சமீபத்தில் எம்.வி.சன்ஸீ கப்பல் மூலம் கனடாவுக்கு வந்து அகதி நிலை கோரியவர்கள், தற்சமயம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றார்கள்.
இந்த விசாரணையின் போது 2 வயது நிரம்பிய குழந்தையின் தலையில் போரின் போது வீசப்பட்ட குண்டின் சிறு பகுதிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசயத்தை அதிகாரிகள் தமது கவனத்தில் எடுத்துள்ளார்கள். அதோடு மற்றுமொரு பெண், தனது கணவனின் சிறு நீரகத்தில் ஷெல் துகள்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான கூற்றுகள், இந்த அகதிநிலை கோரி நிற்கும் மக்கள், போர் இடம் பெற்ற இடங்களிலோ அல்லது அருகிலோ இருந்திருக்க வேண்டும் என்பதை நிரூபிக்கின்றன.