Thursday, August 20, 2009

பிச்சை எடுக்கிறார்: மாஜி எம்எல்ஏ மனைவி


முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் குப்தா என்று கூறப்படுகிறது. இவருடைய மனைவி பிரேமா தேவி. 1980ம் ஆண்டுக்கு பின், அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த சூரஜ்லால் குப்தா கடந்த 2007ம் ஆண்டு இறந்தார்.

பெர்காம்பூர் மாவட்டம் கோண்டா நகரில் உள்ள தனது சொந்த வீட்டில்தான் குப்தா வசித்து வந்தார். அவர் இறந்தபின், அந்த வீட்டில் அவரது மனைவி பிரேமா தேவி, மகன்கள் வசித்து வந்தனர்.

ஆனால், தாய்க்கு சோறு போட முடியாது என்று கூறிய மகன்கள், அவரது அன்றாட சாப்பாட்டுச் செலவுக்கு அவரே வேலை செய்து சம்பாதித்து கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டனர். இதையடுத்து, வீட்டு வேலைகள் செய்து, பிரேமா சாப்பிட்டு வந்தார். ஆனால், உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அதுவும் முடியாமல் போனது.

இந்த நிலையில், வீட்டை விற்க மகன்கள் முடிவு செய்தனர். இதற்கு பிரேமா தேவி எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, தாயை வீட்டை வீட்டு மகன்கள் விரட்டி விட்டனர். இதனால், வேறு வழியில்லாமல் கோண்டாவில் உள்ள பிரசவ மருத்துவமனைக்கு வெளியே பிச்சை எடுத்து பிரேமா தேவி சாப்பிடுகிறார். இதைப் பற்றி அவரது மகன்கள் சிறிதும் கவலைப்படவில்லை.

பிரேமா தேவி பிச்சை எடுப்பதை அறிந்த பத்திரிகையாளர்கள் சிலர், இதுபற்றி மாவட்ட கலெக்டர் சுக்லால் பாரதியிடம் தெரிவித்தனர். இது பற்றி பாரதி கூறுகையில், அவருக்கு அரசு சார்பில் என்ன உதவி செய்ய முடியுமோ அதை செய்வேன். மாநில முதல்வர் மாயாவதிக்கும் கடிதம் எழுதியுள்ளேன் என்றார்.

No comments:

Post a Comment