Wednesday, July 8, 2009

யுனெஸ்கோ குழுவின் தலைவராக தமிழர் நியமனம்

சர்வதேச அளவில் எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழலுக்கான எதிர்காலத் திட்டங்கள் தயாரிப்பதற்காக, யுனெஸ்கோ சார்பில் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.


இந்த குழுவின் தலைவராக தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் உறுப்பினர் செயலர் எஸ். வின்சென்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த குழு பல்வேறு நாடுகளில் எரிசக்தி, சுற்றுச்சூழலில் கொள்கைகளை வகுப்பதற்கான பரிந்துரைகளை அளிப்பது, ஆராய்ச்சிகள் மேற்கொள்வது போன்ற பணிகளை மேற்கொள்ளும்.

தவிர, உலக நாடுகளில் எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழலில் உள்ள கொள்கைகளை ஆய்வு செய்து, அதில் சரியான, மோசமான கொள்கைகள் பற்றி ஆராயும். மேலும், பொதுமக்களிடம் கருத்து கணிப்பையும் இக்குழு நடத்தும்.

No comments:

Post a Comment