Wednesday, August 26, 2009

பிராந்தி பாட்டிலில் இருந்தது என்ன?மாணவன் பலி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டிக்கு அருகில் இருக்கும் டி.மேட்டுபட்டியில், கீழே கிடந்த பிராந்தி பாட்டிலில் இருந்த பானத்தை குடித்த பள்ளி மாணவன் ஒருவன் பலியானான். மூன்று மாணவர்கள் மதுரை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கா சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

டி.மேட்டுபட்டியில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வரும் குமார் என்ற மாணவன் பள்ளி செல்லும் வழியில் கொழிஞ்சிபட்டி ஓடை பகுதியில் ஒரு பிராந்தி பாட்டில் கிடப்பதை பார்த்து அதை பள்ளிக்கு எடுத்து சென்றிருக்கிறான்.

அங்கு அதை பார்த்த செல்வகுமார், நாகராஜ், சின்ன நாகராஜ் மற்றும் ராஜா ஆகியோர், குமாரிடம் இருந்த பிராந்தி பாட்டிலை வாங்கிக்கொண்டு பள்ளிக்கு வெளியே இருக்கும் சிறு குன்று பகுதிக்கு சென்று அதை குடித்திருக்கிறார்கள்.

அதை குடித்த சில நேரத்தில் நாகராஜூவுக்கு கடும் வயிற்று வலி வரவே அவன் வீட்டிற்கு சென்றிருக்கிறான். அங்கு அவனுக்கு வாந்தி மயக்கம் வந்ததால் வீட்டில் உள்ளவர்கள் அவனை பாலமேடு மருத்துவமனைக்கு கூட்டி சென்றிருக்கிறார்கள்.

அங்குள்ளவர்கள் மதுரை பொது மருத்துனமனைக்கு கூட்டி செல்லசொல்லவே மதுரைக்கு கூட்டி சென்றிருக்கிறார்கள். வழியிலேயே அவன் இறந்து போனான்.

மீது மூன்று பேர்களும் மதுவை குடித்த இடத்திலேயே மயங்கி கிடந்ததை பார்த்த வீட்டினர் அவர்களை மதுரை மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கிறார்கள். அதில் இருந்தது பிராந்தியா அல்லது விஷம் கலந்த பிராந்தியா என்று தெரியவில்லை. விசாரணை நடக்கிறது.

No comments:

Post a Comment