Wednesday, December 2, 2009

குறியீட்டு எண் இல்லாத செல்போன்கள் இயங்கின.

குறியீட்டு எண் இல்லாத செல்போன்கள் வழக்கம் போல் இன்றும் இயங்கின. அரசின் முயற்சி தோல்வியடைந்துள்ளது.
புலி வருது... பூதம் வருது... என்று பயமுறுத்தி கடைசியாக பூனை வந்தால் எப்படி இருக்குமோ அதே நிலைதான் சைனா செல்போன் வைத்திருப்பவர் களின் மனதில். கடந்த ஒரு வருட காலமாக நாட்டின் பாதுகாப்பு கருதி அடையாள குறியீட்டு எண் இல்லாத செல்போன்கள் தடை செய்யப்படும் இணைப்புகள் துண்டிக்கப் படும்! அவற்றில் பேச முடியாது! அதை பயன்படுத்து வது சட்ட விரோதம்! அதற்கான சட்டம் விரைவில் வரப்போகிறது என்ற பரபரப்பு ஓடிக்கொண்டிருந்தது. பிரபல நிறுவனங்களின் விருப்பப்படியே மலிவான விலைக்கு மக்களின் கரங்களில் தவழ்ந்த சைனா, கொரியன் போன்ற செல்போன்களை தடை செய்வதில் வேகமும் விறுவிறுப்பும் காட்டப்பட்டது. டிசம்பர்-1 (இன்று) முதல் அடையாள குறியீட்டு எண் இல்லாத செல்போன் செயல் இழக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதற்கென்றே வடிவமைக்கப்பட்ட விசேஷ சாப்ட்வேர் பல்வேறு தனியார் செல்போன் சேவை நிறுவனங்களின் ஏஜெண்டுகளுக்கு வழங்கி அமல்படுத்த கேட்டு கொண்டனர். அதன்படி கடந்த 2 நாட்களாக செல்போன் வைத்திருந்த அனைவரும் தங்கள் வைத்திருக்கும் செல்போனுக்கு அடையாள குறியீட்டு எண் உள்ளதா? அது ஒரிஜினல் தானா? என்பதை சரி பார்ப்பதற்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி சோதித்து பார்த்தனர். சிலருக்கு “சக்சஸ்” என்ற மகிழ்ச்சியும், “நாட்வேலிடு” என்ற தகவலும் முன்னுக்கு பின் முரணாக வந்து குழப்பத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. இதற்கிடையே திருவிழா கூட்டத்தில் குழந்தைகளிடம் நகை பறிப்பது போல் சிலர் எங்களிடம் ரூ.200 பணம் கட்டினால் ஐ.எம்.இ.ஐ. நம்பர் பதிவு செய்து தருவோம் என்று கடை விரித்தார்கள். கடல் மணலை கூட கும்பலாக நின்று வாங்கினால் “எனக்கு ஒரு பொட்டலம் கொடு” என்று கேட்டு வாங்குவது போல அடையாள குறியீட்டு எண் வாங்குவதற்கு சம்பந்தப்பட்ட கடைகளின் முன்பு நீண்ட வரிசை. அனைவரிடமும் ரூ.200 வசூலித்தனர். ஒரே பதில், “நாளை காலையில் இருந்து உங்கள் செல்போன் செயல் இழக்காது. அடையாள குறியீட்டு எண் கிடைத்து விடும்” என்று அனுப்பி வைத்தனர். அடையாள குறியீட்டு எண்ணை சரி பார்ப்பதற்கு என்ற எஸ்.எம்.எஸ். தகவலை பரிமாறியே ஒரு மெசேஜுக்கு, ரூ.3 வீதம் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களிடம் செல்போன் சேவை நிறுவனங்களும் தாராளமாக சுருட்டின! அரசு அறிவித்தப்படி நேற்று இரவு 12 மணி முதல் அடையாள குறியீட்டு எண் இல்லாத செல்போன்கள் செயல் இழக்கவில்லை. வழக்கம் போல் இயங்கின. எந்த ஒரு செல்போனில் இருந்தும் அடையாள குறியீட்டு எண் இல்லாத செல்போனுக்கும் அந்த செல்போனில் இருந்து மற்ற பிரபல நிறுவனங்களின் போனுக்கும் பேச முடிந்தது. இணைப்பு துண்டிக்கப்படும் என்ற அறிவிப்பு டுபாக்கூர் ஆனது. சென்னையில் மட்டும் அடையாள குறியீட்டு எண் இல்லாத செல்போன்கள் சுமார் 16 1/2 லட்சம் மக்களின் பயன்பாட்டில் உள்ளது. எனவே செல்போன் சேவை நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை இழக்க விருப்பமில்லாமலே இருந்தன. இந்தியா முழுவ தும் 2 1/2 கோடி செல்போன்கள் பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் அடையாள குறியீட்டு எண் இல்லாத செல்போன்களை தடை செய்ய முடியாததற்கு செல்போன் சேவை நிறுவனங்களில் ஏற்பட்ட குளறுபடியே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து தனியார் செல்போன் சேவை நிறுவன அதிகாரி ஒருவர் கூறும் போது:- அரசுக்கு முறையாக வரி கட்டி இயங்கும் சில பிரபல செல்போன் நிறுவனங்கள் ரூ.10 ஆயிரத்திற்கு அறிமுகப்படுத்தும் மாடல் செல்போனை சைனா மற்றும் கொரியன் செல்போனில் ரூ.1,500-க்கு வாங்க முடிகிறது. அதனால் வாடிக்கையாளர்கள் அடையாள குறியீட்டு எண்ணை பார்த்து செல்போனை வாங்குவதில்லை. விலையை மட்டும் பார்க்கிறார்கள். ஐ.எம்.இ.ஐ. எண்கள் இல்லாததால் இதன் செயல் பாட்டை கண்காணிக்க முடியாது. எனவே இத்தகைய செல்போன்கள் தீவிரவாதிகள் பயன்படுத்த ஏதுவாக உள்ளது என்ற குற்றச்சாட்டு இருந்தபோதும், அவற்றை வாங்குவதில் வாடிக்கையாளர்கள் அதிக விருப்பம் காட்டினர். அரசின் தடை குறித்த அறிவிப்பால் அவர்கள் அதிர்ந்து போயிருந்தனர். ஆனால் தடை செய்ய பயன் படுத்தப்படும் சாப்ட்வேர் தொழில் நுட்பம் தோல்வி அடைந்து விட்டது. அதன் காரணமாக திட்டமிட்டப்படி தடையை இன்று அமல்படுத்த முடியவில்லை. இது தற்காலிக சந்தோசம் தான். தடை செய் வதில் உடன்பாடில்லை. என்றாலும் நாங்கள் அரசு அறிவுறுத்திய சாப்ட்வேரை செயல்படுத்தி விட்டோம். அது செயல் இழந்து விட்டால் நாங்கள் என்ன செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார். வழக்கம்போல பி.எஸ்.என்.எல். அதிகாரியோ, அரசின் சாப்ட்வேர் செயல் பட தொடங்கி விட்டது. அடையாள குறியீட்டு எண் இல்லாத அனைத்து செல்போன்களும் குறிப்பாக “செல்ஒன்” சிம்கார்டுகள் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது என்று உறுதியாக கூறினார். ஆனால் அவர் கூறியபடி ஏதுவும் நடக்கவில்லை. “செல் ஒன்” சிம் கார்டுகள் போடப்பட்ட அடையாள குறியீட்டு எண் இல்லாத செல்போன்கள் கூட வழக்கம்போல செயல்படுகிறது என்பது தான் உண்மை.

கோவை மாணவிகளின் செக்ஸும் குடியும்: கடந்து செல்ல வேண்டிய பாதை



கோயம்பத்தூர் கல்லூரி விடுதி மாணவிகள் குடித்து செக்ஸில் ஈடுபடுவதாக இந்த வார ஜூ.வியில் வந்துள்ள அறிக்கையில் அப்பெண்களுக்கு துளியும் குற்றவுணர்வு இல்லை என்று குறிப்பிட்ட கல்லூரியின் ஒரு விரிவுரையாளர் வியக்கும் இடம் வருகிறது. பெண்களின் விடுதி அறைகளில் இருந்து ஆணுறை மற்றும் மதுப்புட்டிகளை மீட்ட பின் மீந்த இந்த தன்னம்பிக்கையை தளர்த்த அவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் மனவியல் ஆலோசனை வழங்கி இருக்கிறது. முற்றும் முடிவுமாக குற்றசாட்டை மாணவிகள் இப்படி எதிர்கொள்கிறார்கள்: ”நாங்கள் நன்றாக படித்து கல்லூரிக்கு பேர் வாங்கித் தருகிறோம். நாங்கள் குடிப்பதால் உடலுறவு கொள்வதால் நிர்வாகத்துக்கு என்ன நட்டம்”. இந்த முரணை கவனியுங்கள்: ஒழுக்கசாலி பையன்கள் அரியர் வைத்து பேனெடுப்பதையும், ஒழுக்கமற்ற கேளிக்கைகாரர்கள் முதல் மதிப்பெண்கள் பெற்று உயர்ந்த வேலைகளை அடைவதையும் கவனித்திருக்கிறேன். முனைப்பு தான் முக்கியம்.

இதே கட்டுரையில் மனவியலாளர் நாராயண ரெட்டி இன்றைய இளைஞர்கள் எல்லாவற்றையும் சோதித்து பார்க்கும் அவசரத்தில் இருப்பதே தவறு என்கிறார். ஒரு ஆணின் பாலியல் உச்சம் பதினைந்தில் இருந்து பதினெட்டுக்குள் நிகழ்கிறது. இதைப் பற்றி பத்து வருடங்களுக்கு முன் ஒரு அறிவியல் தலையணையில் படித்ததும் உச்சத்தை ஒரு முறையாவது அதற்குள் தொடுவது என்று முடிவெடுத்தேன். அக்கட்டத்தில் ஒரு ரயில் பயணத்தில் நானும் கவிஞர் ஹெச்.ஜி ரசூலும் ஒரு இளம் ஜெர்மானியரை சந்தித்தோம். மூவருக்கும் ஆங்கிலம் தெரியாதாகையால் சரளமாக உரையாடினோம். ரசூல் அண்ணனின் இலக்கிய விசாரிப்பு முடித்ததும் நான் வெள்ளையரிடம் கேட்டேன்: “ நீங்கள் முதலில் செக்ஸ் உறவு கொண்டது எந்த வயதில்?”. அவர் “பதினைந்து” என மேலும் விசாரித்தோம். நான் எண்ணிப் பார்த்தேன். படித்து வேலை கிடைத்து பொருள் சேர்த்து முதல் பெண்ணுடல் கிடைக்கும் போது ஒரு இந்தியனின் உடல் செத்துப் போக ஆரம்பிக்கிறது. முப்பது வயதுக்கு மேல் விந்தணு சம்மந்தப்பட்ட புற்று நோய் ஆணுக்கு ஏற்படுவதாக, அதனால் குழந்தைகள் குறையுள்ளவர்களாக இருப்பார்கள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று நிறுவியுள்ளது. இயற்கை நம் மீது முத்திரை குத்தியுள்ள காலாவதி தேதியை மறைக்க முடியாது.

பருவ வயதிலான பரீட்சார்த்த முயற்சிகள் ஆபத்தில்லாத பட்சத்தில் தவறில்லை. மேற்கூறிய பெண்களுக்கு காதல் மற்றும் காமம் மீதான் மிகை எண்ணங்களோ கற்பிதங்களோ இல்லை என்பது பாராட்டத்தக்கது. விடலை வயதினர் தவறுவது பெரும்பாலும் ஆண்-பெண் உறவு குறித்த கற்பிதங்களாலே. பாலியல் கல்வியை இன்று பள்ளிகள் முன்னெடுப்பது அனாவசியம். நமது ஆசிரியர்களுக்கு அதற்கான முதிர்ச்சியும் இல்லை. இணையம் இவ்வேலையை மேலும் எளிதாக, நேரடியாக, ஓரளவு காத்திரமாக செய்கிறது. இணைய போர்னோகிரபி மிகையான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துவதாக ஒரு நியாயமான புகார் உண்டு. ஆனால் பெண்ணுடல் மீதான் புரிதல் பற்றின திறப்பை அது சிக்கலின்றி நிகழ்த்துவது முக்கியமானது. பதின்வயதில் ஆண்களுக்கு பெண்ணுடலை அறியும் பரிதவிப்பு ஏற்படுகிறது. காட்சிபூர்வ இன்பத்தை மீறின ஒரு அறிதல் விழைவு இது. குடும்பத்து பெண்களின் அந்தரங்க உறுப்புகளை அவர்கள் நிச்சயம் கவனிக்க தொடங்குகிறார்கள். எனது பத்தாம் வகுப்பில் நண்பன் சரவணன் குளித்து ஈரத்துணி மாற்றும் போது தன் அக்காவின் குறியை பார்த்ததாக பரபரப்புடன் ஒரு அந்தரங்க உரையாடலில் தெரிவித்தான். இந்த அந்தரங்க பளிச்சிடல்கள் நமது குறுகலான மத்திய வர்க்க வீடுகளில் சகஜமாக நடக்கலாம். சில சமயம் இதனால் குற்றவுணர்வும், மனச்சிக்கலும் ஏற்படலாம். என் காதலி ஒருவருடன் சுன்னத் ஆண்குறி பற்றி உரையாடிய போது அவர் தான் அப்படி ஒன்றை வீட்டில் கண்டிருப்பதாக கூறினார். பெண்களின் மனவுலகும் இவ்விசயத்தில் வெகுபின்னால் இல்லை. இன்றைய தலைமுறைக்கு இத்தகைய ஒரு தர்மசங்கடத்தை இணையம் இல்லாமல் ஆக்குகிறது. உடல் பாலியல் மர்மம் அற்றதாகிறது.

குழந்தைகளுடன் பாலியல் உரையாடல் செய்வது பெற்றோருக்கு எளிதல்ல. குழந்தைகளுக்கு அவர்களை விட சற்று முதிர்ந்த தெளிவுள்ள நண்பர்களே இதற்கு உசிதமானவர்கள். சோதனையில் ஈடுபட முனையும் இளைஞர்களை தடுப்பது சாத்தியமல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பாக்கிஸ்தானின் கட்டுப்பெட்டித்தனமான பாலியல் சூழலிலே கூட இளைஞர்கள் சுளுவாக இதை நிறைவேற்றுகிறார்கள். இது குறித்து ஜேனெட் ஜாக்சன் என்பவர் “Let’s talk about sex baby, let’s talk about sex in Pakistan” எனும் ஒரு சுவாரஸ்யமான கட்டுரை எழுதியுள்ளார். பிரச்சனைகள் இரண்டு மட்டுமே: செக்ஸை சச்சரவின்றி, நோய் ஆபத்தின்றி பெறுவது; அதை சமாளிக்க கற்பது. இரண்டாவதை நாம் வாழ்க்கை பூரா கற்றபடி உள்ளோம். ஒவ்வொருவரும் அவரவர் வழியில். மடிக்கணினி வாங்கின போது பாட்டெரியை பராமரிப்பது பற்றி வன்பொருள் பொறியியலாள நண்பர் ஒன்று சொல்லித் தந்தார்: “முழூசா சார்ஜ் ஆன பிறகு தொடர்ந்து ஏற்றி ஓவர்சார்ஜ் செய்யாதே; ஒரேயடியாக வறளவும் வைக்காதே.” இது காமத்துக்கும் பொருந்தும். கவனிக்க வேண்டியது நம்மை காமத்தில் இருந்து துண்டிக்க முடியாது என்பதே. காமத்தை தொடர்ந்து கடத்தி விட கற்றுக் கொள்வதே நாம் சஞ்சரிக்கும் மிக கடினமான பாதையாக இருக்கும். காமத்தை தொடர்ந்து நேரடியாக எதிர்பால் வழி அடையும் வாய்ப்பு சதா கிடைக்காது. ஆனால் எழுத்து, இசை, ஓவியம், உரையாடல் என எத்தனையோ வாயில்கள் எப்போதும் திறந்தே கிடக்கின்றன.

காமத்தை எதிர்கொள்வது பெரும் சவால் என்பதை ஒழுக்கக்காவலர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மனதை திசை திருப்பி திருநீர் பூசுவது வெறும் நாடகம் தான். தண்ணிரில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தேவை வேட்டி சுருட்டிக் கொண்டு ஒளிய தெரிவதா நீச்சல் கற்பதா? தண்ணீர் போலவே காமத்தை பழகியே அதனுடன் வாழவோ மீறவோ கற்க முடியும். மைக்கேல் டுடெக் டி விட் என்பவரது துறவியும் மீனும் என்கிற குறும்படம் பற்றி எஸ்.ரா உயிர்மை இதழ் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இதில் மீனைப் பிடிக்க அதை அறிய வேண்டும் என்ற மனத்திறப்பு பிக்குவுக்கு ஏற்படுகிறது. அந்த குறும்படத்தில் மீனைப் பிடிப்பது பற்றி பிக்கு ராவெல்லாம் விழித்து புத்தகம் படித்து அனைத்தும் வீண் என அறிவார். பள்ளிக்கூட பாலியல் கல்வியும், மனவியலாளரின் அறுவுரைகளும் இப்படியே முடியும். ஒரு நாகரிக சமூகம் நேரடி பாலியல் பயிற்சிக்கான ரகசிய பாதைகளை திறந்து வைத்திருக்க வேண்டும். நான் படித்த சென்னை கிறித்துவக் கல்லூரியில் அப்படி ஒன்று இருந்தது.

சென்னை கிறித்துவக் கல்லூரியில் விடுதி வாழ்க்கை நடைமுறை மற்றும் தொழில்முறை வாழ்வில் ஒருவரது ஆளுமையை புடம் போடும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டது. பேச்சு, செயல் மற்றும் நிர்வாகத் திறனை மேம்படுத்த அங்கு விடுதியின் நிர்வாகம் மாணவர்களிடம் விடப்படும். பாராளுமன்றத்தை போலி செய்யும் General Body என்ற கூட்டத்தில் செயலாளர்களுடன் நிகழ்ச்சி நிரல், வரவு செலவு கணக்கு, விதிமீறல்கள் குறித்து விடுதி அங்கத்தவர்கள் விவாதிக்கலாம். நாடாளுமன்றங்களில் போன்ற அமளி, அவதூறு, கூச்சல் குழப்பம் எல்லாம் இருக்கும். இதில் தேறி வருபவர்களுக்கு பின்னால் தனியார் நிறுவன மேலாண்மை பொறுப்புகளில் சிறக்க முடியும். செயலாளர்கள் ஆயிரக்கணக்கில் லஞ்சம் பெற்று முக்கிய புள்ளிகளுக்கு பங்கு தந்து புகார் ஏற்படாது பார்த்துக் கொள்ள.ஒரு கூட்டத்தை சமாளிக்க, விவாதத்தை ஒருங்கிணைக்க தேர்வார்கள். இத்தகைய ஒரு விடுதிக் கலாச்சாரம் ஆசியாவில் எம்.சி.சியில் மட்டுமே உண்டு. எம்.சி.சியின் மூலகர்த்தாக்கள் கார்ப்பரேட் ஆளுமையாக்கத்துடன் மட்டும் நிற்காமல் மாணவனின் எதிர்பால் மற்றும் செக்ஸ் புரிதலுக்குமான ஒரு கலாச்சார வாசலையும் ஏற்படுத்தித் தந்தார்கள். எம்.சி.சியில் நான்கு விடுதிகள்: தாமஸ் ஹால், சேலையூர் ஹால், ஹீபர் ஹால் மற்றும் மார்ட்டின் ஹால். முதல் மூன்றும் ஆண்களுக்கு, கடைசி பெண்களுக்கு. இரு பாலாரும் மற்றவர் விடுதி அறைக்குள் செல்லக் கூடாது, அதாவது 364 நாட்களும். அந்த விடுபட்ட ஒருநாள் விடுதியின் இறுதி விழா. அன்று மட்டும் பெண்களும் ஆண்களும் விடுதி அறையில் சுமார் இரண்டரை மணி நேரத்தில் அவரவர் திறமைப் படி எத்தனை நேரம் வேண்டுமானாலும் தனிமையில் சந்தித்து கொள்ளலாம். பெரும்பாலானாவர்கள் தங்களுக்கு விருப்பமானவர்களை தங்கள் அறையிலே புணர்வது அன்றுதான். அடுத்த நாள் பெருக்குபவர்களுக்கு கோயம்பத்தூர் கல்லூரி நிர்வாகத்துக்கு கிடைத்ததை விட பன்மடங்கு ஆணுறைகள் கிடைக்கும். யாரும் பெரிசாய் இதைக் குறித்து அலட்டிக் கொண்டதில்லை. பாலியல் வாய்ப்புகள் ஒருவரை சீரழிக்கும் என்பது புருடா மட்டுமே.

மிதமிஞ்சிய போகம் (போதை + செக்ஸ் + கேளிக்கை) அழிவுப் பாதை என்பது ஒழுக்கவாதிகளின் கற்பனை. நான் சென்னைக்கு படிக்க போவதாக விடைபெற்றபோது என் குருநாதர் ஜெயமோகன் ஒரு குறிப்பிட்ட அறிவுரை பகர்ந்தார்: அவருக்கு தெரிந்து ஒரு இளைஞர் நாளெல்லாம் இணைய அரட்டையில் நேரத்தையும் பணத்தையும் வீணடித்து வாழ்க்கையை தொலைத்ததாகவும், நான் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூறினார். நான் முதல் வேலையாய் அதை செய்து பார்த்தேன். எனக்கு வீட்டில் இருந்து வந்த பணத்தில் கணிசமான தொகையை இணையத்துக்கு செலவழித்தேன். ஆனால் இதுவரை அரட்டையால் வாழ்க்கையை தொலைத்தவரை சந்திக்கவில்லை. பெரும்பாலும் வாழ்க்கை சீரழிய காரணமாய் இருப்பன அப்போதைய சூழமைவும், சரியான சந்தர்ப்பங்கள் மற்றும் வாய்ப்புகள் கிடைக்காமையே. எனக்குத் தெரிந்து போதைப் பழக்கமும், மிதமிஞ்சிய காமத் தொடர்புகளும் இருந்தவர்கள் வசதியான சூழல் அமைந்ததும் எளிதாக தங்களை தகவமைத்துக் கொண்டார்கள். சதாபோதையில் உழல்பவருக்கு எங்கள் விடுதி இறுதி விழாவில் Heavenly Selayurian விருது கொடுப்போம். அதைப் பெற்ற ஒரு நபர் இப்போது வெற்றிகரமான மருத்துவர். வகுப்பு இடைவேளையின் போது அப்பட்டமாக கஞ்சா புகைத்து திரிந்த ஒரு வங்காளிப் பெண் நல்ல மதிப்பெண் பெற்றார். தற்போது இங்கிலாந்தில் மூன்று நாய் மற்றும் கணவனுடன் வீட்டு மனைவியாக வாழ்கிறார் (இந்த தொடர் அமைப்புக்கு நிஜந்தன் மன்னிக்கவும்).

குடியோ காமமோ மனிதனின் வேடிக்கையான நிறஜாலங்களை வெளிக்கொணரும். விலகி நின்று காண தெரிய வேண்டும். மனிதர்களை உற்று கவனிக்க ஆர்.கே நாராயண் போல் பூங்காவுக்கோ ஆலமரத்தடிக்கோ செல்லாமல் டாஸ்மாக்கிற்கு போகலாம். கேளிக்கை மிக முக்கியமான திறப்பு அல்லது திரைவிலகல். இறுதியாக ஜூ.விக்கு: பயின்ற காவல் நாய்கள் அரிதாகவே குலைக்கும்.

Wednesday, November 25, 2009

தமிழகத்தில் பிரபாகரன் பிறந்தநாள் சுவரொட்டியால் பரபரப்பு!



சென்னை:

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்தநாள் வாழ்த்து சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் பிரந்தநாள் வரும் 26ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 27 ஆம் தேதி தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் நினைவுநாள் மாவீரர் தினமாக அனுசரிக்கப்பட்டுவருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் நாளில் பொதுமக்கள் மத்தியில் தோன்றி பிரபாகரன் உரையாற்றுவது வழக்கம். இலங்கையில் விடுதலைப்புலிகளை ஒடுக்கிவிட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ள நிலையில் இந்த ஆண்டு மாவீரர் நாளில் பிரபாகரன் உரையாற்றுவாரா என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபாகரனின் பிறந்த நாளான 26ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் தங்கள் நாடுகளில் பிறந்தநாள் விழா, மாவீரர் நாள் ஆகியவற்றிற்கான ஏற்பாடுகளை செய்துவருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் பிரபாகரனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லும் பல வண்ண சுவரொட்டிகள் ஏராளமாக ஒட்டப்பட்டுள்ளன.

நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டியில்...' எங்கள் தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு பிறந்தநாள்வாழ்த்துக்கள் இலை உதிர்வது இயற்கை சுழற்ச்சி வேர்கள் உதிர்வதில்லை வேர்கள் இருப்பதை நாளை இயற்கை மீண்டும் உறுதி செய்யும்"என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த சுவரொட்டியினால் உளவுத்துறை போலீசாரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் விடுதலைப்புலிகள் மீதான தடை அமலில் உள்ள நிலையில் அதன் தலைவர் பிரபாகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது மாநிலம் முழுவதும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 1

தற்போது இயற்கை விவசாயம் பெரும் அளவில் விவசாயிகளால் பின்பற்றப்பட்டு வருகிறது. இதில் பூச்சிக் கட்டுப்பாடு மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. இதில் ஒரு எளிமையான முறை ஒன்றை தற்போது காண்போம். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசல் என்பது இதன் பெயர்.

பூண்டு 1 கிலோ எடுத்து கெரசினில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும் பின்னர் இதனை எடுத்து நல்ல விழுதாக வருமாறு அரைத்துக் கொள்ள வேண்டும்.

1/2 கிலோ பச்சை மிளகாய் மற்றும் 1/2 கிலோ இஞ்சி எடுத்து தனித்தனியாக விழுது பதத்தில் அரைத்து வைத்துக்கொள்ள வேன்டும்.

பின்னர் இவ்வாறு தனித்தனியாக அரைத்த விழுதுகளை நன்றாக கலந்து ஒரு காடா துணியில் வைத்துக் கொள்ள வேண்டும் (ஜிலேபி பிழிவது போல் வைத்துக் கொள்ள வேண்டும்).

இவ்வாறு தயார் செய்த காடா துணியில் வைக்கப்பட்ட கலவையை 6 லிட்டர் நீரில் முக்கி ரசத்தை வடிக்கவும். இப்போது நமக்கு 6 லிட்டர் கரைசல் தயார்.

இந்த கரைசலை பூச்சி தாக்குதல் குறைவாக இருந்தால் 500 மில்லியும் தாக்குதல் அதிகமாக இருந்தால் 1 லிட்டரும் எடுத்து முறையே 9.5 மற்றும் 9 லிட்டர் தண்ணீரில் கலந்து பூச்சிகள் / செடிகள் மீது தெளித்தால் புழு வகை பூச்சிகள் முற்றிலும் கட்டுப்படுத்தப்படும்.

காதி சோப்பை தண்ணீரில் கரைத்து அடித்தால் அது நாம் அடிக்கும் இயற்கை பூச்சிமருந்து கரைசலை செடியின் மீது ஈர்த்து வைத்து கொள்ள உதவும். இதன் மூலம் இக்கரைசலின் வீரியமும் அதிக நேரம் செடியில் இருக்கும்.

இதை தயார் செய்யும்போது கைக்கு கையுறை தேவை. இல்லையெனில் கை எரிச்சல் அதிகமாக இருக்கும். கவனம் தேவை.

இதனைப்பயன்படுத்தி பார்த்து உங்கள் கருத்துக்களை பதியுங்கள். இது எங்கள் அனுபவம்.

Tuesday, November 17, 2009

வருகிறார் பொட்டு… – விகடன்

போர்க் காலமோ, கார் காலமோ ஈழத் தமிழர்களுக்கு நவம்பர் மாதம் எப்போதும் கொண்டாட்டமான மாதம். காரணம், மாவீரர் தினம். நவம்பர் மாதம் 22-ம் தேதி தொடங்கும் அந்த விழா 27-ம் தேதி மாலையுடன் முடிவடையும். ‘தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே!’ என்ற பாடலின் பின்னணியில் பிரபாகரன் தோன்றிப் பேசுவார்.

புலம் பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் அந்த நேரத்துக்காகத் தவம் இருப்பார்கள். அதற்கு முந்தைய 26-ம் தேதிதான் பிரபாகரனின் பிறந்த நாள். கடந்த ஆண்டு போர்க் கால நெருக்கடி சூழ்ந்த நேரத்திலும், பிரபாகரன் தோன்றினார். ”சமாதானத்துக்கான வாசல்களைத் திறந்து வைத்திருக்கிறோம். ஆனாலும், எம் எதிரி போரை நிறுத்துவதாகத் தெரியவில்லை. இந்தியாவை நட்பு சக்தியாகத்தான் நினைத்தோம். நினைக்கிறோம். இந்தியா எங்களுக்கு தீர்வு ஏற்படுத்தித் தர வேண்டும். இந்நிலையில் புலம்பெயர்ந்து வாழும் இளைஞர்களுக்குத்தான் நான் மிகுந்த நன்றியைச் சொல்ல வேண்டும். அவர்கள் ஆதரவுதான் அனைத் துக்கும் மேலாக முக்கியமானது!” என்றார் பிரபாகரன்.

ஆனால், புலிகள் இயக்கம் மீண்டு எழ முடியாமல் முடக்கப்பட்டது. பிரபாகரன் இறந்ததாக அறிவிக்கப்பட்டார். புலம்பெயர்ந்த தமிழர்கள் இதை நம்பவில்லை என்றாலும், நவம்பர் 27 அன்று பிரபாகரன் திரையில் தோன்றுவாரா என்ற எதிர்பார்ப்பும் குழப்பமும் கலந்துகட்டி அடிக்க ஆரம்பித்திருக்கிறது. ‘பிரபாகரன் வர மாட்டார். ஆனால், பொட்டு அம்மான்தான் இந்த வருட மாவீரர் தின உரையை நிகழ்த்தவிருக்கிறார்!’ என்ற தகவல் பரவி வருகிறது. அந்தத் தகவலுக்கு வலு சேர்க்கும் ஆதாரங்களுள் ஒன்றாக பிரபாகரனும் பொட்டு அம்மானும் இருக்கும் புதிய படம் ஒன்றைப் புலிகள் ஆதரவு இணையதளங்கள் வெளியிட்டு உள்ளன. இதுவரை வெளிவராத அந்தப் படத்துக்கு மேலே, ‘இந்தப் படம் சொல்லும் தகவல் என்ன?’ என்ற புதிரான கேள்வியும் தொக்கி நிற்கிறது.

இதுபற்றி விசாரித்தபோது, ”மே 18-ம் தேதி சிங்கள ராணுவத்துக்கும் புலிகள் அமைப்புக்கும் நடந்த இறுதி யுத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. புலிகள் அமைப்பின் முக்கியத் தளபதிகள் அழிக்கப்பட்டதாகவும் நந்திக் கடல் வழியாக பிரபாகரன் தப்பிக்க முயற்சித்த போது சுட்டுக் கொன்றதாகவும் அறிவித்தார்கள். இவை எல்லாம் நிகழ் வதற்கு ஒரு வாரத்துக்கு முன், புலிகள் அமைப்பின் முக்கியப் பொறுப்பாளர்களை மட்டும் அழைத்தாராம் பிரபாகரன். ‘இன்று முதல் மூன்று பிரிவுகளாக நாம் பிரிந்து செயல்பட வேண்டும். ஒரு அணியினர் இங்கிருந்து சிங்கள ராணுவத்துடன் போராடட்டும். இன்னொரு பிரிவினர் அரசிடம் சரணடைந்து தங்களது அரசியல் கோரிக்கையை உலகத்துக்குச் சொல்லட்டும். மூன்றாவது பிரிவினர் இங்கிருந்து தப்பிச் செல்ல வேண்டும். இதில் யார் யார் எந்தப் பிரிவில் சேர்க்கப்படுவார்கள் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. நான் எனது நிலையைத் தீர்மானித்துக்கொள்கிறேன். இனி, உங்களை வழிநடத்தும் பொறுப்பை பொட்டு அம்மானிடம் ஒப்படைக்கலாம் என்று நினைக்கிறேன். இந்த இயக்கத்தின் துணைத் தலைவராக அவர் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்!’ என்று அறிவித்தாராம் அப்போது. இயக்கத்தின் தளபதிகளும் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட னராம். அப்போது எடுக்கப்பட்ட படத்தில்தான் பிரபாகரனுக்குச் சரிசமமாக பொட்டு உட்காரவைக்கப்பட்டார். இதில் பல ஆச்சர்ய மான விஷயங்கள் உண்டு!” என்ற பீடிகை கொடுத்து நிறுத்தியவர்கள் மேலும் தொடர்ந்தார்கள்…

”பொதுவாக பொட்டு அம்மான், புலிகளின் சீருடையைத்தான் எப்போதும் அணிவார். சாதாரண உடைகள் அணிந்து அவரைப் பார்க்கவே முடியாது. அரிதாக டி-ஷர்ட் அணிவார். இந்தப் படத்தில் பிரபாகரன் அணிந்துள்ள அதே நிறத்தில் சட்டை அணிந்துள்ளார். மேலும், பொட்டு அம்மான் எப்போதும் கறுப்பு நிற வார் வைத்த சாதாரண வாட்ச்தான் அணிவார். சில்வர் செயின் வாட்ச் அணிந்தால் தனிப்பட்ட அடையாளமாகிவிடும் என்பதால், அதை அணியவே மாட்டார். ஆனால், இப்படத்தில் அதிலும் மாற்றம். சிரித்த முகத்துடன் இருக்கும் அவர் சீரியஸான முகத்துடன் காணப்படுகிறார். இப்படி எத்தனையோ மாற்றங்களை அடுக்கலாம். மிக நெருக்கடியான தருணத்தில் எடுக்கப்பட்ட இப்படம், ஆறு மாதங்கள் கழித்து வெளியானதற்கான பின்னணி ‘நவம்பர் 27′-ம் தேதியாக இருக்கலாம்!” என்று முடித்தார்கள்.

இலங்கையில் தேர்தல் நடந்து முடியும் வரை அரசியல் நிலவரங்களைக் கவனித்துவிட்டு அதன் பிறகு வெளிப்படையாகச் சில அறிவிப்புகளைச் செய்ய புலிகள் அமைப்பினர் முடிவெடுத்திருந்தனராம். ஆனால், புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழீழ ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. குமரன் பத்மநாபன் எனப்படும் கே.பி.அணியினர், காஸ்ட்ரோ அணி யினர் என இரண்டு தரப்பாகப் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இதைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் யாராவது ஒருவர் வெளிப்படையாக வந்து அறிவித்தால்தான் குழப்பங்களைத் தவிர்க்க முடியும் என்று முடிவெடுத்துள்ளார்கள். அதன் அடிப்படையில் பொட்டு வெளியில் வர இருப்பதாக நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

அதே சமயம், ‘பொட்டு அம்மான் இறந்தது உண்மை. ஆனால், அவரது உடலைத்தான் எங்களால் அடையாளம் காண முடியவில்லை!’ என்று இலங்கையின் பாதுகாப்பு ஆலோசகர் கோத்தபய ராஜபக்ஷே சொல்லி வருகிறார். தமிழக எம்.பி-க்கள் குழு அங்கு சென்றபோதும், ‘பிரபாகரனது உடலை நாங்கள் அடையாளம் கண்டுவிட்டோம். ஆனால், பொட்டு பற்றித்தான் உறுதியாக எதையும் சொல்ல முடியவில்லை!’ என்று அரசியல் ஆலோசகர் பசில் ராஜபக்ஷே சொல்லியிருக்கிறார். எனவே, பொட்டு அம்மான் குறித்த சந்தேகங்கள் இன்னமும் முழுக்க களையப்படவில்லை என்பது உண்மை.

புலிகள் அமைப்பின் ஆரம்பக் கட்டத்தில் பிரபாகரன் தலைமையிலான மத்தியக் கமிட்டியில் 32 உறுப்பினர்கள் இருந்தார்கள். அதில் சண்முகலிங்கம் சிவசங்கரன் என்ற இளைஞன்தான் பின்னாட்களில் பொட்டு அம்மானாக உருவெடுத்தார். புலிகள் அமைப்பு மீது சிங்கள ராணுவத்தின் கவனத்தை அதிர்ச்சியுடன் திருப்பிய திருநெல்வேலி தாக்குதலில் இவர் இருந்தார். பிரபாகரனிடம் ஆயுதப் பயிற்சி பெற்று, பின்னர் அவருக்கே மெய்க்காப்பாளராக இருந்தவர். வேதாரண்யம் பகுதியைக் கவனித்து வந்தவர். பின்னர் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மாவட்டத் தளபதியாக ஆனார். வேவு பார்ப்பதில் தேர்ந்தவராக இருந்ததால், புலிகளின் புலனாய்வுப் பிரிவை பொட்டுவிடம் ஒப்படைத்தார் பிரபாகரன். 1988-ம் ஆண்டு இப் பொறுப்புக்கு வந்த பொட்டு 16 பிரிவுகளை உருவாக்கி, புலிகளின் திரைமறைவு வெற்றிகளுக்குப் பெரிதும் உதவி னார். இந்திய அமைதிப் படைக்கும் புலிகளுக்கும் சண்டை தொடங் கியபோது, முதல் தாக்குதலில் பலத்த காயம்பட்டு முடக்கப் பட்டார் பொட்டு. வயிறு, கால், கை ஆகியவற்றில் பலத்த காயம் பட்டது. மரணத்தறுவாயை நெருங்கியவரை மிகுந்த சிரமத்துக்குப் பிறகு மீட்டெடுத்து வந்தார்கள். அந்தச் சமயத்தில், அவரை அருகில்இருந்து கவனித்துக்கொண்டவர் பாலசிங்கத்தின் மனைவிஅடேல்.

ராஜீவ் காந்தி கொலையில் பொட்டு அம்மானைத் தொடர்புபடுத்தி சி.பி.ஐ. குற்றச்சாட்டு பதிவு செய்தபோதுதான், இப்படியரு ஆள் இருப்பதே வெளியில் தெரிந்தது. மூன்று ஆண் பிள்ளைகள் பொட்டு அம்மானுக்கு. அதில் இருவர் அமைப்பில் இணைந்து போராடி இறந்துவிட்டார் களாம். ஒரு மகன் மட்டும் இருக்கிறார். ‘குடும்பத்துக்கு ஒருவரை இயக்கத்துக்குத் தந்தால் போதுமே. இன்னொரு மகனை எங்காவது படிக்கவைக்கலாமே!’ என்று பொட்டு அம்மானிடம் சொன்னதற்கு, ‘அதெல்லாம் மற்றவர்களின் குடும்பத்துக்கு. எனது குடும்பத்தினர் அனைவருமே இயக்கத்துக்குத்தான்!’ என்றாராம் பொட்டு. 10 ஆண்டுகளுக்கு முன் பொட்டு அம்மானைப்பற்றி தனது புத்தகத்தில் இப்படிக் குறிப்பிட்டு இருக்கிறார் அடேல் பாலசிங்கம், ‘சுற்றி வளைப்புகளில் இருந்து எதிரிகளைத் திணறடித்து வெளியேறுவதில் அவருக்குப் பல ஆண்டு அனுபவம் உண்டு!’

அடேல் சொன்னது இப்போதும் நடந்திருக்குமா? நவம்பர் 27-ம் தேதி முடிவு தெரியும்!

நன்றி: விகடன் சஞ்சிகை

1 மணி நேர சம்பளம் ரூ.82,000 வாங்கும் சிறுவன்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரைச் சேர்ந்தவர் செரியனா அலியாஸ். இவரது மகன் ஆதி புத்ர அப்துல் கனி. வயது 10. செரியானா 2 நிறுவனங்களைத் தொடங்கி ஆதி என்ற பெயரில் விட்டமின் மாத்திரைகளை விற்பனை செய்து வருகிறார்.

அப்துல் கனி, 3ம் வகுப்பு வரை படித்தான். ஆனால், தனது பாடத் திட்டத்துக்கு மீறி, இயற்பியல், வேதியியல், கணிதம், புவியியல், உயிரியல் ஆகிய பிரிவுகளில் அடுக்கடுக்கான அறிவை வெளிப்படுத்தினான். இன்டர்நெட்டில் புகுந்து எல்லாவற்றையும் கரைத்துக் குடித்தான்.அறிவுத் தேடலுக்கு இடையே, அன்னையின் பிசினசையும் கவனித்துக் கொள்ளத் தொடங்கினான்.

இப்போது 2 நிறுவனங்களின் செயல்பாட்டையும் ஏறக்குறைய தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளான் அப்துல் கனி. அதனால், அந்த கம்பெனிகளின் தலைமைச் செயல் அதிகாரி என அவனை அழைக்கின்றனர்.

பல பாடப் பிரிவுகளில் அவனுக்கு உள்ள அபார ஞானத்தை அறிந்த மலேசிய கல்லூரிகள், அவனை பகுதி நேர விரிவுரையாளராக அழைக்கின்றன.அம்மாவின் கம்பெனி நிர்வாகத்தைக் கவனிப்பதுடன், கல்லூரிகளில் விரிவுரை ஆற்றுவது, இன்டர்நெட்டில் மூழ்குவது என இருக்கிறான் அப்துல் கனி. ஒரு மணி நேர விரிவுரைக்கு ரூ.82,300 ஊதியம் பெறுகிறான்.

நம்ப வருமானம் வருசத்துக்கு ரூ.80,000 கூட கிடைக்களைனு நீங்க சொல்லறது புரியுது. அட விடுங்க பாஸ்.... இருக்கிறதை வைத்து சிறப்பா வாழ்வோம்!

Friday, November 6, 2009

சிங்களர்களின் கொடும் சித்திரவதைக் கூடத்தில் பிரபாகரன் பெற்றோர்!

Prabhakaran with Family
பிரபாகரனின் பெற்றோர் திருவேங்கடம் வேலுப்பிள்ளையும், பார்வதியம்மாளும் சிங்கள அரசின் முரட்டுச் சித்திரவதைகளில் அவதிப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உலகத் தமிழர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து ஆனந்த விகடன் வார இதழ் ஒரு அதிர்ச்சிக் கட்டுரையை வெளியிட்டுள்ளது.

அதில், பிரபாகரனின் பெற்றோரை இலங்கை போலீசார் மற்றும் ராணுவத்தினர் கல்பிட்டியில், 'நாலாவது மாடி' என அழைக்கப்படும் சித்திரவதைக் கூடத்தில் தனித் தனியாக பிரித்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுரையின் ஒரு பகுதி:

"சிங்களப் பகைவனுக்குக்கூட அன்பு பாராட்ட வேண்டும் எனப் போதித்த பிரபாகரனின் பெற்றோர் திருவேங்கடம் வேலுப்பிள்ளையும், பார்வதியம்மாளும் இப்போது சிங்கள அரசின் முரட்டுச் சித்திரவதைகளில் அவதிப்பட்டு வருவதாகக் கடல் கடந்து வரும் தகவல்கள்தான் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் மனங்களில் வேதனை வலியைப் பரவ வைத்திருக்கிறது.

இலங்கை வல்வெட்டித்துறையில் நன்கு அறியப்பட்ட நடுத்தர வர்க்கக் குடும்பம் திருவேங்கடம் வேலுப் பிள்ளையினுடையது. இலங்கை அரசாங்கத்தில் மாவட்டக் காணி அதிகாரியாகப் பணிபுரிந்தவருக்கு பிரபாகரன், ஜெகதீஸ்வரி, விநோதினி என மூன்று குழந்தைகள். மகன் பிரபாகரன் தேர்ந்தெடுத்த பாதையை மாற்ற ஆரம்பத்தில் எவ்வளவோ முயற்சித்தவர்.

பின்னாட்களில் மகனுக்குப் பின்னால் திரண்ட போராட்ட வீரர்களைப் பார்த்து, தவிப்புடன் ஆசி வழங்கி போராட்டத்துக்குத் தத்துக் கொடுத்தார் மகனை. அதன் பிறகு சிங்கள அரசுக்கும் பிரபாகரனின் படைக்கும் பல முறை போராட்டங்கள் நடந்தபோதெல்லாம் முதலில் பாதிக்கப்படுவது வேலுப்பிள்ளைதான். வேதனையும் பயமும் உள்ளுக்குள் நொறுக்கினாலும், மகனின் வீரப் போராட்டத்துக்காக எதையும் வெளிக்காட்டாமல் வெள்ளந்தி மனிதராக வாழ்ந்தவர்.

ஒரு கட்டத்தில் இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடித்துக் கொடுக்க... மூத்த மகள் ஜெகதீஸ்வரி கணவருடன் கனடா சென்றுவிட்டார். இளைய மகள் விநோதினி திருச்சியில் தங்கி விட்டார்.

மரபுவழி இராணுவப் போர் உக்கிரமாகத் தொடங்கிய காலத்தில் பிரபாகரன், தன் பெற்றோரை வற்புறுத்தி 83-ம் ஆண்டில் இந்தியா அனுப்பிவைத்தார். திருச்சி இராமலிங்க நகரில் இருந்த விநோதினியின் வீட்டில் தங்கியிருந்தபடி மருத்துவச் சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தனர் இருவரும். பின்னர், விநோதினியும் கனடா சென்றுவிட, தங்களுக்கு மருத்துவம் பார்த்த முசிறி டாக்டர் இராஜேந்திரனுடன் முசிறியிலேயே தங்கி இருந்தனர்.

அமைதி ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த காலத்தில் 2003-ம் ஆண்டில் தமிழீழம் கிளம்பிப் போனார்கள். அதன் பிறகு கடைசி வரை பிரபாகரனுடயே இருந்தவர்களை இறுதிக்கட்டப் போரின்போது தமிழகத்துக்குச் செல்லும்படி எவ்வளவோ கூறி இருந்திருக்கிறார் பிரபாகரன் [^]. 'வாழ்வோ, சாவோ... இனி உன்னோடுதான்' என்ற உறுதியோடு இருந்தவர்கள், சிங்கள இராணுவத்தின் கைகளில் சிக்கியது காலத்தின் கோலம்தான்.

"போர் பாதிப்பின் அடையாளமாக எஞ்சிஇருந்த மிச்சசொச்சம் தமிழ்ச் சொந்தங்கள் சொந்த தேசத்துக்கு உள்ளேயே நாடு கடத்தப்பட்ட அகதிகளாக இராணுவத்திடம் சரண் அடைந்திருந்தனர். அந்த மக்களோடு மக்களாக மெனிக்பாம் அகதிகள் முகாமில் தஞ்சம் அடைந்திருந்தனர் பிரபாகரனின் பெற்றோர்.

அவர்களைத் தேடி வந்த இராணுவத்தினர் ஏனைய மக்களைச் சித்திரவதைக்கு உள்ளாக்கியபோது, தாங்களாகவே முன்வந்து 2009, மே 20-ம் தேதி தங்களை ஒப்புக் கொடுத்தனர் பிரபாரனின் பெற்றோர்.

வவுனியா இடைத்தங்கல் முகாமுக்கு இருவரையும் அழைத்துச் சென்ற இராணுவம், அங்கு தனிமையில் வைத்திருந்தது. 76 வயதான வேலுப்பிள்ளையும், 71 வயதான பார்வதியம்மாளும் உடல்நிலை மோசமாகி மிகவும் சிரமப்பட்ட போதுகூட, அவர்களுக்கான மருத்துவ உரிமையைப் பறித்தது இராணுவம்" என்று இப்போது சொல்லும் சில ஈழத் தமிழ் பிரமுகர்கள்,

"60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களுக்கு உதவியாக உறவினர் ஒருவரை வைத்துக் கொள்ளலாம் என்ற பொது விதியைக்கூட பிரபாகரனின் பெற்றோருக்கு அவர்கள் மறுத்துவிட்டனர். ஒரு மாத காலம் வவுனியா முகாமில் இருந்தவர்களை, பின்பு சிங்கள இராணுவம் எங்கோ கொண்டு சென்றது. இதுவரை விவரம் தெரியாமல் இருந்தது.

இப்போது, அந்த அப்பாவி முதியவர்கள் இருவரும் 'போர்த் ப்ளோர்' எனப்படும் 4வது மாடியில் இலங்கை மத்திய குற்றப் புலனாய்வுத் துறை அலுவலகத்தில் இருப்பதாக வரும் செய்திகள் [^] கேட்டு நடுங்கிப் போயிருக்கிறோம்" என்கிறார்கள் உள்ளார்ந்த பதைபதைப்புடன்!

நாலாவது மாடி என்ற வார்த்தையைக் கேட்டு ஏன் பதைபதைக்க வேண்டும்?

சிங்களக் கொடுங்கோலன் ஜெயவர்த்தன ஆட்சிக் காலத்தில் கொழும்பு கொள்ளுப்பிட்டிப் பகுதியில் உள்ள கட்டடத்தின் நான்காவது மாடிக்கு மெள்ள மெள்ள அப்படியொரு 'புகழ்' சேரத் தொடங்கியதாம்!

இலங்கை மத்தியக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அங்கே ஹிட்லரின் சித்திரவதைக் கூடத்தைவிட பயங்கரமான நிகழ்வுகளை அரங்கேற்றிக் காட்டுவது வழக்கமாம். அரசுக்கு எதிரான முக்கிய தமிழ்முகங்கள் சிக்கிவிட்டால்... அவர்களை சிறுகச் சிறுக நொறுங்க வைத்து ரகசியங்களைப் பிடுங்க முடிவெடுத்துவிட்டால்... இந்த நாலாவது மாடிக்கு கொண்டு போய்விடுவார்களாம்.

"இங்கே போய் உயிரோடு திரும்பியவர்கள் மிக அபூர்வம்தான்! அப்படி உயிரோடு திரும்பி வருபவர்களும் வாழ்நாள் முழுக்க நிம்மதியாகத் தூங்க முடியாது. கனவிலும் மிரட்டும் கொடுமைகள் அப்படி!

சுவர் எங்கும் தெறித்து விழுந்த இரத்தக்கறைகளும், ஓயாத மரணவலி ஒலங்களும் அந்த நான்காம் மாடியில் ஒலித்துக் கொண்டே இருக்குமாம். அந்த இடத்தை 'சாத்தானின் மாளிகை' என்றும் 'பிசாசுக் கூடாரம்' என்றும் விவரம் தெரிந்த தமிழர்கள் [^] சொல்வது வழக்கம்" என்று விளக்கம் கிடைக்கிறது.

விசாரணைக்காக வரும் நபர்களை வகைப்படுத்தியே சித்திரவதை தொடங்குவார்களாம். ஆடைகளைக் கழற்றி, பனிக்கட்டிகள் நிரம்பி இருக்கும் ஓர் அறையில் நடுங்கும் குளிரில் உறையவைப்பது... கேட்கிற கேள்விக்கு 'திருப்தி'கரமான பதில் வராவிட்டால், குளிருக்கு நேரெதிரான பாஸ்பரஸ் ட்ரீட்மென்ட் நடக்குமாம். பாஸ்பரஸை உடலில் தடவி, கொதிக்கிற மின் தகட்டைக் கையிலெடுத்து... மேற்கொண்டு கேட்டால், இளகிய மனங்கள் துடிதுடித்துப் போகும்.

தலைகீழாகத் தொங்கவிடுவது... பிறகு, பி.வி.சி. பைப்புகளில் மணலை நிரப்பி அடித்து நொறுக்குவது... தலைகீழாகத் தொங்குபவரின் தலையில் முழுக்க பெட்ரோல் நிரம்பிய ஒரு பொலித்தீன் பையை மாட்டுவது... மூச்சுவிட முடியாமல் அவர்கள் பெட்ரோலை மெள்ள மெள்ளக் குடிப்பதையும்... அதன் நெடி மிகுந்த காற்றைச் சுவாசிப்பதையும் ரசிப்பது!

விதவிதமாக நீள்கின்றன இந்த சித்திரவதைப் படலங்கள்.

வாய் வழியே பெட்ரோல் சென்று அரை மயக்க நிலையில் ஆழ்ந்த பிறகும், கேட்ட கேள்விக்குப் பதில் வராவிட்டால் வாய்க்குள் தீக்குச்சியைக் கொளுத்திப் போடுவார்களாம் குரூர அதிகாரிகள்! இதில், உடலின் உள்ளுறுப்புகள் தீயினால் வெந்து பொசுங்கிவிடும்.

உயிர் ஊசலாடிக்கொண்டு இருக்கும்போது, நான்கைந்து பேர் மட்டுமே கால்நீட்டி அமரக்கூடிய ஓர் அறைக்குள் 20-க்கும் மேற்பட்ட நபர்களை நின்ற நிலையில் அடைத்து விடுவார்களாம். துளிகூட வெளிச்சம் புகாத அந்த இருட்டறைக்குள் முனகலும், மூச்சுவிடும் சத்தமும் மட்டும்தான் துணையிருக்கும். மற்றபடி எல்லாமே அந்தகாரம்தான்!

மனநிலையை உருக்கி, உண்மைகளை வாங்குவதற்காக இப்படி உணவு, தண்ணீர் தராமல் பலநாட்கள் இருட்டுக்குள் வைத்திருப்பது உண்டு என்றும் இலங்கைத் தமிழ்ப் புள்ளிகள் மத்தியில் பரவிக்கிடக்கிறது சேதி.

"பெண்களின் நிலைமையோ எழுத்தில் வடிக்க முடியாது" என பயம் பரவ நாலாவது மாடி பற்றி விவரிக்கிறார்கள் இலங்கைத் தமிழ் நிருபர்கள் சிலர்.

"இத்தகைய ஓரிடத்தில் கடந்த நான்கு மாதங்களாக விசாரணை என்ற பெயரில் பிரபாகரனின் தாய் - தந்தை வைக்கப்பட்டு இருப்பதாக அறிகிறோம். வேலுப்பிள்ளைக்கு சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற பாதிப்புகள் உள்ளனவாம். தாய் பார்வதியம்மாளுக்கும் சர்க்கரை, உயர் இரத்த அழுத்த பாதிப்பு உண்டாம். அவர்களுக்கு அங்கே என்னவிதமான மருத்துவக் கண்காணிப்பு அளிக்கப்படுகிறது என்று தெரியவில்லை. அவர்களிடமிருந்து சிங்கள அதிகாரிகள் என்ன தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள் என்றும் புரியவில்லை!

இருவரையும் தனித்தனியே பிரித்து தனிமைச் சிறையில் அடைத்து வைத்திருப்பதாக துளியளவு இரக்கமுள்ள சில அதிகாரிகள் மூலம் தகவல் வருகிறது. முதுமையில் தனிமையின் பயம் எத்தகைய மனக் குழப்பங்களை உண்டாக்கும் என்று சொல்லத் தேவையில்லை. உணவுக் கட்டுப்பாட்டுக்கும் வழியில்லை அந்த நோயாளித் தம்பதிக்கு!

இந்திய எம்.பி-க்கள் குழு இலங்கை சென்றபோது 'பிரபாகரனின் பெற்றோரைப் பார்க்க வேண்டும்' என வேண்டுகோள் வைத்திருக்கிறார் திருமாவளவன் [^]. இதற்கு மறுப்புத் தெரிவித்த அதிபர் ராஜபக்ஷவின் சகோதரரான பசில், பிரபாகரனின் பெற்றோர் நலமுடன் இருப்பதாக மட்டுமே தெரிவித்திருக்கிறார்.

'அவர்களை வெளியில் விடுவதற்கு எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால், அவர்கள் இந்தியாவில் தங்குவதாக இருந்தால் மட்டும்தான் வெளியில் விடுவோம். மற்ற வெளிநாடுகளுக்குப் போனால், அவர்கள் எங்களுக்கு எதிராகப் பேட்டிகள் கொடுப்பார்கள். இப்படித்தான் டாக்டர் தமிழ்வாணியை நாங்கள் வெளியில் விடச் சம்மதித்தோம். ஆனால், லண்டன் போனவர் எங்களையே விமர்சித்தார். அந்த மாதிரி பிரபாகரனின் பெற்றோர் செயல்படக் கூடாது அல்லவா?' என்று பசில் ராஜபக்ஷே, திருமாவளவனிடம் சொன்னதாக எங்களுக்கு ஒரு தகவல் இருக்கிறது" என்கிறார் இலங்கை தமிழ் பத்திரிகையாளர் ஒருவர்.

இலங்கைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான சம்பந்தன் மற்றும் எம்.பி. சேனாதிராஜா ஆகியோரின் உதவியுடன் பெற்றோரை மீட்டுத் தமிழகம் கொண்டுவரும் நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கிறாராம் பிரபாகரனின் சகோதரி விநோதினி. இதற்கு இலங்கை அரசாங்கம் எந்தளவு ஒத்துழைக்கும் என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் இலங்கை குறித்த போர்க் குற்ற அறிக்கை தாக்கலாகி இருப்பதைத் தொடர்ந்து, இங்கிருந்து யாரையும் இனி வெளிநாடுகளுக்கு அனுப்ப இலங்கை சம்மதிக்காது என்கிறார்கள் கொழும்பு பத்திரிகையாளர்கள்!

"பிரபாகரனின் பெற்றோருக்கு உண்மையில் என்ன நடந்தது, அவர்களது இப்போதைய நிலைமை என்ன என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும்" என்று தமிழீழ ஆதரவு அமைப்புகள் கோரிக்கை வைக்கத் தயாராகி வருகின்றன.

இலங்கையின் சித்திரவதை அத்தியாயம் இப்போதைக்கு முடிவதாகத் தெரியவில்லை!

நன்றி: விகடன்

Thursday, November 5, 2009

வீட்டு உரிமையாளரின் குழந்தையை பிச்சை எடுக்க வாடகைக்கு விட்ட வேலைக்காரி!

பெங்களூர்: குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காக வேலைக்கு நியமிக்கப்பட்ட பெண், அந்தக் குழந்தையை பிச்சை எடுக்க வாடகைக்கு விட்ட கொடுமை பெங்களூரில் நடந்துள்ளது.

கைக்குழந்தையுடன் இருக்கும், கணவன், மனைவி இருவரும் வேலை பார்க்கும் நிலையில் உள்ள குடும்பத்திற்கு இந்த செய்தி [^] நிச்சயம் ஒரு உஷார் பாடம்...

பெங்களூரைச் சேர்ந்தவர் அனாமிகா. எம்.பி.ஏ. படித்துள்ளார். தனியார் நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில் இருக்கிறார். இவருடைய கணவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

அனாமிகா தம்பதிக்கு 7 மாதமே ஆன கைக்குழந்தை உள்ளது. கணவன், மனைவி [^] இருவரும் வேலைக்குப் போய் விடுவதால் குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காக ஒரு வேலைக்காரப் பெண்ணை அமர்த்தியிருந்தனர்.

காலையில் வீட்டுக்கு வருவார் இந்தப் பெண். பின்னர் அனாமிகாவும், அவரது கணவரும், மாலையில் வீடு திரும்பும் வரை குழந்தையும், வீடும் இந்தப் பெண்ணின் பொறுப்பில்தான் இருக்கும்.

2 நாட்களுக்கு முன்பு வழக்கம் போல அனாமிகாவும், கணவரும் வேலைக்குப் போய் விட்டனர். அன்று வழக்கத்திற்கு விரோதமாக சற்று முன்பே வீடு திரும்பி விட்டார் அனாமிகா. வீட்டுக்கு வந்தபோது, குழந்தை அங்கு இல்லை. வேலைக்காரப் பெண் மட்டும் ஜாலியாக டிவி பார்த்துக் கொண்டிருந்தார்.

குழந்தை குறித்து கேட்டபோது வேலைக்காரப் பெண் மழுப்பியுள்ளார். இதையடுத்து அவரிடம் அனாமிகா கடுமையாக கேட்டபோது உண்மையை கொட்டியுள்ளார்.

பிச்சைக்காரர்கள் பிச்சை எடுப்பதற்காக குழந்தையை வாடகைக்குக் கேட்டேன். அதற்கு தினசரி ரூ. 100 தருவதாக கூறினார்கள். இதனால் குழந்தையை வாடகைக்கு விட்டுவிட்டேன் என்று அந்தப் பெண் கூறியதும் அனாமிகா பெரும் அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக கணவருக்குப் போன் செய்து வரவழைத்து நடந்ததைக் கூறி அழுதுள்ளார். அனாமிகாவின் கணவரும் இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அந்த வேலைக்காரப் பெண்ணை அழைத்துக் கொண்டு குழந்தையை வைத்திருந்த பிச்சைக்காரர்களை அணுகி குழந்தையை மீட்டுள்ளனர்.

தினசரி காலை அனாமிகாவும், அவரது கணவரும் வேலைக்குப் போன பின்னர் வாடகைக்கு எடுத்த பிச்சைக்கார கும்பல் வீட்டுக்கு வந்து வேலைக்காரப் பெண்ணிடமிருந்து குழந்தையைப் பெற்றுக் கொள்ளுமாம். பின்னர் அனாமிகா தம்பதியினர் திரும்பி வருவதற்குள் குழந்தையை ஒப்படைத்து விடுவார்களாம். கிட்டத்தட்ட ஒரு மாதமாக இது நடந்துள்ளது.

மீட்கப்பட்ட குழந்தையுடன் மருத்துவமனைக்கு விரைந்தனர் அனாமிகாவும், கணவரும். குழந்தையைப் பரிசோதித்துப் பார்த்த டாக்டர்கள், குழந்தையின் உடலில் காயம் ஏதும் இல்லை, எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறியுள்ளனர். ஆனால் பிச்சை எடுப்பதற்காக குழந்தையை அதிக அளவில் அழ வைத்திருந்தது தெரிய வந்தது.

இந்த கொடுமை குறித்து அனாமிகா போலீஸில் புகார் [^] கொடுக்க விரும்பவில்லை. எனது குழந்தை [^] பத்திரமாக கிடைத்ததே போதும். இதை நான் போலீஸாரிடம் கொண்டு செல்ல விரும்பவில்லை. இந்த நிலைக்கு மீண்டும் எனது குழந்தையை நான் கொண்டு செல்ல மாட்டேன் என்று கூறி கதறி அழுகிறார் அனாமிகா.

பிச்சைக்காரரிடம் ரூ.80 ஆயிரம் பணம் ரூ.13 லட்சம் டெபாசிட் !

July 7, 2009

pichai2.jpg

எர்ணாகுளம் அருகே பள்ளிவாசலில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த முதியவரிடம் இருந்து ரூ.80 ஆயிரம் மற்றும் தபால் அலுவலகத்தில் ரூ.13 லட்சம் டெபாசிட் செய்ததற்கான பாஸ் புத்தகம் கைப்பற்றப்பட்டது.
எர்ணாகுளம் அருகே மாவூர் பகுதியில் உள்ள பள்ளிவாசல் பகுதியில் 70 வயதான முதியவர் ஒருவர் பிச்சை எடுத்து வந்தார். நேற்று இந்த பள்ளி வாசல் அருகே உள்ள குற்றிக்காட்டூர் ஜூம்மா பள்ளி வாசலில் அமர்ந்து பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். காலில் புண்கள் இருந்ததால் பிச்சைக்கார முதியவர் ஊன்றுகோல் பயன்படுத்தி வந்தார்.

இந்நிலையில் நேற்று பள்ளிவாசலுக்கு வந்தவர்களிடம் பிச்சைக்கார முதியவர் தனது பெயர் அப்துல் அலி என்றும் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு என்றும் கூறியுள்ளார். பெரும்பாவூரில் உள்ள பள்ளிவாசலுக்கு செல்ல ஆசையாக உள்ளது. அதற்கு தேவையான பணம் தன்னிடம் இல்லையென்றும் கூறியுள்ளார். இதை கேட்ட சிலர் அந்த பகுதியில் வசூல் செய்து ரூ. 10 ஆயிரத்தை அப்துல் அலியிடம் கொடுத்தனர். பெரும்பாவூர் பள்ளி வாசல் செல்வதற்கு ஒரு ஜீப்பையும் ஏற்பாடு செய்து கொடுத்தனர்.

அந்த ஜீப்பில் பெரும்பாவூர் சென்ற அப்துல் அலி அங்கு டிரைவரை காத்திருக்குமாறு கூறிவிட்டு ஒரு மணிநேரம் கழித்து திரும்பி வந்துள்ளார். பின்னர் அதே ஜீப்பில் குற்றிக்காட்டூர் பள்ளிவாசலுக்கு வந்து வழக்கம் போல் பிச்சை எடுக்க தொடங்கினார். இதனை பார்த்த பள்ளி வாசல் நிர்வாகிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் முகமது அலியின் பையை சோதித்தனர். அப்போது அதில் ரூ. 80 ஆயிரம் பணம் இருந்தது தெரியவந்தது.

மேலும் தபால் அலுவலகத்தில் ரூ.13 லட்சம் டெபாசிட் செய்ததற்கான பாஸ் புத்தகமும் இருந்தது. இதுகுறித்து அவர்கள் முகமது அலியிடம் கேட்டபோது, அவ்வளவு பணத்தையும் பிச்சை எடுத்தே சம்பாதித்ததாக தெரிவித்தார். இதையடுத்து மாவூர் போலீசுக்கு பள்ளி வாசல் நிர்வாகிகள் தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து முகமது அலியை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

Monday, November 2, 2009

நாளை மறுநாள் பொன்சேகாவிடம் விசாரணை நடத்த அமெரிக்கா முடிவு

இலங்கை ராணுவ படைத்தளபதி சரத் பொன்சேகாவிடம், போர் குற்றங்கள் தொடர்பாக அமெரிக்க அதிகாரி கள் விசாரணை நடத்த உள்ளனர்.

இலங்கையில் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடந்த மே மாதம் நடந்த சண்டையின் போது, போர் குற்றங்கள் நடந்ததாக சர்வதேச அளவில் புகார் கூறப்படுகிறது.

போரின் கடைசிக் கட்டத்தில் ராணுவம் மற்றும் புலிகளின் மனித உரிமை மீறல்கள் குறித்து 68 பக்க அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத் துறை தயாரித்துள்ளது.

மே 2ம் தேதி முதல் 18ம் தேதி வரை இலங்கையில் நடந்த 170 குற்றங்கள் அந்த அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்து.

சரத்பொன்சேகா தற்போது அமெரிக்காவில் தங்கியுள்ளார். அமெரிக்க குடியுரிமை பெற்ற அவரிடம், இலங்கை அதிபரின் சகோதரரும், ராணுவ செயலருமான கோத்தபையா எந்தெந்த முறையில் போர் விதிமுறைகளை மீறியுள்ளார். போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்களை விளக்கும்படி அமெரிக்க உள்துறை அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

நாளை மறுநாள் பொன்சேகாவிடம் இது குறித்து அவர்கள் விசாரணை நடத்த விருக்கிறார்கள்.

செல்போன் அதிர்வுகளால் தேனீக்கள் பாதிப்பு

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நுகர்வோர் மன்றங்களுக்கான புத்தொளி பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இப்பயிற்சி வகுப்பை கலெக்டர் ராஜேந்திரன் தொடங்கிவைத்து பேசினார்.

அப்போது, ‘’நுகர்வோர் உற்பத்தியாளர் என்ற தரப்பினர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து உள்ளனர். அதற்கான இலக்கிய, சரித்திர ஆதாரங்கள் நம்மிடம் உள்ளன. எடை குறைவு, கலப்படம் போன்றவை பல ஆண்டுகளாக உள்ளன. தற்போது அவற்றை அகற்றும் சூழலும் உருவாகி உள்ளது.

இந்தியாவில் 15 கோடி பேர் செல்போன்களை பயன்படுத்துகின்றனர். இந்த செல்போன்கள் அதிர்வுகளால் தேனீக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.

இதனால் அவற்றின் எண்ணிக்கையும் குறைந்து வருகின்றன. தற்போது சுற்றுப்புற சூழலும் பாதிக்கப்படுவதால், நாம் அனைவரும் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கவேண்டும். தற்போது பாலித்தின் பைகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இதை நாம் தவிர்க்கவேண்டும்.


பொதுவாக நாம் பொருட்களை வாங்கும்போது அதில் அதிகபட்ச விலை அச்சிடப்பட்டிருக்கும். ஆனால் அந்த விலையை காட்டிலும் கூடுதலாக விற்பார்கள். ஏன் என்று கேட்டால் வரி உள்பட சேர்க்கப்பட்டுள்ளது என தெரிவிக்கின்றனர்.

மருந்து கடைகளில் மருந்து வாங்கும் போது அதில் காலாவதியாகும் தேதியை பார்த்து வாங்கவேண்டும். அந்த தேதிக்கு மேல் விற்றால் நுகர்வோர் மன்றங்களில் வழக்கு தொடரலாம்.


மேலும் நுகர்வோர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழும் கேள்வி கேட்கலாம். ஆனால் சிலர் இதை தவறாக பயன்படுத்துகிறார்கள். நுகர்வோரை பொறுத்தவரையில் உத்திரவாதம் உள்ள பொருட்களை வாங்கவேண்டும்’’என்று பேசினார்.

Sunday, November 1, 2009

மனநலம் பாதிக்கப்பட்ட தமிழ் இளைஞரை கடலில் வைத்து அடித்துக் கொன்ற சிங்களர்கள்

கொழும்பு: மன நலம் பாதிக்கப்பட்ட தமிழ் இளைஞரை கடலில் வைத்து வெறித்தனமாக சிங்களக் கும்பல் ஒன்று தாக்கிக் கொலை செய்துள்ள சம்பவம் [^] இலங்கையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தமிழர்களுக்கு எதிரான சிங்களர்களின் விஷ மனோபாவம் இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

வியாழக்கிழமை கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் பாலகிருஷ்ணன் சிவக்குமார் என்ற 26 வயது இளைஞரை சிங்களக் கும்பல் துரத்தியது. அவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் போல காணப்பட்டார். சிவக்குமார் ரத்மலானை பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

வாகனங்கள் மீதும், ரயில் மீதும் அவர் கல் எறிந்தார் என்று கூறி சிங்களர்கள் துரத்தித் தாக்கினர். அவர் தமிழர் என்று தெரிய வந்ததும் மூர்க்கத்தனமாக துரத்தினர். இதனால் பயந்து போன பாலகிருஷ்ணன் கடலில் குதித்தார்.

ஆனால் அவரை தொடர்ந்து துரத்திச் சென்ற காவல்துறை அதிகாரி ஒருவர் அந்த அப்பாவி தமிழ் இளைஞரை கொடூரமாகத தாக்கினார். கையில் இருந்த பெல்ட்டால் சரமாரியாக அடித்தார். கையெடுத்துக் கும்பிட்டபடி தன்னை விட்டுவிடுமாறு அந்த இளைஞர் கெஞ்சியும் கூட மனிதாபிமானமே இல்லாமல் அந்த போலீஸ் அதிகாரி அடித்தார்.

இதில் காயமடைந்து கடலில் மூழ்கிய அந்த இளைஞர் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தக் காட்சிகள் அனைத்தும் ஒருவரால் செல்போன் கேமராவில் பதிவு செய்யப்பட்டு இலங்கை [^] தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகியுள்ளது.

போராட்டம்...

இந்தக் கோர சம்பவத்தைக் கண்டித்து நவம்பர் 4ம் தேதி கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பு போராட்டம் [^] நடத்தப் போவதாக ஜனநாயக மக்கள் [^] முன்னணி அறிவித்துள்ளது.

Wednesday, October 21, 2009

சாட்டிங்:சைபர் கிரைம் குற்றவாளிகள்

கல்லூரியில் படிக்கும் காலம் முதல் அனைத்து இளைஞர்களுமே “இ-மெயில்” முகவரி வைத்துள்ளார்கள். தினசரி பேப்பர் படிப்பது போல இந்த இ-மெயிலில் வரும் தகவல்களை படிக்காமல் சிலருக்கு தூக்கமே வராது.

இளைஞர்கள் இளம்பெண்கள் மட்டும் அல்ல, திருமணம் முடிந்து வீட்டில் அடைபட்டு கிடக்கும் பல இளம் குடும்பத்தலைவிகளும் இப்போது தங்களுக்கு நேரம் போகவில்லை என்றால் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து விளையாட ஆரம்பித்து விடுவார்கள்.

இதில் குடும்ப பெண்களையும், இளைஞர்களையும் சீரழிக்கும் ஆபத்தான விளையாட்டுத்தான் சாட்டிங்.

நேரம் போகாமல் கம்ப்யூட்டரில் யாரோ ஒருவருடன் நீண்ட நேரம் பேசி பழகுவதுதான் சாட்டிங். சிலர் ஒரே நேரத்தில் 5 பேர்களுக்கு கேள்வி - பதில் அனுப்பி கிரங்கடிப்பார்கள்.


இப்படி முகம் தெரியாத நபருடன் பேசிப் பழகும் போது தான் சிலருக்கு கொடூர புத்தி கொண்ட சைபர் கிரைம் குற்றவாளிகளுடன் தொடர்பு கிடைத்து வருகிறது.

இது ஏமாற்றி பணம் பறிப்பதோடு மட்டும் நிற்காமல், குடும்பத்தை சீரழிக்கும் கள்ளத்தனமான செக்ஸ் தொடர்புக்கும் வழி வகுத்துவிடுவதுதான் வேதனையிலும் வேதனை?

சாட்டிங்போது பிடித்த நபருக்கு தங்கள் “இ-மெயில்” முகவரியை கொடுப்பார்கள். பின்னர் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தொடர்பு கொள்ளும்படி ஏற்பாடு செய்து கொள்வார்கள்.

முதலில் நல்லவர்கள் போல் பேசிப்பழகி போகப்போக “செக்ஸ்” விஷயத்துக்குள் புகுந்து விடுவார்கள்.

ஒரு குடும்ப பெண், சாட்டிங்கின் போது ஆண்கள் வேண்டாம் என்று பெண்கள் முகவரியை தேடிப்போய் பேசினால் கூட அதில் சில ஆண்களே பெண்கள் போல் பெயர் வைத்து ஏமாற்றி விடுவார்கள். இந்த கம்ப்யூட்டர் சாட்டிங்கில் சிக்கி பாதை மாறிய நடுத்தர மற்றும் மேல் தட்டு பெண்கள், தங்கள் மானம் போய் விடுமோ என்று பயந்து போலீசில் புகார் செய்வதே இல்லை.


இதனால் சைபர் கிரைம் குற்றவாளிகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளார்கள். இவர்கள் பிடியில் சிக்கி சீரழியும் குடும்ப பெண்களின் எண்ணிக்கையும் இப்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது. சில பெண்கள் இப்பிரச்சினைகளால் தற்கொலை செய்து கொள்கிறார்கள். சிலர் மனநோயாளி போல் மாறிவிடுகிறார்கள்.

இதை தடுக்க முதல் முதலாக களம் இறங்கி உள்ளார் நெல்லை பெண் தீபரதி ஹால்டர் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கிரிமினாலஜி துறையின் பேராசிரியர் ஜெய்சங்கர் என்பவரின் மனைவியான இவர்,

“கம்ப்யூட்டர் சாட்டிங்”, “இ-மெயில்”போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு “ஆன்லைன் மூலம் சென்டர் பார் சைபர் விக்டிம் கவுன்சிலிங் மையம்”ஏற்படுத்தி குடும்ப பெண்களுக்கு எச்சரிக்கை மணி அடித்து வருகிறார்.

தூத்துக்குடி பழைய பஸ்ஸ்டாண்ட் கடலில் மூழ்குமா? வல்லுநர்கள் அதிர்ச்சி தகவல்!

மாலத்தீவில் நூற்றுக்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. இவற்றில் 90க்கும் மேற்பட்ட தீவுகள் கடல் மட்டத்தைவிட அதிகபட்சமாக ஒரு மீட்டர் மட்டுமே உயரமாக இருக்கின்றன. புவி வெப்பமயமாதல் காரணமாக கடல் மட்டத்தின் அளவு உயர்ந்துகொண்டே வருவதால் 2100ம் ஆண்டுக்குள் இந்த நாடு முற்றிலுமாக கடலுக்குள் மூழ்கிவிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. உலக மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக கடந்த சனிக்கிழமை அன்று மாலத்தீவு அமைச்சரவைக் கூட்டம் கடலுக்கடியில் நடந்தது.

தூத்துக்குடி நகரிலும் பல பகுதிகள் கடல் மட்டத்தைவிட தாழ்வாக உள்ளன. இதனால் மாலத்தீவு போன்ற ஒரு நிலை தூத்துக்குடிக்கும் ஏற்பட வாய்ப்பு உள்ளதா? என்பதை அறிய தூத்துக்குடி ..சி. கல்லூரி ஜியாலஜி பேராசிரியர்கள் டாக்டர் திருஞான சம்பந்தம், டாக்டர் உடையனபிள்ளை, டாக்டர் சிவசுப்பிரமணியன் ஆகியோரை சந்தித்தோம்.

அவர்கள் கூறியதாவது, மன்னார் வளைகுடா கடலில் மொத்தம் 21 தீவுகள் உள்ளன. இவற்றில் பவளப்பாறைகள், சல்லிகள் போன்றவைகள் பெருமளவு திருடப்பட்டதால் தற்போது 2 தீவுக்ள முற்றிலுமாக கடலில் மூழ்கிவிட்டன. தூத்துக்குடி அருகே உள்ள விலாங்கு சல்லி என்ற தீவும், கீழக்கரைக்கு அருகே உள்ள பூவரசன்பட்டி என்ற தீவும் தற்போது அடையாளம் தெரியாத வண்ணம் கடலில் மூழ்கியுள்ளது.

தூத்துக்குடி கடலோரப் பகுதிகள் கடல் மட்டத்தைவிட சுமார் 2மீ உயரமானவை. அதே நேரம் தூத்துக்குடி பழைய பஸ் ஸ்டாண்ட், ..சி. கல்லூரி போன்ற பகுதிகள் கடல் மட்டத்தைவிட 2மீ தாழ்வாக இருப்பதாக ஜிபிஎஸ் (GPS) கருவிகள் காட்டுகின்றன.

கடலோர பகுதிகள் ஒரு அரண்போல இருந்து கடல் நீர் தூத்துக்குடி நகருக்குள் புகாதவாறு காத்துக்கொண்டிருக்கின்றன. கடலோரப் பகுதியில் மணல் அள்ளுதல் போன்ற சமூக விரோத நடவடிக்கைகள் இருந்தால் கடல் நீர் நகருக்குள் புகுந்துவிடும்.

புவி வெப்பமயமாதல் காரணமாக கடல்நீர் மட்டம் உயர்ந்துகொண்டே வருவதால் தூத்துக்குடி கடலோரங்களில் அரிப்பு ஏற்படாதவாறு பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலோரங்களில் சதுப்பு நில காடுகள் உருவாக்குதல், மழைநீர் சேகரிப்பு ஏற்படுத்துதல், தூண்டில் பாலங்கள் அமைத்தல் போன்ற நடவடிக்கைகளால் கடல் அரிப்பை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கோழித் தீவனம் மற்றும் உப்புப் பாத்திகள் அமைப்பதற்காக பெருமளவில் கடல் மண் தூத்துக்குடியின் வடக்கு கடலோரங்களில் கொள்ளையடிக்கப்படுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும்.

5 ரூபாய்க்கு மருத்துவச் சிகிச்சை - வித்தியாசமான மருத்துவர்











சேவை நோக்கத்தோடு செயல்படும் மருத்துவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ஓய்வுபெற்ற அரசு மருத்துவ அதிகாரி ஜி.புஷ்பவனம்.

சாதாரணமாக
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்குச் சென்றாலே "கணினி பில் புனிதமாகப்
போற்றப்படும் மருத்துவத்துறை வணிகமயமாகி வரும் இந்தக் காலத்தில்' போட்டு
பணம் கறக்கும் இந்த ஹைடெக் "மெடி' யுகத்தில், வெறும் 5 ரூபாய்க்கு
மருத்துவச் சிகிச்சை அளித்து வருகிறார் இவர். தற்போது 63 வயதாகும்
புஷ்பவனம், மதுரை மாவட்டம், சோழவந்தானில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக
கிளினிக் நடத்தி வருகிறார்.




எப்படி இந்த 5 ரூபாய் சிகிச்சை? என அவரிடம் கேட்டோம்.



மருத்துவம் என்பது நோயாளியின் நோயைத்
தீர்க்கும் பணியாக இருக்க வேண்டுமே ஒழிய, பணத்தைப் பறிக்கும் ஒரு கருவியாக
இருக்கக்கூடாது என்பது என் எண்ணம். எப்பொருளும் விலையின்றி கொடுத்தால்
மதிப்பிருக்காது. அதனால்தான், குறைந்த கட்டணமாவது வாங்கி இச் சேவையை
அளித்து வருகிறேன். 28 ஆண்டுகளாக குறைந்த கட்டணத்தில் இச் சேவையைச் செய்து
வருகிறேன்.


தொடக்கத்தில் ரூ.3 கட்டணம்தான்
வசூலித்தேன். தற்போது ரூ.5 வசூலிக்கிறேன். இக்குறைந்த கட்டணத்தில்
சிசிச்சை அளிப்பதற்கு போதும் என்ற மனநிறைவுதான் காரணம். நான் வசித்த
பகுதிகள் பெரும்பாலும் கிராமப்புற பின்னணி கொண்டதால், மருத்துவத்துக்கு பல
ஆயிரம் பணம் செலவழிக்கும் நிலையில் பெரும்பாலானோரும் இல்லை என்பதை
நன்கறிவேன். இதனால், புற்றுநோயாளிகள், மனவளர்ச்சி குன்றியோர்,
தொழுநோயாளிகள், காசநோயாளிகள் என்றால் கட்டணம் வாங்குவதில்லை.


இதுதவிர, அவசர நேரத்தில் தொலைபேசி
மூலமும் தெரிந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பேன் என்று கூறும் புஷ்பவனம்,
தொழுநோயாளிகள், காசநோயாளிகளுக்கு தரமான இலவச சிகிச்சை பெற அரசு
மருத்துவமனைகளுக்குச் செல்லும்படி பரிந்துரையும் செய்கிறாராம்.


500-க்கும் மேற்பட்ட இலவச மருத்துவ
முகாம்களில் கலந்து கொண்டுள்ளதாக கூறும் இவர், இலவச மருத்துவ சிகிச்சை
அளிக்கும் மருத்துவமனைகளில் சேவை செய்ய விரும்புவதாக தெரிவிக்கிறார் இந்த
வித்தியாசமான மருத்துவர்.

பி.டி.கத்திரிக்காய்: நம்மாழ்வார் கருத்து

கோவை வேளாண்மை பல்கலைக்கழகமும், அமெரிக்க விதை நிறுவனமுமான மான்சான்டாவின் இந்திய பங்கு தாரரான மஹிகோ நிறுவனமும் சேர்ந்து காய்ப்புழு தாக்குதலை எதிர்க்கும் வகையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய்களை உற்பத்தி செய்துள்ளன.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயை சாப்பிட்டால் புற்று நோய், அலர்ஜி உள்பட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் என எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

ஆனால் இந்த கத்தரிக்காய்களை சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் இல்லை என கோவையில் உள்ள தமிழக வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் முருகேசபூபதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இயற்கை விவசாய விஞ்ஞானி நம்மாழ்வார்,

’’விவசாய பொருட்களில் மரபணு மாற்றம் செய்யும்போது ஒருவித வைரஸ் கிருமிகளை புகுத்திதான் இந்த மாற்றங்களை செய்கிறார்கள். எனவே அந்த பொருட்களை சாப்பிடும் போது அந்த வைரஸ்கள் உடல்களையும் தாக்கும்.

இதனால் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்திரிக்காய்கள் போன்றவற்றை சாப்பிடும் போது நமது உடல் அணுக்களிலும் பாதிப்புகளை ஏற்படுத்தும். பெண்களுக்கு கர்ப்ப பையில் தாக்குதல் ஏற்பட்டு கரு முட்டைகள் பாதிக்கப்படும்.


ஆண்களுக்கும் குழந்தை உற்பத்தி அணுக்கள் பாதிக்கப்படும். இதனால் ஆண்- பெண் இருவருக்குமே மலட்டு தன்மை ஏற்படும்.

புற்று நோய் போன்ற பல்வேறு நோய்களும் ஏற்படும். உடல் உறுப்புகள் பாதிக்கும். ரத்த அணுக்கள் பாதிக்கப்படும்’’என்று தெரிவித்துள்ளார்.

நாடு கடந்த தமிழீழ அரசுக்கு அமெரிக்கா உள்ளிட்ட 5 நாடுகள் அனுமதி?

கொழும்பு: விடுதலைப் புலிகள் [^] ஜெனீவா நகரில் அமைக்கவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசு என்ற கோட்பாட்டுக்கு அமெரிக்கா [^] உள்ளிட்ட ஐந்து நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இதனால் இலங்கை அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.

அமெரிக்கா தவிர, கனடா, பிரிட்டன், நார்வே மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் நாடு கடந்த தமிழீழ அரசு என்ற கோட்பாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளதாகத் கூறப்படுகிறது.

இதனால் இலங்கை அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.
நாடு கடந்த தமிழீழம் அமைக்கும் பணிகளுக்கு அனுமதி வழங்கிய நாடுகளின் செயற்பாடுகள் அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக இலங்கை அரசு கூறியுள்ளது.

தமிழீழ அரசை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக 59 தமிழர்கள் மீது இலங்கை அரசு குற்றம் சாட்டுகிறது. ருத்ரகுமாரன் உள்ளிட்ட இந்த நபர்கள் மீது மேற்கண்ட நாடுகள் நடவடிக்கை [^] எதுவும் எடுக்காமல் இருப்பதால் இலங்கை அரசு மேலும் எரிச்சலடைந்துள்ளதாம்.

தி மு கவின் மோசமான விளம்பரம்

சென்னை: நான்கே நாட்களில் ஈழத் தமிழர்களுக்கு விடுதலை பெற்றுத் தந்த கலைஞர் வாழ்க என்று கூறி சென்னை நகரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

தென் சென்னை மாவட்ட திமுக சார்பில் சென்னை நகரின் பல பகுதிகளிலும் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், இலங்கைத் தமிழர்களுக்கு நான்கே நாட்களில் விடுதலைப் பெற்றுத் தந்த கலைஞருக்குப் பாராட்டு, வாழ்க தலைவர் கலைஞர் என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

சமீபத்தில் இலங்கை சென்றிருந்த திமுக தலைமையிலான எம்.பிக்கள் குழுவினர் இடம் பெயர்ந்தோர் முகாம்களில் உள்ள தமிழர்களை விரைவில் மறுகுடியேற்றம் செய்ய வேண்டும் என ராஜபக்சேவிடம் வலியுறுத்தினர்.

இதையடுத்து அடுத்த 15 நாட்களுக்குள் 58 ஆயிரம் பேர் மறு குடியமர்த்தப்பட்டு விடுவார்கள் என்று தெரிவித்திருந்தார். இதைத்தான் விடுதலை என்று குறிப்பிட்டு திமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளதாக தெரிகிறது.

தி மு க இவ்வளவு மோசமான விளம்பரத்தை தேடுவது மிகவும் காயப்படுத்துகிறது

Thursday, October 8, 2009

காஞ்சி கோவில் கருவறைக்குள் பெண்களுடன் உல்லாசம்- அர்ச்சகருக்கு வலை வீச்சு

காஞ்சீபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள மச்சேச பெருமாள் கோவில் அர்ச்சகர் பெண்களுடன், கோவில் கருவறைக்குள்ளேயே உல்லாசமாக இருந்ததாக பெரும் புகார் [^] கிளம்பியுள்ளது. இதையடுத்து அந்த அர்ச்சகரை போலீஸார் தேடி வருகின்றனர்.

காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே கிழக்கு ராஜ வீதியில் உள்ளது மச்சேச பெருமாள் கோவில். இந்த கோவிலில் அர்ச்சகராக இருப்பவர் தேவநாதன் (35). இவர், செங்கல்பட்டை அடுத்த பழைய சீவரம் என்ற ஊரைச் சேர்ந்தவர். பிராமணர் தெருவில் வசித்து வருகிறார்.

கருவறை முன்பாகவே உல்லாசம்...

பக்தர்கள் வராத நேரத்தில், பல பெண்களிடம் கோவில் கருவறை முன்பாகவே அர்ச்சகர் தேவநாதன் உல்லாசமாக இருந்து வந்ததாக பரபரப்பான தகவல் வெளியானது.

இதையடுத்து சிலர் அர்ச்சகர், பெண்களுடன் உல்லாசமாக இருந்த அலங்கோலத்தை, வீடியோவில் படம் பிடித்து சிவகாஞ்சி போலீஸ் [^] நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அதைப் பார்த்த போலீஸார் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். கோவில் [^] கருவறை முன்பாக பல்வேறு பெண்களுடன் தேவநாதன் அசிங்கமாக நடந்து கொண்ட அந்த காட்சிகளைப் பார்த்து அதிர்ந்தனர். சில பெண்களுடன் கருவறைக்குள்ளும் உல்லாசமாக இருந்துள்ளார் தேவநாதன்.

இதையடுத்து எஸ்.பி. பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் இது கூறப்பட்டது. அவரது உத்தரவின் பேரில், இந்திய தண்டனை சட்டம் [^] 295-ஏ பிரிவின் கீழ் தேவநாதன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தன் மீது வழக்குப் பதிவானதை அறிந்ததும் தேவநாதன் தனது குடும்பத்தினருடன் ஓடி விட்டார். அவரைப் பிடிக்க போலீஸார் தற்போது தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர்.

கோவில் கருவறைக்குள் வைத்து பெண்களுன் உல்லாசமாக இருந்ததாக இதுவரை தமிழகத்தில் எந்த புகாரும் வந்ததில்லை. ஆனால் தற்போது வீடியோ ஆதாரத்துடன், ஒரு அர்ச்சகர் செய்த அசிங்கம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளதால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Wednesday, October 7, 2009

இளவயதில் சாதனை படைத்தவர்கள்

இந்திய சரித்திரத்தில் இடம் பெற்ற போது பகத்சிங் வயது 23

புத்தர் ஞானம் பெற அரண்மனையை விட்டு வெளியேறிய போது வயது 27

ஜான்சி ராணி வெள்ளையனை எதிர்த்து வீரத்துடன் போரிட்டபோது வயது 25

திருப்பூர் குமரன் வெள்ளையருக்கு எதிரான போராட்டத்தில் ரத்தம் சிந்திய போது வயது 26


அலெக்சாண்டர் பாரசீகத்தின் மீது படையெடுத்த போது வயது 22


ஐசக் நியூட்டன் புவியீர்ப்பு விதியை கண்டறிந்த போது வயது 24


கலிலியோ தெர்மொமீட்டரைக் கண்டுபிடித்த போது வயது 20


மார்கோ போலோ உலகப் பயணத்தை தொடங்கிய போது வயது 17


கிரகாம்பெல் தொலைபேசியை கண்டறிந்த போது வயது 29


பாஸ்கல் கணக்கிடும் கருவியைக் கண்டுபிடித்த போது வயது 19


மாண்டலின் சீனிவாசன் புகழ் பெற்ற போது வயது 15

Saturday, September 26, 2009

தென்னிந்தியர்களே இந்தியாவின் பூர்வீக குடிகள்- வட இந்தியர்கள் பின்னால் வந்தவர்கள்

ஹைதராபாத்: இந்தியாவின் பூர்வீக குடிகள் தென்னிந்தியர்களே. தென்னிந்தியாவில்தான் முதல் முறையாக இந்தியர்கள் உருவானார்கள். அதன் பின்னரே வட இந்தியாவில் மக்கள் குடியேறத் தொடங்கினர் என்று புதிய மரபியல் ரீதியிலான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இந்திய மூதாதையர்கள் குறித்த ஆய்வு ஒன்றை ஹைதராபாத்தில் உள்ள மூ்லக்கூறு மற்றும் மூலக்கூறு உயிரியல் ஆய்வு மையமும், அமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவப் பள்ளி, ஹார்வர்ட் பொது சுகாதார கல்லூரி, ஹார்வர்ட் பிராட் கழகம், மாசசூசட்ஸ் தொழில்நுட்பக் கழகம் (எம்.ஐ.டி) ஆகியவை இணைந்து நடத்தி வருகின்றன.

இந்த ஆய்வு குறித்த மிகப் புதிய, அதேசமயம், பல வித்தியாசமான தகவல்களை இவர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள் நேச்சர் இதழில் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஹைதராபாத் மையத்தின் முன்னாள் இயக்குநரும், இந்த ஆய்வறிக்கையின் இணை ஆசிரியருமான லால்ஜி சிங் மற்றும் ஹைதராபாத் மையத்தின் மூத்த விஞ்ஞானியான குமாரசாமி தங்கராஜனும் கூறுகையில், இது வரலாற்றை திருத்தி எழுத உதவும் ஆய்வாகும்.

13 மாநிலங்களைச் சேர்ந்த 25 வித்தியாசமான இனக் குழுக்களைச் சேர்ந்த 132 பேரின் ஜீனோம்களிலிருந்து 5 லட்சம் மரபனு குறியீடுகளை ஆய்வு செய்தோம். அனைவருமே இந்தியாவின் பிரதான ஆறு மொழிகளைப் பேசும் இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

பழங்குடியினர், மேல் ஜாதி, கீழ் ஜாதி என அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய வகையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வுகளின்படி, இந்தியாவில், மிகவும் தொன்மையான 2 பிரிவினர் இருந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.

இந்த தொன்மையான பிரிவினரை, தொன்மையான வட இந்திய மூதாதையர் என்றும் தொன்மையான தென்இந்திய மூதாதையர் என்றும் கூறலாம். தற்போது இந்தியாவில் உள்ள 4,635 மக்கள் இனங்கள் அனைத்தும் இந்த 2 தொன்மையான மூதாதையர்களிடம் இருந்து தனித்தனியாகவோ அல்லது இரண்டும் கலப்புற்றோ தோன்றி இருக்கலாம்.

வட இந்தியர்கள் ஐரோப்பியர்களுடன் ஒத்துப் போகிறார்கள்...

இந்த இரு தொன்மையான இந்தியர்களில், தொன்மையான வட இந்தியர்கள் தற்போதைய மேற்கு ஆசிய மற்றும் ஐரோப்பிய மக்கள் இனத்தை மரபியல் ரீதியாக 40 முதல் 80 சதவீதம் வரை ஒத்து இருக்கிறார்கள்.

ஆனால் தொன்மையான தென் இந்தியர்கள் உலகில் எந்த இன மக்களோடும் மரபியல் ரீதியான தொடர்பு அற்றவர்களாக இருக்கிறார்கள். இதன் மூலம் தென் இந்தியர்கள்தான், தொன்மையான இந்தியாவின் முதல் குடிமக்கள் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.

அதேபோல, அந்தமானில் வசிக்கும் மிகப் பழங்குடியினரான `ஓன்கே' என்று அழைக்கப்படும் பிரிவினர் தொன்மையான வட இந்தியர்கள் மற்றும் தென் இந்தியர்களிடம் இருந்து தனித்து காணப்பட்டாலும், தொன்மையான தென் இந்தியர்களோடு சிறிது இணக்கமாக உள்ளனர் என்பது இவர்களுடைய ஆய்வின் முடிவு ஆகும்.

இதன் மூலம், தொன்மையான தென் இந்தியர்களும், அந்தமான் பழங்குடியின மக்களும் ஒரே மூதாதையரிடம் இருந்து பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து இருக்கக் கூடும் என்பதும் இந்த ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

அந்தமான் பழங்குடியினர்தான் முதன் முதலில் ஆதிமனிதன் தோன்றிய இடமான ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து தெற்கு கடற்கரை வழியாக சுமார் 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வெளியேறிவர்கள். அதே காலகட்டத்தில்தான் தொன்மையான தென்னிந்தியர்களும் உருவாகியுள்ளனர்.

அதேபோல 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் வட இந்தியர்கள் உருவெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

பழங்காலத்தில் இருந்தே இந்தியாவில் ஒவ்வொரு மனித இனப்பிரிவினரும் அவரவர் இனத்துக்குள்ளேயே திருமணம் செய்து கொள்வதாலும், தமக்கே உரிய கலாசார பழக்க வழங்கங்களை ஏற்படுத்திக் கொண்டதாலும், ஒவ்வொரு பிரிவினரும் மரபியல் மற்றும் கலாசார ரீதியாக தனித்தன்மை கொண்டு உள்ளனர்.

இதன் மூலம், பழங்காலத்தில் இருந்தே இந்திய மக்கள் [^] இனம் தனித்தனி குழுக்களாக பிரிந்து கலப்பின்றி தனித்தன்மையுடன் வாழ்ந்து இருக்கிறார்கள் என்பது தெரிய வந்து உள்ளது. இந்த பிரிவினைதான் கலாசார பரிமாணங்களின் விளைவாக தற்காலத்தில் சாதி பாகுபாடாக உருவெடுத்துள்ளது.

பழங்காலத்தில் இருந்தே ஒவ்வொரு இனத்தினரும் தங்களுக்குள்ளேயே திருமணம் [^] செய்து கொள்வதால் ஒவ்வொரு இனத்தவருக்கும் ஏற்படும் வெவ்வேறு மரபியல் மாற்றங்கள் அவரவர் சந்ததிகளின் வழியாக அந்தந்த இனத்தினரிடையே நிலைபெற்று, அதன் விளைவாக மரபியல் ரீதியிலான பல நோய்கள் வர வாய்ப்பு உள்ளது என்ற உண்மையையும் எடுத்துரைத்து இருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 70 சதவீத இந்தியர்கள் [^] மரபியல் ரீதியிலான நோய்களைக் கொண்டவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்சி இனத்தவரிடையே மார்பகப் புற்றுநோய் அதிகம் உள்ளது. திருப்பதி, சித்தூர் பகுதிகளில் மோட்டார் நியூரான் நோய்கள் அதிகம் உள்ளன. மத்திய இந்தியாவில் ரத்த சோகை அதிகம் உள்ளது. வட கிழக்கிலும் இதே பிரச்சினை உள்ளது.

ஆப்பிரிக்கர்களின் இடப் பெயர்ச்சி...

1 லட்சத்து 35 ஆயிரம் மற்றும் 75 ஆயிரம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கிழக்கு ஆப்பிரிக்காவில் மிகப் பெரிய பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மாலவி ஏரி வற்றிப் போனதால் பெரும் பஞ்சம் ஏற்பட்டு ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட 95 சதவீதம் பேர் அங்கிருந்து இடம் பெயர்ந்துள்ளனர்.

அவர்கள் அந்தமான் நிக்கோபார் வழியாகத்தான் இடம் பெயர்ந்து சென்றுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. அதாவது அந்தமான், நிக்கோபார் மற்றும் தென்னிந்தியாவின் மூலமாக அவர்கள் பல்வேறு நாடுகளுக்கும் இடம் பெயர்ந்து சென்றுள்ளனர் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இந்தியர்களின் மூதாதையர்கள் குறித்த இந்த ஆய்வின் புதிய முடிவுகள் வரலாற்றை மாற்றி எழுதக் கூடியவை என்பதால் விஞ்ஞானிகளின் முக்கிய விவாதப் பொருளாகியிருக்கிறது.

Thursday, September 24, 2009

கார்களுக்கு அடியில் கதிகலங்கும் பயணம்: லிம்போ ஸ்கேட்டிங்கில் கர்நாடகச் சிறுவன் சாதனை

rohan-ajit-kokane.jpg

ர்நாடக மாநிலம் பெல்காமைச் சேர்ந்தவன் ஒன்பது வயது ரோஹன் அஜீத் கோகனே. இந்தியாவில் தற்போது பிரபலமடைந்து வரும் லிம்போ ஸ்கேட்டிங்கில் புது சாதனை படைத்திருக்கிறது இந்த வாண்டு.

வரிசையாக நிற்கவைக்கப்பட்ட மூன்று கார்களுக்கு அடியில் லிம்போ ஸ்கேட்டிங் மூலம் தரைமட்டத்திற்கு குனிந்து, பயணித்து ஒரு கீறல் இல்லாமல் வெளியே வந்திருக்கிறான் ரோஹன்.

எட்டு இன்ச் இடைவெளி கிடைத்தாலே புயலென புகுந்து வெளியேறிவிடும் இவனுக்கு கார்களுக்கு அடியில் பறந்து செல்வது பெரிய சாதனையாகத் தெரியவில்லை. உலக சாதனை அமைப்பு இவனுடையத் திறமையை ப் பாராட்டி பதக்கமும் சான்றிதழும் தந்திருப்பதுடன் கின்னஸ் நிறுவனத்துக்கும் பரிந்துரைத்திருக்கிறத.

கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன்பு ஸ்கேட்டிங்கை பொழுதுபோக்காக தொடங்கிய அஜீத் தற்போது அதை தினசரி நான்கு மணி நேரம் பயிற்சி மேற்கொள்ளும் அளவுக்கு தீவிர விளையாட்டாக மாற்றிக் கொண்டிருக்கிறான்.

உள்ளூர் பயிற்சியாளர் சூர்யகாந்த் ஹிண்டல்கெல்கர் ரோஹனின் அசாத்திய திறமையைக் கண்டு அவனை ஊக்கப்படுத்தியிருக்கிறார்.

“நான் 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி அளித்திருக்கிறேன். ஆனால் ரோஹனின் உடலின் வளையும் தன்மையும், அதை அவன் கட்டுப்படுத்தும் பாங்கும் ஆச்சரியப்படுத்துகிறது. இத்துறையில் அவன் மிகப் பெரிய சாதனைகளை செய்வான் என நம்பலாம்” என்கிறார்.

தரைமட்டத்திற்கு உடலை வளைத்து ஸ்கேட்டிங் செய்வது லிம்போ ஸ்கேட்டிங் எனப்படுகிறது. இதில் அனிகெட் சிண்டெக் என்ற ஆறு வயது சிறுவன் கடந்த வருடம் நடந்த சாதனை நிகழ்வொன்றில் 53 நொடிகளில், 81 கார்களின் அடியில் (தரைமட்டத்திற்குக் குனியாமல்) ஸ்கேட்டிங் செய்து அசத்தியதுதான் இதுவரையிலான உலகச் சாதனை. ரோஹனும் சாதிப்பான் விரைவில்.