Sunday, February 5, 2012

இரவு நேர கார் பயணம்: முட்டை ரூபத்தில் வரும் பேராபத்து

இரவு நேரத்தில் காரில் செல்பவர்களிடம் வழிப்பறி செய்வதற்கும், விரும்பதகாத சம்பவங்களில் ஈடுபடுவதற்கும் புதிய யுக்தி ஒன்றை சமூக விரோதிகள் கையாள்வது குறித்து செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

இரவு நேரங்களில் செல்லும் கார்களின் முன்பக்க கண்ணாடி (வைன்ட் ஷீல்டு) மீது முட்டையை வீசி எறிந்து காரை நிறுத்தி அவர்கள் வழிப்பறியில் ஈடுபடுவதாக புதிய செய்தி வெளியாகியுள்ளது.

எனவே, இரவில் காரில் செல்லும்போது காரின் முன்பக்க கண்ணாடி மீது முட்டை வீசினால் உடனடியாக காரை விட்டு இறங்கி சோதனை செய்ய வேண்டாம்.

மேலும், காரின் கண்ணாடியை துடைப்பதற்காக நீரை பீய்ச்சியடித்து, வைப்பரை ஆன் செய்து சுத்தம் செய்ய முற்பட வேண்டாம். ஏனெனில், முட்டையுடன் நீர் சேரும்போது பிசின் போன்று ஆகிவிடும். அப்போது வைப்பரை ஆன் செய்தால் கார் கண்ணாடி முழுவதும் பனிப்படர்ந்தது போன்று முட்டை படிந்து விடும்.

இதனால், சாலை பார்த்து தொடர்ந்து காரை ஓட்ட முடியாத நிலை ஏற்பட்டு விடும். இந்த சந்தர்ப்பத்தைத்தான் சமூக விரோதிகள் பயன்படுத்தி வழிப்பறி மற்றும் விரும்பத்தகாத சம்பவங்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

எனவே, இரவு நேரத்தில் காரில் செல்லும்போது மர்மநபர்கள் கார் கண்ணாடி மீது முட்டையை வீசி எறிந்தால், உஷாரடைந்து அங்கிருந்து பாதுகாப்பானை இடத்துக்கு காரை ஓட்டி செல்வதுதான் சிறந்தது.

Thursday, August 4, 2011

கலவரத்தை தூண்டும் விதத்தில் கலைஞரின் அறிக்கை

நான் ,நீ என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது நாம் என்று சொன்னால் தான் உதடுகள் கூட ஒட்டும் என்று சொன்ன தி.மு.க. தலைவர் கலைஞர் இன்று ஒரு அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறார் அதில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் புலனாய்வுத் துறையில் கூடுதல் டி.ஜி.பி.யாகப் பணியாற்றிய ஜாபர்சேட் நல்லவர்,நேர்மையானவர் என கூறியிருக்கிறார் அது விசாரணையில் தெரியவரும் என்பது வேறு ஆனால் கலைஞர் மத உணர்வுகளை தூண்டும் விதத்தில் அறிக்கை வெளியிட்டு இருப்பது மிகவும் வருந்ததக்கது (தீவிர வாதிகள் .ஊழல் வாதிகள் போன்றோக்கு மதம் கிடையாது )ஆனால் கலைஞர் அவர்களின் இத்தகைய செயல்பாடு ஏற்க்கனவே நாம் பார்த்தது தான் ராசா மீது ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டபோது அவர் தலித் என்பதால் ராசா மீது பொய் வழக்கு போடுகிறார்கள் என கூறினார் இதுபோன்ற செயல்கள் மதமோதல் ,ஜாதி மோதல் போன்றவை ஏற்ப்பட வழிகோலுகின்றது இதை கலைஞர் தவிர்த்திருக்க வேண்டும் ஜாபர்சேட் நல்லவர்,நேர்மையானவர் என கூறியிருந்தால் ஒன்றும் பிரச்சனையில்லை .உங்கள் பார்வைக்காக அந்த அறிக்கை

ஜாபர்சேட் மீது நடவடிக்கை : கலைஞர் ஆவேசம்

தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’பழிவாங்கும் பொய் வழக்கு நடவடிக்கைகளில் அ.தி.மு.க. அரசு எந்த அளவிற்கு ஈடுபடுகிறது என்பதற்கு மற்றும் ஓர் உதாரணத்தை விளக்கிட விரும்புகிறேன்.

கடந்த கால திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் புலனாய்வுத் துறையில் கூடுதல் டி.ஜி.பி.யாகப் பணியாற்றியவர்தான் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த ஜாபர்சேட், ஐ.பி.எஸ். அரசுக்கு எந்த அளவிற்கு உண்மையாக, விசுவாசமாக பணியாற்ற வேண்டுமோ அந்த அளவிற்கு அவர் பணியாற்றினார் என்பது உண்மை.

ஆனால் தற்போதுள்ள ஆட்சியினர் நேர்மையாகவும், திறமையாகவும் பணி புரிந்ததையே ஒரு குற்றமாக எடுத்துக் கொண்டு, நீ எப்படி அரசுக்கு விசுவாசமாகப் பணியாற்றலாம்? அது தவறல்லவா? அதனால் நீ இருக்க வேண்டிய இடம் மண்டபம் முகாம்தான்! எனவே உன்னை அங்கே மாற்றுகிறேன் என்று அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; பழி வாங்கும் அஸ்திரம் பாய்ந்துள்ளது.

கூடுதல் டி.ஜி.பி. நிலையிலே பணியாற்றும் அந்த அதிகாரியின் மீதான குற்றச்சாட்டு தமிழக அரசின் வீட்டு வசதி வாரிய மனை ஒதுக்கீட்டினைப் பெற்று அதன் மூலமாக பல கோடி ரூபாயைச் சம்பாதித்துவிட்டார் என்பதுதானாம்!

இந்த வீட்டு வசதி வாரிய மனைகள் ஒதுக்கீடு என்பதில் - அரசு விருப்புரிமை அடிப்படையில் வழங்கலாம் என்று முடிவெடுத்ததே அ.தி.மு.க. ஆட்சியிலேதான். அதற்கான அரசாணை 25-1-1979-ல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வீட்டு வசதி வாரியத்தின் வீடுகள் அல்லது மனைகளில் 85 சதவிகிதத்தை குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்வதும் - மீதியுள்ள 15 சதவிகிதத்தை அரசு, தனது விருப்புரிமையின் கீழ் ஒதுக்கீடு செய்வதும் தொடர்ந்து நீண்ட காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் முறையாகும்.

அரசு விருப்புரிமை ஒதுக்கீட்டின்கீழ் தரப்படும் வீடுகள் அல்லது மனைகள் சலுகை விலையிலே தரப்படுவதில்லை. குலுக்கல் முறையிலே விற்கப்படுபவர்களிடம் பெறப்படும் அதே தொகைதான் - அதாவது சந்தை மதிப்பைத்தான் (மார்க்கெட் ரேட்), விருப்புரிமை அடிப்படையில் பெறுபவர்களிடமும் வசூலிக்கப்படுகிறது.

அதிலும் தற்போது தி.மு.கழக அரசின் ஆட்சிக் காலத்தில் விருப்புரிமை ஒதுக்கீட்டின்கீழ் வீட்டுமனை பெற்றவர்கள், அவர்கள் மனையின் விலையாகக் கட்ட வேண்டிய தொகை மிக அதிகமாக இருப்பதாகக் கூறி, அந்தத் தொகையை கட்ட முடியாத நிலையில் வீட்டு வசதி வாரியத்திற்கே மீண்டும் அந்த வீட்டுமனைகளை ஒப்படைத்து விட்டார்கள் என்பதற்கு பல எடுத்துக் காட்டுகள் உண்டு.

எந்த விதிமுறைகளையும் மீறி இந்த வீட்டுமனைகள் கழக ஆட்சிக்காலத்தில் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அ.தி.மு.க. ஆட்சியிலே என்ன நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவோ, அவற்றில் ஒன்றைக்கூட கழக ஆட்சிக் காலத்திலே மாற்றவில்லை.

இந்த அரசாங்கம் பழி வாங்கும் நடவடிக்கைக்கு உச்சக் கட்டமாகச் சென்று, இந்தக் குறிப்பிட்ட அதிகாரியைத் தற்காலிகப் பணி நீக்கம் செய்ததோடு, அவர் மண்டபம் முகாமிலேதான் பணி நீக்கக் காலத்திலே இருக்க வேண்டும், சென்னையிலே உள்ள அவரது குடும்பத்தினரோடு இருக்கக் கூடாது என்றால் அதற்கு என்ன பெயர்? அதிலும் சிறுபான்மை சமுதாயமான இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர் அவர்.

தற்போது அவர்களுக்கு நோன்பு காலமாகும். இந்த நேரத்தில் அவர் குடும்பத்தினரைக் காணக் கூடாது என்றெல்லாம் உத்தரவிடுவது எந்த அளவிற்கு நெறிக்குட்பட்டது? ஏன் இப்படிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகள்?

அரசுக்கு விசுவாசமான அதிகாரிகளையெல்லாம் பழி வாங்கினால், மற்ற அதிகாரிகள் எல்லாம் ஒரு அரசுக்கு விசுவாசமாக நாம் பணியாற்றினால், அடுத்து வரும் ஆட்சியிலே தாங்கள் பழி வாங்கப்பட நேரிடும் என்று நினைத்தால், தங்கள் பணியினை முறையாகவும் நிறைவாகவும் ஆற்ற முடியுமா?

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கெல்லாம் சங்கங்கள் எல்லாம் இருப்பதாகச் சொல்கிறார்களே? அந்தச் சங்கங்கள் எல்லாம் இதுபோன்ற நடவடிக்கைகளை அனுமதிக்கிறதா? ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் எல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குரிய அதிகாரிகள் என்று சொல்லப்படுகிறதே, அந்த மத்திய அரசாவது இதுபோன்ற நிலைமைகளில் கவனம் செலுத்துமா?

இப்படிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி எப்போது? பழிவாங்குவதிலே நிர்வாகத்திறனைக் காட்ட முயற்சிப்பதை, நிர்வாக வரலாறு நிச்சயமாக ஏற்காது!’’ என்று கூறியுள்ளார்.

Thursday, June 9, 2011

தமிழகத்தில் இதற்க்கு முன்னர் நடந்த பேருந்து விபத்துக்கள்

நேற்று அந்த பிணங்களை பார்க்கும்போது மிகவும் கொடுமையாக இருந்தது ,மிகவும் வெந்த நிலையில் அடையாளம் தெரியாமல் இருந்தது ,குத்துமதிப்பாக அந்த உடல்களின் பருமனை பார்த்து எடுத்துச்சென்றனர் இறந்தவர்களின் உறவினர்கள் அழுதது நெஞ்சை உலுக்குவது போன்று இருந்தது எனக்கு அந்த பேருந்தில் இன்னும் உடல்களின் எச்சம் ஒட்டி இருந்தது .யாரோ ஒரு பயணி தன்னுடைய உறவுகளுக்கு புது துணிமணி வாங்கி இருக்கிறார் அவையும் எரிந்து அதில் ஒட்டி இருக்கும் விலைப்பட்டியல் மட்டும் அப்படியே இருந்தது என்னுடன் வந்த காமிராமேன் மிகவும் சிரமப்பட்டு அந்த காட்சிகளை படமாக்கினார் இனிமேலாவது தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் கவனிப்பார்களா அரசும் இதற்க்கு விரைவில் ஒரு நல்ல முடிவை எடுக்கவேண்டும் அதே போல் நள்ளிரவில் விபத்து நிகழ்ந்த நேரத்தில் பயணிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். பஸ் திடீரென விபத்துக்குள்ளாகி உருண்டு தீப்பிடித்ததால் பலரும் நிலை குலைந் தனர். தப்பி வெளியேறுவதற்கான அவசர வழிகள் எங்கே உள்ளன என்பது தெரியாத நிலையில் தீயில் கருகி பலியானதாக கூறப்படுகிறது சில பேருந்துகளில் அவசர வழி என்பதே கிடையாது அந்த இடத்தையும் அடைத்து காசு பார்கிறார்கள் இந்த தனியார் பேருந்து உரிமையாளர்கள்பயங்கர பஸ் விபத்துகள் * 2000 டிச., : ஊத்தங்கரை அருகே தனியார் பஸ், லாரியுடன் மோதி ஏரிக்குள் கவிழ்ந்தது. இதில் 17 பேர் பலி. * 2000: திருநெல்வேலி மாவட்டம், தளபதிசமுத்திரத்தில் சுற்றுலா வேன் சாலையோர கிணற்றில் கவிழ்ந்து 17 பேர் பலி. 8 பேர் காயம். * 2001: சங்ககிரி அருகே நடந்த கோர விபத்தில் பஸ் தீப்பிடித்து, 40 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். * 2001 நவ.,: கோவில்பட்டி அருகே அரசு பஸ்சும், வேனும் மோதிக் கொண்ட விபத்தில் 27 பேர் பலி. * 2005: ராமநாதபுரம் மாவட்டம் சனவேலி பாலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பஸ் அடித்துச் செல்லப்பட்டது. இதில் 37 பேர் பலி. * 2007: திருநெல்வேலி அருகே அரசு பஸ்சும், தனியார் ஆம்னி பஸ்சும் நேருக்குநேர் மோதியதில் 12 பேர் உயிரிழப்பு. * 2008 ஜூன்: ஊட்டி மலைப்பாதை, 500 அடி பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்தது. இதில் 13 பேர் பலி. 45 பேர் காயம். * 2009 ஆக.,: கும்பகோணம் அருகே அரசு விரைவுப் பஸ்சும், வேனும் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் பலி. * 2010 மே: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே ஆம்னி பஸ்சும், வேனும் நேருக்குநேர் மோதியதில் 11 பேர் பலி. 14 பேர் காயம்.* 2010 டிச., 1: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சண்முகசுந்தரபுரத்தில், இரண்டு தனியார் பஸ்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில், 20 பேர் பலி. 43 பேர் காயம்.

Sunday, May 29, 2011

தேர்தல் வெற்றிக்காக தொடரும் உடல் உருப்புகள் காணிக்கைகள் தடுத்து நிறுத்தப்படுமா ?

தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் தெரிவாக வேண்டுமென வேண்டுதல் செய்து நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய பெண்ணுக்கு சத்துணவுத் துறையில் வேலையும் மருத்துவ செலவுக்கு ஒரு லட்ச ரூபாயும் முதல்வர் ஜெயலலிதா அளித்தார். தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் வர வேண்டும் என கடவுளை வேண்டிக் கொண்ட ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டியைச் சேர்ந்த சரிதா என்பவர் தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள கௌரியம்மன் கோவிலில் தன் நாக்கை அறுத்து நேர்த்திக் கடன் செலுத்தினார்.

இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மேலும் இவர் கணவனால் கைவிடப்பட்டு ஏழ்மை நிலையில் உள்ளார். இவர் நாக்கை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்தியதும் ஆண்டிப்பட்டி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலுதவியும் அதைத் தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சையும் அளிக்கப்பட்டது

இதுபற்றி முதல்வர் ஜெயலலிதா அறிந்ததும் சரிதாவை உடனே சென்னைக்கு வரவழைத்து தனியார் மருத்துவமனையில் அனுமதித்து அறுவை சிகிச்சை செய்ய உத்தரவிட்டிருந்தார். இதன்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரிதா அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குணமடைந்த பின் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

சரிதாவின் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு முதல்வர் ஜெயலலிதா தலைமைச்செயலகத்துக்கு சரிதாவை வரவழைத்தார். அவரது எதிர்கால வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் சத்துணவுத் துறையில் சத்துணவு உதவியாளர் வேலைக்கான பணி நியமன உத்தரவை ஜெயலலிதா வழங்கினார்.அவருக்கு மாதம் 2,077 ரூபாய் சம்பளம் கிடைக்கும். மேலும் எம்.ஜி.ஆர் அறக்கட்டளை மூலம் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கான கட்டணத் தொகையான 36 ஆயிரத்து 195 ரூபாவை செலுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார் எம்.ஜி.ஆர்.அறக்கட்டளை மூலம் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கினார். இது தவிர அவரது சொந்தக் கிராமமான தொண்டியில் வாடகை வீடு ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான மாத வாடகையை எம்.ஜி.ஆர் அறக்கட்டளை மூலம் தொடர்ந்து வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து தற்போது
சேலம் தாதகாப்பட்டி கேட் விவேகானந்தா தெருவை சேர்ந்தவர் பழனிசாமி. அ.தி.மு.க. மேலவை பிரதிநிதி. இவரது மனைவி வாணி(40). அ.தி.மு.க. மீது தீவிர பற்று கொண்டவர். தேர்தல் நேரத்தில் இவர் அந்த பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.
அப்போது அ.தி.மு.க. வெற்றி பெற்று ஜெயலலிதா வெற்றி பெற்று விட்டால் கை பெருவிரலை காணிக்கையாக்குகிறேன் என்றார். அதன்படி அ.தி.மு.க. அமோக வெற்றி ஜெயலலிதாவும் முதல்-அமைச்சர் ஆகிவிட்டார் என்பதால் நேர்த்திக்கடன் செலுத்த வாணி முடிவு செய்தார்.
இன்று காலை தனது வீட்டில் இருந்து வாணி கோவிலுக்கு புறப்பட்டார். பின்னர் காளியம்மனுக்கு முன் நின்று கத்தியால் தனது பெருவிரலை வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினார். ரத்தம் அதிகளவில் வெளியேறியதால் வாணி மயங்கி விழுந்தார்.
இதைப்பார்த்தவர்கள் ஓடிச்சென்று அவரை அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
அன்று நாக்கை அறுத்துக்கொண்ட சரிதாவிற்கு சிகிச்சை மட்டும் கொடுத்திருந்தால் இன்று இது போன்ற சம்பவம் தொடர்ந்திருக்காது அரசுவேலை கொடுத்ததால் இன்னும் எதனை பேர் எதைஎதை அருக்கப்போகிரார்கள் என்று தெரியவில்லை இதனை முதல்வர் தடுக்கவேண்டும் என்றால் முதல்வர் முதலில் ஒரு அறிக்கை வெளியிடவேண்டும் அதில் இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அரசு பணி வழங்கப்படமாட்டது ,நிவாரண தொகையும் வழங்கப்படமாட்டாது என அறிவிக்க வேண்டும் அப்போது தான் இதுபோன்ற செயல்களை தடுக்க முடியும்

Wednesday, December 29, 2010

சிங்கள தேசிய கீதத்தை எதிர்த்த தமிழ் கல்விப் பணியாளர் படுகொலை

சிங்கள மொழி தேசிய கீதத்தை எதிர்த்த தமிழ் கல்விப் பணியாளர் மார்க்கண்டு சிவலிங்கம் என்பவர் இலங்கை புலனாய்வு பிரிவினரால் கொல்லப்பட்டுள்ளார்.



யாழ்ப்பாணத்தில் கடந்த 26 ம் தேதி நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தினத்தில் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் பாடவேண்டும் என இலங்கை இராணுவத்தினரால் வலியுறுத்தப்பட்டது.

இராணுவத்தினரின் அந்த வேண்டுகோளை எதிர்த்து மார்க்கண்டு சிவலிங்கம், தமிழ் மொழியில் தேசிய கீதத்தை மாணவர்களினால் பாட வைக்க அதி தீவிரமாக செயற்பட்டதாகவும், தேசிய கீதம் குறித்து எதிர்க்கருத்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து இலங்கை அரசாங்கத்தின் புலனாய்வு பிரிவினரால் மார்க்கண்டு சிவலிங்கம் கொள்ளை என்ற பெயரில் கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இலங்கையில் இன்னும் இதுபோன்ற அத்துமீறல்கள் நடந்தவண்ணம் தான் இருக்கின்றது இதற்க்கு இலங்கை அரசு கூறும் இதுபோன்ற பொய்களை யாரும் நம்ப தயாரில்லை . ஆனால் உலக நாடுகள் இதனைவேடிக்கைபார்ப்பது மிகவும் வேதனையான ஒன்று ஐநா என்ற அமைப்பு எந்ததொரு அதிகாரமும்மின்றி இருப்பது மிகவும் கேவலம் .


Saturday, October 16, 2010

அரசின் இலவசத் திட்டங்களை விமர்சிக்கும் நோட்டீஸ்-தமிழகத்தில் பரபரப்பு

சென்னை: மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி என்ற பெயரில் தமிழகத்தின் பல்வேறு நகர்களில் விநியோகிக்கப்படும் நோட்டீஸால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்றைய தமிழகம் [^] என்ற தலைப்பிடப்பட்டுள்ள அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாவது...

ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம் ஒருவர் கேட்டார், எதற்காக இத்தனை கஷ்டப்படுகிறாய்?. நான் கேட்டேன், கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கை ஓட்ட முடியும்? அவர் சிரித்தபடி சொன்னார், என்னை பார் ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கி விடுவேன். போரடித்தால் வண்ணத் தொலைக்காட்சியில் திரைப் படம் [^] பார்த்திடுவேன். உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடுவேன். உயர் சிகிச்சை பெற்றிடுவேன், ராஜமரியாதையுடன். நான் யார் தெரியுமா? தமிழ் [^] நாட்டு குடிமகன்!

என் நாட்டில் உணவுக்கு அரிசி ஒரு ரூபாய், சமைப்பதற்கு காஸ் அடுப்பு இலவசம், பொழுதுபோக்கிற்கு வண்ணத் தொலைகாட்சி மின்சாரத்துடன் இலவசம். எதற்காக உழைக்க வேண்டும்?

மனைவி, பிள்ளை பெற்றால் 6,000 ரூபாய் இலவச சிகிச்சையுடன். குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில். படிப்பு, சீருடை, முட்டையுடன் மதிய உணவும் இலவசம். பாடப்புத்தகம் இலவசம். படிப்பும் இலவசம். பள்ளி செல்ல பஸ் பாஸ் இலவசம். தேவையென்றால் சைக்கிளும் இலவசம். "பெண் பருவமடைந்தால் திருமண உதவித் தொகை 25,000 ரூபாய் இலவசம், ஒரு சவரன் தாலியுடன், திருமண செலவும் இலவசம்.

தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம். மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கையிலும். நான் எதற்கு உழைக்க வேண்டும்!

இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு, ஒன்று கையூட்டு, மற்றொன்று பிச்சை. இதில் நீ எந்த வகை? எதை எடுத்து கொள்வது? உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய். இலவசம் நின்று போனால் உன் நிலை? உழைப்பவர் சேமிப்பை களவாடத் தலைப்படுவாய்? இதே நிலை தொடர்ந்தால், இலவசம் வளர்ந்தால், அமைதிப் பூங்காவாம் தமிழகம், கள்வர் பூமியாய் மாறும் நிலை, இன்னும் வெகு தொலைவில் இல்லை. தமிழா விழித்தெழு, உழைத்திடு, இலவசத்தை வெறுத்திடு, அழித்திடு, தமிழகத்தை தரணியில் உயர்த்திடு. நாளைய தமிழகம் நம் கையில், உடன் பிறப்பே சிந்திப்பாயா? மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி! என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதை யார் விநியோகிப்பது என்பது குறித்து எந்தத் தகவலும் தெரியவில்லை. இந்த மர்ம நோட்டீஸால் பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டுள்ளது.

Friday, August 20, 2010

2வயது ஈழக்குழந்தையின் தலையில் குண்டு துகள்கள்!



சமீபத்தில் எம்.வி.சன்ஸீ கப்பல் மூலம் கனடாவுக்கு வந்து அகதி நிலை கோரியவர்கள், தற்சமயம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றார்கள்.

இந்த விசாரணையின் போது 2 வயது நிரம்பிய குழந்தையின் தலையில் போரின் போது வீசப்பட்ட குண்டின் சிறு பகுதிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசயத்தை அதிகாரிகள் தமது கவனத்தில் எடுத்துள்ளார்கள். அதோடு மற்றுமொரு பெண், தனது கணவனின் சிறு நீரகத்தில் ஷெல் துகள்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான கூற்றுகள், இந்த அகதிநிலை கோரி நிற்கும் மக்கள், போர் இடம் பெற்ற இடங்களிலோ அல்லது அருகிலோ இருந்திருக்க வேண்டும் என்பதை நிரூபிக்கின்றன.

இலங்கையில் முடிவுக்கு வந்துள்ளகொடிய போரின் தாக்கத்தை வெளிப்படுத்துகின்ற, மேலே குறிப்பிட்டது போன்ற உண்மைகள், தொடர்ந்து இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற விசாரணையின் போது வெளிப்படலாம் என நம்பப்படுகின்றன