Monday, August 3, 2009

விடுதலைப்புலிகளுக்கு எதிரான நடவடிக்கை: முன்னாள் நேபாள பிரதமர் கண்டனம்

நேபாள முன்னாள் பிரதமரும் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான பிரசந்தா காத்மாண்டுவில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது, விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியாவும் இலங்கையும் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும், உலகளவில் நடைபெறும் ஆயுதப் போராட்டங்களை நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். புரட்சிகர இயக்கங்களை ஒடுக்கும் பணியில் இந்திய, இலங்கை அரசுகள் ஈடுபட்டுள்ளன. இந்த நடவடிக்கை கண்டனத்திற்குரியது. இது சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு பாதகமாகவே முடியும்.

நேபாளத்துக்கு வெளியே உரிமைகளுக்காக நடைபெறும் ஆயுதப் போராட்டங்களை நாங்கள் உறுதியாக ஆதரிப்போம்.

நேபாள ராணுவத் தளபதி கதவாலை மீண்டும் அப்பதவியில் அமர்த்தியது தவறு. நேபாள அரசு தனது தவறை திருத்திக்கொள்ள நான்கு நாட்கள் அவகாசம் தருகிறோம். அதன்பிறகும் திருந்தாவிட்டால் மக்கள் புரட்சி வெடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment