Friday, August 28, 2009

5 குழந்தைகளை கொன்றதாக பெண் சாமியார் கைது

ஆத்தூரில் 5 குழந்தைகளை கொன்றதாக பெண் சாமியார் பெருமாயி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆத்தூரில் குறி சொல்லும் பெண் சாமியார் பெருமாயி என்பவர், குறி சொல்லும் வாக்கு பலிக்க குருணை மருந்து கொடுத்து 5 குழந்தைகளை கொன்றுள்ளார். இந்த செய்தி அறிந்த போலீசார் பெருமாயியை கைது செய்துள்ளனர்.

மேலும் இதற்கு உடந்தையாக இருந்த பெருமாயி கணவர் பழனிமுத்துவையும் போலீசார் கைது செய்துள்ளனர். குறி சொல்லும் வாக்கு பலிக்க குருணை மருந்து கொடுத்து 5 குழந்தைகளை கொன்றுள்ளதாக இவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

இந்த வழக்கை பதிவு செய்த போலீசார் இருவரிடமும் மேலும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment