Saturday, September 26, 2009

தென்னிந்தியர்களே இந்தியாவின் பூர்வீக குடிகள்- வட இந்தியர்கள் பின்னால் வந்தவர்கள்

ஹைதராபாத்: இந்தியாவின் பூர்வீக குடிகள் தென்னிந்தியர்களே. தென்னிந்தியாவில்தான் முதல் முறையாக இந்தியர்கள் உருவானார்கள். அதன் பின்னரே வட இந்தியாவில் மக்கள் குடியேறத் தொடங்கினர் என்று புதிய மரபியல் ரீதியிலான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இந்திய மூதாதையர்கள் குறித்த ஆய்வு ஒன்றை ஹைதராபாத்தில் உள்ள மூ்லக்கூறு மற்றும் மூலக்கூறு உயிரியல் ஆய்வு மையமும், அமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவப் பள்ளி, ஹார்வர்ட் பொது சுகாதார கல்லூரி, ஹார்வர்ட் பிராட் கழகம், மாசசூசட்ஸ் தொழில்நுட்பக் கழகம் (எம்.ஐ.டி) ஆகியவை இணைந்து நடத்தி வருகின்றன.

இந்த ஆய்வு குறித்த மிகப் புதிய, அதேசமயம், பல வித்தியாசமான தகவல்களை இவர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள் நேச்சர் இதழில் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஹைதராபாத் மையத்தின் முன்னாள் இயக்குநரும், இந்த ஆய்வறிக்கையின் இணை ஆசிரியருமான லால்ஜி சிங் மற்றும் ஹைதராபாத் மையத்தின் மூத்த விஞ்ஞானியான குமாரசாமி தங்கராஜனும் கூறுகையில், இது வரலாற்றை திருத்தி எழுத உதவும் ஆய்வாகும்.

13 மாநிலங்களைச் சேர்ந்த 25 வித்தியாசமான இனக் குழுக்களைச் சேர்ந்த 132 பேரின் ஜீனோம்களிலிருந்து 5 லட்சம் மரபனு குறியீடுகளை ஆய்வு செய்தோம். அனைவருமே இந்தியாவின் பிரதான ஆறு மொழிகளைப் பேசும் இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

பழங்குடியினர், மேல் ஜாதி, கீழ் ஜாதி என அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய வகையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வுகளின்படி, இந்தியாவில், மிகவும் தொன்மையான 2 பிரிவினர் இருந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.

இந்த தொன்மையான பிரிவினரை, தொன்மையான வட இந்திய மூதாதையர் என்றும் தொன்மையான தென்இந்திய மூதாதையர் என்றும் கூறலாம். தற்போது இந்தியாவில் உள்ள 4,635 மக்கள் இனங்கள் அனைத்தும் இந்த 2 தொன்மையான மூதாதையர்களிடம் இருந்து தனித்தனியாகவோ அல்லது இரண்டும் கலப்புற்றோ தோன்றி இருக்கலாம்.

வட இந்தியர்கள் ஐரோப்பியர்களுடன் ஒத்துப் போகிறார்கள்...

இந்த இரு தொன்மையான இந்தியர்களில், தொன்மையான வட இந்தியர்கள் தற்போதைய மேற்கு ஆசிய மற்றும் ஐரோப்பிய மக்கள் இனத்தை மரபியல் ரீதியாக 40 முதல் 80 சதவீதம் வரை ஒத்து இருக்கிறார்கள்.

ஆனால் தொன்மையான தென் இந்தியர்கள் உலகில் எந்த இன மக்களோடும் மரபியல் ரீதியான தொடர்பு அற்றவர்களாக இருக்கிறார்கள். இதன் மூலம் தென் இந்தியர்கள்தான், தொன்மையான இந்தியாவின் முதல் குடிமக்கள் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.

அதேபோல, அந்தமானில் வசிக்கும் மிகப் பழங்குடியினரான `ஓன்கே' என்று அழைக்கப்படும் பிரிவினர் தொன்மையான வட இந்தியர்கள் மற்றும் தென் இந்தியர்களிடம் இருந்து தனித்து காணப்பட்டாலும், தொன்மையான தென் இந்தியர்களோடு சிறிது இணக்கமாக உள்ளனர் என்பது இவர்களுடைய ஆய்வின் முடிவு ஆகும்.

இதன் மூலம், தொன்மையான தென் இந்தியர்களும், அந்தமான் பழங்குடியின மக்களும் ஒரே மூதாதையரிடம் இருந்து பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து இருக்கக் கூடும் என்பதும் இந்த ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

அந்தமான் பழங்குடியினர்தான் முதன் முதலில் ஆதிமனிதன் தோன்றிய இடமான ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து தெற்கு கடற்கரை வழியாக சுமார் 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வெளியேறிவர்கள். அதே காலகட்டத்தில்தான் தொன்மையான தென்னிந்தியர்களும் உருவாகியுள்ளனர்.

அதேபோல 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் வட இந்தியர்கள் உருவெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

பழங்காலத்தில் இருந்தே இந்தியாவில் ஒவ்வொரு மனித இனப்பிரிவினரும் அவரவர் இனத்துக்குள்ளேயே திருமணம் செய்து கொள்வதாலும், தமக்கே உரிய கலாசார பழக்க வழங்கங்களை ஏற்படுத்திக் கொண்டதாலும், ஒவ்வொரு பிரிவினரும் மரபியல் மற்றும் கலாசார ரீதியாக தனித்தன்மை கொண்டு உள்ளனர்.

இதன் மூலம், பழங்காலத்தில் இருந்தே இந்திய மக்கள் [^] இனம் தனித்தனி குழுக்களாக பிரிந்து கலப்பின்றி தனித்தன்மையுடன் வாழ்ந்து இருக்கிறார்கள் என்பது தெரிய வந்து உள்ளது. இந்த பிரிவினைதான் கலாசார பரிமாணங்களின் விளைவாக தற்காலத்தில் சாதி பாகுபாடாக உருவெடுத்துள்ளது.

பழங்காலத்தில் இருந்தே ஒவ்வொரு இனத்தினரும் தங்களுக்குள்ளேயே திருமணம் [^] செய்து கொள்வதால் ஒவ்வொரு இனத்தவருக்கும் ஏற்படும் வெவ்வேறு மரபியல் மாற்றங்கள் அவரவர் சந்ததிகளின் வழியாக அந்தந்த இனத்தினரிடையே நிலைபெற்று, அதன் விளைவாக மரபியல் ரீதியிலான பல நோய்கள் வர வாய்ப்பு உள்ளது என்ற உண்மையையும் எடுத்துரைத்து இருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 70 சதவீத இந்தியர்கள் [^] மரபியல் ரீதியிலான நோய்களைக் கொண்டவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்சி இனத்தவரிடையே மார்பகப் புற்றுநோய் அதிகம் உள்ளது. திருப்பதி, சித்தூர் பகுதிகளில் மோட்டார் நியூரான் நோய்கள் அதிகம் உள்ளன. மத்திய இந்தியாவில் ரத்த சோகை அதிகம் உள்ளது. வட கிழக்கிலும் இதே பிரச்சினை உள்ளது.

ஆப்பிரிக்கர்களின் இடப் பெயர்ச்சி...

1 லட்சத்து 35 ஆயிரம் மற்றும் 75 ஆயிரம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கிழக்கு ஆப்பிரிக்காவில் மிகப் பெரிய பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மாலவி ஏரி வற்றிப் போனதால் பெரும் பஞ்சம் ஏற்பட்டு ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட 95 சதவீதம் பேர் அங்கிருந்து இடம் பெயர்ந்துள்ளனர்.

அவர்கள் அந்தமான் நிக்கோபார் வழியாகத்தான் இடம் பெயர்ந்து சென்றுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. அதாவது அந்தமான், நிக்கோபார் மற்றும் தென்னிந்தியாவின் மூலமாக அவர்கள் பல்வேறு நாடுகளுக்கும் இடம் பெயர்ந்து சென்றுள்ளனர் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இந்தியர்களின் மூதாதையர்கள் குறித்த இந்த ஆய்வின் புதிய முடிவுகள் வரலாற்றை மாற்றி எழுதக் கூடியவை என்பதால் விஞ்ஞானிகளின் முக்கிய விவாதப் பொருளாகியிருக்கிறது.

Thursday, September 24, 2009

கார்களுக்கு அடியில் கதிகலங்கும் பயணம்: லிம்போ ஸ்கேட்டிங்கில் கர்நாடகச் சிறுவன் சாதனை

rohan-ajit-kokane.jpg

ர்நாடக மாநிலம் பெல்காமைச் சேர்ந்தவன் ஒன்பது வயது ரோஹன் அஜீத் கோகனே. இந்தியாவில் தற்போது பிரபலமடைந்து வரும் லிம்போ ஸ்கேட்டிங்கில் புது சாதனை படைத்திருக்கிறது இந்த வாண்டு.

வரிசையாக நிற்கவைக்கப்பட்ட மூன்று கார்களுக்கு அடியில் லிம்போ ஸ்கேட்டிங் மூலம் தரைமட்டத்திற்கு குனிந்து, பயணித்து ஒரு கீறல் இல்லாமல் வெளியே வந்திருக்கிறான் ரோஹன்.

எட்டு இன்ச் இடைவெளி கிடைத்தாலே புயலென புகுந்து வெளியேறிவிடும் இவனுக்கு கார்களுக்கு அடியில் பறந்து செல்வது பெரிய சாதனையாகத் தெரியவில்லை. உலக சாதனை அமைப்பு இவனுடையத் திறமையை ப் பாராட்டி பதக்கமும் சான்றிதழும் தந்திருப்பதுடன் கின்னஸ் நிறுவனத்துக்கும் பரிந்துரைத்திருக்கிறத.

கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன்பு ஸ்கேட்டிங்கை பொழுதுபோக்காக தொடங்கிய அஜீத் தற்போது அதை தினசரி நான்கு மணி நேரம் பயிற்சி மேற்கொள்ளும் அளவுக்கு தீவிர விளையாட்டாக மாற்றிக் கொண்டிருக்கிறான்.

உள்ளூர் பயிற்சியாளர் சூர்யகாந்த் ஹிண்டல்கெல்கர் ரோஹனின் அசாத்திய திறமையைக் கண்டு அவனை ஊக்கப்படுத்தியிருக்கிறார்.

“நான் 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி அளித்திருக்கிறேன். ஆனால் ரோஹனின் உடலின் வளையும் தன்மையும், அதை அவன் கட்டுப்படுத்தும் பாங்கும் ஆச்சரியப்படுத்துகிறது. இத்துறையில் அவன் மிகப் பெரிய சாதனைகளை செய்வான் என நம்பலாம்” என்கிறார்.

தரைமட்டத்திற்கு உடலை வளைத்து ஸ்கேட்டிங் செய்வது லிம்போ ஸ்கேட்டிங் எனப்படுகிறது. இதில் அனிகெட் சிண்டெக் என்ற ஆறு வயது சிறுவன் கடந்த வருடம் நடந்த சாதனை நிகழ்வொன்றில் 53 நொடிகளில், 81 கார்களின் அடியில் (தரைமட்டத்திற்குக் குனியாமல்) ஸ்கேட்டிங் செய்து அசத்தியதுதான் இதுவரையிலான உலகச் சாதனை. ரோஹனும் சாதிப்பான் விரைவில்.

Wednesday, September 23, 2009

அறிவியல் அதிசயம் செத்தவர்களை பிழைக்க வைக்கும் ஆராய்ச்சி

மனிதன் தனது புத்திசாலித்தனம் மற்றும் புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் இயற்கையை வென்று விட துடிக்கிறான். இறைவனின் படைப்புகளில் உள்ள இயற்கை ரகசியங்களை அறிந்து கொள்ள கடும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறான். அந்த ஆராய்ச்சிகளின் பலனாக பல உயிர்காக்கும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மனித இனத்தை நோய்த் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இத்தனை இருந்தாலும் ஆசை யாரைத்தான் விட்டது. மரணம் இல்லா பெருவாழ்வு காண மனிதன் ஆசைப்படுகிறான். இந்த உலக வாழ்க்கையிலும் அதன் சுகங்களிலும் நவீனங்களிலும் முழ்கித் திளைத்துப்போன அவன் நீண்ட காலம் வாழ விரும்புகிறான்.

அதன் விளைவு தான் இறந்த பின் மனித உடலை பதப்படுத்தி வைப்பது.

விஞ்ஞானமும் மருத்துவமும் வளரும் போது, அதாவது இன்னும் 20 ஆண்டுகளுக்குள் மரணத்தை விஞ்ஞானிகள் வென்று விடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.அப்படி ஒரு நிலை உருவாகும் போது பதப்படுத்தப்பட்டுள்ள தங்கள் உடலுக்கும் உயிர் கிடைக்கும் என்று நம்புகிறவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.செத்தவர்களை பிழைக்க வைக்கும் இந்த ஆராய்ச்சி மற்றும் அது தொடர்பான அதிசய தகவல்களை இந்த வாரம் காண்போம்.

மனித வாழ்வு நிலை இல்லாதது. மனிதனின் பிறப்பையும் இறப்பையும் யாராலும் நிச்சயமாக சொல்ல முடியாது.

வயது அதிகமாக அதிகமாக மனிதனுக்கு உடல் தளர்ந்து முதுமை ஏற்படும்.இது தவிர பழக்க வழக்கங் கள் மற்றும் நோய் காரணமாக உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு மரணம் அல்லது உடல் உறுப்புகள் சேதம் அடைதல் போன்ற ஆபத்துகளும் ஏற்படும்.

மனித உயிர்களை பறிக்கும் நோய்களில் குறிப்பிடத்தக்கது இதய நோயாகும்.இந்த நோய்க்கு ஆபரேஷன் மற்றும் மருந்துகள் இருந்தாலும் சில நேரங்களில் அவை பலன் தருவதில்லை. அது போன்ற சூழ்நிலையில் மாற்று இருதயம் பொருத்துதல் அல் லது செயற்கை இருதயம் பொருத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இது போல எத்தனையோ வசதிகள் நவீன மருத்துவங்கள் இருந்தாலும் சில நேரங்களில் மனித உயிரை காப்பாற்ற முடியாமல் போய்விடுகிறது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய மருந்துகளும் மருத்துவ முறைகளும் கண்டுபிடிக்கப்படும் போது நமக்குள் ஒரு எண்ணம் தோன்றும். அதாவது, இந்த மருத்துவ முறை சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டு இருந்தால் என் தந்தையை மரணத்தில் இருந்து காப்பாற்றி இருப்பேன், என்பதாக இருக்கும். இதே போல சிலருக்கு தாய், மனைவி, குழந்தை, சகோதர சகோதரிகள்… என்று காப்பாற்ற வேண்டிய பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

இது போன்ற நிலையில் இருந்து மனிதர்களை காப்பாற்ற உருவாக்கப்பட்டுள்ளது தான் கிரையோஜெனிக் முறை.

இயற்கையாக மரணம் அடைந்த பின்னர் ஒருவரது உடலை குளிர் நிலையில் பதப்படுத்தி வைப்பது தான் கிரையோஜெனிக் முறையாகும்.

வருங்காலத்தில் செத்தவர்களை பிழைக்க வைக்கும் ரகசியங்களை கண்டுபிடிக்கும் போது இந்த உடல்களை எடுத்து அவற்றுக்கு உயிர் கொடுக்க முடியும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

அது சரி செத்தவர்களை எப்படி பிழைக்க வைக்க முடியும் என்ற கேள்வி எழலாம்.

ஒருவருக்கு மரணம் என்பது பல வழிகளில் ஏற்படலாம். இருப்பினும் இயற்கையாக-பொதுவாக ஒருவரது மரணம் என்பது இருதய துடிப்பு நின்று போவது தான். இருதயம் செயல்படுவது நின்று போன பிறகு உடலின் மற்ற உறுப்புகளுக்கு ரத்தம் செல்வது தடைப்படுகிறது. இதன் காரணமாக முதலில் இருதயமும் பின்னர் அதைத் தொடர்ந்து உடலின் பிற பாகங்களும் செயல் இழக்கின்றன. இருதயம் நின்றுபோன பிறகும் சில மணி நேரங்களுக்கு மூளையின் முக்கிய திசுக்கள் உயிரோடு இருக்கும். அந்த மூளை திசுக்களை பாதுகாப்பது தான் இந்த கிரையோ ஜெனிக் முறையின் முக்கிய அம்சமாகும். இந்த தொழில் நுட்பத்தின் படி ஒருவர் மரணம் அடைந்ததும் தனது உடலை பாதுகாக்க விரும்பினால் அதை செய்து கொடுக்க பல நிறுவனங்கள் அமெரிக்காவில் உள்ளன. இதில் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இந்த நிறுவனத்தினர் தங்களிடம் பதிவு செய்தவர்கள் இயற்கையாக மரணம் அடைந்த தகவலை அறிந்ததும் உடனே அவரது வீட்டுக்கு விரைந்து சென்று உடலை தங்களது அலுவலகத்துக்கு கொண்டு வருகிறார்கள். அங்கு அந்த உடலின் திசுக்கள் மற்றும் பிறபாகங்களில் உள்ள தண்ணீரை அகற்றும் பணி முதலில் நடக்கிறது. திசுக்களில் தண்ணீர் இருந்தால் அதன் காரணமாக அந்த உடல் சீக்கிரம் அழுகி விடும். எனவே முதலில் உடலில் உள்ள தண்ணீர் அகற்றும் பணி நடைபெறுகிறது. பின்னர் அந்த உடலுக்குள் கிளிசரால் மற்றும் சில ரசாயன கல வைகளை செலுத்துகிறார்கள். இதன் மூலம் உடல் குளிர்விக்கப்படும் போது உறை நிலையில் பனிக் கட்டியாக மாறுவதில்லை. மேலும் சாதாரண நிலைக்கு மீண்டும் உடலை கொண்டு வரும்போது அது எந்த மாற்றமும் இன்றி பழைய நிலைக்கு அடைய இந்த ரசாயன கலவை உதவுகிறது.

உடலை பாடம் செய்த பின்னர் அதை குளிர வைக்கும் பணி நடைபெறுகிறது. பின்னர் அந்த உடலை ஒரு குளிர் பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கின்றனர்.

இந்த முறைப்படி மனித உடல் மைனஸ் 196 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. உடலை பாது காக்கும் பணியில் திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது. இதனால் மைனஸ் 196 டிகிரி செல்சியஸ் அள வுக்கு உடல் குளிர் விக்கப்பட்டாலும் அது பனிக்கட்டி போல உறை நிலையை அடைவதில்லை.
கிரையோஜெனிக் முறைப்படி உடலை பதப்படுத்த பலர் ஆர்வம் காட்டினாலும் இது வரை யாரையும் உயிர்ப்பிக்கும் சாதனை நடக்கவில்லை. நானோ டெக்னாலஜி (சஹஙூச் பக்ஷகுஙூச்ஙீச்கீட்) எனப்படும் நுண்ணுயிர் தொழில்நுட்பம் மூலம் இறந்தவர்களை பிழைக்க வைக்கும் காலம் விரைவில் வரும் என்பது விஞ்ஞானிகளின் கனவாக இருக்கிறது.

இந்த தொழில் நுட்பம் மூலம் சேதம் அடைந்த மனித திசுக்களை புதுப்பிக்க முடியும் என்ற அளவுக்கு இப்போதைய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

இது தொடருமானால் 2040-ம் ஆண்டில் இறந்தவரை பிழைக்க வைக்கும் அதிசயம் நடக்கும் என்கிறார்கள்.

அறிவியல் அதிசயம் செத்தவர்களை பிழைக்க வைக்கும் ஆராய்ச்சி

மனிதன் தனது புத்திசாலித்தனம் மற்றும் புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் இயற்கையை வென்று விட துடிக்கிறான். இறைவனின் படைப்புகளில் உள்ள இயற்கை ரகசியங்களை அறிந்து கொள்ள கடும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறான். அந்த ஆராய்ச்சிகளின் பலனாக பல உயிர்காக்கும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மனித இனத்தை நோய்த் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இத்தனை இருந்தாலும் ஆசை யாரைத்தான் விட்டது. மரணம் இல்லா பெருவாழ்வு காண மனிதன் ஆசைப்படுகிறான். இந்த உலக வாழ்க்கையிலும் அதன் சுகங்களிலும் நவீனங்களிலும் முழ்கித் திளைத்துப்போன அவன் நீண்ட காலம் வாழ விரும்புகிறான்.

அதன் விளைவு தான் இறந்த பின் மனித உடலை பதப்படுத்தி வைப்பது.

விஞ்ஞானமும் மருத்துவமும் வளரும் போது, அதாவது இன்னும் 20 ஆண்டுகளுக்குள் மரணத்தை விஞ்ஞானிகள் வென்று விடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.அப்படி ஒரு நிலை உருவாகும் போது பதப்படுத்தப்பட்டுள்ள தங்கள் உடலுக்கும் உயிர் கிடைக்கும் என்று நம்புகிறவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.செத்தவர்களை பிழைக்க வைக்கும் இந்த ஆராய்ச்சி மற்றும் அது தொடர்பான அதிசய தகவல்களை இந்த வாரம் காண்போம்.

மனித வாழ்வு நிலை இல்லாதது. மனிதனின் பிறப்பையும் இறப்பையும் யாராலும் நிச்சயமாக சொல்ல முடியாது.

வயது அதிகமாக அதிகமாக மனிதனுக்கு உடல் தளர்ந்து முதுமை ஏற்படும்.இது தவிர பழக்க வழக்கங் கள் மற்றும் நோய் காரணமாக உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு மரணம் அல்லது உடல் உறுப்புகள் சேதம் அடைதல் போன்ற ஆபத்துகளும் ஏற்படும்.

மனித உயிர்களை பறிக்கும் நோய்களில் குறிப்பிடத்தக்கது இதய நோயாகும்.இந்த நோய்க்கு ஆபரேஷன் மற்றும் மருந்துகள் இருந்தாலும் சில நேரங்களில் அவை பலன் தருவதில்லை. அது போன்ற சூழ்நிலையில் மாற்று இருதயம் பொருத்துதல் அல் லது செயற்கை இருதயம் பொருத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இது போல எத்தனையோ வசதிகள் நவீன மருத்துவங்கள் இருந்தாலும் சில நேரங்களில் மனித உயிரை காப்பாற்ற முடியாமல் போய்விடுகிறது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய மருந்துகளும் மருத்துவ முறைகளும் கண்டுபிடிக்கப்படும் போது நமக்குள் ஒரு எண்ணம் தோன்றும். அதாவது, இந்த மருத்துவ முறை சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டு இருந்தால் என் தந்தையை மரணத்தில் இருந்து காப்பாற்றி இருப்பேன், என்பதாக இருக்கும். இதே போல சிலருக்கு தாய், மனைவி, குழந்தை, சகோதர சகோதரிகள்… என்று காப்பாற்ற வேண்டிய பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

இது போன்ற நிலையில் இருந்து மனிதர்களை காப்பாற்ற உருவாக்கப்பட்டுள்ளது தான் கிரையோஜெனிக் முறை.

இயற்கையாக மரணம் அடைந்த பின்னர் ஒருவரது உடலை குளிர் நிலையில் பதப்படுத்தி வைப்பது தான் கிரையோஜெனிக் முறையாகும்.

வருங்காலத்தில் செத்தவர்களை பிழைக்க வைக்கும் ரகசியங்களை கண்டுபிடிக்கும் போது இந்த உடல்களை எடுத்து அவற்றுக்கு உயிர் கொடுக்க முடியும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

அது சரி செத்தவர்களை எப்படி பிழைக்க வைக்க முடியும் என்ற கேள்வி எழலாம்.

ஒருவருக்கு மரணம் என்பது பல வழிகளில் ஏற்படலாம். இருப்பினும் இயற்கையாக-பொதுவாக ஒருவரது மரணம் என்பது இருதய துடிப்பு நின்று போவது தான். இருதயம் செயல்படுவது நின்று போன பிறகு உடலின் மற்ற உறுப்புகளுக்கு ரத்தம் செல்வது தடைப்படுகிறது. இதன் காரணமாக முதலில் இருதயமும் பின்னர் அதைத் தொடர்ந்து உடலின் பிற பாகங்களும் செயல் இழக்கின்றன. இருதயம் நின்றுபோன பிறகும் சில மணி நேரங்களுக்கு மூளையின் முக்கிய திசுக்கள் உயிரோடு இருக்கும். அந்த மூளை திசுக்களை பாதுகாப்பது தான் இந்த கிரையோ ஜெனிக் முறையின் முக்கிய அம்சமாகும். இந்த தொழில் நுட்பத்தின் படி ஒருவர் மரணம் அடைந்ததும் தனது உடலை பாதுகாக்க விரும்பினால் அதை செய்து கொடுக்க பல நிறுவனங்கள் அமெரிக்காவில் உள்ளன. இதில் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இந்த நிறுவனத்தினர் தங்களிடம் பதிவு செய்தவர்கள் இயற்கையாக மரணம் அடைந்த தகவலை அறிந்ததும் உடனே அவரது வீட்டுக்கு விரைந்து சென்று உடலை தங்களது அலுவலகத்துக்கு கொண்டு வருகிறார்கள். அங்கு அந்த உடலின் திசுக்கள் மற்றும் பிறபாகங்களில் உள்ள தண்ணீரை அகற்றும் பணி முதலில் நடக்கிறது. திசுக்களில் தண்ணீர் இருந்தால் அதன் காரணமாக அந்த உடல் சீக்கிரம் அழுகி விடும். எனவே முதலில் உடலில் உள்ள தண்ணீர் அகற்றும் பணி நடைபெறுகிறது. பின்னர் அந்த உடலுக்குள் கிளிசரால் மற்றும் சில ரசாயன கல வைகளை செலுத்துகிறார்கள். இதன் மூலம் உடல் குளிர்விக்கப்படும் போது உறை நிலையில் பனிக் கட்டியாக மாறுவதில்லை. மேலும் சாதாரண நிலைக்கு மீண்டும் உடலை கொண்டு வரும்போது அது எந்த மாற்றமும் இன்றி பழைய நிலைக்கு அடைய இந்த ரசாயன கலவை உதவுகிறது.

உடலை பாடம் செய்த பின்னர் அதை குளிர வைக்கும் பணி நடைபெறுகிறது. பின்னர் அந்த உடலை ஒரு குளிர் பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கின்றனர்.

இந்த முறைப்படி மனித உடல் மைனஸ் 196 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. உடலை பாது காக்கும் பணியில் திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது. இதனால் மைனஸ் 196 டிகிரி செல்சியஸ் அள வுக்கு உடல் குளிர் விக்கப்பட்டாலும் அது பனிக்கட்டி போல உறை நிலையை அடைவதில்லை.
கிரையோஜெனிக் முறைப்படி உடலை பதப்படுத்த பலர் ஆர்வம் காட்டினாலும் இது வரை யாரையும் உயிர்ப்பிக்கும் சாதனை நடக்கவில்லை. நானோ டெக்னாலஜி (சஹஙூச் பக்ஷகுஙூச்ஙீச்கீட்) எனப்படும் நுண்ணுயிர் தொழில்நுட்பம் மூலம் இறந்தவர்களை பிழைக்க வைக்கும் காலம் விரைவில் வரும் என்பது விஞ்ஞானிகளின் கனவாக இருக்கிறது.

இந்த தொழில் நுட்பம் மூலம் சேதம் அடைந்த மனித திசுக்களை புதுப்பிக்க முடியும் என்ற அளவுக்கு இப்போதைய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

இது தொடருமானால் 2040-ம் ஆண்டில் இறந்தவரை பிழைக்க வைக்கும் அதிசயம் நடக்கும் என்கிறார்கள்.

Sunday, September 20, 2009

உள்ளம் உறுதியாக இருந்தால் வயது ஒரு பாரமில்லை' : 55 வயதில் சைக்கிளில் பால் வியாபாரம் செய்யும் பெண்

பொள்ளாச்சி : கொஞ்ச தூரம் நடந்தாலே, கால் வலிக்குது, கை வலிக்குது என்று சிணுங்கம் மக்கள் மத்தியில், தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் சைக்கிள் மிதித்து, வீடு வீடாக பால் விற்பனை செய்து உழைப்பிற்கு முன்னுதாரணமாக திகழ்கிறார், பொள்ளாச்சியைச் சேர்ந்த வெள்ளையம்மாள்.

இவரது வருகைக்காக வீட்டு வாசலில் கைக்குழந்தைகளுடன் பால் வாங்குவதற்காக காத்திருக்கின்றனர், பெண்கள். தலைமுடி நரைத்தாலும், 55 வயதிலும் சைக்கிள் பெடலை மிதித்தபடி பால்கேனுடன் செல்கிறார், இவர்.முகத்தில் களைப்பில்லை, ஊற்றும் பாலிலும் "கலப்படம்' இல்லை. பால் போல் வெள்ளை மனசு. அதனால் மக்களுக்கு ரொம்பவே பிடித்துப்போய்விட்டது. "20 ஆண்டுகளுக்கு மேலாக இவரிடம் தான் பால் வாங்குறோம்' என்கின்றனர் பால் வாங்கும் பெண்கள்.



யார் இந்த பால்காரி என்று விசாரிக்காதவர்கள் இல்லை; உண்மை தான், வயதால் தளர்ந்தாலும், மன உறுதியால் தளராமல் சைக்கிள் மிதித்து உழைக்கிறார் பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி, ஈஸ்வரன் கோவில் வீதியைச் சேர்ந்த வெள்ளையம்மாள். இவரது கணவர் ஆறுமுகம்; பொள்ளாச்சியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். வெள்ளையம்மாள் காலை 4.00 மணிக்கு பால் கறவையை துவங்கி, 8.30 மணி வரை பால் வியாபாரம் செய்கிறார். அதன்பின், வீட்டு வேலைக்கு நேரத்தை ஒதுக்குகிறார். மதியம் 2.30 மணிக்கு மாலை நேர பால் கறவையை துவங்கி, மாலை 6.00 மணிக்கு பால் வியாபாரத்தை நிறைவு செய்கிறார்.



அவரிடம் பேசியபோது...எங்க வீட்டுக்காரர் வேலைக்கு போய் சம்பாதித்ததை வைத்து குடும்பம் நடத்த முடியலை. வீட்டுச் செலவை சமாளிக்க மாடு வளர்த்தேன். வீட்டில் பால் கறந்து 30 வருஷத்துக்கு முன்னாடி பால் வியாபாரம் செஞ்சேன். எனக்கு படிப்பறிவு அதிகம் இல்லீங்க; அதனால பால் வியாபாரத்துல கவனம் செலுத்தினேன்.இரண்டு மாடுகளில் பால் கறந்து விற்றது, கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிச்சது. வீடுகளில் பசு வளர்ப்பவர்கள் என்னை பால் கறக்க கூப்பிட்டாங்க. இதனால, 10க்கு மேற்பட்ட இடத்துக்கு சென்று மாடுகளில் பால் கறந்து வியாபாரம் செஞ்சேன்.பொள்ளாச்சியில், தமிழ்மணி நகர், சேரன்நகர், இந்திராநகர், நல்லப்பாநகர், டி,கோட்டாம்பட்டி, மகாலிங்கபுரம் பகுதியில தினமும் காலையிலேயும், சாயங்காலமும் 10 கி.மீ., நடந்து சென்று வீடுகளுக்கு பால் ஊத்தினேன்.நடந்து சென்றால் உடல் வலி ஏற்பட்டு சிரமமானதால், சைக்கிள் ஓட்டிப் பழகினேன்.



10 வருஷமா சைக்கிளில் பால் கேன்களை தொங்கவிட்டு ஓட்டீட்டு போறேன். மேடான ரோட்டுல சைக்கிள் ஓட்ட முடியலைன்னா, இறங்கி தள்ளிட்டு போவேன். வாடிக்கையாக 50 வீடுகளுக்கு பால் சப்ளை செய்றேன். தினமும் 20 கி.மீ., சைக்கிள் ஓட்டி 60 லிட்டர் பால் விக்கறேன். இந்த தொழில்ல தினமும் 100 ரூபாய் வருமானம் கிடைக்குது. உடம்பு சரியில்லைனாலும் பால் வித்துட்டுத் தான் ரெஸ்ட் எடுப்பேன். மழை, வெயில் பார்க்காமல் சரியான நேரத்துக்கு போயிடுவேன்.என்னோட மகன் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்தான். வேலை நிரந்தரமாகாததால் அவனும் பால் வியாபாரத்திற்கு வந்துட்டான். இத்தனை வருஷமா பால் விற்றது போதும், இனி ஓய்வு எடும்மான்னு, மகன் சொல்றான். அவனுக்கு இன்னும் ஒரு வாழ்க்கை அமையல. அதனால் பால் தொழிலை விட முடியலை.



மொபட் ஓட்டப் பழக்கிட்டேன். மொபட்டில் பால் வியாபாரம் செஞ்சால், வருமானத்தில் பாதியை பெட்ரோலுக்கு கொடுக்கணும். அதனால, சைக்கிளில் சுற்றியே பால் வியாபாரம் செய்யறேன். வங்கியில லோன் கிடைச்சா பால் தொழிலை விரிவுபடுத்தி, சைக்கிளுக்கு பதிலாக மொபட் வாங்கிடுவேன்...தன்னம்பிக்கையுடன் தளராமல் கூறுகிறார் வெள்ளையம்மாள்.பால் வியாபாரத்தில், ஆண்கள் மட்டுமே கொடிகட்டி பறக்கும் நிலையில், வயதானாலும் உடலுக்கு ஓய்வு கொடுக்காமல் சைக்கிள் மிதித்து உழைக்கும் வெள்ளையம்மாள், பெண்ணினத்திற்கு மட்டுமின்றி சமுதாயத்திற்கே முன்னுதாரணம்.

Saturday, September 5, 2009

கோடிகளை குவிக்கும் கோவில் பிசினஸ்: ஒரு ஷாக் ரிபோர்ட்

மனிதனுக்கு வேலை, பணம் உள்ளிட்ட எந்த பிரச்னைகள் ஏற்பட்டாலும், தன்னுடைய கவலைகளை தீர்த்து கொள்வதற்காக, அவன் மு‌தலில் தேடி செல்லும் இடம் கோவில். ஆத்மாவிற்கு அமைதியும் , நிம்மதியையும் தரும் இந்த கோவில்களில் தற்போதை‌ய நிலை, பணத்தை குவிக்கும் பிசினசாகி போனது தான். உடனடியாக கோடீஸ்வரராக நினைக்கும் சிலர், தங்கள் இடத்தில் ஒரு கோவிலை கட்டி, அங்கு ஒரு உண்டியலை வைத்து விடுகின்றனர். பின்னர், அந்த கோயிலை பிரபலப் படுத்தி, அதன் மூலம் கோடி கணக்கில் லாபம் பெறுகின்றனர். இதனால் தற்போது, தமிழகம் முழுவதும் கோயில் பிசினஸ் தான் கொடி கட்டி பறக்கிறது. இந்த கோயில்கள் அனைத்தும் அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப் பட்டால் மட்டுமே மக்கள் ஏமாற்றப் படாமல் இருப்பார்கள். அதுமட்டுமல்லாமல், மக்களின் பணமும் சரியான தேவைகளுக்காக பயன்படுத்தப் படும். ஆனால் இதுபோன்ற தனியார் கோயில்களில் கிடைக்கும் பணம் குறிப்பிட்ட ஒருசிலருக்கு மட்டுமே போகின்றன. இதுகுறித்து, திருப்பூர் ஈஸ்வரன்கோயில், பெருமாள் கோயில் முன்னாள் திருப்பணிக்குழுத் தலைவர் முருகநாதன் தெரிவிக்கும் போது, ஒரு தனியார் கோயிலை அறநிலையத்துறை எடுப்பதால் அதை அரசு எடுத்ததாக ஆகிவிடாது. அங்கு வரும் காணிக்கை, நன்கொடை போன்றவை கணக்குப் பார்த்து தணிக்கை செய்து அது வேறொரு வேலைக்கு பயன்பட்டுவிடாமல் அறநிலைத் துறை பார்த்து கொள்கிறது. அதோடு அந்த கோயிலுக்கான பூஜை நேம நியமங்களை அறங்காவலர் குழு என்ற தனியார் தான் நிர்வகிப்பார்கள். ஒரு கோயிலை அறநிலையத்துறை நிர்வகிப்பது தான் உண்மையில் அந்தக் கோயில் நிர்வாகிகளுக்குப் பாதுகாப்பானது என்று தனியார் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து உள்ளார். மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் உட்பட ஏகப் பட்ட தனியார் கோயில்கள் தமிழகத்தில் தற்போது வளர்ந்து இருப்பது குறிப்பிடத் தக்கது.

நெல்லையில் பூலித்தேவன் 294வது பிறந்தநாள் விழா: மனோரமா, செந்தில் பங்கேற்பு

நெல்லை மாவட்டம் நெல்கட்டும்செவலில் நடந்த பூலித்தேவன் 294வது பிறந்தநாள் விழாவில் புதிய பார்வை ஆசிரியர் நடராஜன், நடிகை மனோரமா, நடிகர் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஆரம்ப களதர்த்தர்களில் ஒருவர்தான் பூலித்தேவன். விழாவுக்கு நடராஜன் தலைமை வகித்தார். நடிகை மனோரமா, நடிகர் செந்தில், இயக்குனர் மனோஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூலித்தேவர் அறக்கட்டளை பொருளாளர் வேலாயுதசாமி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் நடிகை மனோரமா பேசுகையில், இளைஞர்கள் முதலில் பெற்றோர், படிப்பு, முன்னேற்றம் ஆகியவற்றை காதலிக்க வேண்டும். ஒரு அந்தஸ்துக்கு வந்த பின்னர் பெண்களை காதலியுங்கள். 20 வயதில் காதலித்து உங்கள் வாழ்க்கையை வீணாக்காதீர்கள். மணமகன், மணமகள் எய்ட்ஸ் சோதனைக்கு பின் திருமணம் செய்து கொள்வதை அரசு கட்டாயப்படுத்த வேண்டும். இனி நான் நடிக்கும் திரைப்படங்களில் எனது பெயர் வீர மறத்தி மனோரமா என வெளிவரும் என்றார்.
நடராஜன் பேசுகையில், தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழனின் ஆட்சியில் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோயில் சிற்பங்களை மறைக்க முடியாதோ அதேபோல பூலித்தேவர் வரலாற்றை யாரும் மறைக்க முடியாது. வரலாற்றில் நமது பங்கு என்ன என்று தெரியவில்லை. அதனால்தான் நாம் மற்றவர்களுக்கு எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்து வருகிறோம். எனவே உங்கள் குழந்தைகளை நன்றாக படிக்க வையுங்கள். அவர்கள் கல்வி கற்றால் எங்கு சென்றாலும் பிழைத்துக் கொள்வார்கள். மேலும் குழந்தைகளை வீரம் உள்ளவர்களாகவும் வளர்க்க வேண்டும் என்றார்.

பாம்பு கடித்து இறந்தவரின் வீட்டிற்கு வந்த சிறுமி பாம்பு கடித்து பரிதாப பலி

தென்காசியில் பாம்பு கடித்து இறந்த பெண்ணின் விசேஷத்திற்கு வந்த திண்டுக்கல்லை சேர்ந்த சிறுமியும் பாம்பு கடித்து பரிதாபமாக இறந்தார்.

தென்காசி ஆசாத்நகரை சேர்ந்தவர் மூக்கன் மனைவி திருமலை (45). இவரை கடந்த மாதம் 30ம் தேதி பாம்பு கடித்து விட்டது. அவர் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு தடுப்பூசி போடப்பட்டும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

திருமலையின் விசேஷத்திற்கு அவரது உறவினர் திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ராஜிவ் நகரை சேர்ந்த ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் வந்துள்ளார். விசேஷம் முடிந்ததும் நேற்று இரவு ஸ்டாலின் மகள் ஹரிணி (6) வீட்டில் தூங்கியுள்ளார். நள்ளிரவு 12.30 மணியளவில் ஹரிணியை பாம்பு கடித்துள்ளது. இதனால் அச்சிறுமி அலறி அடித்துக் கொண்டு விழித்தெழுந்தார். அவரது சத்தத்தை கேட்ட உறவினர்கள் லைட் வெளிச்சத்தில் பார்த்த போது அப்பகுதியில் கட்டு விரியன் பாம்பு ஊர்ந்து சென்றதை கண்டனர்.

அவர்கள் அந்த பாம்பை அடித்து கொன்று தீ வைத்து எரித்தனர்.பாம்பு கடித்த சிறுமி ஹரிணி தென்காசி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். அங்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று அதிகாலை 3 மணியளவில் சிறுமி ஹரிணி வாயில் நுரை வந்துள்ளது. இதனை கண்ட அவரது குடும்பத்தினர் அங்கிருந்த நர்சிடம் டாக்டரை உடனே வரவழைத்து சிகிச்சை அளிக்கும் படி கூறியுள்ளனர்.

ஆனால் நர்ஸ் உடனே டாக்டரை அழைத்து வரவில்லையாம். இதனால் சிறிது நேரத்தில் சிறுமி ஹரிணி பரிதாபமாக இறந்தார்.இதனை கண்ட சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆவேசம் அடைந்தனர். டாக்டரை உரிய நேரத்தில் அழைத்து சிகிச்சை அளித்திருந்தால் ஹரிணி இறந்திருக்க மாட்டார் என்று கூறி தனியார் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பாம்பு கடித்து இறந்த பெண்ணின் விசேஷத்திற்கு வந்த சிறுமியும் பாம்பு கடித்து இறந்தது தென்காசி பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

இலங்கை அரசின் ‘கைக்கூலியாகச் செயல்பட்ட ஜூவி நிர்வாக ஆசிரியர்’ பணிநீக்கம்!


சிங்கள இனவெறி பிடித்த, தமிழின அழிப்பை தொடர்ந்து இலங்கை அரசாங்கத்தின் ஊதுகுழல்களாக பல பத்திரிகையாளர்கள் தலைநகர் சென்னையில் செயல்பட்டு வருகிறார்கள் என்று ஏற்கெனவே பல முறை நமது தளத்தில் எழுதி வந்துள்ளோம்.

ஹிந்து ராம், துக்ளக் சோ, தினமலர் குழும செய்தியாளர்கள் பலர் இந்தப் பட்டியலில் வெளிப்படையாகவே இடம்பெற்றனர்.

இன்னொரு பக்கம், வெளிப்பார்வைக்கு தமிழின உணர்வாளன் முகமூடி அணிந்து கொண்டு, மிகத் தீவிரமாக இலங்கைக்கு ஆதரவாக சிலர் வேலை பார்த்துள்ளனர். இன்னமும் பார்த்துக் கொண்டும் உள்ளனர். அவர்களில் ஒருவரை பத்திரிகை நிர்வாகமே கையும் களவுமாகப் பிடித்து வெளியேற்றியுள்ளது. இன்னும் இருவரை அந்த நிறுவனம் வெளியேற்றவிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. அந்த நிறுவனம் ஆனந்த விகடன். வெளியேற்றப்படிருப்பவர் ஜூனியர் விகடன் ஆசிரியர் விகேஷ் என்னும் வெங்கடேஷ்.

இதே நிறுவனத்தில் பணியாற்றும் இன்னும் இரு மூத்த பத்திரிகையாளர்கள் இலங்கை அரசின் கைக்கூலிகளாகச் செயல்பட்டிருப்பதையும் தனியார் ஏஜென்ஸி மூலம் கண்டுபி்டித்துள்ளதாம் அந்த நிறுவனம். அவர்களும் வெளியேற்றப்படுவார்கள் என நம்பலாம்.

ஆக, ஒரு பக்கம் இலங்கை அரசைக் கண்டிப்பது போல போக்குக் காட்டிக் கொண்டே, அவர்களுக்கு முழுமையான ஆள்காட்டி வேலையை, தரகர் வேலை செய்து வந்துள்ளனர் விகடன் செய்தியாளர்கள் சிலர்.

இதுகுறித்து புதிய ஜனநாயகம் என்ற இதழில் வெளியான முழு கட்டுரை:

மிழக ஊடகவியலாளர்களிடையே சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்படும் ஒரு விஷயம், விகடன் குழுமத்திற்குச் சொந்தமான ஜூனியர் விகடன் இதழில் நிர்வாக ஆசிரியராக இருந்த விகேஷ் என்பவர் அதிரடியாக வேலைநீக்கம் செயப்பட்டிருப்பது பற்றித்தான்.

அவருக்கு சென்னையில் மட்டும் சொந்தமாக நான்கு வீடுகள் இருப்பதாகவும், சில பெரிய புள்ளிகளோடு சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், அது தொடர்பான கட்டப் பஞ்சாயத்துகள் போன்றவற்றில் நீண்டகாலமாகவே அவர் கைதேர்ந்தவர் என்றும், ஒட்டு மொத்தமாக தன் தொழிலுக்கு ஜுனியர் விகடன் பெயரைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறுகிறார்கள்.

சமீபத்தில் மோசடி வைத்தியசாலை தொடர்பான கட்டுரை ஒன்றைப் பிரசுரிக்காமல் தவிர்த்ததைத் தொடர்ந்து, நிர்வாகம் அவரைக் கண்காணித்ததாகவும் தனியார் துப்பறியும் நிறுவனம் மூலமாக விசாரணை நடத்தியதில் பல லட்சமோ, கோடியோ மோசடி நடந்திருப்பது உறுதியானதாகவும், அதன் தொடர்ச்சியாகத்தான் விகேஷ் அலுவலத்துக்குள் அனுமதிக்கப்படாமலேயே வீட்டிற்கு அனுப்பப் பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதைக் காட்டிலும் தமிழ் மக்களுக்கு அதிர்ச்சியூட்டத்தக்க குற்றச்சாட்டு ஒன்றும் உள்ளது. அது விகேஷ் இலங்கைத் தூதரகத்துடன் வைத்திருந்த உறவு தொடர்பானது. இன அழிப்புப் போரின் போது தமிழகத்து அரசியல்வாதிகளையும், பத்திரிகையாளர்களையும் ‘திறமையாக’க் கையாண்டதற்காக சென்னையில் இலங்கை அரசின் துணைத்தூதராக இருந்த அம்சாவுக்கு பதவி உயர்வு கொடுத்து இலண்டனுக்கு அனுப்பி வைத்தது, இலங்கை அரசு.

தமிழ் ஊடகவியலாளர்களில் சிலர் அம்சாவோடு மிக நெருக்கமாகப் பழகி வந்திருக்கிறார்கள். போருக்கு முன்னர்; இலங்கை அரசின் பிரச்சாரத்தை முன்னெடுக்க அவர்களுக்குச் சன்மானங்கள் வழங்கப்பட்டன. போரின் வெற்றிக்குப் பின்னர், செய்த வேலைக்காக சன்மானமும் விருந்தும் வைக்கப்பட்டது.

நடேசன் பேட்டிக்கு மறுத்துவிட்டு கருணா பேட்டியை வெளியிட்டவர்கள்…

அம்சாவிடம் கேள்வி எழுதிக் கொடுத்து ராஜபக்சேவிடம் பதில் வாங்கி, அதைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தன, சில ஊடகங்கள். போர் தீவீரமாக நடந்த காலத்தில் வழக்கறிஞர்களும் மாணவர்களும் அரசியல் அமைப்புகளும் போர் நிறுத்தம் கேட்டு போராடிய காலத்தில், இலங்கைத் தூதரகம் துரோகி கருணாவின் நேர்காணலுக்கான ஏற்பாட்டைச் செய்து, இங்குள்ள எல்லா பெரிய ஊடக நிறுவனங்களிலும் அது வெளியானது.

ஜூனியர் விகடன் இரண்டு வாரமாக துரோகி கருணாவின் பேட்டியை வெளியிட்டது.

இந்த நேர்காணல்களை வெளியிடும் சுதந்திரம் எல்லா ஊடகங்களுக்குமே உண்டு என்று வாதிடலாம். ஆனால், அதிர்ச்சிகரமான செய்தி என்ன வென்றால், புலிகளின் அரசியல் பிரிவுத்தலைவர் பா.நடேசனின் நேர்காணலை ஜூனியர் விகடனும், டெக்கான் குரோனிக்கலும் வெளியிட மறுத்து கருணாவின் நேர்காணலை வெளியிட்டதுதான். தமிழ் ஊடகங்களில் உள்ள கணிசமான பத்திரிகையாளர்கள் வளைக்கப்பட்டார்கள்.

சில மானமுள்ள பத்திரிகையாளர்கள் அம்சாவின் அன்பளிப்புகளைப் புறக்கணித்தும் இருக்கிறார்கள். இலங்கை தூதரகத்தின் செயல்பாடுகளைக் கண்டித்தும் அம்பலப்படுத்தியும் எழுதிய ஊடகங்களும் உண்டு. போருக்கு முன்னரும் பின்னரும் ஆங்கிலம் பேசும் ஊடகவியலாளர்களை கொழும்புக்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டியும். தமிழ் பேசும் ஊடகவியலாளர்களை சென்னையிலேயே குளிப்பாட்டியதும் கூட நடந்திருக்கிறது.

இதில் விகேஷ் மட்டுமல்ல, ஜுனியர் விகடன் குழுமத்தில் இப்போதும் பணியாற்றிவரும் ஒருவர்தான் அம்சாவுக்கு அதிகமான தரகு வேலை பார்த்ததாகவும், இப்போது புதிதாக வந்திருக்கும் துணைத் தூதருக்கும் அவரே ஊடகத் தரகராக இருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது.

இவரது பணி வித்தியாசமானது; யாராவது புலிகளை ஆதரித்து எழுதினால், உடனே இவர் விகடனின் தீவீர வாசகர் என்ற போர்வையில் பிரமுகர்களை அழைத்துக் கொண்டு விகடன் நிர்வாகத்தினரைப் பார்க்கச் செல்வார். இவர் அழைத்துச் செல்லும் நபர் இலங்கை தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்படுபவராக இருப்பார். இவர் போய் ‘விகடனில் ஒரே புலி ஆதரவு கட்டுரையாக வருகிறது’ என்று பற்ற வைப்பார். இலங்கை தூதரகத்தால் இவருக்கு வழங்கப்பட்ட பல பணிகளில் இதுவும் ஒன்று.

தனிப்பட்ட பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல, சென்னை அரசினர் தோட்டத்திற்குள் இருக்கும் பத்திரிகையாளர் மன்றம் என்கிற அமைப்பின் பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டிருக்கிறது.

தமிழ் ஊடகவியலாளர்களுக்காகக் கட்டப்பட்ட இந்த கட்டிடத்திற்குப் பெயர் வைக்கும் போது ஒரு பைசாத் தமிழன் இதழை நடத்திய அயோத்திதாசப் பண்டிதரின் பெயர் முதல் தினத்தந்தி ஆதித்தனார் பெயர் வரை, ஏதாவது ஒரு ஊடகவியல் சார்ந்தோரின் பெயரை வைத்திருக்கலாம்.

ஆனால், அக்கட்டிடத்திற்கு வைக்கப்பட்ட பெயர் என்ன தெரியுமா? “எஸ்.ஆர். எம். மாளிகை”. அதாவது, எஸ்.ஆர். எம். கல்லூரி முதலாளி பச்சைமுத்துவின் நிதியில் அந்தக் கட்டிடம் கட்டப்பட்டதால், அவர் பெயரையே கட்டிடத்திற்கு வைத்து விட்டார்களாம்.

இலங்கை அரசின் முன்னாள் அதிபர் சந்திரிகாவிடம் லங்கா ரத்னா விருது வாங்கியவரும் தொடர்ந்து தமிழ் மக்களுக்கு எதிராக நஞ்சைக் கக்கிவருபவருமான ஹிந்து ராமைக் கொண்டு ‘எஸ்.ஆர்.எம்’ என்ற அந்தக் கட்டிடம் திறக்கப்படுகிறது என்றால், பத்திரிகையாளர் மன்றத்தின் இன்றைய சில துரோக நிர்வாகிகளுக்கும் இலங்கைத் தூதரகத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதை ஊடக நிறுவனங்கள் விசாரித்திருக்க வேண்டும்.

பெரும் தூரேகம்… போர்க் குற்றத்துக்கு இணையானது…

எஸ்.ஆர்.எம். கல்லூரியின் மர்ம அறையில் மாணவர்களை அடைத்து வைத்துத் தாக்கியதும். அந்தக் கல்லூரியின் தொழில் நுட்பச் சான்றிதழ்கள் செல்லாதவை என்று இந்திய தொழில் கூட்டமைப்பு அறிவித்தது குறித்தும் எஸ். ஆர். எம். கல்லூரி நிர்வாகத்தின் கட்டணக் கொள்ளை குறித்தும் யோக்கியமான எந்தப் பத்திரிகையாவது வெளியில் கொண்டு வந்திருக்கிறதா? போர் கொடூரமாக நடந்த காலத்தில், போர் நிறுத்தம் கோரியோ சிங்கள இனவெறி அரசைக் கண்டித்தோ ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை இந்த ஊடக அமைப்பு. காரணம் இதில் தலைமைப் பொறுப்பில் உள்ள சிலர் எது செய்தாலும் இந்து ராமிடம் கேட்டுத்தான் செய்வார்களாம்.

ஈழத் தமிழினத்திற்கெதிராக நடைபெற்ற ஒரு இன அழிப்பு போரை இருட்டடிப்பு செய்வதற்காகவும், சிங்கள இனவெறி அரசை நியாயப்படுத்துவதற்காகவும் கைநீட்டி காசு வாங்கிய பத்திரிகையாளர்களின் குற்றம் வெறும் ஊழல் குற்றமல்ல. அது போர்க் குற்றத்திற்கு இணையாக, தண்டிக்கப்பட வேண்டிய ஒரு கிரிமினல் குற்றம். இவர்கள் இனப்படுகொலையின் கூட்டாளிகள்.

எண்ணிப்பாரக்கவே இயலாத இந்த அருவருப்பான நடவடிக்கை சிறு சிறு ஊழல்கள் வழியாகத்தான வளர்ந்து விசுவரூபமெடுத்திருக்கிறது.

மாணவ நிருபராக இருந்து ஜுனியர் விகடனுக்கு நிர்வாக ஆசிரியராக வந்தவர்தான் விகேஷ். பொறுப்புக்கு வந்த மாணவ நிருபர்கள் மிக மிக தந்திரமாக செய்த ஒரு விஷயம், தங்கள் இருப்புக்கு இன்னொரு மாணவ நிருபர் உலைவைத்து விடாமல் பார்த்துக் கொண்டதுதான். ஒரு கட்டத்தில் மாணவ நிருபர்களின் வரவே குறைந்து ஒப்புக்கு மட்டும் அந்தத் திட்டம் இப்போது விகடனில் இருப்பதாக அறிய முடிகிறது.

நேர்மை, ஊடக தர்மம், எழுத்தை மட்டுமே நம்பி வாழ்கிற பத்திரிகையாளர்கள் பிழைக்கத் தெரியாதவர்களாகவும், ஊழல், செல்வாக்கை வளர்த்து அதிகார பீடங்களுக்கு வருபவர்கள் திறமைசாலிகளாகச் சித்தரிக்கப்பட்டதும் ஊழல்மயப்பட்ட ஊடக ஒழுக்கம் கட்டமைத்த கருத்தியலே. அந்தக் கருத்தியலின் ஒரு நவகால அடையாளம் மட்டுமே விகேஷ்.

ஒரு எல்லை வரை ஊழல், கட்டப்பஞ்சாயத்து போன்ற இழி செயல்களை எல்லா ஊடக நிறுவனங்களும் அனுமதித்தே வந்திருக்கின்றன. தமிழ் மக்களின் மனச்சாட்சி. நாடித்துடிப்பு என்றெல்லாம் பறைசாற்றிக் கொள்ளும் இந்த ஊடகங்கள் பத்திரிகையாளர்களுக்கு வழங்கும் ஊதியம் மிகவும் சொற்பமானது. உழைப்பைச் சுரண்டி ஊதியம் கொடுக்காத முதலாளிகள் ஒரு எல்லை வரை தனது நிருபர்கள் வெளியில் லஞ்சம் வாங்குவதை அனுமதிக்கிறார்கள். இதுதான் பெரும்பலான தமிழக பத்திரிகையாளர்களின் நிலை.

தொடக்க காலத்தில் போலீசு அக்கிரமங்களை வெளிக்கொண்டு வந்த ஜுனியர் விகடன், நாளடைவில் போலீசு புகழ்பாடத் துவங்கியது. போலீசை வைத்து வாசகர்களுக்குச் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிலைக்கு அது வளர்ந்து சென்றது. சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு வழக்கறிஞர்கள் இருக்க, போலீசாரைக் கொண்டு சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தொடங்குகிறது விகடன் நிருபர்களின் போலீசு கூட்டு.

ரௌடி, போலீசு, அரசியல்வாதி கூட்டணியோடு பத்திரிகையாளர்களில் சிலரும் இணைந்து வளர்ந்த கதை சுவாரசியமானது. போலீசார் நடத்திய கட்டப்பஞ்சாயத்துகளில் பத்திரிகையாளர்களும் கூட்டு சேர்ந்து தொழில் துரோகம் செய்த விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன. காலம் தோறும் இத்தகைய மோசடிப் பேர்வழிகள் குமுதம், விகடன் குழுமம், நக்கீரன் என எல்லா ஊடகங்களிலுமே இருந்துதான் வந்திருக்கிறார்கள்.

ஆனால், அதிர்சியளிக்கும் விஷயமாக அத்தனை பேரும் பேசிக் கொள்வது விகடனுக்குள்ளேயே இது நடந்து விட்டது என்பதுதான்.

பாரம்பரியமிக்க பத்திரிகை நிறுவனம் எங்களுடையது என்று மூச்சுக்கு முந்நூறு தடவைச் சொல்லிக் கொள்ளும் விகடன் தங்கள் நிறுவனத்தின் பெயரை தவறான வகையில் பயன்படுத்திய மோசடிப் பேர்வழி விகேஷ் மீது ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என்கிற கேள்வி இங்கே முக்கியமானது.

சில வருடங்களுக்கு முன்பு இதே ஜுனியர் விகடனில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் பிரச்சினை ஒன்றில் செய்தியை வெளியிடாமல் இருக்க, சம்பந்தப்பட்டவர்களை மிரட்டுகிற தொனியில் பேசி வகையாகச் சிக்கிக் கொண்டார். அப்போது ஜூனியர் விகடன் நிர்வாகத்தினர், அவரை போலீசில் ஒப்படைத்தார்கள். அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

விகேஷ் போன்றோரின் குற்றங்களை ஒப்பிடும்போது அது மிகச்சாதாரண குற்றம்.

இலங்கைத் தூதரின் விருந்தைச் சுவைத்தவர்கள் முதல் எலும்பைச் சுவைத்தவர்கள் வரையிலான எல்லா குற்றவாளிகளும் அடையாளம் காட்டப்படவேண்டும். இதனைத் தெரிந்து கொள்வது தமிழ் மக்களின் உரிமை. ஆதாரங்கள் தெரியாத வண்ணம் இழைக்கப்படும் இத்தகைய குற்றங்களுக்கான ஆதாரங்களை அம்பலமாக்குவது நேர்மையான பத்திரிகையாளர்கள் ஒவ்வொருவரின் கடமை!

நன்றி: புதிய ஜனநாயகம்