சென்னையிலிருந்து இலங்கைத் தமிழர்களுக்கான நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பலுக்கு கொழும்பு துறைமுகத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து இலங்கை தமிழர்களுக்கான நிவாரணப் பொருட்களை ஏற்றி வந்த வணங்காமன் கப்பலுக்கு கடந்த வாரம் இலங்கை அனுமதி மறுத்தது. அதைத் தொடர்ந்து அந்த கப்பல் சென்னைக்கு வந்து, அதிலிருந்த நிவராணப் பொருட்களை வேறொரு கப்பலில் ஏற்றி இலங்கைக்கு இந்தியா அனுப்பி வைத்தது.
அந்த மாற்று கப்பல் நேற்று இரவு 8 மணிக்கு இலங்கை சென்றடைந்தது. ஆனால் அங்கு அந்த கப்பலுக்கும் அனுமதி கொடுக்க கொழும்பு துறைமுக அதிகாரிகள் மறுத்து விட்டனர். இலங்கை கடற்படையின் எச்சரிக்கை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment