச் சிறந்த இராணுவக் கல்வியை அளித்துள்ளதாக இதன்மூலம் தெரியவருவதாக இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது.

இனி செல்வராஜா பத்மநாதனே வழி நடத்துவார்-விடுதலைப் புலிகள்

வன்னி: பிரபாகரனால், விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட செல்வராஜா பத்மநாதன் இனி வரும் காலத்தில், ஏற்ப புலிகள் அமைப்பின் போராட்டத்தை வழி நடத்திச் செல்வார் என விடுதலைப் புலிகள் அமைப்பு கூறியுள்ளது.

இதன் மூலம் புலிகள் அமைப்பின் புதிய தலைவராக செல்வராஜா பத்மநாதன் அதிகாரப்பூர்வமாக உருவெடுத்துள்ளார்.

இதுதொடர்பாக விடுதலைப் புலிகளின் நிறைவேற்றுச் செயற்குகுழு என்ற பெயரில் சுரேஸ் (அமுதன்), ராம் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை..

எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழ் மக்களே, எமது தமிழீழ தேசத்தின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் நெருக்கடி மிகுந்த, துயர் படிந்த கால கட்டம் ஒன்றினுள் ஈழத் தமிழினம் இப்போது நிலை குலைந்து நிற்கின்றது.

ஈடு செய்ய முடியாத- கனவில் கூட நாம் ஏற்றுக்கொள்ள விரும்பாத- மிகப் பெரிய இழப்புக்களை, எம்மினம் சந்தித்து விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழித்து விட்டதாகவும், முற்றாக ஒடுக்கிவிட்டதாகவும், இலங்கை நாடு பரப்புரை செய்து கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில்- தமிழீழ விடுதலைக்காக வீறுகொண்டு எழுந்து போராட வேண்டிய வரலாற்றுக் கடமை- எங்கள் தேசியத் தலைவர் அவர்களினாலும், எங்கள் மண்ணிற்காக விதையாகிப் போன மாவீரர்களினாலும், தமது உயிர்களைத் தந்து விட்ட மக்களினாலும் எங்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நிலையில்- வரலாற்றின் தேவை கருதி, பிறந்திருக்கும் புதிய சூழலுக்கு ஏற்ப, புதிய வழிமுறைகளுக்கு ஊடாகப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிர்வாகக் கட்டமைப்பை மீள்-ஒழுங்கமைப்புச் செய்துள்ளோம் என்பதை மக்களுக்கு எமது இயக்கம் பணிவோடு அறியத்தருகின்றது.

போராட்ட வடிவங்களும் அதற்கான உத்திகளும், பாதைகளும் காலத்திற்கேற்பவும் தேவைக்கேற்பவும் மாற்றமடையலாம். எமது இறுதி லட்சியமான தமிழீழம் என்றும் மாறாதது. எனவே தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாங்கள் மக்களுடன் ஒன்றிணைந்து விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வை மேற்கொள்ள வேண்டிய தருணத்தில் இருக்கின்றோம்.

அன்றும் இன்றும் இனி என்றும் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களே தமிழ் தேசியத்தின் தலைவர். எங்கள் முன்னாலுள்ள தடைகளை உடைத்தெறிந்து எங்கள் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள எமது ஒருங்கிணைப்பாளர்கள், தாயகத்தின் களத்தில் இருந்து எதிரியின் முற்றுகையை உடைத்துக் கொண்டு வெளிவந்த போராளிகள், பொறுப்பாளர்கள் என எங்கள் உறுப்பினர்கள் பலரையும் ஒருங்கிணைத்து மேற்கொள்ளப்பட்ட, நீண்ட, விரிவான, ஆழமான கருத்துப் பரிமாற்றங்களின் விளைவாக இறுதியான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்தக் கூட்டு முடிவுக்கு ஏற்ப பிரபாகரன் அவர்களால் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த செல்வராஜா பத்மநாதன் இனிவரும் காலத்தில் எங்கள் போராட்ட நகர்வுளை வழிநடத்திச் செல்வார் என்பதை மக்களுக்கும், உலக சமூகத்திற்கும் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கிறோம்.

போராட்டத்தை முனைப்புடன் முன்னகர்த்தும் நோக்கில் இயக்கத்திற்கான ஒரு தலைமைச் செயலகமும், பல்வேறு துறைசார் வேலைத் திட்டப் பிரிவுகளும், நிறைவேற்றுச் செயற்குழுவும் உருவாக்கப்பட்டுள்ளன.

இவை பற்றிய விபரங்களை விரைவில் தெரிவிப்போம். எங்கள் எதிர்கால செயற்பாடுகளை வலுப்படுத்தும் முகமாக தமிழ் மக்களாகிய உங்களின் மலையாய ஆதரவையும் அறிவார்ந்த கருத்துக்களையும் எதிர்பார்த்து நிற்கின்றோம்.

தமிழ் மக்களுடைய நிலங்களை ஆக்கிரமித்ததாலும் பல்லாயிரம் தமிழ் மக்களைக் கொன்று குவித்ததாலும் தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டம் தோற்று விட்டதென்று சிங்கள தேசமும் அதனுடன் கூட்டுச் சேர்ந்த நாடுகளும் நினைக்குமாயின் அந்த மாயையை நாம் உடைத்தெறிவோம்.

பிரபாகரன் வளர்த்துவிட்ட விடுதலைத் தாகம் என்ற பெருநெருப்பு, உணர்வுளள் ஒவ்வொரு தமிழர்களின் நெஞ்சிலும் கனன்று கொண்டிருப்பதையும் தேச விடுதலை ஒன்று மட்டுமே அந்தப் பெருநெருப்பை அணைக்கும் சக்தியுள்ளது என்ற உண்மையையும் எங்கள் அடுத்தகட்ட போராட்ட நகர்வுகளின் மூலமாக உலகிற்கு உணர வைப்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

லஞ்சம்: இந்திய குடியுரிமை அதிகாரி கைது- ரூ. 1 கோடி சிக்கியது

சென்னை: சென்னையில் இந்திய குடியுரிமைப் பிரிவு அதிகாரி கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து ரூ. 1 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை அசோக் நகரில் உள்ளது மத்திய வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் நலத்துறையின் (Ministry of Overseas Indian Affairs) குடியுரிமை பாதுகாப்பு அலுவலகம்.

வெளிநாடுகளுக்கு கட்டட வேலை உள்ளிட்ட சிறு பணிகளுக்கு ஆட்களை வேலைக்கு அனுப்ப இங்கு தான் நிறுவனங்கள் அனுமதி வாங்க வேண்டும். இந்த அனுமதி வழங்குவதில் பெருமளவில் ஊழல் தலைவிரித்தாடி வந்தது.

லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கிக் கொண்டு தவறான பல நிறுவனங்களுக்கும் அனுமதி தந்து வருகிறது இந்த நிறுவனம். இதில் பெரும்பாலான நிறுவனங்கள் வெளிநாட்டில் வேலைவாங்கித் தருவதாக லட்சக்கணக்கில் பணம் வசூலித்து ஏமாற்றி வருகின்றன.

இதுபோன்ற மோசடியான நிறுவனங்களைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த அலுவலகமே லஞ்சம் வாங்கிக் கொண்டு மோசடிக்கு துணை போய் வருகிறது. இங்கு ஏராளமான லஞ்சம் தலைவிரித்தாடுவதாக ஏராளமான புகார்கள் வந்த நிலையில் சிபிஐ களமிறங்கியது.

இந்த அலுவலக அதிகாரியான சேகரை சிபிஐ கண்காணிக்க ஆரம்பி்ததது. ஐ.ஆர்.எஸ். (இந்திய வருவாய் பணி) அதிகாரியான இவர் சுங்கத்துறையில் பணியாற்றிவிட்டு 2 ஆண்டுகளுக்கு முன் இந்திய குடியுரிமை அலுவலக பணிக்கு வந்தவர் ஆவார்.

லஞ்சம் வாங்குவதில் எக்ஸ்பர்ட்டான இவரை பணம் வாங்கும்போது பிடிக்க சிபிஐ முயன்றது. ஆனால், இவர் பிடிபடவி்ல்லை. பணத்தை வெவ்வேறு சேனல்கள் மூலம் வாங்கி சிபிஐ அதிகாரிகள் கண்ணிலேயே மண்ணைத் தூவி வந்தார்.

இதையடு்த்து இவரை வேறு வழியில் மடக்க சிபிஐ திட்டமிட்டது.

இந் நிலையில் சேகர் தனது மகன் மதுவுக்கு அண்ணா பல்கலைக்கழத்தில் பணம் கொடுத்து என்ஜினீயரிங் சீட் வாங்க முயற்சிப்பது தெரியவந்தது.

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஆந்திர மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நல அறக்கட்டளை என்ற அமைப்பைச் சேர்ந்தவரான ரவீந்திரபாபு என்ற ஏஜென்டிடம் ரூ. 14 லட்சம் பேரம் பேசினார் சேகர்.

இதையடுத்து தனது அலுவலகத்தால் முறைகேடாக பலனடைந்த அன்வர் உசேன் என்ற டிராவல் ஏஜென்டிடம் பேசினார் சேகர். ரூ. 14 லட்சத்தைத் தருமாறு அவர் கூறவே ஒப்புக் கொண்டார் உசேன். இதையும் சிபிஐ மோப்பம் பிடித்தது.

இருவரும் பணத்துடன் ரவீந்திரபாபுவை சந்தி்க்கக் கிளம்பவே சிபிஐ அதிகாரிகள் அவர்களை பின் தொடர்ந்தனர்.

ரவீந்திர பாபுவிடம் ரூ. 14 லட்சத்தை சேகரும் உசனும் தந்தபோது அதிரடியாக உள்ளே புகுந்த சிபிஐ அதிகாரிகள் மூன்று பேரையும் கையும் களவுமாகப் பிடித்தனர்.

சோதனையில் அன்வர் உசேன் என்ற புரோக்கரிடம் இருந்து ரூ.13
இதையடுத்து சேகரி்ன் மேற்கு மாம்பலம் வீடு மற்றும் அலுவலகம், ஏஜென்ட் அன்வர் உசேனின் வீடு, அலுவலகம் ஆகிய இடங்களிலும் சிபிஐ சோதனை நடத்தியது.

அப்போது சேகரின் வீட்டில் ரூ. 60 லட்சம் பணம் சிக்கியது. அவரது வங்கிக் கணக்கில் ரூ. 40 லட்சம் இருந்தது. அதை சிபிஐ அதிகாரிகள் முடக்கினர்.

உசேனின் வீட்டில் ரூ. 20 லட்சம் சிக்கியது. இந்த மூவரும் இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.

கைதான அதிகாரி சேகர் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்தவர். இவரது மனைவி அம்பிகா வருமான வரித் துறையில் அதிகாரியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Thursday, July 16, 2009

தம்மீதான குற்றவியல் விசாரணைகளுக்கு அஞ்சியே அரசாங்கம் முகாம்களுக்குள் யாரையும் அனுமதிப்பதில்லை:த நியூயோர்க் டைம்ஸ்



அரசாங்கத்தின் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்பட்டுவிடும் என சந்தேகத்திலேயே அரசாங்கம் இடைத்தங்கல் முகாம்களுக்குள் யாரையும் அனுமதிப்பதில்லை என த நியூயோர்க் டைமஸ் தெரிவித்துள்ளது.

அத்துடன், தமிழர்களுக்காக பணியாற்றி வருகின்ற சில தொண்டு நிறுவனங்களும், அரசாங்கத்தினால் தாம் வெளியேற்றப்பட்டு விடலாம் என்ற அச்சத்தில், முகாம்கள் தொடர்பில் விமர்சனங்களை மேற்கொள்வதில்லை எனவும் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

எனினும், மௌனித்த காலங்கள் போதும் எனவும், தற்போது தமிழ் மக்களின் நடமாட்ட சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டிருத்தல் மற்றும் நீண்ட நாட்களாக அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைகளுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளது.

விடுதலைப் புலிகளை வெற்றிக் கொண்டு விட்டதாக அறிவித்து 2 மாதங்களை கடந்த நிலையிலும், இன்னும் தமிழ் மக்கள் தொடர்ந்தும் இடைத்தங்கல் முகாம்களிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எனினும் அதிகரித்த இராணுவத் துருப்பினரின் பாதுகாப்பினால், அவர்களின் நடமாட்ட சுதந்திரம் முற்றாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பொது மக்களை முகாம்களில் இருந்து வெளியேற விடாத அதேவேளை, மனிதாபிமான நடவடிக்கைக் குழுக்கள் மற்றும் ஊடகவியாளர்களையும் முகாம்களுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அரசாங்கம் நிலக்கண்ணி வெடிகளை அகற்றியதன் பின்னர் இடம்பெயர்ந்தவர்கள் மீள குடியமர்த்தப்படுவர் என தெரிவித்து வருகிறது. எனினும், கண்ணி வெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்படுகிறதா என்பது கேள்விக் குறியாக இருக்கிறது என த டைமஸ் தெரிவித்துள்ளது.

தங்கம் விலை ரூ.11 ஆயிரத்தை தாண்டியது

தங்கம் விலை கடந்த மே மாதம் பவுனுக்கு ரூ.11 ஆயிரத்தை கடந்தது. ஜுன் மாதம் 5 ந்தேதி ஒரு பவுன் ரூ.11 ஆயிரத்து 104 ஆக இருந்தது. பின்னர் ஜுன் 6 ந்தேதி திடீரென விலை சரிந்து பவுன் ரூ.10 ஆயிரத்து 896 க்கு விற்கப்பட்டது. அன்று முதல் நேற்று வரை பவுன் விலை ரூ.11 ஆயிரத்தை எட்டவில்லை. ரூ.50 முதல் ரூ.90 க்குள் விலை ஏறி இறங்கிய வண்ணம் இருந்தது. இந்தநிலையில், இன்று ஒரு பவுன் ரூ.11 ஆயிரத்து 8 க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ரூ.1376 ஆக இருந்தது.

பெண்களை பெற்றவர்கள் பாவம் .............!

Wednesday, July 15, 2009

இலங்கையில் முப்படைகளிலும் இருந்து 65 ஆயிரம் பேர் தப்பிச்சென்றுள்ளனர்



இலங்கையில் முப்படைகளிலும் இருந்து 65 ஆயிரம் பேர் தப்பி சென்றுள்ளதாக நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அதன் செயலாளர் சுகந்த கம்லத் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இவர்களில் 2 ஆயிரம் பேர் வரை, தற்போது சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இராணுவத்தில் தமது சேவையை வழங்க மறுப்புத் தெரிவித்த ஆயிரத்து 506 பேர் தற்போது சிறைவைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் வீ ஆர் டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஆனால் புலிகள் இது வரை சண்டைக்கு பயந்து ஓடியது கிடையாது . என்பது இங்கே கவனிகப்பட்வேண்டிய ஒன்றாகும்

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்கிறது

கபினி அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 35 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து மேட்டூர் அணை நீர்மட்டம் கிடு கிடு என உயர்ந்து வருகிறது. கடந்த 13ஆம் தேதி 59.25 அடியாக இருந்து நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 62.82 அடியாக உயர்ந்தது. 4 நாளில் 3 அடி உயர்ந்து உள்ளது.

இன்று எங்கள் இதயத்திற்கு இரண்டம் ஆண்டு நினைவு அஞ்சலி

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நின்றவர் யார் மாபெரும் வீரர் மானம் காத்த நம் பட்டுக்கோட்டை முனால் நகர்மன்ற தலைவர் சு .விசுவநாதன் Bsc அவர்களுடைய இரண்டம் ஆண்டு நினைவு நாள்

இங்கிலாந்து பெண்கள் மேக்-அப் செலவு 5 ஆயிரம் கோடி

இங்கிலாந்து பெண்கள் தங்களை அழகு படுத்திக் கொள்வதில் மிகவும் அக்கரை எடுத்துக் கொள்வார்கள். இதற்காக வித விதமான மேக்-அப் சாதனங்களை வாங்கி குவிப்பது உண்டு. அவர்கள் “மேக்-அப்”புக்காக எவ்வளவு செலவு செய்கிறார்கள்? என்று ஒரு கணிப்பு நடத்தப்பட்டது. 1000 பெண்களில் இந்த கணிப்பை நடத்தினார்கள்.

அதில் இங்கிலாந்து பெண்கள் மாதந்தோறும் 5,500 கோடி அளவுக்கு மேக்-அப் சாதனங்களுக்காக செலவு செய்வது தெரியவந்தது. சராசரியாக ஒவ்வொரு பெண்ணும் தனது மேக்-அப்பையில் 4,700 மதிப்புள்ள மேக்-அப் பொருட்களை வைத்து இருந்தனர்.

16 வயதில் இருந்து 24 வயதுக்கு உட்பட்ட பெண்கள் ரூ.5,500 மதிப்புள்ள மேக்-அப் பொருள்களையும் 25 வய தில் இருந்து 35 வயதுக்கு உட்பட்ட பெண்கள் ரூ.5,700 மதிப்புள்ள மேக்-அப் பொருட்களையும் பையில் வைத்து இருந்தனர்.

மேக்-அப் பொருள் பெண்களுக்கு அத்தியாவசியமானது என்று 62 சதவீதம் பேர் தெரிவித்தனர். 38 சதவீதம் பேர் “லிப்ஸ்டிக்” கண்டிப்பாக தேவை என்றனர்.

37 சதவீதம் பேர் மேக்-அப் இல்லாமல் எங்களால் இருக்கவே முடியாது என்றனர்.

காவலுக்கு கெட்டிக்காரன்கள்:அழிந்து வரும் அவலம்

நாய்களின் இனத்தில் ராஜபாளையம் நாய்களுக்கு என ஒரு தனி மரியாதை உண்டு. அந்த நாய்கள் கம்பீரமாகவும், அழகாகவும் இருக்கும். எஜமானர்களுக்கு விசுவாசமாகவும், காவலுக்கு கெட்டிக்காரனாகவும் அவை திகழ்கின்றன.

விஜயநகர பேரரசின் ஆட்சியின்போது அவை தமிழ்நாட்டுக்கு கொண்டு வரப்பட்டு இனவிருத்தி செய்யப்பட்டதாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக அவற்றின் இனம் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது. எனவே அந்த நாய் இனத்தை காப்பாற்ற தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் ராஜபாளையத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த இனம் உற்பத்தி செய்வது குறித்து கணக்கெடுக்கப்பட்டது. இதன்மூலம் சுத்தமான ராஜபாளையம் இனவகை நாய்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது குறித்து கணக்கெடுத்து பதிவு செய்யப்படும்.

மேலும் இந்த வகை நாய்கள் உற்பத்தி செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்படும். மேலும் ராஜபாளையம் இனவகை நாய்களுக்கான சிறப்பு கண்காட்சிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

‌உ‌யிருட‌ன் இரு‌க்‌கிறா‌ர் ‌பிரபாகர‌ன்: வைகோ




விடுதலை‌ப்பு‌லிக‌ளஇய‌க்க‌ததலைவ‌ரவேலு‌ப்‌பி‌ள்ளை ‌பிரபாகர‌னஉ‌யிருட‌னதா‌னஇரு‌க்‌கிறா‌ரஎ‌ன்று‌ம் இல‌ங்கை‌யி‌ல் ‌‌நி‌ச்சய‌ம் த‌மி‌ழஈழ‌மமல‌ரு‌ம் எ‌ன்று‌ம் ம.‌ி.ு.க. பொது‌சசெயல‌ரவைகேதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

புது‌ச்சே‌ரி அ‌ரியா‌ங்கு‌ப்ப‌த்த‌ி‌லநே‌ற்‌றிரவநடைபெ‌ற்ற ம.‌தி.மு.க. செய‌ல் ‌வீர‌ர்க‌ள் கூ‌ட்ட‌த்த‌ி‌ல் பே‌சிவைகோ, ‌பிரபாக‌ரன் முய‌‌ற்‌சி ‌வீ‌ண் போகாது எ‌ன்று‌ம் உ‌ரிநேர‌த்த‌ி‌ல் அவ‌ர் வருவார் எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

உலக‌ம் முழுவது‌ம் இரு‌க்‌கிற 9 கோடி த‌‌மிழ‌ர்க‌ள், த‌மி‌ழ் ஈழ‌ம் மலர முய‌ற்‌சி எடு‌ப்பா‌ர்க‌ள் எ‌ன்று‌ம் வைகோ தெ‌ரி‌‌வி‌த்தா‌ர்.

இலங்கை தமிழரின் நிலை என்.ராம், சோ, ஜெ. போன்றோருக்கு புரியாது: திருமாவளவன்



இலங்கை தமிழரின் நிலைமை இந்து நாளிதழின் ஆசிரியர் என்.ராம், துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் சோ மற்றும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா போன்றோருக்கு எங்கே புரியப் போகின்றது எனத் தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வேதனைப்பட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளனுக்கு செங்கல்பட்டில் பாராட்டுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் நம் தமிழ் இனம் ஒடுக்கப்பட்டது. அந்த துக்கம் இன்னும் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அதனை எண்ணி பார்க்கும்போது என் இதயம் குமுறுகிறது. தமிழகத்தில் ஆறரை கோடி தமிழர்களாக நாம் இருந்தும் கையாலாகமல், கை கட்டி வேடிக்கை பார்க்கும் கும்பலாக இருக்கின்றோம்.

ஈழத்தில் கடந்த 5 மாதங்களில் சொல்ல முடியாத சொற்களாலும், விமர்சிக்க முடியாத இன அழிப்பை ராஜபக்ச அரசு செய்துள்ளது. யார் காப்பாற்றுவார்கள் என்று நினைத்தோமோ அவர்களே தமிழர்களை கொன்று குவிக்க உதவுகிறார்கள்.

நாம் விளம்பரத்திற்காக போராடவில்லை. உள்ளத்தில் ஏற்பட்ட காயம், கொந்தளிப்புக்காக கடந்த ஜனவரி மாதம் மறைமலை நகரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினோம்.

எம்.ஜி.ஆர். காலத்திற்கு பிறகு அ.தி.மு.க.வை வழி நடத்தும் ஜெயலலிதா, இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு நாளாவது குரல் கொடுத்ததுண்டா? தேர்தல் சமயத்தில் மட்டும் தமிழர்களுக்காக அவர் குரல் கொடுப்பதில் எந்த நியாயமும் இல்லை. இலங்கைத் தமிழர்களின் போர் முடிவுபெறவில்லை.

விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு ஆயுதம் ஏந்தா விடுதலைப் புலிகள். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

ஈழத்தில் இன அழிவிற்கு காரணமான இந்திய அரசே தமிழினத்தின் முதற்பகை: திருச்சி "தமிழ்த் தேசிய அரங்கு" மாநாட்டில் வெங்கடராமன்




தமிழ்த் தேசிய அரங்கு என்ற பெயரில் திருச்சியில் நேற்று முன்தினம் நடைபெற்ற கருத்தரங்கத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன் தலைமை தாங்கி பேசும்போது ஈழத்தில் இன அழிவிற்கு முழு முதற் காரணமான இந்திய அரசே தமிழினத்தின் முதற்பகை என்பதை விளக்கினார்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் திருச்சியில் நேற்று முன்தினம் (12.07.09) நடத்தப்பட்ட ”தமிழ்த் தேசியம் - சிறப்பு மாநாடு” சிறப்பாக நடந்தேறியது. தமிழினத்தின் தேசிய எழுச்சியை ஒரு எழுச்சி நாளாக கடைப்பிடிக்க வேண்டும், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஈழ உணர்வாளர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகளுக்கு குடியுரிமை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

காலை 9.00 மணியளவில் தொடங்கிய நிகழ்வில் முதலில் இடம்பெற்ற ஓவியப் புகைப்படக் கண்காட்சியில் ஈழத்தமிழர் படும் அவலங்களை காட்சிப்படுத்தும் படங்கள் அரங்கம் முழுவதும் வைக்கப்பட்டிருந்தன. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் அதன் தோழமை அமைப்புகள் நடத்திய போராட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

காலை 10.30 மணியளவில் தமிழ்த் தேசிய அரங்கு என்ற பெயரில் கருத்தரங்கம் நடந்தது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியிள் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கி.வெங்கட்ராமன் அவர்கள் இக்கருத்தரங்கிற்குத் தலைமை தாங்கி பேசினார். ஈழத்தில் இன அழிவிற்கு முழு முதற் காரணமான இந்திய அரசே தமிழினத்தின் முதற்பகை என்பதை விளக்கினார்.

பின்னர் ”உலகமயமும் தமிழ்த் தேசியமும்” என்ற தலைப்பில் தோழர் ம.செந்தமிழன் பேசினார். ஈழத்தில் நடந்த இன அழிவிற்கு உலகமய நாடுகள் எப்படி காரணமாக விளங்கின என்பது பற்றியும் உலக நாடுகளின் சதிகள் பற்றியும் அவர் விளக்கினார்.

பிற்பகல் 1.30 மணியளவில் தமிழீழத் திரைப்பட உதவி இயக்குநர்கள் அமைப்பு நடத்திய கருப்புக்குரல் கலை நிகழ்வு நடைபெற்றது. ஓவியர் புகழேந்தி அவர்கள் இந்நிகழ்வை தொடங்கி வைத்தார். பாடலுடன் தொடங்கிய இந்நாடகத்தில் ஓட்டு அரசியல்வாதிகளின் முகத்திரைக் கிழிக்கும் வண்ணம் காட்சியமைப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நாடகத்தை திரு. ஐந்து கோவிலான் இயக்கியிருந்தார். வதை முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த தமிழர்களின் நிலையை காட்சிப்படுத்தியிருந்த விதம் பார்வையாளர்களை துக்கத்தில் ஆழ்த்தியது.

இதன் பின்னர், அரியமங்கலம் இலெட்சுமி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் நிகழ்த்திய கலை நிகழ்ச்சி நடந்தது. புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதிய “சங்கே முழங்கு” பாடலுக்கு மாணவர்கள் நடனமாடினர்.

இந்நிகழ்விற்குப் பின், ஈழத்தில் தமிழின அழிப்புப் போரில் ஈடுபட்டுள்ள இந்திய - சிங்கள கூட்டுப் படையினரைக் கண்டித்து இந்திய இலங்கைக் கொடிகளை எரித்து சிறைக்கு சென்ற தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தோழர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. மொழிப்போர் ஈகி ப.பெரியசாமி அவர்கள் தோழர்களுக்கு பாராட்டுப் பத்திரங்கள் வழங்கி சிறப்பித்தார்.

இதன் பின்னர், தமிழீழப் பிரச்சினை குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு “இப்படிக்கு” இதழின் ஆசிரியர் வீ.ந.சோமசுந்தரம் அவர்கள் தலைமை தாங்கினார். அவரது தலைமையுரையில், கொலைகாரக் கட்சியாக விளங்கும் காங்கிரஸ் கட்சியை பற்றியும் ஈழத்திற்கு இந்தியத் தேசியம் விளைவித்த தீமைகள் பற்றியும் விளக்கவுரையாற்றினார்.

இதன் பின்னர், ”ஈழத்தின் எதிர்காலம்” என்ற தலைப்பில் தோழர் க.அருணபாரதி பேசினார். ”தமிழ்த்தேசியம் என்ற கருத்தியலே ஈழத்திற்கும் தமிழ்நாட்டு விடுதலைக்கும் உதவும் கருத்தியல்” என்பதை சாரமாகக் கொண்டு அவரது பேச்சு அமைந்திருந்தது. “இந்தியமும் ஈழமும்” என்ற தலைப்பில் வழக்கறிஞர் த.பானுமதி அவர்கள் உரைநல்கினார். இந்தியத்தேசிய மாயையிலிருந்து தமிழர்கள் விடுபட்டு தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தைத் தொடங்க வேண்டும் என்பதாக அவரது பேச்சு அமைந்திருந்தது. “ஈழமும் உலகநாடுகளும்” என்ற தலைப்பில் மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் தோழர் கண.குறிஞ்சி அவர்கள் ஈழத்தில் முகாம்களில் தங்கியுள்ள மக்களின் வாழ்நிலையை பற்றியும், உலக நாடுகள் ஈழப்பிரச்சினையில் அக்கறை கொள்ளாதது பற்றியும் கருத்துரையாற்றினார்.

தமிழக இளைஞர் முன்ணனி பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை அவர்கள் தமிழ்த்தேசியமே இனி எதிர்கால வரலாற்றைத் தீர்மானிக்கும் என்று பேசினார். லத்தீன் அமெரிக்க நட்புறவுக் கழகத் தலைவரும், மார்க்சிய எழுத்தாளருமான தோழர் அமரந்தா ஈழப்பிரச்சினையில் தவறான முடிவெடுத்த லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் அது குறித்து நடந்த கலந்துரையாடல்களைப் பற்றி பேசினார்.

சிறப்புரையாக, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ.மணி அவர்கள் உரையாற்றினார். பின்னர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு அவர்கள் தமிழ்த்தேசியம் சாத்தியமே என்ற சாரத்தில் உரை நிகழ்த்தி சிறப்பித்தார்.

மாநாட்டின் நிறைவாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் எழுச்சியுரையாற்றினார். தோழர் வே.க.இலட்சுமணன் நன்றி கூறினார்.

மதுரையில் சீமானின் "நாம் தமிழர்" ஈழப் போராட்டம்



கரை வேட்டிகள் ஈழத்தை மறந்தாலும் கனல் குறையாமல் இன்னும் ஈழ நினைவாகவே இருக்கிறார் சீமான். முள் வேலிக்குள் முடங்கிப்போன மூன்று லட்சம் தமிழர்கள் தன்மானத்துடன் வாழ, சீமான் தனது அடுத்தகட்ட போராட்டத்தை தொடங்கியிருக்கிறார்.
எதிர்வரும் 18 ஆம் தேதி மதுரையில் நாம் தமிழர் என்ற பெய‌ரில் ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டத்தை நடத்துகிறார் சீமான். 18 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு மதுரை ஜான்சிராணி பூங்காவிலிருந்து ஊர்வலம் தொடங்குகிறது. 6 மணிக்கு வடக்குமாசி வீதியும் மேலமாசி வீதியும் சந்திக்கும் இடத்தில் மாபெரும் பொதுக்கூட்டம்.

இயக்குனர் மணிவண்ணன், அருட்தந்தை ஜெகத்கஸ்பர், மருத்துவர் எழிலன், கவிமுழக்கம் சாகுல் ஹமீது இவர்களுடன் சீமானும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.

இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள், கல்வியாளர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் இந்த எழுச்சிமிகு பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். முள் கம்பிக்குள் அடைக்கப்பட்ட தமிழனின் அடிப்படை உ‌ரிமையை பெற்றுத்தர நடத்தப்படும் பொதுக்கூட்டம் இது. நாம் தமிழர் என்பதை நிரூபிக்கும் வேளை இது.

சீமானின் நாம் தமிழர் போராட்டம் வெற்றியடைய வாழ்த்துவோம்.

14 மாவட்டங்களில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

கரூர் அருகே ஆத்தூரில் உள்ள பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ரிசீவிங் டெர்மினலுக்கு கொச்சியில் இருந்து குழாய் மூலம் பெட்ரோல், டீசல் எடுத்து வரப்படுகிறது. அங்கிருந்து டேங்கர் லாரிகள் மூலம் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், காரைக்கால், புதுக்கோட்டை, பெரம்பலூர், விழுப்புரம், கடலூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

நாளொன்றுக்கு 300-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் எரிபொருட்களை ஏற்றிச்செல்கின்றன.

இந்நிலையில், கூலி உயர்வு கேட்டு டேங்கர் லாரி டிரைவர், கிளீனர்கள் நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்காரணமாக பெட்ரோல், டீசல் அனுப்பும் பணி பாதிக்கப்பட்டது. குடோனிலும் சாலையிலும் வரிசையாக நூற்றுக்கணக்கில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

இதுபற்றி டேங்கர் லாரி ஓட்டுனர், கிளீனர் சங்க துணை செயலாளர் ஜெயமுருகன் கூறுகையில், டேங்கர் லாரி டிரைவர்களுக்கு ஒரு கி.மீ.க்கு ரூ.13 கூலி மற்றும் படி அளிக்கப்படுகிறது. மாதம் ரூ.5ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கிறது. சாப்பாடு செலவே ஒரு நாளைக்கு ரூ.100 ஆகிறது. தொலைதூர மாவட்டங்களுக்கு சென்று வர 3 நாட்களுக்கு மேலாகி விடும். எனவே சம்பளத்தை உயர்த்தி தர வேண்டும் என்றார்.

இன்று 2-வது நாளாக வேலை நிறுத்தம் தொடர்கிறது. இதற்கிடையே பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் அதிகாரிகள், டேங்கர் லாரி டிரைவர்களை இன்று பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர். இதில் உடன்பாடு ஏற்படாவிட்டால் ஸ்டிரைக் தொடரும் என கூறப்படுகிறது. ஸ்டிரைக் நீடித்தால் 14 மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

கும்பகோணம் பள்ளி தீ விபத்து: நாளை 5ம் ஆண்டு நினைவு தினம்

பள்ளிக்கு படிக்க சென்றவர்கள் நமக்கு பாடம் கற்பித்தார்கள் இனிமேல் குழந்தைகளை ஆட்டு மந்தை போல் அடைகாதிர்கள் என்று .........!

கும்பகோணம் பள்ளி தீ விபத்து சம்பவத்தின் 5-ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. தீயில் கருகி உயிரிழந்த குழந்தைகளுக்கு மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்படுகிறது.

கும்பகோணம் காசிராமன் தெருவில் இருந்த ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 94 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக இறந்தன. தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்திய இந்த சம்பவத்தின் 5-ம் ஆண்டு நினைவுதினம் நாளை அனுசரிக்கப்படுகிறது.

நாளை காலை 6 மணிக்கு பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர்கள், தங்கள் வீட்டில் படையலிட்டு அஞ்சலி செலுத்துகின்றனர். பின்னர் 6.30 மணிக்கு தீ விபத்து நடந்த பள்ளி முன்பு வைக்கப்பட்டுள்ள குழந்தைகளின் படங்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ¢ச்சி நடக்கிறது.

இதில் குழந்தைகளை இழந்த பெற்றோர், காயமடைந்த மாணவர்கள், அவர்களின் பெற்றோர், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். காலை 10 மணிக்கு தமிழக அரசு சார்பில் நினைவு அஞ்சலி கூட்டம் நடக்கிறது.

கும்பகோணம் பாலக்கரையில் கட்டப்பட்டுள்ள நினைவு மண்டபத்தில் மலர்வளையம் வைத்து மவுன அஞ்சலி கூட்டம் நடக்க உள்ளது. மாலை 5 மணிக்கு 94 அகல் தீபங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று கும்பகோணம் மகாமக குளத்தில் மோட்சதீபம் ஏற்றப்படுகிறது.

எத்தனை பெரியார் வந்தாலும் இவங்கள திருத்தவே முடியாது.... 1000 பேருக்கு விருந்து அளித்து தவளைக்கு திருமணம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மழை வேண்டி தவளை ஜோடிக்கு திருமணம் நடத்தப்பட்டது.

பருவமழை சீசன் தொடங்கிய பிறகும் தமிழகத்தில் மழை பெய்யாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மழை இல்லாமல் வறட்சி நிலவுவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மழை வேண்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. வருண பகவானை குளிர்விக்க சிறப்பு யாகங்கள் நடத்தப்படுகிறது. அரசு வேம்பு திருமணம், கழுதைகள் திருமணம் போன்ற சம்பிரதாய விஷயங்களிலும் மக்கள் கவனம் செலுத்த தொடங்கி விட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள படப்பள்ளி கிராமமக்கள் மழை வேண்டி தவளை திருமணத்தை நடத்தினர். சம்பந்தம் பேசுவது, மாப்பிள்ளை அழைப்பு, பெண் அழைப்பு, ஊர்வலம் என எல்லா சடங்குகளும் மேளதாளம் முழங்க நடந்தது.

பின்னர் படப்பள்ளி ஏரியில் சுபமூகூர்த்த நேரத்தில் மந்திரங்கள், கெட்டிமேளம் முழங்க தவளைக்கும், தவளைக்கும் திருமணத்தை நடத்தினர். இதில் கிராம மக்கள் ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டார் என தனித்தனியாக சீர் வரிசைகளை செய்தனர். இதைத்தொடர்ந்து ஆயிரம் பேருக்கு இனிப்புடன் விருந்து வழங்கப்பட்டது.

சம்பிரதாயங்கள் முடிந்ததும் தவளை ஜோடியை ஊர் பெரியவர்கள் படப்பள்ளி ஏரியில் விடுவித்தனர்.

வட சென்னைக்கு பூகம்ப ஆபத்து அதிகம்:மக்கள் கலக்கம்

சென்னையில் உள்ள புவியியல் ஆராய்ச்சி வல்லுனர்கள் கடந்த சில மாதங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

அவர்கள் சென்னையில் உள்ள புவியியல் அமைப்பை ஆராய்ந்த போது சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

ஒருவேளை சென்னையில் பூகம்பம் ஏற்பட்டால் தென் சென்னையை விட வட சென்னைக்குத்தான் அதிக ஆபத்து இருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கு காரணம் வட சென்னையின் அடிப்பகுதியில் பாறை மற்றும் மணல் நிறைந்து காணப்படுகிறது. இதனால் பூகம்பம் ஏற்படும் போது கட்டிடங்கள் எளிதில் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது.

தென் சென்னையை பொறுத்தவரை பூமியின் அடிப்பகுதி ஓரளவு நல்ல நிலையில் உள்ளது. பூகம்பத்தின் போது பெரிய அளவுக்கு கட்டிடங்கள் சேதம் அடையாது.

தேசிய பேரழிவு மேலான்மை அலுவலக அதிகாரி ஒருவர்,

சென்னை நகரம் மிதமான பூகம்பம் ஏற்படும் பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2002-ம் ஆண்டு நடத்திய ஆய்வில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.

சென்னையை அடுத்த தாம்பரத்தில் கடந்த 1972-ம் ஆண்டு ஜூலை மாதம் 10ந்தேதி அன்று பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 3.9 என்று பதிவாகி உள்ளது.

இதற்கு முன்பு 1807 மற்றும் 1816 ஆண்டுகளில் சென்னையில் 5 ரிக்டர் அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது.

கடந்த 2 ஆண்டுகளாக இந்தோனேஷியாவில் தொடர்ந்து பூகம்பம் மிரட்டி வருகிறது. அந்த பூகம்பம் என்றாவது ஒரு நாள் பெரிய அளவில் ஏற்பட்டால் சுனாமி உருவில் நம் நாட்டுக்கு பலத்த சேதம் ஏற்படும். ஒரு வேளை சென்னையில் நிகழ்ந்தால்... உயிரிழப்பு கடுமையாக இருக்கும்.

எனவே சென்னையில் கட்டிடம் கட்டுவோர் பூகம்ப தடுப்பு முறையைப்பயன்படுத்தி கட்ட வேண்டும் என்று புவியியல் ஆராய்ச் சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இதற்கிடையே சில ஜோதிடர்கள் 22-ந்தேதி சூரிய கிரகணத்தின் போது சுனாமி ஏற்படும் என்று கணித்துள்ளனர்.

இதனால் சென்னை மக்களிடம் ஒருவித கலக்கம் ஏற்பட்டுள்ளது.

கிடுகிடுவென உயரும் பருப்பு-காய்கறி விலை!

சென்னை: இதுக்கு தங்கம் பரவாயில்லை என்று கூறும் அளவுக்கு துவரம் பருப்பு, பயறு வகைகள், காய்கறிகளின் விலை படு வேகமாக உயர்ந்து வருகின்றன. இதனால் நடுத்தர மக்கள் மற்றும் ஏழை, எளியவர்கள் எப்படி சமைப்பது, சாப்பிடுவது என்று பீதியில் மூழ்கியுள்ளனர்.

சமீப காலமாக பருப்பு, பயறு வகைகளின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. ஒரு நாளைக்கு ஒரு ரேட்டில் விற்கின்றன இந்த அத்தியாவசியப் பொருட்கள்.

குறிப்பாக சாம்பார் வைக்க முக்கியமான துவரம் பருப்பு கடுமையான விலை உயர்வைக் கண்டுள்ளது.

துவரம் பருப்பு விளைச்சலில் முன்னணி மாநிலங்களான மராட்டியம், குஜராத், கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை மிகவும் குறைந்து விட்டது. இதனால் அந்த மாநிலங்களில் துவரம் பருப்பு விளைச்சல் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு குறைந்துள்ளது.

ஆந்திரா, கர்நாடகம் மாநிலங்களில் துவரம் பருப்பு விளைச்சல் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய துவரம் பருப்பின் அளவு குறைந்து வருகிறது.

தமிழ்நாட்டிற்கு தினமும் 500 லாரிகளில் துவரம் பருப்பு வந்து கொண்டிருந்த நிலை மாறி தற்போது 100 லாரிகள் மட்டுமே வருகிறது.

இந்தத் துயரம் போதாதென்று சமீபத்தில் டீசல் விலையையும் உயர்த்தியதால் லாரி வாடகை உயர்ந்து விட்டது. இது இப்போது அப்பாவி மக்களின் தலையில் வந்து விடிந்துள்ளது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.65 க்கு விற்பனையானது. தற்போது ரூ.98 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் துவரம் பருப்பு ஒரு கிலோவுக்கு ரூ.6 கூடி உள்ளது.

பர்மா துவரம் பருப்பு 100 கிலோ கொண்ட மூட்டை ரூ.7 ஆயிரத்திற்கு விற்பனையானது, தற்போது ரூ.8 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அதாவது ஒரு கிலோ ரூ.72க்கு விற்பனையான பர்மா துவரம் பருப்பு ரூ.82 ஆக கூடியுள்ளது.

உளுந்து விளையும் ஓவர்..

தமிழ்நாட்டில் உளுத்தம் பருப்பு தேவை ஓட்டல்கள் மற்றும் வீடுகளில் உபயோகத்திற்கு அதிகரித்துள்ளது. பர்மா நாட்டை தவிர இந்தியாவில் உளுத்தம் பருப்பு விளைச்சல் வெகுவாக குறைந்து விட்டது. இதனால் உளுத்தம் பருப்பு விலையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

100 கிலோ கொண்ட உளுத்தம் பருப்பு மூட்டை கடந்த 5 நாட்களுக்கு ரூ.5,800க்கு விற்பனையானது, தற்போது ரூ.7,700 ஆக கூடியுள்ளது. ஒரு கிலோ உளுத்தம் பருப்பு ரூ.60க்கு விற்பனையானது, தற்போது ரூ.70 ஆக உயர்ந்து விட்டது.

பர்மா உளுத்தம் பருப்பு 100 கிலோ கொண்ட மூட்டை ரூ.5 ஆயிரத்து விற்பனையானது ரூ.6 ஆயிரமாக கூடி உள்ளது. கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.52க்கு விற்பனையானது, தற்போது ரூ.62ஆகவும்.

அப்செட்டில் அப்பள வியாபாரிகள்..

உளுத்தம் பருப்பு விலை கடுமையாக உயர்ந்து வருவதால் அதிருப்தி அடைந்துள்ள அப்பளம் தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக் போராட்டத்தை அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்து.

பாசி பருப்பு ஒரு கிலோ ரூ.63 க்கு விற்பனையானது ரூ.68 ஆகவும் அதிகரித்து உள்ளது.

துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு விலை தாறுமாறாக இருப்பதால் கடலைப் பருப்பின் விலையையும் உயர்த்தி விட்டனர் வியாபாரிகள்.

50 கிலோ கொண்ட மூட்டை மும்பை கடலைப்பருப்பு ரூ.1,500க்கு விற்பனையானது, ரூ.1,800ஆக அதிகரித்துள்ளது.

ஒரு கிலோ மும்பை கடலைப்பருப்பு 5 நாட்களுக்கு முன்பு ரூ.32க்கு விற்பனையானது ரூ.38ஆகவும், சாதா ரக கடலைப்பருப்பு ஒரு கிலோ ரூ.30 க்கு விற்பனையானது ரூ.35 ஆகவும் உயர்ந்துள்ளது.

இதுபோதாதென்று மல்லி விலையும் மலைக்க வைக்கிறது.
கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.50க்கு விற்பனையான மல்லி ரூ.60 ஆகவும், முதல் ரக புளி ஒரு கிலோ ரூ.40க்கு விற்பனையானது ரூ.50 ஆகவும், 2-வது ரக புளி ஒரு கிலோ ரூ.30க்கு விற்பனையானது ரூ.40 ஆகவும் உயர்ந்துள்ளது.

மொச்சை விலை கிலோ ரூ. 50...

பயிறு வகைகளும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. பர்மா மொச்சை கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.50க்கு விற்பனையானது தற்போது ரூ.90ஆகவும், காராமணி ஒரு கிலோ ரூ.40க்கு விற்பனையானது ரூ.75ஆகவும், முழு பாசிப்பயிறு ஒரு கிலோ ரூ.30க்கு விற்பனையானது ரூ.50 ஆகவும் கூடி உள்ளது.

குஜராத் மாநிலத்தில் இருந்து அதிக அளவில் வந்து கொண்டிருந்த பூண்டு வரத்து மிகவும் குறைந்து விட்டது. இதனால் முதல் ரக பூண்டு ஒரு கிலோ ரூ.60க்கு விற்பனையானது ரூ.70ஆகவும், 2-வது பூண்டு ஒரு கிலோ ரூ.40க்கு விற்பனையானது ரூ.50 ஆகவும், குண்டு மிளகாய் வத்தல் முதல் ரகம் ஒரு கிலோ ரூ.100க்கு விற்பனையானது ரூ.120 ஆகவும், 2-வது ரகம் ஒரு கிலோ ரூ.80க்கு விற்பனையானது ரூ.100 ஆகவும், நீட்டு மிளகாய் வத்தல் ஒரு கிலோ ரூ.60க்கு விற்பனையானது ரூ.70 ஆகவும் அதிகரித்துள்ளது.

உருளைக் கிழங்கு- சேனை விலையும் ஏறி வருகிறது.

வெள்ளை கொண்டை கடலை ரூ.48-க்கு விற்றது. தற்போது ரூ.54-க்கு விற்கப் படுகிறது.

இதேபோல் நீட்டு மிளகாய் வத்தல் ஒருகிலோ ரூ.60-க்கு விற்பனையானது. இன்று ரூ.70-க்கு விற்கப்படுகிறது.

குண்டு மிளகாய் வத்தல் ஒருகிலோ ரூ.100-ல் இருந்து ரூ.120 ஆகவும் உயர்ந்து விட்டது. இதில் 2-வது ரக குண்டு வத்தல் ரூ.70-ல் இருந்து ரூ.80 ஆக விற்கப்படுகிறது.

கடுகு கிலோவுக்கு 6 ரூபாய் கூடிவிட்டது. இதேபோல் 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட பூண்டு இன்று கிலோ ரூ.45-க்கு விற்பனையாகிறது.

காஸ்ட்லியாகி வரும் காய்கறிகள்..

அதேபோல காய்கறி விலையும் கடுமையாக ஏறி வருகிறது.

கிலோ 8 ரூபாய்க்கு விற்கப்பட்ட உருளைக்கிழங்கு இன்று 17 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சேனைக்கிழக்கு கிலோ 5 ரூபாய்க்கு கிடைத்தது. இப்போது கிலோ 17 ரூபாய்க்கு விலை ஏறிவிட்டது.

கத்தரிக்காய் ரூ.10, வெண்டை ரூ.15, தக்காளி ரூ.10,
முட்டை கோஸ் ரூ.7, கேரட் -ரூ.25, பீட்ரூட் ரூ.10,
சவ்சவ் ரூ.15, முள்ளங்கி ரூ.10, பீன்ஸ் ரூ.20, அவரை ரூ.20, பூசணிக்காய் ரூ.6, இஞ்சி ரூ.50, சாம்பார் வெங்காயம் ரூ.22, பெரிய வெங்காயம் ரூ.12 என விற்கிறது.

கோயம்பேடு மார்க்கெட் விலை நிலவரம் இது. இங்கிருந்து வாங்கிச் சென்று சில்லறைக் கடைகளில் விற்கும்போது விலை இன்னும் கூடுதலாகவே உள்ளது.

இப்படி தாறுமாறாக அத்தனைப் பொருட்களின் விலையும் உயர்ந்திருப்பதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

பெண்கள், இந்த விலை உயர்வைக் கூறி புலம்பி வருவதை காண முடிகிறது.

விலையைக் குறைக்க அரசு ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கருதுகின்றனர்.

இதில், விலை மேலும் உயராலம் என்று வியாபாரிகள் கூறுவது வயிற்றில் புளியைக் கரைப்பதாக உள்ளது.
Tags: tamilnadu, veggies, dal, toor dal, price rise,

Tuesday, July 14, 2009

மரம் வெட்டிகள் வைத்த தீ..பற்றி எரியும் மேற்குத் தொடர்ச்சி மலை!

திண்டுக்கல்: அரிய வகை மூலிகைகளையும், மரங்களையும் திருடும் கும்பல் வைத்த தீயால், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் காட்டுத் தீ பரவியுள்ளது.

இந்த தீயில் சிக்கி அரிய வகை மரங்களும், மூலிகைச் செடிகளும் கருகிப் போய் வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் காமராஜர் அணையை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் விலை உயர்ந்த மரங்களும் அரியவகை மூலிகை செடிகளும் ஏராளமாக உள்ளன. மேலும் இந்த அடர்ந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, மான், காட்டெருமை, பன்றி, கரடி, முயல் போன்ற வன விலங்குகளும் வாழ்ந்து வருகின்றன.

சில மாதங்களுக்கு முன்பு இந்த வனப்பகுதியில் நுழைந்த ஒரு கும்பல் மரம் வெட்டி கடத்தும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதற்கு வசதியாக மரங்களுக்கு தீ வைத்து விடுகிறது. எரிந்த நிலையில் இருக்கும் மரங்களை எளிதாக வெட்டி கடத்தி விடுகிறார்கள். நேற்றும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் மரங்களுக்கு தீ வைத்தனர்.

இதனால் வன விலங்குகள் அழிந்து வருவதுடன் அவை உயிர் தப்பிப்பதற்காக அங் கிருந்து இடம் பெயர்ந்து அருகில் உள்ள மலை கிராமங்களுக்குள் புகுந்து விடுகின்றன.

குறிப்பாக தீ விபத்து ஏற்பட்டுள்ள வனப்பகுதிக்கு அருகாமையில் உள்ள மல்லையாபுரம், பாறைப்பட்டி, ஆத்தூர் போன்ற கிராமங்களுக்கு சென்று விடுகின்றன.

நேற்று இரவு காட்டு பன்றிகளும், காட்டு மாடுகளும் பழனி-செம்பட்டி சாலையில் உள்ள கோழிப்பண்ணை என்ற இடத்தை கடந்து சென்றன. இதனால் அப்பகுதியில் வாழும் பொது மக்கள் பெரும் பீதியிலும், அச்சத்திலும் உள்ளனர்.

தொடர்ந்து எரிந்து வரும் தீயால் வனப்பகுதியில் வளர்ந்துள்ள அரிய வகை மூலிகை செடிகள் அழிந்து வருகின்றன.

மரம் கடத்தும் கும்பலால் அடிக்கடி ஏற்படும் தீ விபத்து குறித்து பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளிடம் புகார் கூறியும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்க போராடினார்கள். ஆனால் கொளுந்து விட்டு எரிந்த தீயை அவர்களால் நெருங்க கூட முடியவில்லை.

சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு தீ எரிவதால் மேலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலைகிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Monday, July 13, 2009

செஞ்சிலுவை சங்கம் தமிழர்களுக்கு செய்யும் பணியை தடுக்க கூடாது: இலங்கைக்கு இங்கிலாந்து எச்சரிக்கை

இலங்கையில் போரின் போது செஞ்சிலுவை சங்கத்தினர் அவர்களுக்குள்ளேயே இருந்து தேவையான உதவிகளை செய்தனர். இப்போதும் தேவையான உதவிகளை செய்து கொடுத்து வருகின்றனர். ஆனால் இலங்கை அரசு செஞ்சிலுவை சங்கத்தினருக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. அதில் பணிகளை குறைத்து கொண்டுள்ளார்கள் என்றும் கூறியுள்ளனர்.

இதற்கு இங்கிலாந்து கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக இங்கிலாந்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அனைத்துலக செஞ்சிலுவை சங்கம் மேற்கொண்டுள்ள பணிகளை மட்டுப்படுத்துமாறு இலங்கை அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதனையடுத்து செஞ்சிலுவை சங்கம் தன்னுடைய பணிகளை குறைக்க பரிசீலனை செய்து வருகிறது.

மோதல் காலப்பகுதியிலும், மோதலுக்கு பிற்பட்ட காலப்பகுதியிலும் அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்தின் பணிகளின் முக்கியத்துவம் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையை பொறுத்த வரையில் மரபு ரீதியான மோதல்கள் முடிவுக்கு வந்திருக்கின்ற போதிலும் அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்தின் பணிகளையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என இதன் மூலம் அர்த்தப்படுத்திக்கொள்ள முடியாது. குறிப்பாக இடம் பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் தொடர்ந்து முக்கியமானதாக இருப்பதால் செஞ்சிலுவை சங்கம் தொடர்ந்து இருப்பது அவசியமானதாகி உள்ளது.

மனிதாபிமான பிரச்சினைகள் தொடர்பாக தொடர்ந்தும் அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்துடன் பேச்சுக்களை நடத்துமாறு இலங்கை அரசை நாம் கேட்டுக்கொள்கின்றோம் என்று கூறப்பட்டுள்ளது.

இலங்கை நிவாரண முகாம்களில் 2.5 லட்சம் தமிழர்களுக்கு 50 டாக்டர்கள்

இலங்கை நிவாரண முகாம்களில் உள்ள 2.5 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்க 50 டாக்டர்கள் மட்டுமே உள்ளனர் என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத் தலைவர் கூறியுள்ளார்.

இலங்கையில் வவுனியா மாவட்டத்தில் வவுனியா மற்றும் செட்டிக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் உள்ள 2.5 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்க 50 டாக்டர்கள் மட்டுமே உள்ளனர். அவர்கள் இரவு பகலாகப் பணியாற்ற வேண்டியுள்ளது.

300 நர்சுகள் இருக்கவேண்டிய நிலையில் 10 பேர் மட்டுமே உள்ளனர். இதனால், டாக்டர்களே நர்சுகளின் பணியையும் செய்ய வேண்டியுள்ளது.

டாக்டர்கள் தங்குவதற்கு சரியான வசதியில்லை. கடந்த வாரம் சுமார் 5 ஆயிரம் பேர் சின்னம்மையால் பாதிக்கப்பட்டனர். நர்சுகளின் உதவி இல்லாமலேயே அவர்கள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலைமை உள்ளது என்று கூறியுள்ளார்.

முகாம்களில் உள்ள தமிழர்களின் சுகாதாரத் தேவைகளை கவனிக்க உயர்நிலைக் குழுவை அமைக்க வேண்டும் என அந்நாட்டு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறக்க கன்னட அமைப்புகள் எதிர்ப்பு

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டப் பிரச்சனைக்குத் தீர்வு காணும்வரை பெங்களூரில் திருவள்ளுவர் சிலையைத் திறக்கக் கூடாது என்று கன்னட அமைப்புகள் எச்சரிக்கை விடுத்து போராட்டத்தில் குதித்துள்ளன.

பெங்களூர் அல்சூர் ஏரிக்கரையில் 18 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் திருவள்ளுவர் சிலையைத் திறக்க கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதை தமிழக முதல்வர் கருணாநிதி ஆகஸ்ட் 9ல் திறந்து வைக்கிறார்.

அதேபோல சென்னை அயனாவரத்தில் கன்னடக் கவிஞர் சர்வக்ஞர் சிலையை கர்நாடக முதல்வர் எதியூரப்பா ஆகஸ்ட் 13ம் தேதி திறந்து வைக்கிறார்.

இந்நிலையில் பெங்களூரில் திருவள்ளுவர் சிலையைத் திறக்க எதிர்ப்புத் தெரிவித்து கன்னட கலாசார சங்கம் மற்றும் ஜெய் கர்நாடகா அமைப்பு ஆகியவவற்றைச் சேர்ந்தவர்கள் மல்லேஸ்வரம் தேவய்யா பூங்கா அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழக அரசு நிறைவேற்றி வரும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறுத்த வேண்டும், இது தொடர்பாக இரு மாநில அரசுகளும் கூட்டு சர்வே நடத்த வேண்டும். அதுவரை பெங்களூரில் திருவள்ளுவர் சிலையைத் திறக்கக் கூடாது.

ஒகேனக்கல் குடிநீர்த் திட்டப் பிரச்னைக்குத் தீர்வு கண்ட பிறகே திருவள்ளுவர் சிலைத் திறக்கலாம் என்று அந்த அமைப்புகள் கூறியுள்ளன.

முதியோர் இல்லத்தில் மனைவியுடன் தங்கியுள்ள டி.என்.சேஷன்

சென்னை: முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன், தனது மனைவியுடன் முதியோர் இல்லத்தில் தங்கியுள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் மீது சாதாரண பொதுமக்களின் கவனத்தையும் திரும்ப வைத்த பெருமைக்குரியவர் டி.என்.சேஷன். அரசியல்வாதிகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டியவர்.

மிகக் கடுமையாக தேர்தல் ஆணைய விதிகளை அமல்படுத்தியவர். இதனால் இவர் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் எதிரியானார்.

சென்னை வந்தபோது அதிமுகவினரால் ஓட ஓட விரட்டப்பட்டவர்.

தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் சேஷன்.

இந்த நிலையில் சேஷனும், அவரது மனைவியும் ஒரு முதியோர் இல்லத்திற்கு இடம் பெயர்ந்துள்ளனர். இந்தத் தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.

சென்னை அருகே பெருங்களத்தூரில் உள்ள குருகுலம் ஒன்றில் இவர்கள் தங்கியுள்ளனர்.

சேஷனுக்கு தனியாக வீடு உள்ள போதிலும், தன் வயதையொத்தவர்களுடன் சேர்ந்து வாழ் விரும்பியே முதியோர் இல்லத்திற்கு இடம் பெயர்ந்துள்ளாராம் சேஷன்.

யுத்தம் முடிவடைந்த போதும் இலங்கையில் அமைதியாக வாழமுடியாத நிலைமை: தமிழகம் சென்ற அகதிகள் விபரிப்பு

இலங்கையில் யுத்தம் முடிவடைந்துவிட்ட போதிலும், இலங்கையில் தமிழர்கள் அமைதியாக வாழ முடியவில்லை என்றும், வவுனியாவில் முகாம்களிலுள்ள சுமார் 3 இலட்சம் தமிழ்மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி இருப்பதாகவும் தனுஷ்கோடிக்கு நேற்று முன்தினம் வந்த இலங்கை தமிழரொருவர் கூறியுள்ளார்.

மன்னார் மாவட்டத்தின் அடம்பனைச் சேர்ந்த மணிவண்ணன் (35 வயது), அவருடைய மனைவி ரெஜினா (30 வயது), அவருடைய பிள்ளைகள் சுடர் (5 வயது), முகிலன் ஆகியோர் சனிக்கிழமை அரிச்சல்முனை கடற்கரைப் பகுதிக்கு வந்துள்ளனர்.

