Wednesday, December 29, 2010

சிங்கள தேசிய கீதத்தை எதிர்த்த தமிழ் கல்விப் பணியாளர் படுகொலை

சிங்கள மொழி தேசிய கீதத்தை எதிர்த்த தமிழ் கல்விப் பணியாளர் மார்க்கண்டு சிவலிங்கம் என்பவர் இலங்கை புலனாய்வு பிரிவினரால் கொல்லப்பட்டுள்ளார்.



யாழ்ப்பாணத்தில் கடந்த 26 ம் தேதி நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தினத்தில் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் பாடவேண்டும் என இலங்கை இராணுவத்தினரால் வலியுறுத்தப்பட்டது.

இராணுவத்தினரின் அந்த வேண்டுகோளை எதிர்த்து மார்க்கண்டு சிவலிங்கம், தமிழ் மொழியில் தேசிய கீதத்தை மாணவர்களினால் பாட வைக்க அதி தீவிரமாக செயற்பட்டதாகவும், தேசிய கீதம் குறித்து எதிர்க்கருத்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து இலங்கை அரசாங்கத்தின் புலனாய்வு பிரிவினரால் மார்க்கண்டு சிவலிங்கம் கொள்ளை என்ற பெயரில் கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இலங்கையில் இன்னும் இதுபோன்ற அத்துமீறல்கள் நடந்தவண்ணம் தான் இருக்கின்றது இதற்க்கு இலங்கை அரசு கூறும் இதுபோன்ற பொய்களை யாரும் நம்ப தயாரில்லை . ஆனால் உலக நாடுகள் இதனைவேடிக்கைபார்ப்பது மிகவும் வேதனையான ஒன்று ஐநா என்ற அமைப்பு எந்ததொரு அதிகாரமும்மின்றி இருப்பது மிகவும் கேவலம் .


No comments:

Post a Comment