Thursday, June 9, 2011

தமிழகத்தில் இதற்க்கு முன்னர் நடந்த பேருந்து விபத்துக்கள்

நேற்று அந்த பிணங்களை பார்க்கும்போது மிகவும் கொடுமையாக இருந்தது ,மிகவும் வெந்த நிலையில் அடையாளம் தெரியாமல் இருந்தது ,குத்துமதிப்பாக அந்த உடல்களின் பருமனை பார்த்து எடுத்துச்சென்றனர் இறந்தவர்களின் உறவினர்கள் அழுதது நெஞ்சை உலுக்குவது போன்று இருந்தது எனக்கு அந்த பேருந்தில் இன்னும் உடல்களின் எச்சம் ஒட்டி இருந்தது .யாரோ ஒரு பயணி தன்னுடைய உறவுகளுக்கு புது துணிமணி வாங்கி இருக்கிறார் அவையும் எரிந்து அதில் ஒட்டி இருக்கும் விலைப்பட்டியல் மட்டும் அப்படியே இருந்தது என்னுடன் வந்த காமிராமேன் மிகவும் சிரமப்பட்டு அந்த காட்சிகளை படமாக்கினார் இனிமேலாவது தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் கவனிப்பார்களா அரசும் இதற்க்கு விரைவில் ஒரு நல்ல முடிவை எடுக்கவேண்டும் அதே போல் நள்ளிரவில் விபத்து நிகழ்ந்த நேரத்தில் பயணிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். பஸ் திடீரென விபத்துக்குள்ளாகி உருண்டு தீப்பிடித்ததால் பலரும் நிலை குலைந் தனர். தப்பி வெளியேறுவதற்கான அவசர வழிகள் எங்கே உள்ளன என்பது தெரியாத நிலையில் தீயில் கருகி பலியானதாக கூறப்படுகிறது சில பேருந்துகளில் அவசர வழி என்பதே கிடையாது அந்த இடத்தையும் அடைத்து காசு பார்கிறார்கள் இந்த தனியார் பேருந்து உரிமையாளர்கள்பயங்கர பஸ் விபத்துகள் * 2000 டிச., : ஊத்தங்கரை அருகே தனியார் பஸ், லாரியுடன் மோதி ஏரிக்குள் கவிழ்ந்தது. இதில் 17 பேர் பலி. * 2000: திருநெல்வேலி மாவட்டம், தளபதிசமுத்திரத்தில் சுற்றுலா வேன் சாலையோர கிணற்றில் கவிழ்ந்து 17 பேர் பலி. 8 பேர் காயம். * 2001: சங்ககிரி அருகே நடந்த கோர விபத்தில் பஸ் தீப்பிடித்து, 40 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். * 2001 நவ.,: கோவில்பட்டி அருகே அரசு பஸ்சும், வேனும் மோதிக் கொண்ட விபத்தில் 27 பேர் பலி. * 2005: ராமநாதபுரம் மாவட்டம் சனவேலி பாலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பஸ் அடித்துச் செல்லப்பட்டது. இதில் 37 பேர் பலி. * 2007: திருநெல்வேலி அருகே அரசு பஸ்சும், தனியார் ஆம்னி பஸ்சும் நேருக்குநேர் மோதியதில் 12 பேர் உயிரிழப்பு. * 2008 ஜூன்: ஊட்டி மலைப்பாதை, 500 அடி பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்தது. இதில் 13 பேர் பலி. 45 பேர் காயம். * 2009 ஆக.,: கும்பகோணம் அருகே அரசு விரைவுப் பஸ்சும், வேனும் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் பலி. * 2010 மே: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே ஆம்னி பஸ்சும், வேனும் நேருக்குநேர் மோதியதில் 11 பேர் பலி. 14 பேர் காயம்.* 2010 டிச., 1: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சண்முகசுந்தரபுரத்தில், இரண்டு தனியார் பஸ்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில், 20 பேர் பலி. 43 பேர் காயம்.

No comments:

Post a Comment