தனுஷ்கோடி பொலிஸ் நிலையத்தில் வைத்து நிருபர்களுக்கு கருத்துத் தெரிவித்த மணிவண்ணன் மன்னாருக்கு அருகில் கொக்காலை என்ற இடத்தில் தமது வீட்டில் இருந்தவேளை ரொக்கெட் தாக்குதலால் தான் காயமடைந்ததாக தெரிவித்திருக்கிறார். அவருடைய இடது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அவரால் நடக்க முடியவில்லை. ஆயினும், மாத்தளன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ள போதிலும், போதிய மருந்துகள் இல்லாமையினால் அவர் முடமாகிவிட்டார்.

தொற்றுநோய்கள் பரவுவதால் இலங்கையின் அகதி முகாம்களில் தமிழ் மக்கள் அதிக எண்ணிக்கையில் மரணமடைந்து வருவதாகவும் வயிற்றோட்டம், வாந்தி, காய்ச்சல் போன்றவற்றால் நூற்றுக்கணக்கான சிறுவர்களும் ஆண்களும் பெண்களும் இறந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் யுத்தம் முடிவடைந்துவிட்டது எனினும் தமிழர்கள் அமைதியாக வாழ முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார். வவுனியாவில் முகாம்களிலுள்ள சுமார் 3 இலட்சம் அகதிகள் அடிப்படை வசதிகள் இன்றி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முகாம்களில் விநியோகிக்கப்படும் தண்ணீரானது சுகாதார குறைபாடுடன் இருப்பதாகவும் இந்த நிலைமையில் பல அகதிகள் வாந்தி, வயிற்றோட்டம், காய்ச்சல் மற்றும் பல நோய்களால் பீடிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அங்கு புதிய முறை மருத்துவச் சிகிச்சை இல்லாததால் சிறுவர்கள் உட்பட பெருந்தொகையானோர் இறந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முகாம்களிலுள்ள குழந்தைகளின் எதிர்காலம் ஆரோக்கியமற்றதாக இருப்பதாக மணிவண்ணன் கூறியதாக "எக்ஸ்பிரஸ்' செய்திச்சேவை நேற்று தெரிவித்துள்ளது. புலனாய்வு அதிகாரிகளின் விசாரணையின் பின்னர் மணிவண்ணனின் குடும்பம் மண்டபம் முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை தனுஷ்கோடிக்கு அகதி ஒருவர் தனியாளாக வந்துள்ளார். ஜெயராஜ் (55 வயது) என்ற இவர் கிளிநொச்சியை சேர்ந்தவர். தனது 20 கிராம் தங்கச் சங்கிலியை அடகுக்காரர்களிடம் கொடுத்து மன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். தனது மனைவியும் இரு பிள்ளைகளும் ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டதாகவும் அதனால் இந்தியாவிற்கு வருவதென தான் முடிவு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

ராஜீவ் காந்தியைக் கொல்ல சதித் திட்டம் தீட்டிய இலங்கை ராணுவம்!

சென்னை: இந்தியா - இலங்கை ஒப்பந்தத்திற்குப் பின்னர் ராஜீவ் காந்தி இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தபோது அவரைக் கொலை செய்ய ராணுவம் திட்டமிட்டிருந்ததாம். இதை இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதி சிரில் ரணதுங்கா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான கட்டுரையை தமிழக அரசியல் இதழ் வெளியிட்டுள்ளது.

பாதுகாப்புத் துறை செயலாளராகவும் சிரில் இருந்துள்ளார். சமாதானத்திலிருந்து யுத்தம்; கிளர்ச்சியிலிருந்து பயங்கரவாதம் (From Peac to war, Insurgency to Terrorism) என்ற புத்தகத்தை சிரில் ரணதுங்க எழுதியுள்ளார்.

அதில், ராஜீவ்காந்தியை இலங்கையில் படுகொலை செய்ய நடந்த சதியில் அவர் தப்பிய விதம் பற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த விவரம்..

இலங்கை அதிபராக இருந்த ஜெயவர்த்தனே, இலங்கைத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கு இந்தியாவின் உதவியை 1987-ம் ஆண்டில் நாடினார். இதையடுத்து இந்தியா- இலங்கை ஒப்பந்தம் ஒன்றை இருநாடுகளும் இணைந்து தயாரித்தன.

அப்போது ஜெயவர்த்தனே, தனது பாதுகாப்பு ஆலோசகராக அவரது மகன் ரவி ஜெயவர்த்தனேவை நியமித்திருந்தார். முப்படைகளுடன் அடிக்கடி ஆலோசனை நடத்தி, ரவி தரும் அறிக்கைகளைப் படித்த பிறகே ஜெயவர்த்தனே எந்த முடிவையும் எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

1987-ம் ஆண்டு ஜூலையில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் ஜெயவர்த்தனேவும், ராஜீவ்காந்தியும் கையெழுத்திட்டனர். அதற்காக ராஜீவ்காந்தி இலங்கைக்குச் சென்றார்.

ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டபோது, சிங்கள ராணுவ வீரரான விஜயமுனி விஜித ரோஹன டி சில்வா, துப்பாக்கியால் ராஜீவ்காந்தியைத் தாக்கினார். அவர் சாதுர்யமாக விலகிக் கொண்டதால் துப்பாக்கியின் பின்புறப் பிடியின் அடியிலிருந்து தப்பினார். இந்தச் சம்பவம் அப்போது உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

இச்சம்பவத்தைப் பலநாடுகள் கண்டித்ததால் ராஜீவ்காந்தியிடம் ஜெயவர்த்தனே மன்னிப்புக் கேட்டு வருத்தமும் தெரிவித்தார். இந்தியா-இலங்கை ஒப்பந்தத்திற்கு இச்சம்பவத்தால் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக ராஜீவ்காந்தி இதைப் பெரிதுபடுத்தவில்லை.

ஆனால், ராணுவ அணிவகுப்புபின்போது அவரை சுட்டுக் கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்தது இப்போது தெரிய வந்துள்ளது.

ராஜீவ்காந்திக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை தரும்போது, ராணுவத்தினர் வைத்திருக்கும் துப்பாக்கிகளில் குண்டுகள் இருக்கக் கூடாது. ராணுவத்தினர் குண்டுகள் இல்லாத துப்பாக்கிகளை ஏந்தியவாறுதான் அணிவகுப்பில் பங்கேற்க வேண்டும் என்று பாதுகாப்பு ஆலோசகர் ரவி ஜெயவர்த்தனே தனது தந்தையிடம் கேட்டுக்கொண்டார்.

அதிபர் ஜெயவர்த்தனே இதை ஏற்றுக்கொண்ட போதிலும் அப்போதைய ராணுவத் தளபதியாக இருந்த லெப்டினெட் ஜெனரல் டி.ஜே.வீரதுங்கா இதை ஏற்காமல் எதிர்ப்புத் தெரிவித்தார்.

துப்பாக்கியிலிருந்து குண்டுகளை அகற்றுவது படைவீரர்களின் மனநிலையைப் பாதிக்கும். படைவீரர்களின் மீதான நம்பிக்கையைக் குறைத்துவிடும் என்று வீரதுங்கா தெரிவித்ததோடு, குண்டுகளை அகற்ற கடுமையாக எதிர்ப்பும் தெரிவித்தார். ஆனால் ரவி ஜெயவர்த்தனேவின் ஆலோசனைப்படி குண்டுகள் அகற்றப்பட்ட துப்பாக்கியை அணிவகுப்பு மரியாதையின் போது பயன்படுத்தினர்.

துப்பாக்கியிலிருந்து குண்டுகள் அகற்றப்பட்டதால்தான், ரோஹன டி.சில்வா வேறுவழியின்றி துப்பாக்கி பிடியால் ராஜீவ்காந்தியைத் தாக்கும் சம்பவத்தை நிகழ்த்தினார். இந்த அணிவகுப்பின் போது, துப்பாக்கியில் தோட்டாக்கள் இருந்திருந்தால், அந்த ராணுவ வீரர் ராஜீவ்காந்தியை சுட்டுக்கொன்றிருப்பார் என்பதை இவரது புத்தகம் மறைமுகமாக விளக்குகிறது.

ரவி ஜெயவர்த்தனே இதுபோன்ற ஆலோசனையை வழங்கியிருக்காவிட்டால், ராஜீவ்காந்தி இலங்கையில் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம். அல்லது துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்திருக்கலாம். இப்படிப்பட்ட ஆலோசனையை ரவி வழங்கியதற்கு கூறிய காரணம், எகிப்து நாட்டின் அதிபர் அன்வர் சதாத் ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்கையில்தான் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதுதான் என்றும் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் சிரில்.

இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் பேசிய வெளியீட்டாளர் விஜிதயாப்பா, ராஜீவ் காந்தியை துப்பாக்கியின் பிடியால் தாக்கிய ராணுவ வீரன், முக்கியமான சம்பவத்தை நாளை நிகழ்த்த உள்ளேன். ஆகவே வீட்டிற்கு உயிருடன் திரும்பி வராமல் இருக்கலாம் என்று தனது நண்பனிடம் ஏற்கெனவே கூறியுள்ளான் என்ற தகவலையும் வெளியிட்டார்.

அதாவது ராஜீவ்காந்தியை கொல்வதற்கு சிங்களர்கள் தீட்டியிட்டிருந்த திட்டத்திலிருந்து அவர் தப்பிவிட்டார். ராஜீவ் காந்தி மீது விடுதலைப்புலிகளைப் போலவே, சிங்களர்களும் கோபமாகவே இருந்திருக்கிறார்கள்.

இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பியதாலும், அவர்கள் தமிழ்ப்பெண்களை கற்பழித்ததாலும் ராஜீவ்காந்தியை விடுதலைப்புலிகள் ‘துன்பியல்’ சம்பவத்திற்கு ஆட்படுத்தினர். ஆனால், சிங்களர்கள், ராஜீவ்காந்தி மீது கொண்டிருந்தது கோபமா? அல்லது சர்வதேச சதிகார சக்திகளின் தூண்டுதலா? இதைப்பற்றி இந்தியா இப்போது சிந்தித்தாலும் தவறில்லை.

நாட்டின் எதிர்கால பாதுகாப்புக்கு அது பயன்படும் என்ற கருத்தும் இலங்கையிலேயே ஒரு தரப்பினரிடம் இருந்து வெளி வருகிறது.

