Monday, July 13, 2009

முதியோர் இல்லத்தில் மனைவியுடன் தங்கியுள்ள டி.என்.சேஷன்

சென்னை: முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன், தனது மனைவியுடன் முதியோர் இல்லத்தில் தங்கியுள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் மீது சாதாரண பொதுமக்களின் கவனத்தையும் திரும்ப வைத்த பெருமைக்குரியவர் டி.என்.சேஷன். அரசியல்வாதிகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டியவர்.

மிகக் கடுமையாக தேர்தல் ஆணைய விதிகளை அமல்படுத்தியவர். இதனால் இவர் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் எதிரியானார்.

சென்னை வந்தபோது அதிமுகவினரால் ஓட ஓட விரட்டப்பட்டவர்.

தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் சேஷன்.

இந்த நிலையில் சேஷனும், அவரது மனைவியும் ஒரு முதியோர் இல்லத்திற்கு இடம் பெயர்ந்துள்ளனர். இந்தத் தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.

சென்னை அருகே பெருங்களத்தூரில் உள்ள குருகுலம் ஒன்றில் இவர்கள் தங்கியுள்ளனர்.

சேஷனுக்கு தனியாக வீடு உள்ள போதிலும், தன் வயதையொத்தவர்களுடன் சேர்ந்து வாழ் விரும்பியே முதியோர் இல்லத்திற்கு இடம் பெயர்ந்துள்ளாராம் சேஷன்.

No comments:

Post a Comment