Wednesday, July 15, 2009

மதுரையில் சீமானின் "நாம் தமிழர்" ஈழப் போராட்டம்



கரை வேட்டிகள் ஈழத்தை மறந்தாலும் கனல் குறையாமல் இன்னும் ஈழ நினைவாகவே இருக்கிறார் சீமான். முள் வேலிக்குள் முடங்கிப்போன மூன்று லட்சம் தமிழர்கள் தன்மானத்துடன் வாழ, சீமான் தனது அடுத்தகட்ட போராட்டத்தை தொடங்கியிருக்கிறார்.
எதிர்வரும் 18 ஆம் தேதி மதுரையில் நாம் தமிழர் என்ற பெய‌ரில் ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டத்தை நடத்துகிறார் சீமான். 18 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு மதுரை ஜான்சிராணி பூங்காவிலிருந்து ஊர்வலம் தொடங்குகிறது. 6 மணிக்கு வடக்குமாசி வீதியும் மேலமாசி வீதியும் சந்திக்கும் இடத்தில் மாபெரும் பொதுக்கூட்டம்.

இயக்குனர் மணிவண்ணன், அருட்தந்தை ஜெகத்கஸ்பர், மருத்துவர் எழிலன், கவிமுழக்கம் சாகுல் ஹமீது இவர்களுடன் சீமானும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.

இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள், கல்வியாளர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் இந்த எழுச்சிமிகு பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். முள் கம்பிக்குள் அடைக்கப்பட்ட தமிழனின் அடிப்படை உ‌ரிமையை பெற்றுத்தர நடத்தப்படும் பொதுக்கூட்டம் இது. நாம் தமிழர் என்பதை நிரூபிக்கும் வேளை இது.

சீமானின் நாம் தமிழர் போராட்டம் வெற்றியடைய வாழ்த்துவோம்.

No comments:

Post a Comment