நிறைந்தது கபினி..காவிரியில் வேறு வழியின்றி நீரை திறந்த கர்நாடகம்


மைசூர்: கேரளாவின் வயநாடு பகுதியில் பெய்து வரும் கனமழையால் கர்நாடகத்தின் கபினி அணை நிரம்பிவிட்டது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி காவிரியில் கர்நாடகம் நீரைத் திறந்துவிட்டு்ள்ளது. இந்த நீர் இன்று மேட்டூர் அணைக்கு வந்தடைந்தது.

கபினி அணை தனது முழுக் கொள்ளவை எட்டிவிட்டதையடுத்து வேறு வழியில்லாமல் நீரைத் திறந்துவிட்டுள்ளது கர்நாடகம். வினாடிக்கு சுமார் 18,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் இந்த நீர் ஒகேனக்கல் அருகே உள்ள பிலிகுண்டு பகுதியை நேற்று காலை தொட்டது.

இதையடுத்து இன்று பிற்பகலில் நீர் மேட்டூர் அணையை எட்டியது. இந்த நீர் வரத்து காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளின் குறுவை சாகுபடிக்கு நீர் திறந்துவிடப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

அதே போல மைசூர் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அங்கிருந்தும் நீர் திறந்துவிடப்படும் வாய்ப்பு அதிகமாகியுள்ளது.

இப்போது மேட்டூர் அணையில் 59.7 அடி நீர் உள்ளது. இப்போது அணைக்கு நீர் வரத்து 3,157 கன அடியாக உயர்ந்துள்ளது. இதன் மொத்தக் கொள்ளவு 120 அடியாகும். கடந்த மாதத்தில் ட்டூருக்கு கர்நாடகம் 10.16 டிஎம்சி அடி நீரை தந்திருக்க வேண்டும். ஆனால், 6 டிஎம்சி அடி தான் நீரை வழங்கியது.

இப்போது தனது அணை நிரம்பிவிட்டதால் அதன் பாதுகாப்பு கருதி உபரி நீரை திறந்துவிட்டுள்ளது.

Sunday, July 12, 2009

யாருக்கு தூதுவர்களாக செயற்படுகின்றன தமிழ்நாட்டு ஊடகங்கள்: 'தினமணி' சாடல்



சிறிலங்கா அரசு மகிழ்ச்சியாகவும் நேர்த்தியாகவும் முகாம்களில் சகல வசதிகளுடன் பராமரிக்கின்றது என்று நற்சான்றிதழ் கொடுப்பவர்கள் யார் காதில் பூ சுற்ற நினைக்கிறார்கள்? யாருக்கு தூதுவர்களாகச் செயற்படுகிறார்கள்? என 'தினமணி' நாளேடு சாடியுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'தினமணி' நாளேட்டில் இன்று சனிக்கிழமை வெளிவந்த ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சொந்த மண்ணில் அகதிகளாக, உறவுகள் இருந்தும் அநாதைகளாக, உரிமைகள் இருந்தும் அடிமைகளாக கம்பி வேலிகளாலும், கழுகுப் பார்வை பார்க்கும் துப்பாக்கி ஏந்திய இராணுவ வீரர்களாலும் ஆட்டு மந்தையைப்போல இலங்கையிலுள்ள முகாம்களில் அடைபட்டு அல்லல்படும் ஏறத்தாழ மூன்று லட்சம் பேர்களின் பரிதாப நிலைக்காக நாம் இரத்தக் கண்ணீர் வடிப்பது, அவர்கள் தமிழர்கள் என்பதற்காக மட்டுமல்ல, அவர்களும் மனிதர்கள் என்பதால்தான்.

எந்தவொரு நாட்டிலும், எந்தவொரு இனத்திற்கும் இப்படியொரு நிலைமை ஏற்பட்டால் அவர்களுக்காகக் குரலெழுப்பவும், அவர்களது உணர்வுகளைப் பிரதிபலிக்கவும் நமக்குக் கற்றுத் தந்தவர்கள் அன்னிய நாட்டுப் போராளிகளோ, மேதாவிகளோ அல்ல. நமது தேசப்பிதா மகாத்மா காந்தி!

அங்கே அடுத்த வேளைச் சாப்பாடு கிடக்கட்டும், வறண்டுபோன தொண்டையின் தாகம் தீர்க்கத் தண்ணீர் கூடக் கிடைக்காமல், இயற்கையின் அழைப்பை எதிர்கொள்ள இடமில்லாமல், இரணத்தின் வேதனையிலிருந்து நிவாரணம் பெற வைத்திய வசதி பெற முடியாமல் தவிக்கும் மூன்று லட்சம் பேர்களும் ஆறு அகதிகள் முகாமில் அடைந்து கிடக்கிறார்கள். அவர்களது நிலைக்குப் பரிதாபப்படாமல், இந்தியாவிலுள்ள அகதிகள் முகாம்களைவிட நேர்த்தியாகவும், வசதியாகவும் இலங்கை அரசு அந்த முகாம்களை நிர்வகிக்கிறது என்று நற்சான்றிதழ் வழங்கத் தமிழக ஊடகங்களே தயாராகிறதே, அதுதான் விசித்திரமாக இருக்கிறது.

மூன்று லட்சம் பேர். ஆறு முகாம்களில் - சுமார் 85,000 குடும்பங்கள் தங்கள் இருப்பிடங்களை இழந்து கையறு நிலையில். இவர்களை செல்வச் செழிப்பான அமெரிக்கா போன்ற வளர்ச்சி பெற்ற நாடுகளால்கூட வசதியாகப் பராமரிக்க முடியாதே, அப்படி இருக்கும்போது, இந்த அகதிகளுக்கு உண்ண உணவும், நோய்க்கு மருந்தும் கொடுக்க வழியில்லாமல் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளிடம் கையேந்தும் இலங்கை அரசு மகிழ்ச்சியாகவும், நேர்த்தியாகவும் முகாம்களில் சகல வசதிகளுடன் பராமரிக்கிறது என்று நற்சான்றிதழ் கொடுப்பவர்கள் யார் காதில் பூ சுற்ற நினைக்கிறார்கள்? யாருக்குத் தூதுவர்களாகச் செயல்படுகிறார்கள்?

பிரபல பத்திரிகையாளர்களை அழைத்துச் சென்று அவர்கள் மூலம் தனது கபட நாடகங்களுக்கு, உலக அரங்கில் அங்கீகாரம் தேடும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டிருக்கிறது என்பதும், அதற்கு நம்மவர்கள் சிலரே கூடத் துணை போகிறார்கள் என்பதும் ஒருபுறம் இருக்கட்டும். அங்கே தமிழ் ஈழ அகதிகள் முகாம்களின் உண்மை நிலைதான் என்ன?

வட இலங்கையில் வவுனியா பகுதியில் காடுகள் அழிக்கப்பட்டு ஆறு முகாம்களில் கம்பி வேலிகளுக்குள்ளே இந்த அகதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். சுற்றிலும் ஆயுதம் ஏந்திய இராணுவத்தினர் இவர்கள் வெளியில் சென்றுவிடாமல் பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். சுமார் 10,000-க்கும் அதிகமான தற்காலிகக் கூடாரங்கள் அமைக்கப்பட்டு இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் அதில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

முறையான கழிப்பறை வசதிகள் கிடையாது. குடிக்கவும் குளிக்கவும் தண்ணீர் வசதி கிடையாது. வயிறு நிறைய உண்ண உணவு கிடையாது. மருத்துவ வசதியும் முழுமையாகக் கிடையாது. 13,000 அகதிகள் இருக்கும் முகாமில் எட்டு மருத்துவர்களும், நான்கு செவிலியர்களும், போராட்ட பூமியிலிருந்து காயங்களுடன் கதறித் துடிக்கும் அகதிகளுக்கு என்னதான் மருத்துவ உதவி அளித்துவிட முடியும்?

உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாம் என்று ஐக்கிய நாடுகள் சபையால் வர்ணிக்கப்படும் செட்டிக்குளம் முகாமின் நிலைமை அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறுவது நாமல்ல, சரத் நந்த சில்வா என்கிற இலங்கை உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி. அவர் மட்டுமல்ல, ஐக்கிய நாடுகள் சபை செயலர் பான்கி-மூன் இதையே வருத்தப்பட்டுத் தெரிவித்திருக்கிறார்.

இலங்கை இராணுவத்தைவிடக் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் இந்திய இராணுவம் திறமை வாய்ந்தது. இந்திய இராணுவத்தின் உதவியுடன் அடுத்த ஒரே மாதத்தில் கண்ணிவெடிகளை அகற்றவும், அகதிகள் முகாம்களைப் பராமரிக்கவும் இலங்கை அரசு முன்வர வேண்டும். அதற்கு இந்திய அரசு வற்புறுத்தவும் வேண்டும்.

முகாம்களில் அடைந்து கிடப்பவர்கள் அவரவர் இருப்பிடங்களுக்குத் திரும்பாதவரை, நாளும் பொழுதும் செத்து மடியும் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம்தான் இருக்கும். இராணுவம் முற்றிலுமாக அகன்று, பொது நிர்வாகம் செயல்பட்டால்தான் சகஜ வாழ்க்கை தமிழர்கள் வாழும் பகுதிகளில் திரும்பப் போகிறது. அதற்குப் பிறகுதான், ஈழத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு என்ன என்பதையும், அரசியல் தீர்வு எப்படி அமைய வேண்டும் என்பதையும் யோசிக்க முடியும். இதுதான் யதார்த்த உண்மை.

நீங்கள் நிதி உதவியும், பொருள் உதவியும் தாருங்கள். நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்கிற இலங்கை அரசின் உள்நோக்கத்தைப் புரிந்துகொண்டு, அவதிப்படும் அகதிகளுக்கு உதவ இந்திய அரசு முன்வந்தால் மட்டுமே, அவர்கள் வாழ்வில் நம்பிக்கை மலரப் போகிறது. இனியும் நாம் வாளாவிருந்தால் நியாயமல்ல!

நம்மை வழி நடத்துவது "காந்தி'தானே? மகாத்மா காந்திதானே?" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.