Thursday, August 27, 2009

வேலை வாய்ப்பு:சிறப்பு வாய்ப்பு

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கடந்த ஆண்டு புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு, மூன்று மாதங்களுக்குள் புதுப்பிக்க சிறப்பு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 2008 ஜனவரி முதல் டிசம்பர் வரையுள்ள காலத்தில் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு, சிறப்புப் புதுப்பித்தல் சலுகை வழங்கி அரசு உத்ரதவிட்டுள்ளது.

இதன்படி, கடந்த ஆண்டு புதுப்பிக்கத் தவறியவர்கள், வரும் நவம்பர் 23ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு, அலுவலக வேலை நாட்களில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டையை நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமோ விண்ணப்பித்து தங்களது பதிவை புதுப்பித்துக்கொள்ளலாம் என, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் ஜீவானந்தம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment