Friday, July 10, 2009

ஈழமும் சீமானும் :சத்யராஜ் பேச்சு

புரட்சிதமிழன் என்று ஒரு ரசிகரால் அழைக்கப்பட்டு அதுவே சத்யராஜூக்கு நிரந்தர அடைமொழியாகிவிட்டது. அந்த அடைமொழிக்கு தகுந்தபடிதான் அவருடைய நடவடிக்கையும் இருக்கிறது.

இலங்கைத்தமிழர்களுக்கான போராட்டங்களில் எல்லாம் பங்கெடுத்துக்கொண்ட சத்யராஜ், ‘குருசிஷ்யன்’படத்துவக்க விழாவில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர், ‘’ வாழ்க்கையில் என்னை பிரமிக்க வைத்தவர்களில் ஒருவர் சீமான். என் போன்றவர்கள் தமிழ் உணர்வோடு குரல் கொடுக்கதான் முடிந்தது. ஆனால் சீமான் களத்தில் இறங்கி போராடினார். அவர் தனது அடுத்த படத்திற்கு வணங்காமண் என்று பெயர் வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இப்படத்தின் கதாநாயகன் சுந்தர் சி கதாபாத்திரத்திற்கு இலங்கை தமிழர்களுக்காக உயிர் தியாகம் செய்த முத்துக்குமார் பெயரை வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’’என்று பேசினார்.

சுந்தர்.சி, நாயகனாக நடிக்கும் இப்படத்தில் சத்யராஜ் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment